உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

கழிவுநீர் தேங்குவதால் திறக்க முடியாத பள்ளி வகுப்பறைகள்

பண்ருட்டி,நவ.18: பண்ருட்டி அய்யனார் கோயில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் 15 நாள்களாக பள்ளி திறக்கப்படாமல், பழைய கட்டடத்திலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன. பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில், அய்யனார் கோயில் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 160-ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இதன் அருகில் உள்ள அங்கன்வாடி...

Read more »

சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி,நவ.18: மின்சாரக் கோளாறு காரணமாக பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள உயர்கோபுர விளக்கு, சிக்னல் புதன்கிழமை எரியாமல் இருள் சூழ்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் அவதி அடைந்தனர்.நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வியாபார மற்றும் பணி நிமித்தமாக பண்ருட்டி வந்து செல்கின்றனர். இதனால் நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.மேலும் கடலூர்-சித்தூர், சென்னை-கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலைகள்...

Read more »

நவம்பர் 20ல் வடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்,நவ. 18: தி.மு.க. சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வடலூரில் நவம்பர் 20,21,22 தேதிகளில் நடைபெறும் என்று கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை அறிவித்தார். அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் கலைஞரின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு (18 வயது முதல் 35 வயது வரை)...

Read more »

ஆலப்பாக்கம் மேம்பாலத் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?

சிதம்பரம், நவ. 17: சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு இடையே விழுப்புரம்-புதுவை-நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கத்தில் ரயில்வே கேட் உள்ளது.அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்தில் இங்கு ரூ.17.50 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க இடம் பெற்றுள்ளது.ஆனால் தற்போது அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவுற்று ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்காமலேயே சாலையை உயர்த்தி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு...

Read more »

சுகாதாரப் பணிகள் இல்லாததால் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

பண்ருட்டி,நவ.17: கன மழையின் காரணமாக தொற்று நோய் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பண்ருட்டி நகரம், அண்ணா கிராம ஒன்றியப் பகுகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என பொது நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் பண்ருட்டி வட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடத்தில் மழை நீர்...

Read more »

தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் விசாரணை

சிதம்பரம்,நவ.17: கடலூர் மாவட்டத்தில் 3 கூட்டங்களுக்கு மேல் பங்கேற்காத ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தவறு செய்தவர்களிடம் தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டார். 3 கூட்டங்களுக்கு மேலாக பங்கேற்காத துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையின்படி...

Read more »

ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர்களுக்கு மருத்துவ உதவித் தொகை உயர்வு

நெய்வேலி நவ .17: என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிறுவனம் அளித்துவரும் மருத்துவ உதவித் தொகை அதிகபட்சம் ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலன்கருதி நிர்வாகம் ஊழியருக்கும், அவரது மனைவிக்கும் 1995-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்தத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகத்திற்கு...

Read more »

பாழாகி வரும் கடலூர் சாலைகள்

கடலூர்,நவ.17: பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக கடலூரில் சாலைகள் தோண்டப்படுவதால் சாலைகள் பாழாகி வருகின்றன. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகிறார்கள்.ரூ. 44 கோடி செலவில் கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை தவிர ஏனைய சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்படும் பள்ளங்களை, வேறு மணல் கொண்டு முறையாக நிரப்பி சாலை அமைக்க...

Read more »

திட்டக்குடி நூலகத்தில் கட்டணத்தில் கணினிச் சேவை

கடலூர், நவ.17: திட்டக்குடி அரசு நூலகத்தில் வாசகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் (மணிக்கு ரூ.10) பிராட்பேண்ட் வசதியுடன் கணினிச் சேவை தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட நூலக அலுவலர் அசோகன் தெரிவித்தார். திட்டக்குடி அரசு நூலகத்தில் நமது உலகம் நூலக எழுச்சி ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட நூலக அலுவலர் அசோகன் கலந்து கொண்டு பேசியது: நமது உலகம் நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் புரவலர் சேர்க்கை நடந்து வருகிறது....

Read more »

3 இடங்களில் இந்தியன் வங்கி ஏடிஎம் திறப்பு

கடலூர், நவ,17: கடலுர் மாவட்டத்திóல் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. முதுநகரில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் குத்து விளக்கு ஏற்றி மையத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் தலைவர் எம்.எஸ்.சுந்தராஜன், துணைப்பொது மேலாளர் முத்துக் கருப்பையா உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டன...

Read more »

நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை

நெய்வேலி நவ .17: நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது புவிவெப்பபம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது உலகளவில் அதிகரித்துவருகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுóக்க பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒருபகுதியாக மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நகரியத்தில் பாலிதீன் பைகளை பயன்படுத்த நகர...

Read more »

காலி குடங்களுடன் முற்றுகை

சிதம்பரம்,நவ.17: சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் ஒன்றியக்குழு அலுவலகத்தை வேளப்பாடி கிராம மக்கள் குடிநீர் கோரி காலி பானைகளுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.சிதம்பரத்தை அடுத்த கண்ணங்குடி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த வேளப்பாடி, வால்காரமேடு, பெரியதெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு பழுதடைந்ததால் குடிநீரின்றி மக்கள் அவதியுற்றனர். இதையடுத்து புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior