பண்ருட்டி,நவ.18: பண்ருட்டி அய்யனார் கோயில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் 15 நாள்களாக பள்ளி திறக்கப்படாமல், பழைய கட்டடத்திலேயே வகுப்புகள் நடைபெறுகின்றன. பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில், அய்யனார் கோயில் தெருவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 160-ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இதன் அருகில் உள்ள அங்கன்வாடி...