உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 19, 2013

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 24ம்தேதி முதல் தொடக்கம்

விருத்தாசலம், : 

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 24ம்தேதி முதல் தொடங்குகிறது.

கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 2013&14ம் கல்வி  ஆண்டிற்கான பட்டப்படிப்பில் சேருவதற்கு  கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி 24ம்தேதி காலை சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுத்திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி ஆகியோருக்கும், மறுநாள் 25ம்தேதி பி.ஏ. ஆங்கிலம் பட்டப்படிப்புக்கும், 26ம்தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், 27ந்தேதி பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கும், ஜூலை 1ம்தேதி பி.ஏ. தமிழ், பி.காம்., 2ம்தேதி பி.ஏ.வரலாறு பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வுக்கு மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் வரவேண்டும். மேலும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 3 நகல்களை எடுத்து வருவதுடன், மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். 2ம்தேதி நடைபெறும் மாணவர் சேர்க்கைக்குப் பின், வேறு பாடப்பிரிவுக்கு மாறுதல் பெற இயலாது. இதில் கல்வி கட்டணமாக பி.ஏ., பி.காம் பட்டப்படிப்புகளுக்கு ரூ. 1,605, பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ரூ.1,625ம்,  பி.எஸ்.சி. கணினி, அறிவியல் பட்டப்படிப்பிற்கு ரூ. 1025 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கல்லூரி முதல்வர் கோவிந் தன் தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior