உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 22, 2010

கடலூரில் பள்ளிகளில் "மாணவ வேலைக்காரர்கள்".. புது கலாசாரம்...

கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், காலையிலேயே வந்து, பள்ளி வளாகத்தை துப்புரவு செய்யும் மாணவிகள்.

கடலூர்:

               கடலூரில் பள்ளிகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்தும் பள்ளி நிர்வாகங்களின் போக்கு, அதிகரித்து வருகிறது.பள்ளிகள் கல்விக் கூடங்களாக கலைமகளின் இருப்பிடமாக இருந்த நிலைகள் எல்லாம் மாறி இன்று நல்ல லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டன. தொழிற்சாலைகளை நடத்திய பலர் அவற்றை மூடிவிட்டு, கட்டணக் கல்விக் கூடங்களை நடத்தத் தொடங்கி விட்டனர்.

                     சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்ட கல்வி நிலையங்கள் கூட, அரசின் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டன. பல்லாயிரம் ரூபாயை மாணவர்களிடம், கல்விக் கட்டணமாக வசூலித்துக் கொண்டு, பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தல், கழிவறைகளைச் சுத்தம் செய்தல், வகுப்பறைகளை சுத்தம் செய்தல், அருகில் உள்ள உணவகங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், டீ, காபி, குளிர்பானங்கள் வாங்கி வருதல், ஆசிரியர்களின் உணவுப் பாத்திரங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை, மேற்கொள்ளச் செய்து, மாணவ வேலைக்காரர்களாக அவர்களைப் பயன்படுத்தும் நிலையும் உருவாகி இருப்பது வேதனை அளிக்கும் விஷயமாகும்.

                   குழந்தைகளை வீட்டு வேலைகளைச் செய்ய வற்புறுத்துவதே, குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்று குழந்தைகளுக்கான சட்டம் தெளிவாகத் தெரிவிக்கிறது. குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள், வீட்டு வேலைகளைச் செய்த காலம் எல்லாம் மலையேறிப் போய்க் கொண்டு இருக்கிறது. பொது சேவைக்காக கோயில் வளாகங்களையும், சாலைகளை சுத்தம் செய்வது வரவேற்கத் தக்கதுதான்.பெண் குழந்தைகள், வீட்டில் ராணிகளாய் சுதந்திரமாய் சுற்றிவரும் நிலை ஏற்பட்டு இருப்பதை பலர் மனப்பூர்வமாக அங்கீரித்து இருப்பது, சமூகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம். 

                    ஆனால் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாகச் செலுத்திவிட்டு, அதே பள்ளிகளில் நிர்ப்பந்தம் காரணமாக வேலையாள்களைப் போல், துடைப்பம் எடுத்து துப்புரவுப் பணிபுரியும் மாணவிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது.கடலூரில் சில பள்ளிகளில் மாணவர்களை கட்டுமானப் பணிகளுக்கு செங்கல் எடுத்துக் கொடுக்கும் வேலைக்குக்கூட பயன்படுத்தப்பட்டதாக அண்மைக் காலத்தில் புகார் எழுந்தது. கல்வித்துறை எத்தனை கட்டுப்பாடுகளை விதித்தாலும், மாணவிகளை பள்ளியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தும் நிர்வாகங்களின் போக்கில், எந்த மாற்றமும் இல்லை.

                   கடலூரில் சில பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளிகளுக்கு, அரசின் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளை அழைத்து, விழாக்களை நடத்திவிட்டால் போதும், அதை வைத்துக் கொண்டு, அனைத்து விதிமீறல்களையும் அரங்கேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றன.பள்ளி நிர்வாகத்தின் அத்தகையை மனப்போக்குதான் மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்து இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவிக்கிறார்கள். பிள்ளைகள் அந்தப் பள்ளியில் முறையாகப் பயின்று வெளிவர வேண்டுமே என்ற ஆதங்கத்தில், கல்விக் கட்டண உயர்வைக்கூட எதிர்க்கும் துணிவு அற்றவர்களாய் இருக்கும் பெற்றோர், இத்தகைய செயல்களையும் எதிர்த்து போர்க்கொடி தூக்க முன்வருவது இல்லை.

                   பெற்றோர்களால்தான் முடியவில்லை, கல்வித்துறை அதிகாரிகளாவது அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி நிர்வாகங்களின் இத்தகைய மோசமான செயல்களைத் தடுத்து நிறுத்த முன்வருவார்களா என்பதும் கேள்விக்குறியே.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

                       "மாணவர்களை கல்விப் பணி தவிர வேறெந்தப் பணிகளையும் செய்ய வற்புறுத்தக் கூடாது என்று, கல்வித்துறை விதிகளில் உள்ளது. புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Read more »

ஆலை உரிமையாளர்கள் கூட்டணியால் சிமென்ட் விலை உயர்வு: பொன்.குமார்


பண்ருட்டி:

                  சிமென்ட், செங்கல் விலை எந்த முகாந்தரமும் இல்லாமல் உயர்ந்துள்ளதற்கு ஆலை உரிமையாளர்கள் கூட்டணி அமைத்து கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் விலை ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் கூறினார்.

பண்ருட்டியில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் பேசியது:

                    கட்டுமான உயர் பயிலரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அக்டோபர் 30-ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இதில் தமிழகத்தில் இருந்து 50,000 பேர் கலந்து கொள்வர்.இந்த கட்டுமான உயர் பயிலரங்கத்தின் மூலம் ஏற்கெனவே கட்டுமானத் தொழிலில் உள்ளவர்களின் பணித் திறனை மேம்படுத்தவும், நவீன வளர்ச்சிக்கு ஏற்ப கட்டுமானத் தொழிலில் பயிற்சி பெற உதவும்.

                    இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு பிளம்பர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், கொத்தனார், பெயிண்டர் என பயிற்சி அளிக்கப்பட்டு அரசு சான்றிதழ் அளிக்கப்படும்.இந்த சான்றிதழ் பெற்றவர்கள் பெரிய கட்டுமான நிறுவனத்தில் பணியில் சேரவும், வெளிநாடு செல்லவும் உதவும், சுயத்தொழில் செய்ய வங்கிக்கடனும் கிடைக்கும்.கட்டுமான மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டையை கொண்டு மருத்துவ சிகிச்சை பெறலாம் என அறிவித்த தமிழக முதல்வருக்கு விழாவில் நன்றி தெரிவிக்கவுள்ளோம்.

                    மேலும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை இந்த விழாவில் முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.கட்டுமான பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 25 நாள்களுக்கு முன்னர்  150 விற்பனையான சிமென்ட் தற்போது  290 விற்பனையாகிறது.மின் கட்டணம் உயரவில்லை, புதிய வரிவிதிப்பு இல்லை, டீசல், பெட்ரோல் விலை உயரவில்லை, தொழிலாளர் சம்பளம் உயரவில்லை.ஆனால் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆலை அதிபர்கள் கூட்டணி வைத்து விலை ஏற்றம் செய்துள்ளனர் என பொன்.குமார் கூறினார்.

Read more »

நீதிபதி கோவிந்தராஜன் கல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு




 
                  தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் தமிழக அரசின் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தமிழக அரசின் www.tn.gov.in  என்ற இணையதளத்தில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.  நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும்இந்தக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகங்களோ, அரசோ வெளியிடவில்லை.
 
                  இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெளியிட  வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் அரசுக்கு நோட்டீசும்  அனுப்பப்பட்டது.இதைத் தொடர்ந்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
                     10 கட்டணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் 10 முதல் 11 ஆயிரம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை நடுநிலைப் பள்ளிக்கு ஆண்டுக் கட்டணமாக 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் சமர்ப்பித்த லாப, நஷ்ட கணக்கு விவரங்களின் அடிப்படையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கு மேல்முறையீட்டில் கட்டணத்தை மறுசீரமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
 
 532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது.:
 
                         அதேபோல், கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை தெரிவிக்காத 532 பள்ளிகளும் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புகார் அளிக்கலாம்:
 
                   நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் வசூலித்திருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குழுவின் இறுதி முடிவுக்கு இது கட்டுப்பட்டது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                  நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்யாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம். பெற்றோர்கள் மகிழ்ச்சி: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை வெளியிட்டிருப்பதால், மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எங்களது பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. 
 
                    இந்த விவரத்தைக் கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் நாங்கள் கேள்வி எழுப்பலாம் என்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சாலமன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்பதே இதுவரை தெரியாத ஒன்றாக இருந்தது. இந்தக் கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிபதி குழு இறுதி முடிவு எடுக்கும் வரை பள்ளிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது. இதுதொடர்பாக, பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி மையத்தில் ஆன்லைன் மூலம் பாடவகுப்புகள்

சிதம்பரம்:

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் 361 டிகிரி மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அறிவியல் தொலைநோக்குப் பாதையான ஆன்லைன் மூலம் பாடத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.  

                   இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துணைவேந்தர் எம்.ராமநாதன் முன்னிலையில் அண்மையில் பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, 361 டிகிரி மைண்ட் நிறுவன தோற்றுநர்கள் பி.ராம்மோகன், ரீட்டா ஆகியோர் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனர். அப்போது தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் உடனிருந்தார்.  

இது குறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

                         தொலைதூரக்கல்விப் பாடங்களை புதிய சகாப்தமாக 361 டிகிரி மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களின் நேரத்தின் தரத்தை வெளிக்காட்டும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  முதல்கட்டமாக எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், எம்.பி.ஏ. பைனான்ஸ் மேனேஜ்மெண்ட், எம்.பி.ஏ. ரீசோர்ஸ் மேனேஜ்மெண்ட் பாடங்களில் ஆன்லைன் மூலம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

                       361 டிகிரி மைண்ட் நிறுவனம் பாடங்களை எதிர்கால நிகழ்வுக்கு ஏற்ப ரிசர்ச் அன்ட் டெக்னாலஜி முறையில் பாடங்களை அமைக்கிறது. இந்த கல்வி நிறுவனத்தின் கல்வி அமைப்பு அரசு நிர்வாக அமைப்பு சார்ந்த மேலாண்மை கல்வியை உலகளாவிய கோட்பாடுகளுடன் அறிவியல் தொழில்நுட்பத்துடன் திறம்பட தயாரித்து பாடங்களை நடத்துகிறது.  இந்த பாடங்களை கடந்த 2 ஆண்டுகளாக 5 நாடுகளைச் சேர்ந்த இருபது வகையான குடியுரிமைப் பெற்ற மாணவர்கள் படித்து மிகப்பெரிய அளவில் பயனடைந்துள்ளனர் என எம்.ராமநாதன்  தெரிவித்தார்.

Read more »

எம்.பி. பதவியை திருமாவளவன் ராஜிநாமா செய்ய வேண்டும்: கார்த்தி ப.சிதம்பரம்

சிதம்பரம்:

                 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரஸ்  விமர்சித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.  

முன்னாள் எம்பி ப.வள்ளல்பெருமானின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வந்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  

                    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாரப்பத்திரிகை ஒன்றில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்தும், தமிழக முதல்வருக்கு பல ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உதவியுடன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், இது போல கூறியது என்னாலும், எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

                  எனவே உடனே அவர் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். 125 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல அவருக்கு தகுதி கிடையாது.  காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. தமிழகத்தில் கூட்டணி குறித்து சோனியாகாந்திதான் முடிவு செய்வார்.  மாநில அரசு திட்டங்கள் அனைத்துக்கும் மத்திய அரசுக்கு பங்கு உண்டு. மத்திய அரசால் எந்த திட்டங்களையும் மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்த இயலாது. தமிழகத்தில் தற்போது ஜேஎன்என் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதிஉதவியுடன் 600 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன.  

                ரூ.  1-க்கு 1 கிலோ அரிசி, 100 நாள் வேலை திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் நிதிஉதவி பெற்றுதான் செயல்படுத்தப்படுகிறது.  திமுகவின் நிர்வாக பலம், அதிகார பலம் எங்களது கட்சிக்கு இல்லாவிட்டாலும், தமிழகத்தில் 45 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சி, ராகுல்காந்தியின் நேரடி மேற்பார்வையில் 13 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளது.  காங்கிரஸ் கட்சி திமுகவுடன்தான் கூட்டணியில் உள்ளது. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும் என கருணாநிதி கூறியுள்ளார்.  

                         கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. டாக்டர் ப.வள்ளல்பெருமான், காரைக்குடி எம்எல்ஏ என்.சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  பின்னர் பஸ்நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட ராஜீவ்காந்தி சிலையை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்துப் பேசினார்.

Read more »

கடலூரில் அரசு கைத்தறிக் கண்காட்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கடலூர்:

                 மத்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையம் மற்றும் தமிழக அரசின் கைத்தறி துணிநூல் துறை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, கைத்தறித் துணிகள் கண்காட்சி கடலூரில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.  

கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்துப் பேசியது: 

                 இக்கண்காட்சி நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். 60 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் கைத்தறித் துணி ரகங்கள், 30 சதவீதம் தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதில் விற்பனை இலக்கு ரூ.  35 லட்சம். கைத்தறித் துணிகளை வாங்குவதன் மூலம், ஒவ்வொரு நெசவாளர் வீட்டிலும் தீப ஒளி ஏற்றி வைக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, அனவரும் கைத்தறித் துணிகளை வாங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.  

               விழாவில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் மனோகரன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பட்டாசு விற்பனை  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடலூர் சரவணபவா கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் புதன்கிழமை, பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.  கூட்டுறவு இணைப் பதிவாளர் இரா.வெங்கடேசன், மத்தியக் கூட்டுறவு வங்கித் தனி அலுவலர் ந.மிருணாளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள உத்தரவு

கடலூர்:

               கடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை, பாதுகாப்புடன் மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.  

                 கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலையைத் தோண்டும் பணி தொடங்கப்பட்டு 3 நாள்களாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே இப்பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. பணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். இப்பணி எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடப்பதை அறிந்த ஆட்சியர், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடன் இதுகுறித்துப் பேசினார். 

                  பணி நடைபெறுவதாக எந்த அறிவிப்பும் அங்கு வைக்கப்படாமலும், தோண்டும் பணியில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை இருப்பதையும் ஆட்சியர் சுட்டிக் காட்டினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்த பிறகே பணி நடைபெற வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார். கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை தோண்டும் பணியின்போது, நகராட்சி குடிநீர் குழாய்கள் செவ்வாய்க்கிழமை உடைந்ததால் சாலைகளில் குடிநீர் ஆறுபோல் ஓடி வீணாகியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு தேங்கிய நீரை தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறும் பள்ளிகளின்உரிமம் ரத்து செய்யப்படும்: கலெக்டர் சீத்தாராமன்

கடலூர்:

                   சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை விடுத்தார்.

                கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு, பள்ளி பிரதிநிதிகள், ஓட்டுனர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி,வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், கல்வி அலுவலர் பூங்கொடி, தொடக்கக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பங்கேற்று பேசினர்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசியது: 

                     இந்தாண்டு பள்ளி வாகனங்கள் ஏதும் விபத்து இல்லாமல் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சில பள்ளிகள் அரசின் உத்தரவை பின்பற்றவில்லை என ஆய்வுகளில் தெரிகிறது. எனவே மீண்டும் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள வழிகாட்டுதலை 10 கட்டளைகளாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

                          இதில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஓட்டுனர் பணியமர்த்துதல், அதிவேகம், கவனக்குறைவாக ஓட்டக்கூடாது, டிரைவர் சீருடை மற்றும் அடையாள அட்டை இருக்கவேண்டும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும், வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசக்கூடாது, வாகனத்தில் டேப்ரெக்கார்டர் வைக்கக்கூடாது, அனுமதியில்லாத வாகனத்தை பயன்படுத்த கூடாது, வாகனத்தில் கதவு பொருத்தியிருக்கவேண்டும், ஜன்னல்களில் கம்பி வலை அடித்திருக்கவேண்டும். இவற்றை அனைத்து பள்ளிகளும் பின்பற்றவேண்டும்.கடந்தாண்டு 1.1.2009முதல் இந்தாண்டு 1.9.2010 வரையில் 635 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

                        இதில் இந்தாண்டு 68 வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றியுள்ளனர். ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டியதாக 4 பேர் பிடிபட்டுள்ளனர்.கடந்தாண்டை விட இந்தாண்டு முன்னேற்றம் உள்ளது. ஆனால் வேண்டிய முன்னேற்றம் இல்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறியதாக 22 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற வாகனங்கள் வைத்திருக்கும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இந்தாண்டு தேசிய நெடுஞ்சாலையில் 139 பேரும், நெடுஞ்சாலையில் 122 பேரும் விபத்தில் இறந்துள்ளனர்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Read more »

பசுமை கரங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது:ஈஷா யோகா பி.ஆர்.ஓ., பேட்டி

சிதம்பரம்:

                ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராம புத்துணர்வு, பசுமை கரங்கள் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மக்கள் தொடர்பு அதிகாரி சுவாமி ஏகா கூறினார்.

ஈஷா அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி சுவாமி ஏகா கூறியதாவது:

                   மக்கள் மனதில் ஆன்மிக அலை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் "ஆனந்த அலை மகா சத்சங்கங்கள்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 16 நகரங்களில் நடத்த திட்டமிட்டு கடந்த மாதம் 26ம் தேதி மதுரையில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் 24ம் தேதி மாலை 6மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அருளுரை வழங்குகிறார். அப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். சிதம்பரம் நகரை பசுமையாக்கும் விதத்தில் "பசுமை சிதம்பரம்' இயக்கத்தை மரக்கன்று நட்டு சத்குரு துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவசமாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

                      புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனை கிராமங்கள் என கணக்கிட்டு அவர்களுக்கு தேவையான அளவில் மரக்கன்றுகள் கொடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மரக்கன்று கொடுக்கும் போது அவர்களின் இருப்பிடம் மற்றும் விலாசம் எழுதிக்கொண்டு கொடுக்கிறோம். அவ்வப்போது எங்களின் தன்னார்வ தொண்டர்கள் கண்காணித்து உதவி செய்வார்கள். பட்டு போகும் சில மரங்களுக்கு மாற்று மரக்கன்றுகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.இந்தியாவில் 200 ஈஷா யோகா மையங்களும், தமிழகத்தில் மட்டும் 120 மையங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கிராம புத்துணர்வு திட்டம், பசுமை கரங்கள் திட்டம், ஈஷா வித்யா பள்ளிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

                       குறைந்த செலவில் தரமான கல்வி வழங்கும் விதமாக தமிழகத்தில் 7 பள்ளிகள் செயல்படுகிறது. மேலும் இவை விரிவுபடுத்தப்படும்.மகா சத்சங்கங்கள் நிகழ்ச்சியையொட்டி 23ம் தேதி சிதம்பரம் கீழவீதியில் இருந்து பல்கலைகழக மைதானம் வரை 2500 பேர் பங்கேற்கும் மாபெரும் பசுமை பேரணி நடக்கிறது. 25ம் தேதி காலை சிதம்பரம் அடுத்த மடவாப்பள்ளம் பகுதியில் உள்ள ஈஷா பள்ளியில் சத்குரு நேரடியாக சென்று மாணவர்களிடம் உரையாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட அமைப்பாளர் பொன்னுதுரை, வெளிச்சம் சேகர், முத்து, தளபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Read more »

Handloom exhibition inaugurated

CUDDALORE: 

                A handloom exhibition has been organised in Roop Mini Hall on Car Street here under the aegis of the Central Handloom Development Corporation and the Department of Handlooms and Textiles.

               The exhibition was inaugurated on Wednesday by Collector P.Seetharaman . It showcases handloom products such as silk saris from Kancheepurm and Aarani, lungis from Kurinjipadi and Kudiatham, Kovai cotton saris, Erode bedsheets, etc. The government will offer a rebate of 30 per cent on every purchase till November 3.

Read more »

Arrear payments to OHT operators

CUDDALORE: 

             Collector P. Seetharaman has ordered the payment of arrears, if any, to overhead tank (OHT) operators in the panchayats for a period of 17 years.

                    In a statement here on Thursday, he said that during a special review meeting conducted recently, it had come to his notice that in certain cases arrears to OHT operators were pending from 1992 to 2009. Therefore, Block Development Officers were directed to disburse the arrears by October 31 through the respective panchayats. The Collector warned that if the panchayats failed to meet the deadline, their accounts would be frozen.

Read more »

NLC issue: Opposition delegation to meet Prime Minister today

CUDDALORE: 

             A delegation of the opposition parties will meet Prime Minister Manmohan Singh in New Delhi on Friday and take up with him the issue of the contract workmen of the Neyveli Lignite Corporation.

                The delegation would include Gurudas Dasgupta of the Communist Party of India, T.K. Rengarajan of the Communist Party of India (Marxist), S. Semmalai and M. Anandan of the All India Anna Dravida Munnetra Kazhagam, T. Velmurugan of the Pattali Makkal Katchi, Ganeshamurthy of the Marumalarchi Dravida Munnetra Kazhagam and C.V. Shanmugham of the Desiya Murpokku Dravida Kazhagam. Mr. Velmurugan told The Hindu that the Prime Minister had given appointment at 6.30 p.m. on Friday to meet the delegation.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior