உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 22, 2012

ல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான "அடுத்து என்ன படிக்கலாம்"

சிதம்பரம்:

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான "அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேரலாம்' என்பது குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கேம்பிரிட்ஜ் ஆங்கில மையம், ஸ்ரீமதி கம்ப்யூட்டர்ஸ், கலாம் பள்ளி ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஆர்.நீலகண்டன், முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் கே.சின்னையன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினர்.÷நிகழ்ச்சியில் ஸ்ரீரெங்கபூபதி கல்லூரி மக்கள்-தொடர்பு அலுவலர் ஜெயலட்சுமி, டி.எஸ்.எம்.ஜெயின் கல்லூரி அமிர்தவர்ஷினி, தாகூர் கல்லூரி சுரேஷ், ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி முருகன், அன்னை தெரசா கல்லூரி பாலு, ஸ்ரீரேணுகாம்பாள் கல்லூரி அம்பிகா ஆகியோர் பங்கேற்று தங்கள் கல்லூரியில் உள்ள படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலாம் மழலையர் பள்ளி எம்.ஜி.தியாகராஜன், ஸ்ரீமதி கம்ப்யூட்டர் நிறுவனம் ஆர்.நீலகண்டன், கேம்பிரிட்ஜ் ஆங்கிலப்பள்ளி மையம் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior