உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 05, 2011

பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள்

கடலூர்:

               பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் கடலூரிலேயே செப்டம்பர் 5-ம் தேதி முதல் கிடைக்கும் என்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. அமுதவல்லி அறிவித்து உள்ளார்.  

முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                 தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி மற்றும் மாதிரி வினா கையேடுகள் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. இந்தக் கையேடுகள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டடத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அவற்றை மாணவர்களின் பெற்றோர் சென்னை சென்று வாங்கி வந்தனர். 

                தற்போது வினா வங்கி மற்றும் மாதிரி வினாக் கையேடுகளை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலேயே விற்பனை செய்ய, கல்வி அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.  கடலூர் மாவட்டத்துக்கான வினா வங்கி மற்றும் மாதிரி வினாக் கையேடுகள், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 5-9-2011 முதல் விற்பனை செய்யப்படும். மாணவர்கள் இக்கையேடுகளை வாங்கிப் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும், செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.




Read more »

தமிழகத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நட ரூ. 62 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.சி. சம்பத்

பண்ருட்டி:

                சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு ஒரு கோடி  மரக்கன்றுகளை நட ரூ. 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.

               டால்மியா சிமென்ட் குழுமம், பண்ருட்டி அரசு மருத்துவமனை மற்றும் எக்ஸ்னோரா, சிவிக் எக்ஸ்னோரா சங்கம் இணைந்து எக்கோடச் மரக்கன்றுகள் நடும்விழா அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடந்தது. 

விழாவில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது: 

               காடு செழித்தால் தான் நாடு செழிக்கும், இன்றைய நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் அதிகம் தேவை. நாளுக்குநாள் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகிறது. மேலும் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தூய்மையான காற்றும் அவசியம்  என்றார்.

                விழாவிற்கு ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலன் இணை இயக்குநர் கடலூர் டாக்டர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மாவட்ட தலைவர் ஆர்.எம்.பாலசுப்பிரமணியன், மத்திய அரசு வழக்கறிஞர் கே.கோபாலகிருஷ்ணன், எக்ஸ்னோரா சங்க இயக்குநர் இ.பழனி முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.மலர்கொடி வரவேற்றார். சிவிக் எக்ஸ்னோரா தலைவர் டி.சி.பசுபதி, மாவட்ட வனத்துறை அலுவலர் ஏ.சுப்ரமணியன், சென்னை எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் துணைத் தலைவர் என்.வி.ரங்கநாயகலு, விதை சான்று உதவி இயக்குநர்  பி.ஹரிதாஸ், மொழி மொழி அமைப்பாளர் பொன்வேந்தன், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

             மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலர் ஆதிசேஷன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலர் பெருமாள் ராஜா, அண்ணா கிராம ஒன்றிய செயலர் வ. விபீஷணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் எம்.எஸ். தாஜுதீன், நகர பேரவைச் செயலர் ஆர். செல்வம், நகரச் செயலர் ரவிச்சந்திரன், அவைத் தலைவர் ராஜதுரை கவுன்சிலர் கமலக்கண்ணன், வழக்கறிஞர் வடிவேலன், ஏழுமலை, ஆழ்வார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ். மோகன்குமார் தலைமையில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். டாக்டர் டி. எழில் நன்றி கூறினார்.







Read more »

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கடலூர் மாணவர்கள் 27 பதக்கங்கள் வென்றனர்

கடலூர்:

            சென்னையில் நடந்த மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 27 பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
 
               சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டியை சேர்ந்த மாணவர்கள் 49 பேர் பங்கேற்றனர். 

இதில் 

கடலூர் மாணவர் ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தங்கம், இரண்டு சில்வர், ஒரு வெண்கலம் என 5 பதக்கமும், 

தினேஷ்ராஜ், சிவகதிரவன், ரக்ஷாம்பிகா சக்திகுமார் ஆகியோர் தலா ஒரு தங்க பதக்கத்தையும் பெற்றனர்.

           மேலும் சிவகதிரவன், கீர்த்திவாசன், பிரியதர்சன், தினேஷ்ராஜ், விக்னேஷ்வர், ரக்ஷாம்பிகா, அமிழ்தம் ஆகியோர் சில்வர் பதக்கங்களும், ரக்ஷாம்பிகா, நித்தியஸ்ரீ, திரிசுலா, சேரலாதன், பூவராகவன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் என மொத்தம் கடலூர் மாணவர்கள் 27 பதக்கங்களை பெற்றனர்.

                 பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அமச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., பகலவன் தலைமை தாங்கி, போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் .விழாவில் சங்கத்தின் பெருந்தலைவர் கரிகாலன், சங்க தலைவர் எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலளர் ராமலிங்கம், துணை தலைவர்கள் அருமைச்செல்வம், கருணாகரன், செயலாளர் சந்திரமோகன்பால்ராஜ் வாழ்த்து தெரிவித்தனர்.








Read more »

கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாலை விபத்து : இருவர் பலி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/4ebb58f3-94dc-47f1-99af-4382913878ec_S_secvpf.gif

கடலூர்:

               சிதம்பரம் லால்புரம் பெரிய தெருவை சேர்ந்தவர் அரசன் (வயது 61). இவர் கிராம உதவி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் சாந்தி. இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அங்குள்ள டாக்டர்களிடம் காண்பித்தபோது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் சாந்திக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று  காலை காரில் சாந்தியை அழைத்து வந்தனர். காரில் அரசன், அவரது மனைவி ராசாயி (55), மகள் சாந்தி (38), மருமகன் செங்குட்டுவன் (45), மகன் இளையராஜா ஆகியோர் வந்தனர்.

                     காரை இளைய ராஜா ஓட்டிவந்தார்.  கார் புதுவையை அடுத்த ரெட்டிச்சாவடி அருகே பெரிய காட்டுப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.  இதில் சம்பவ இடத்திலேயே சாந்தி உடல்நசுங்கி இறந்துபோனார். படுகாயம் அடைந்த அரசன், ராசாயி, செங்குட்டுவன், இளைய ராஜா ஆகிய 4 பேரும் சிகிச் சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே அரசன் பரிதாபமாக இறந்து போனார்.

               மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 
 

Read more »

கடலூரில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்

நெல்லிக்குப்பம்:
 
               கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வெள்ளிக்கிழமை  முதல் பெறப்பட்டு வருகிறது. அதற்கான விருப்பமனு வாங்கும் கடலூர் டவுன் ஹாலை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டார்.

இதன் அமைச்சர் எம்.சி. சம்பத்  கூறியது:-


               மக்களின் எண்ணங்களை புரிந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டங்களை தொலை நோக்கு பார்வையில் செய்து வருகிறார். கல்வியில் புரட்சி, மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுப்பதன் மூலம் விஞ்ஞான புரட்சி, விவசாயிகளுக்கு பசுமை புரட்சி, மிக்சி கிரைண்டர் கொடுப்பதன் மூலம் அடுப்படியிலும் புரட்சி செய்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. 12 ஆயிரம் குடும்பங்களுக்கு கலப்பின ஜெர்சி பசு கொடுப்பதன் மூலம் வெண்மை புரட்சி ஏற்பட்டுள்ளது.

                குடும்பத்துக்கு 4 வெள்ளாடுகள் வீதம் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கொடுக்க உள்ளோம். இதில் 30 சதவீதம் ஆதிதிராவிட மக்களுக்கு கொடுக்க இருக்கிறோம். இதன் மூலம் ஆதிதிராவிட மக்களுக்கு ஆதரவான அரசாகவும் இந்த அரசு திகழ்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு சதவீதும் வெற்றி பெற்றது போல், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 100 நாள் சாதனையை உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிப்போம்.  இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.  அப்போது நகர செயலாளர் குமார் என்கிற குமரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

Delay in delivery of Samacheer Kalvi textbooks in Cuddalore District

             Inordinate delay in procuring textbooks from Tamil Nadu Text Book Corporation in Cuddalore is causing hardship to students and teachers, especially from private schools, due to non-availability of textbooks and confusion over omitted portions.

           The delay is causing problem to parents too as they are forced to spend extra money to take printouts of syllabus from CDs and the Internet. According to an official from the Department of Education, they have only received textbooks for class I and class X for students studying through English medium. All Tamil medium books have been received, the official said. These books are for students studying in government and aided schools. Private schools have a different system, where they pay money to Amudhasurabi for the books.

              Parents from various schools across Puducherry say they paid money around 10 days ago. Despite this, textbooks have not been delivered, even for class X students, who are scheduled to sit for Board examinatios at the end of the academic year. At present, students and teachers in private schools are managing with printouts taken either from the Samacheer Kalvi CD or the Internet. According to a teacher from Seventh Day Adventist School, who is also a parent, even the CD took a while to come through official channels. Several teachers got together to find contacts in the neighbouring State to supply them the CD.

          “We often are unsure of what portions have been omitted, so we have been concentrating on teaching portions that are common between the old syllabus and the new syllabus,” the teacher said.

              “My daughter is studying the class X and she has Board examinations at the end of the year. But, students have not yet received the textbooks. Despite this, quarterly exams have been announced in September,” said one of the parents of a student in St. Joseph of Cluny Girls' Higher Secondary School.

              Speaking to The Hindu, Managing Director of Amudhasurabhi T. Chanemougan said the textbook corporation says preference is given to the government schools. So far, Amudhasurabi had received around Rs. 44 lakh from private schools towards, but there is no supply at the depot in Cuddalore, he said.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior