உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 16, 2012

கடலூர்கிருஷ்ணசாமி கல்லூரி பஸ் மீது அரசு பஸ் மோதல் : 24 மாணவியர் உட்பட 30 பேர் காயம்

ண்ருட்டி :

      ண்ருட்டி அருகே, தனியார் கல்லூரி பஸ் மீது, அரசு டவுன் பஸ் மோதியதில், 24 மாணவியர் உள்ளிட்ட, 30 பேர் படுகாயமடைந்தனர்.

      கடலூர், கிருஷ்ணசாமி கல்லூரியில் இருந்து, மாணவியரை ஏற்றிக் கொண்டு, பண்ருட்டி நோக்கி பஸ் நேற்று வந்து கொண்டிருந்தது.  மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தத்தில், மாணவி ஒருவரை இறக்கியபோது, பின்னால் வேகமாக வந்த அரசு டவுன் பஸ், தனியார் கல்லூரி பஸ் மீது மோதியது. இதில், கல்லூரி பஸ்சில் வந்த, 24 மாணவியர் காயமடைந்தனர். அரசு டவுன் பஸ்சில் வந்த பயணிகள் 6 பேர், பலத்த காயமடைந்தனர். அனைவரும், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களில், மூன்று மாணவியர், கடலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பண்ருட்டி போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior