உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 18, 2012

திருமாந்துறையில் சிவன் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி-பேதி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Mar/83a9f3dc-7d16-4e9e-ac6c-20aad90ee793_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
         திட்டக்குடியை அடுத்த திருமாந்துறையில் உள்ள சிவன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் திரளான ஆண்-பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அங்கனூரை சேர்ந்த கிராமத்தினர் சிலர் அந்த கோவில் பிரசாதத்தை பெற்று கொண்டு இரவில் வீடு திரும்பினார்கள்.   
 
      காலையில் அந்த பிரசாதத்தை சாப்பிட்ட தமிழ்ச்செல்வி (வயது 38), பூங்கா (29), ஆனந்தி (25), அமுதா (28), அனுசுயா (20), சந்துரு உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.   இது பற்றி தகவல் அறிந்த மருத்துவ அலுவலர் மோகன் அங்கனூர் கிராமத்துக்கு விரைந்து சென்றார். வாந்தி-மயக்கத்துக்கு காரணமான பிரசாதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior