உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 05, 2010

விருத்தாசலத்தில் சினிமா பேனர்களுக்கு கட்டுப்பாடு வருமா?


 
விருத்தாசலம்:
 
             விருத்தாசலத்தின் முக்கியப் பகுதியான பஸ் நிலையம் அருகில் திரைப்பட பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து மற்றும் வணிகர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  
 
                விருத்தாசலம் பஸ் நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் விருத்தாசலம் ரயில்வே ஜங்சனுக்குச் செல்ல முடியும். மேலும் பஸ் நிலையம் அருகில் அரசு கலைக் கல்லூரி, தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் உள்ளன. இதனால் பஸ் நிலையம் அருகில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைக் கருத்தில் கொண்டும், விருத்தாசலம் நகரை அழகுபடுத்தும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  
 
              இந்நிலையில் பஸ் நிலையம் அருகிலேயே உள்ள திரையரங்கத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட திரைப்படத்துக்காக செப்டம்பர் 27-ம் தேதி முதல் பெரியபெரிய சாரங்கள் அமைத்து பிரம்மாண்டமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தற்போது 200 மீட்டர் நீளத்துக்கும் மேல் நகரின் பிரதான சாலையான ஜங்சன் சாலையில் வைக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு மிகப்பெரிய அளவில் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் வணிகர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 
 
                இதோடு மட்டுமல்லாமல் விருத்தாசலம், சேலம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், இச்சாலையில் கனரக வாகனங்கள், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, விருத்தாசலம் ஜங்சன் சாலை, எருமனூர் வழியாக இயக்கப்படுகின்றன.  இதனால் ஜங்சன் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும். நிலைமை இவ்வாறு இருக்கும்போது இதே சாலையில் சாரங்கள் அமைத்து அதிக அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருப்பது போக்குவரத்துக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.  
 
இதுகுறித்து ஜங்சன் சாலையில் கடை வைத்திருக்கும் வியாபாரி கூறியது:  
 
                 ஜங்சன் ரோட்டில் தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து பாதிப்பு உண்டாகிறது. இதனால் சிறுசிறு விபத்துகளும் உண்டாகின்றன. இந்நிலையில் இதுபோன்று பெரியபெரிய பேனர்கள் வைத்திருப்பதால் அதிகமான விபத்துகளும், விற்பனை பாதிப்பும் ஏற்படும் என தெரிவித்தார்.  
 
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான ஈரநிலம் அமைப்பின் தலைவர் ஓவியர் தமிழரசன் தெரிவித்தது:  
 
               தற்போது எல்லா நிகழ்ச்சிகளிலும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது கலாசாரமாக மாறி வருகிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்று மெகா சைஸ் பேனர்கள் வைப்பதால் சுற்றுச்சூழல் அதிக பாதிப்புள்ளாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில் பேனர்களை மிக அதிக நீளத்துக்கு வைக்கும்போது காற்று ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குச் செல்வது தடைபடுகிறது. மேலும் இவை மறுசுழற்சிக்கும் உள்படுத்தப்படுவதில்லை. 
 
                 இதனால் அவை தேக்கம் அடைந்து மண்ணின் தன்மையை பாதிக்கும் என்பதே உண்மை. மேலும் நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட்டதா என்பதும் கேள்விக்குறியதே என தெரிவித்தார்.  உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் முறையான அனுமதி இருந்தாலும், 5 நாள்கள் மட்டுமே பேனர்களை வைக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இவை கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை.  
 
                 எனவே விதியை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதும், வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் டிஜிட்டல் பேனர்களை தடைசெய்வது குறித்து விவாதித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும். அரசு இதற்கு செவிசாய்க்குமா?

Read more »

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 20 % ஒதுக்கீடு எப்படி?

            தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 20 சதவீதம் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்கிற தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  
    
             அரசு வேலைவாய்ப்பில் நேரடி நியமனங்களில் 20 சதவீதம், தமிழ் வழியில் படித்தோருக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்தச் சட்டத்தை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கடந்த மாதம் 7-ம் தேதி பிறப்பித்தார்.  
 
ஒதுக்கீடு எப்படி? 
 
               தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்வது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஒதுக்கீட்டு முறை எவ்வாறு என்பது குறித்து தமிழக அரசின் அரசிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் கே.என்.வெங்கடரமணன் வெளியிட்டுள்ள உத்தரவு: 
 
                  நேரடி நியமனம் வழியிலான வேலைவாய்ப்புகள் அனைத்திலும் 20 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்படும். பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வகுப்பு வாரியாக இந்த ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்படும்.  200 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டால் அதில், 40 இடங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். இதில், பொதுப்பிரிவில் 19, 31, 48, 65, 81, 100, 115, 131, 148, 165, 181, 200 ஆகிய சுழற்சி எண்களில் 12 பேர் நியமிக்கப்படுவர்.  இதேபோன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வர்களில் 18, 38, 58, 74,114,134, 149, 170, 190, 199 ஆகிய சுழற்சி எண்களில் 11 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். 
 
                    மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபுப் பிரிவைச் சேர்ந்தவர்களில் 23, 46, 73, 96, 123, 146, 173, 196 ஆகிய சுழற்சி எண்களில் 8 பேருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 26, 62, 92, 126, 162, 192 ஆகிய எண்களில் 6 பேர்களுக்கும் பணி வாய்ப்பு அளிக்கப்படும்.  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் பிரிவினர், அருந்ததியர் சமுதாயத்தினர், பழங்குடியினர் ஆகியோருக்கு தலா ஒவ்வொரு இடத்திலும் சுழற்சி எண் முறையில் வேலை வாய்ப்பு தரப்படும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

முற்றுகைப் போராட்டம்: 2025 என்.எல்.சி. தொழிலாளர்கள் கைது



என்எல்சி முதல் சுரங்கம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தலைமையில் ஊர்வலமாகச் செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.
 
நெய்வேலி:
 
              என்எல்சி தலைமை அலுவலகம் மற்றும் முதல் சுரங்க வாயில் முன் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்திய 2025 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி போலீஸôர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.  
 
                என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடைபெற்ற 7 சுற்றுப் பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.  ÷இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தலைமையில் ஒரு பிரிவாகவும், தொமுச தலைமையிலான தொழிற்சங்கக் கூட்டமைப்பு தலைமையில் ஒரு பிரிவாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  
 
                 இந்நிலையில் தொமுச தலைமையிலான தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் அறிவித்திருந்தார். அதன்படி தலைமை அலுவலகம் முன் ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் தலைமை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய 914 ஒப்பந்தத் தொழிலாளர்களை கைது செய்தனர்.  
 
                 இதேபோன்று ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் சுரங்க வாயில் முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய 1111 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி தெர்மல் போலீசார் கைது செய்தனர்.  ஒரே நாளில் ஒரே கோரிக்கைகளுக்கு இருவேறு இடங்களில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் மூலம் 2025 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.  இதனிடையே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் திங்கள்கிழமை சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Read more »

சட்டமேலவை தேர்தல் கடலூர் மாவட்ட வாக்காளர்கள் பதிவு செய்ய ஆட்சியர் அறிவிப்பு

டலூர்:

          கடலூர் மாவட்டத்தில் சட்ட மேலவைத் தேர்தலுக்கு, வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்டு உள்ளார்.

ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                தமிழக சட்ட மேலவை அமைய தொகுதி எல்லை நிர்ணயம் செய்து, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு வெளியிட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்பு தொகுதியாக கடலூர் மாவட்ட எல்லையும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு என விழுப்புரம், சேலம், நாமக்கல் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மத்திய ஆசிரியர்கள் தொகுதி எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் வாக்காளர் பதிவு அதிகாரியாகவும், அந்தந்த மாவட்ட சார் ஆட்சியர்கள், உதவி ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளாகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

                விண்ணப்பப் படிவங்களை, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பட்டதாரித் தொகுதிக்கு படிவம் 18, ஆசிரியர் தொகுதிக்கு படிவம் 19. வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதி நாள் 1-11-2010. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 1-10-2010 முதல் 6-11-2010 வரை நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களால் பெறப்படும். மேலும் 16-10-2010, 17-10-2010, 30-10-2010, 31-10-2010 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மனுக்கள் பெறப்படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களுடன் தகுதிக்கான சான்று நகல்கள் இருப்பிடத்துக்கு ஆதாரமாக ரேஷன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், கவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வருமான வரி செலுத்துவதற்கான அடையாள அட்டை, தொலைபேசிக் கட்டண ரசீது, மின் கட்டண அட்டை, எரிவாயு சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும்.

                    பட்டதாரித் தொகுதிக்கு வாக்காளர்கள் 1-11-2010-ம் தேதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆசிரியர் தொகுதிக்கு வாக்காளர் தகுதி, 6 ஆண்டுகள் துண்டிப்புகளுடனும், 3 ஆண்டுகள் தொடர்ந்தும் இடைநிலை ஆசிரியர் தரத்துக்குக் குறையாத பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதற்கு கல்வி நிறுவனத் தலைவரால் சான்று அளிக்கப்பட வேண்டும். வாக்காளர் பதிவுக்கு, வாக்காளர் பதிவு அலுவலரிடம் அசல் சான்றுகளைக் காண்பித்து, திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையை நம்பியுள்ள கரும்பு விவசாயிகள்

சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பியுள்ள விவசாயிகளுக்கு விதிமுறைப்படி பங்குத் தொகை மற்றும் சர்க்கரை விநியோகம் வழங்கப்படாததால் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

              எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முறையற்ற நிர்வாகப் போக்கினால் லாபத்தில், கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்குத் தொகை வழங்கப்படாததால் பொருளாதார நஷ்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். 2004-ம் ஆண்டு அரவைப் பருவத்திலிருந்து 2010-ம் ஆண்டு அரவைப் பருவம் வரை  ஆலை ஈட்டிய லாபம் |27 கோடியாகும். கூட்டுறவு விதிமுறைப்படி கரும்பு சப்ளை  செய்தவர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் எத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. 

            மேலும் 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை மாநில அரசின் ஆதரவு விலை கொடுக்காததால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 16 கோடியாகும். எத்தனால் ஆலை நிறுவ, கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த  337 லட்சம் பெறப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் எத்தனால் ஆலை தொடங்கப்படவில்லை.

இது குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் கே.ஆதிமூலம் தெரிவித்தது: 

               ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சர்க்கரை விநியோகம், சரியாக வழங்கப்படவில்லை. ஒரு தலைபட்சமாக பாதி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதி பேருக்கு வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் விதைக் கரணைகள் வழங்கியதில் சரியான கொள்கையை பின்பற்றாததால் விவசாயிகளுக்கும், ஆலைக்கும் பெருத்த நஷ்டமும், கரும்பு உற்பத்தியில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

                        கரும்பு உற்பத்தி செய்து ஆலை இயங்க ஆணி வேராக உள்ள கரும்பு விவசாயிகளின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே ஆலை நிர்வாகத்தின் செயல்பாட்டையும்,  கொள்முதல் செயல்பாட்டையும் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்தி, ஆலை நிர்வாகம் லாபத்துடன் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Read more »

Rs 1.71-lakh in scholarships for HIV-afflicted students

CUDDALORE: 

             District Collector P.Seetharaman on Monday disbursed educational scholarship amounting to Rs 1.71 lakh to 58 children who have been tested HIV positive.

            The financial assistance was given by the Tamil Nadu AIDS Control Society through the District AIDS Prevention and Control Unit. A statement from the Collectorate noted that the aid was given to the children for the past two years. These children had contracted the disease from their parents. Those who were present on the occasion included, district AIDS control officer R.Meera and manage-district planning Maru.S.Kalaimathi.

             The Collector also extended pension benefit of Rs 400 a month to visually impaired Paranjothi of Paloothankarai and differently-abled Rathinavlu of B.Mutlur. He arranged for loans at the rate of Rs 3,000 each to 17 differently abled persons for starting self-help ventures. He also distributed house site pattas to 11 Adi Dravidars and beneficiaries belonging to the Backward Classes and Minorities. As many as 380 people gave petitions to the Collector, seeking basic amenities such as water, roads, old age pension and other benefits under various welfare schemes of the government.

              At Villupuram, Collector in-charge N.Venkatachalam received a total of 589 petitions in a single day, seeking concrete houses under the Kalaignar Housing Scheme, ration cards, bus facility, bank loan, educational loan and so on. After perusing the petitions, Mr Venkatachalam handed these over to the officials of the respective departments for immediate clearance. He instructed the Village Administrative Officers to stay put in their stations on Mondays so as to receive the petitions from the people from the respective places. Mr. Venkatachalam called upon the people to use the toll free number 1070 to register their petitions or complaints.

Read more »

Annamalai University convocation tomorrow

CUDDALORE: 

             The 78th convocation of Annamalai University will be held on the university premises at Chidambaram on Wednesday, according to M.Ramanathan, Vice-Chancellor. He told the reporters that Governor and Chancellor of the university Surjit Singh Barnala would give away the degree certificates. Chairperson of the National Council for Teachers' Education (New Delhi) Mohd.Akhtar Siddiqui, would deliver the convocation address. Pro-Chancellor M.A.M. Ramaswamy would participate.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior