உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 21, 2011

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்


வட​லூர் சத்​திய ஞான​ச​பை​யில் தைப்​பூ​சத்தை முன்​னிட்டு ​ ஜோதி தரி​ச​னம்.​ செய்​யும் வள்​ள​லார் அன்​பர்​கள்.
 
நெய்வேலி:
 
            வள்ளலார் வாழ்ந்த வடலூரில் உள்ள சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை 7 திரைகளை நீக்கி 6 காலங்களில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
 
            இந்த ஜோதி தரிசனத்தைக் காண 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் திரண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூசத்தினத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தைக் காண தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வள்ளலார் பக்தர்கள் வடலூருக்கு வருவர். இதையொட்டி வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகமும் தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
 
             அதன்படி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 10, பிற்பகல் 1, இரவு 7, 10 மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி என ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.இதில் 10 மணிக்கு நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், டி.ஐ.ஜி. மாசானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.
 
             தைப்பூச விழாவை ஒட்டி, வடலூர் தருமச்சாலை பிரசங்க மேடையில் ஊரன் அடிகளார் தலைமையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தைப்பூச ஜோதி தரிசனத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையில் 500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
               இதைத்தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் 12 முதல் மாலை 6 மணி வரை வள்ளலார்  அருட்பெருஞ்ஜோதியாகிய மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூசத்தை முன்னிட்டு  ஜோதி தரிசனம். செய்யும் வள்ளலார் அன்பர்கள்.

Read more »

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்: 2750 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்: 2750 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விபரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/recruitment.htm

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் பயணிகள் ரயில்களை கூடுதலாக இயக்கக் கோரிக்கை

கடலூர்:

           விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் வசதிக்காக, கூடுதலாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் குழுக் கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் கடலூர் பி.சிவகுமார் இக் கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகள்:

              விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயிலில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணிக்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரிவோர் 200-க்கும் மேற்பட்டோர் அன்றாடம் பயணிக்கின்றனர்.

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், வகுப்புகள் முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்ப ரயில் வசதி இல்லை. எனவே மயிலாடுதுறையில் இருந்து விழுப்பரம் மார்க்கத்தில் செல்லும் ரயில், மாலை 5-15 மணிக்கு சிதம்பரத்துக்கு வரும் வகையிலும், விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், காலை 8-30 மணிக்கு கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்கு வரும் வகையிலும் புதிய பணிகள் ரயில்களை இயக்க வேண்டும்.

               திருப்பாப்புலியூர் - பெங்களூரு, திருப்பாப்புலியூர் - திருநெல்வேலி இடையே புதிய ரயில்ளை இயக்க வேண்டும். வாரம் இரு முறை இயக்கப்படும் சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரல் ரயிலை, ஏற்கெனவே இருந்ததுபோல், மாலை 6 மணிக்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வரும் வகையில், தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

               மயிலாடுதுறை - விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில், ஓய்வறை வசதி, குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 23ம் தேதி துவங்குகிறது என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா கூறியுள்ளார். 

சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

           போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோயை தடுக்க நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 1995ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது 16 வது முறையாக தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க இந்தாண்டு கடலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் முதற்கட்டமாக இம்மாதம் 23ம் தேதி நடக்கிறது. 

           இரண்டாம் கட்டமாக பிப்., 27ம் தேதி நடக்கிறது. இப்பணிகளுக்காக நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம் என 1512 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட எல்லையோரம், குடிசைப் பகுதிகள், புதியதாக உருவான பகுதிகள், பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் வாழும் பகுதியில் 101 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

          இப்போலியோ மருந்துகள் தரம் வாய்ந்தவை. மருந்துகள் யாவும் புதியதாக உற்பத்தி செய்யப்பட்டவை. பாதுகாப்பானவை. எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

கடலூர் :

            கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 26ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 

         தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்கள் அடங்கிய பாடல் பெற்ற தலம் பாடலீஸ்வரர் கோவில். இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்ற மகான்கள் வழிபட்ட திருத்தலமாகும். சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட இக்கோவிலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்யப்பட்டது. 

           அதன் பின் கடந்த 1917 ஆண்டும், அதனைத்தொடர்ந்து 1973ம் ஆண்டிலும், 1996ம் ஆண்டும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கடலூர் அருள்மிகு பெரியநாயகி சமேத பாடலீஸ்வர் ஆலய வழிபடுவோர் சங்கம் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திகேயன், கணேசன், லேனா நாகப்பன், பாலதண்டாயுதம், நடராஜன், பாண்டுரங்கன் உள்ளிட்ட வழிபடுவோர் சங்கத்தினர் முயற்சியில் ரூ.1.35 கோடி ரூபாய் செலவில், கோவிலின் பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கருங்கற்கள் பதிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது.

                  இந்து அறநிலையத்துறை சார்பில் ராஜகோபுரம் 8 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோவிலின் தூய்மை கெடாமால் இருக்க மூன்று அடுக்கு தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து யாகசாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Read more »

Thousands have "Jothi Darshan"


Health Minister M.R.K.Panneerselvam in Vadalur on Thursday.


CUDDALORE: 

        A large number of people had an early “Jothi darshan” at Sathya Gnana Sabai, established by Ramalinga Adigalar (popularly known as ‘Vallalar'), at Vadalur on Thursday. Health Minister M.R.K. Panneerselvam was present.

       Special bus services were operated to help people from various parts of the district and neighbouring districts to reach Vadalur, sources said. Superintendent of Police Ashwin Kotnis made elaborate security arrangements at the venue. Service organisations and philanthropists set up “pandals” for serving drinking water, buttermilk and packed food to visitors.

Read more »

Students should aim high: Director Cheran


Director Cheran and lyricist N. Muthukumar at the ‘Stepping stones' programme at St. Joseph's college in Cuddalore on Thursday

CUDDALORE:

         Have a vivid picture of what you want to be in your mind's eye and strive towards it with single-minded devotion. This is the formula for success prescribed by Tamil film director and actor Cheran.

        He was delivering a speech at the ‘Stepping stones' programme, a guidance session meant for Plus Two students organized by the Arunai College of Engineering, Tiruvannamalai, on the premises of St. Joseph's College here on Thursday.

         Mr Cheran said that the humiliations and failures suffered in the formative years propelled him to reach the heights of glory and his film career was a salient example in this regard. When he was denied admission for a function in the Valluvar Kottam in Chennai, he resolved to get felicitated in the same venue, and his movie ‘Bharathi Kannamma' fetched him the honour. He also harboured the ambition of getting a national award from the President and that too materialised. Above all, he desired to bring his parents joy and he was successful in that too.

            Therefore, Mr Cheran said that the students should aim high and spurn all kinds of diversions, which were aplenty, to attain their goals. Hard work would always bring its rewards, he said.

Life-long process

           Film lyricist N. Muthukumar said that the students should take to studies out of their own interest and not out of compulsion. Studying was a life-long process and should not to be confined only to school days or college days. Set aside some money for buying books of interest and make a provision for a book shelf in every household, he told the students.

           Mr Muthukumar further said that Tamil literature had the unique quality of energising the readers because it was close to life. Therefore, he called upon the students to cultivate the habit of perusing Tamil literary works.

       Professor K. Gnanasambandan, who has been a moderator for many a debate, said that when he started as an orator he felt dumbstruck and could not even remember his name. But he consciously made efforts to overcome the stage fear that won him accolades both in the country and abroad. Managing Director of Arunai College of Engineering E.V.Kamban, vice-president E.V.Kumaran, vice-president and Principal M. Arumugham also spoke.

Read more »

Muslim Makkal Kazhagam's plea to Chief Minister

CUDDALORE: 

         The Muslim Makkal Kazhagam has appealed to Chief Minister M.Karunanidhi to extend the Kalaignar Housing Scheme to the economically weaker sections of the minority community.

          The Kazhagam, at its 11th anniversary function held here recently, adopted a resolution . It stated that the government proposal to make Tamil Nadu free from huts was a laudable objective. But, there was a need to expand the project to cover the nomadic tribes such as the Narikoravas and the hilly tribes, and also the people who had made platforms their domicile places.

        In another resolution, it thanked Mr. M.Karunanidhi and Deputy Chief Minister M.K.Stalin for having formed a separate welfare board for the ulemas and set apart 3.5 per cent reservation for the minority community. In yet another resolution, the Kazhagam resolved to support the ruling Dravida Munnetra Kazhagam in the coming Assembly elections. Founder-president of the Kazhagam S.S.Jainuddin participated.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior