உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 29, 2010

காவிரி-கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா?


காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம்-மணல்மேடு இடையே கடலூர்-நாகை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம்.
 
சிதம்பரம்:

           காவிரி-கொள்ளிட ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வீணாகக் கடலில் கலக்கும் நீரை தேக்கி வைக்க வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

           தமிழகத்தில் மொத்த பாசனம் பெறும் நிலங்கள் 70 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதில் மழையை நம்பியே 59 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கெனவே 24 லட்சம் ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி நடந்துள்ளது. தற்போது நீர் பற்றாக்குறை, ஆள்பற்றாக்குறை, வேளாண் இடு பொருள்களின் விலையேற்றத்தால் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவருவதால் தற்போது அது குறைந்து 10 லட்சம் ஏக்கரில்தான் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

            தமிழகத்தில் மொத்தம் 33 ஆற்றுப்படுகைகள் உள்ளன, இவற்றில் 12 ஆற்றுப்படுகைகளில் மழை மற்றும் வெள்ளக்காலங்களில் உபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.விஜயராகவன் ஆய்வு கமிட்டி தெரிவிக்கிறது. எனவே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையிலிருந்து கீழணை வரை நெச்சியாம், கூகூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, கோடாலிக்கருப்பூர் மற்றும் கீழணையிலிருந்து முட்டம், கொள்ளிடம் உள்ளிட்ட 10 இடங்களில் சுமார் 7.5 மீட்டர் உயரத்துக்கு தடுப்பணை கட்டப்பட வேண்டும். இந்த தடுப்பணைகள் மூலம் 200 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கமுடியும். 

          இதனால்  6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைத்தால் ஒவ்வொரு இடத்திலும் 8 மெகாவாட் வீதம் 80 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். காவிரியிலும், கொள்ளிடத்திலும் தடுப்பணைகள் கட்டினால் மேட்டூரில் அதிகளவு நீரை தேக்கி வைத்திருக்க முடியும் என ஓய்வுபெற்ற காவிரி பாசனப்பகுதி மேற்பார்வை பொறியாளர் என்.நடராஜன் தெரிவித்தார்.

            999-ம் ஆண்டு வீராணம் விரிவாக்கத் திட்டத்தின்கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட உத்தேசிக்கப்பட்டு இருந்த தடுப்பணைகள் அமைக்கும்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் கடலில் கலப்பதற்கு முன்பு காட்டுமன்னார்கோவில் அருகே முட்டத்துக்கும், மணல்மேட்டுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.48 கோடி செலவில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலத்தின்கீழ் தடுப்பணை அமைக்க வேண்டும்.  கொள்ளிடம் ஆறு அகலமான நதியாக இருப்பதால் அதிகளவு நீரை சேமிக்க முடியும். 

                   முட்டம்-மணல்மேடு பாலத்தின் கீழ் தடுப்பணை அமைத்தால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என வீராணம் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தார்.

Read more »

மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை


கடலூர் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் மண் பரிசோதனை நிலைய ஆய்வுக்கூடம்.
 
கடலூர்:

          தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களில், பல ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

            ஒரே நிலத்தில், ஒரே மாதிரியான பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்யும் முறை தமிழகத்தில் நீண்ட காலமாக, பாரம்பரியமாக இருந்து வருகிறது. இதனால் மண் வளம் குறைந்து வருகிறது. இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிகொல்லி முறைகளைக் கைவிட்டு, நவீன ரசாயன உரங்களையும், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும்போது மண் வளம் சீர்குலைந்து விடுகிறது. 

           புவிவெப்பம் அடைதல் காரணமாகவும், மழை வளம் குறைவதாலும், அதிகப்படியான நிலத்தடி நீரை வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்காகவும் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குள் சென்று கொண்டு இருக்கிறது.   இதனால் மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவைகளும், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் போன்ற பயிர்களுக்கு முக்கியத் தேவைகளான நுண்ணூட்டச் சத்துகள் குறைவாலும் நிலத்தின் தன்மை மாறிவிடுகிறது. 

            மண்வளத்தை அறிந்து அதற்கேற்ற அளவில் மட்டுமே பயிர்களுக்குத் தேவையான உரங்களை பயன்படுத்துவது நவீன வேளாண்மையின் முக்கிய அம்சம் என்று தமிழக வேளாண் துறை அறிவுறுத்துகிறது.÷உரச் செலவைக் குறைக்க, இடும் உரம் பயிர்களுக்கு முழுமையாகக் கிடைக்க, நிலையான நிலவளத்தை பெருக்கிட, மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர்களை தேர்ந்தெடுக்க, மண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். நிலத்தின் பி.எச். அளவு 6.85 அளவில் இருக்க வேண்டும். இது அதிகரித்தால் நிலத்தில் காரத் தன்மையும், குறைந்தால் அமிலத் தன்மையும் ஏற்படும்.

            நிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு போகத்துக்கும், ஒவ்வொரு பயிருக்கும் மண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வேளாண் அலுவலர்கள் வலியுறுத்துகிறார்கள். தமிழகத்தில் 30 இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள், (ஆந்திரத்தில் 8 இடங்களில், உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களில் மட்டும்) 16 மாவட்டங்களில் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் உள்ளன.  ஆண்டுக்கு மாவட்டத் தலைநகரங்களில் உள்ள ஆய்வுக் கூடங்கள் மூலம் 8.45 லட்சம் மண் பரிசோதனைகளும், நடமாடும் ஆய்வுக் கூடங்கள் மூலம் 2.89 லட்சம் மண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

               நிலத்தடி நீரைக் கொண்டு செய்யப்படும் விவசாயம் அதிகரித்து வருவதால், மண் பரிசோதனை செய்யப்படுவது போல, பாசன நீரின் தன்மையையும் அறிந்து, விவசாயம் செய்யவேண்டும் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.   நிலம் வளமானதாக இருந்தாலும், பாசன நீரில் உள்ள உவர் தன்மை, களர் தன்மை காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும். நீரின் ரசாயனத் தன்மைக்கு ஏற்ப பயிர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர். 

             வேளாண் மூலம் மேற்கொள்ளப்படும் மண் பரிசோதனைக்கு ஏக்கருக்கு ரூ.5-ம், நுண்ணூட்டச் சத்துக்களை ஆய்வு செய்ய மேலும் ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வட்டாரங்கள் தோறும் அண்மையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வேளாண் சேவை மையங்களில், அவை விவசாயிகளுக்கு அருகிலேயே கிடைப்பதால் ரூ.50 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து பயிர்களுக்கும் தேவையான 16 வகை நுண்ணூட்டச் சத்து உரங்கள், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அரசு நுண்ணுயிர் உரங்கள் தயாரிப்பு நிலையத்தில் தயாரித்து வழங்கப்படுகிறது. மண் பரிசோதனை, பாசன நீர் பரிசோதனை பற்றி விவசாயிகளுக்கு மேலும் விழிப்புணர்வு தேவை என்கிறார், முன்னோடி விவசாயியும் மாவட்ட விவசாயச் சங்கக் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளருமான பி.ரவீந்திரன்.  

                       வரைமுறை இன்றி விவசாயிகள் உரமிடும் பழக்கத்தால், இந்திய வேளாண்மையில் உரச் செலவு அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, அங்கேயே ஆய்வுக்கூடம் மூலம் மண் பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வட்டார அளவில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.

Read more »

தமிழ் இணையப் பல்கலை. பெயர் மீண்டும் மாற்றம்


 
           
              தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூன்றே மாதங்களில் இரண்டாவது முறையாக பெயர் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.1999-ல் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி இணைய வழியில் தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.
 
              அந்த அறிவிப்புக்கு இணங்க, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் இணையப் பல்கலைக்கழகம் பதிவு செய்யப்பட்டது.இதன் மூலம், மழலைக் கல்வி, சான்றிதழ் படிப்பு, பட்டயம், மேற் பட்டயம், பட்டம், முதுகலை என்ற நிலைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இணையப் பல்கலைக்கழகம் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டதால் அதற்கு சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் இல்லை.பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் பொறுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 
            பல்கலைக்கழகமாக்க நடவடிக்கை: இதனிடையே, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உண்மையிலேயே பல்கலைக்கழகமாக்க முயற்சிகள் நடைபெற்றன. இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி கோரப்பட்டது. சங்கங்களின் கீழ் பதிவு என்பதால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.இதனிடையே, இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர், பன்னாட்டுத் தமிழ்ப் பயிற்சி இணையம் என மாற்றப்பட்டது.மீண்டும் மாற்றம்: இந்த நிலையில், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. 
 
          தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி அமைத்தது குறித்து சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆங்கிலத்திலும், தமிழிலும் மாற்றி அமைக்கப்பட்ட இரு பெயர்களையும் மீண்டும் சற்றே மாற்றி அமைக்க வேண்டும் என கருதப்பட்டது. அதன்படி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் குழுமம் விரிவாக விவாதம் நடத்தியது. இதன்பின், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
                   மூன்று மாதங்களில்: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் கடந்த ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பெயர் மாற்றப்படவில்லை. இப்போது மீண்டும் பெயர் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more »

டாஸ்மாக் ஊழியர்கள் விரைவில் பணி நிரந்தரம்: முதல்வர் கருணாநிதி


             
 
           தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவது குறித்தும், பணி நிரந்தரம் கோரும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து, கேள்வி-பதில் வடிவில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 
           டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.÷ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்ல - மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும். 
 
 பத்திரிகை ஆசிரியர் கைது: 
 
                தினபூமி பத்திரிகை ஆசிரியரின் கைது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து, உடனடியாக காவல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டேன்.என்ன காரணம் இருந்தாலும், உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கூறினேன். அவர்களும் ஒருசில மணி நேரத்துக்குள் விடுவிக்கப்பட்டு விட்டனர். இது என்னுடைய நடைமுறை.எந்தவொரு பிரச்னை என்றாலும் மார்க்சிஸ்டுகள் தமிழக அரசைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள். அவர்கள் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் என்ன நிலை என்பதை அவர்கள் நினைத்தே பார்க்க மாட்டார்கள். ஐ.நா.வின் சர்வதேச மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் இருபதாவது ஆண்டு நிறைவை ஒட்டி, வறுமை ஒழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
 
           இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாடு முனையத் திட்டத்துடன் இணைந்து பல்நோக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்தியாவில் 8 மாநிலங்கள் ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளை விட, அதிக அளவில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 42 கோடி மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை மார்க்சிஸ்டுகள் உணர வேண்டும். 
 
மத்திய அரசின் மானியமா?  
 
            மத்திய அரசு மானியத்தில்தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருக்கிறார். ÷மத்திய அரசு மானியத்தில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அனைத்து மாநிலங்களிலுமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே? மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கும் அரிசியைத்தான் நமது மாநிலத்துக்கும் அதே விலையில் வழங்குகிறது.÷ஆனால், தமிழக அரசு மட்டும்தான் இந்தியாவிலேயே ஒரு மாநிலமாக ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, இந்த ஆண்டு மட்டும் ரூ.3 ஆயிரத்து 750 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.  108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார் இளங்கோவன். அதுவும் தவறான செய்திதான்.
 
                அந்தத் திட்டம் உலக வங்கியிடம் இருந்து நிதி கடனாகப் பெற்று செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான நடைமுறைச் செலவிலே ஒரு பகுதியை மட்டும்தான் மத்திய அரசு வழங்குகிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Read more »

சென்னை தொலைநிலை பல்கலை: மீண்டும் பி.எட். படிப்பு

        சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் மீண்டும் பி.எட். கல்வியியல் கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

            அடுத்த கல்வியாண்டு முதல் இந்த படிப்பை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் பி.எட். படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் முன்னர் அளித்து வந்தன. பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் இதன் மூலம் மிகுந்த பயனடைந்தனர். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொûலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிப்புகளை நடத்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் மூலம் இப்படிப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தபோதும், நேரடி பி.எட். படிப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

              இதற்கு பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொலைநிலைக் கல்வியில் மீண்டும் பி.எட். படிப்பு கொண்டுவரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இவர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் மீண்டும் பி.எட். படிப்புகளை வழங்குவதற்கான முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் தடையில்லா சான்றுக்காக பல்கலைக்கழகம் காத்திருக்கிறது.

துகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் க. திருவாசகம் கூறியது: 

                தொலைநிலைக் கல்வியில் மீண்டும் பி.எட். படிப்பைத் தொடங்க தேசிய கல்விக் கவுன்சில் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசு தடையில்லா சான்று அளிக்க வேண்டும்.இதற்கு பல மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து விட்டோம். எனவே, விரைவில் கிடைத்துவிடும். தடையில்லா சான்று கிடைத்த ஒரு சில மாதங்களிலேயே, தேசிய கல்விக் கவுன்சிலின் அனுமதியும் கிடைத்துவிடும்.எனவே, அடுத்த கல்வி ஆண்டு முதலே சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பி.எட். படிப்பு தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார்.

Read more »

நூலகப் பணியாளர் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

           சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு 99 நூலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

              இதற்கான தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சென்னை மாவட்ட நூலக அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்றன.  3 பதவிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும். ஒரு பதவிக்கு ரூ.500 கட்டணம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.  குறிப்பிட்ட நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணிவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

மாவட்ட நூலக அலுவலர், 
735, அண்ணாசாலை, 
சென்னை 

                 என்ற முகவரியில் விண்ணப்பம் கிடைக்கும். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்பரேசன் வங்கி ஆகிய வங்கிக் கிளைகளிலும் விண்ணப்பப்படிவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று மாவட்ட நூலக ஆணைக் குழு அறிவித்துள்ளது.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு யோசனை

          அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படாவிட்டால், அரசு தலையிட நேரிடும் என முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். 

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி காலத்தை 9 ஆண்டுகளாக நீட்டிப்பு செய்திருப்பதை எதிர்த்தும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக ஓய்வு ஊதியதாரர்கள் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழு புதன்கிழமை சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் முதன்மை செயலர் கணேசன் ஆகியோரைச் சந்தித்து இதுதொடர்பாக புகார் மனு ஒன்றையும் கொடுத்தது.

                 இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன், அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அப்போது, பல்கலைக்கழக நிர்வாகத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கூட்டு நடவடிக்கை குழுவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும். இதன் மூலம் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், அரசு தலையிட நேரிடும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

Read more »

இன்னும் 10 ஆண்டுகளில் நானோ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: இஸ்ரோ விஞ்ஞானி டி.ஆர்.சிதம்பரம் நம்பிக்கை

               இன்னும் 10 ஆண்டுகளில் நானோ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும் என்று திருவனந்தபுரம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஐ.எஸ்.யு. இயக்குநர் டி.ஆர்.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

          வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவியல் உற்சவப் பெருவிழா எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி மதுரையில் புதன்கிழமை தொடங்கியது. ஆக. 1-ம் தேதி வரை 5 நாள் நடைபெறும்.

இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:    

               இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயனாக தொலைக்கல்வி, தொலை மருத்துவம் ஆகியன நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பல்வேறு கிராமப்புறப் பள்ளி வகுப்பறைகள், பெரிய கல்வி நிறுவனங்களுடன் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியாவை சர்வ வல்லமை பொருந்திய நாடாக உருவாக்குவதற்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மிக அவசியமாகும்  என்று மறைந்த பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அன்றைக்கே உறுதிபடத் தெரிவித்தார். 

              நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு அவசியம் என்று டாக்டர் அப்துல்கலாமும் வலியுறுத்தியுள்ளார். மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய், நாட்டின் மேன்மைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுடன் பயன்பாடும் அவசியம் என்று கூறியுள்ளார். இந்தியா இந்த இரு தளங்களிலும் தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.  அதேபோன்று நானோ தொழில்நுட்பத்திலும் இந்தியா பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முழுப் பயனையும் நாம்  இன்றைக்குப் பெறவில்லை என்றாலும்கூட, இன்னும் 10 ஆண்டுகளில் அனைத்துத் தளங்களிலும் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். 

             இதற்கான ஏராளமான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளன. இதற்கான திட்டங்களையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  இந்தியா இதுவரை 50 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டவை. விண்வெளி தொழில்நுட்பத்துக்கான செலவு குறைவாகவும், ஆனால் அதிக பலனையும் அளித்துள்ளது. சந்திராயன் இதற்கு ஒரு உதாரணம்.   மேலும், இந்தியாவின் வரைபடத்தைக்கூட துல்லியமாக எடுக்கும் அளவுக்கு நமது செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மிக உன்னத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் அறிவியல் மீது ஆர்வம் காட்டி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றார் சிதம்பரம்.

Read more »

கடலூர் கடற்கரையில் கிடந்த சாமி சிலைகள்


கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 3 நாள்களாக காணப்படும் கிருஷ்ணர். வெங்கடாசலபதி சிலைகள்.
 
கடலூர்:

         கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் இரு சாமி சிலைகள் கடந்த 3 நாள்களாக கிடந்தன.  முழு வடிவத்தில் கிருஷ்ணர் சிலை மற்றும் தலை பகுதி மட்டும் உள்ள வெங்கடாசலபதி சிலை ஆகிய இரு சிலைகளும் கேட்பாரற்றுக் கிடந்தன. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையால் செய்யப்பட்ட அவற்றை, கடற்கரையில் கொண்டு வந்து போட்டது யார் என்று தெரியவில்லை.  சாமி சிலைகளைப் பார்த்ததும் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பலர் அவற்றைப் பக்தியுடன் வணங்கிவிட்டு சென்றனர்.  இந்த நிலையில் புதன்கிழமை கடல் 50 மீட்டர் தூரம் உள்வாங்கிக் காணப்பட்டது. கடல் இயல்பான நிலையில் இருந்து இருந்தால், சாமி சிலைகளை அலைகள் அடித்துச் சென்று இருக்கக்கூடும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Read more »

கல்வி, வேலையில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடலூரில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

கடலூர்:

               கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு பா.ம.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய பா.ம.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் பேசியது: 

              வன்னியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று 1980 முதல் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. சாதிவாரியாக மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஏனென்றால் தற்போது 80 சதவீத கல்வி, வேலை வாய்ப்புகளை ஒரு சதவீதம் பேர் மட்டுமே அனுபவிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். பதவிகளுக்காக நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. 

             பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காகவே போராட்டம் நடத்துகிறோம். அவர்கள் இன்னமும் முந்திரிக் காடுகளிலும், வயல் வெளிகளிலும்தான் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றார் வேல்முருகன். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப்பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பஞ்சமூர்த்தி, வடக்கு மாவட்டச் செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைமை அலுவலகச் செயலாளர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார்.

சிதம்பரம்: 

            கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்ரார். மாநில இணை பொதுச்செயலாளர் தி.வேல்முருகன், துணைப் பொதுச்செயலாளர் தி.திருமால்வளவன், மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இரா.சிலம்புச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

விருத்தாசலம்: 

               விருத்தாசலத்தில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி அருகில் பேரணி தொடங்கி பாலக்கரை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலர் திருஞானம், மாவட்ட தலைவர் சின்னதுரை ஆகியோர் பேசினர். மாவட்ட செயலர் செல்வராசு வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி தலைமை ஏற்றார். நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்கள் ராசவேல், வெங்கடேசன், செல்வகுமார், உத்தண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Read more »

கடலூரில் நடைமேடையை உரசிக் கொண்டு சென்ற ரயில்

கடலூர்:

             திருப்பாப்புலியூர் ரயில் நிலைய கட்டுமானக் கோளாறு காரணமாக புதன்கிழமை பயணிகள் நடைமேடையில் ரயில் பெட்டிகள் உராய்ந்து சென்றன. ஓட்டுநர் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால், விபத்தில் இருந்து 400 பயணிகள் தப்பினர்.

              கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் வருவதற்கும் போவதற்குமாக இரு நடைமேடைகள் உள்ளன. விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கம் அகலப் பாதையாக மாற்றப் பட்டு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. லூப் லைன் என்று சொல்லப்படும் மற்றொரு நடைமேடை போடப்பட்டும் அதில் ரயில்கள் இயக்கப்படவில்லை. புதன்கிழமை காலை 8-20 மணிக்கு வந்த விழுப்புரம்- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் முதல்முறையாக லூப் லைனில் அனுமதிக்கப்பட்டது.  ஆனால், அதனுள் நுழைந்ததும் ரயிலின் பல பெட்டிகள் நடைமேடையில் பலத்த சப்தத்துடன் உராய்ந்து சென்றன. இதனால் நடைமேடையும் ரயில் பெட்டிகளும் சேதம் அடைந்தன. ரயிலில் இருந்த 400 பயணிகளும், பிளாட்பாரத்தில் நின்றிருந்த 75 பயணிகளும் அச்சத்தில் நடுங்கினர். ரயில் 15 கி.மீ. வேகத்தில் வந்ததால், ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ரயிலை நிறுத்தினார்.திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை. அத்தகைய எக்ஸ்பிரஸ் ரயில் ஏதேனும் இந்த நடைமேடை வழியாக வந்து இருந்தால், விளைவு மோசமாக இருந்திருக்கும், பல பெட்டிகள் தடம் புரண்டு இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,

            4 மாதங்களுக்கு முன் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பார்வையிட்டபோது, திருப்பாப்புலியூர் ரயில் நிலைய லூப் லைனுக்கு, அனுமதி அளிக்கவில்லை. திட்டத்தை நிறைவேற்றிய ஆர்.வி.என்.எல். நிறுவனமும் லூப்லைனை ரயில்வேயிடம் ஒப்படைக்கவில்லை.இந்த நிலையில் லூப் லைனில் ரயிலை அனுமதிக்குமாறு ரயில்வே உயர் அதிகாரிகள், திருப்பாப்புலியூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு புதன்கிழமை உத்தரவிட்டனர். ரயில்நிலைய அதிகாரிகள் மறுத்தும் உயர் அதிகாரிகள் தங்கள் உத்தரவைத் திணித்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அரை வட்ட ரயில் நிலையம்

               மேலும் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் அரை வட்ட வடிவில் அமைந்து உள்ளது. ஆரம்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிளாட்பாரத்தை நேராக அமைக்க வாய்ப்பு இருந்தும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை. தற்போதைய விபத்துக்கு இதுவும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து லூப் லைன் பிளாட்பாரத்தை சீரமைக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.

Read more »

கடலூர் நகராட்சி பாதாள சாக்கடைக் கழிவுகளை உப்பனாற்றில் கலக்கும் திட்டம்

கடலூர்:

           கடலூர் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் கழிவுகளை உப்பனாற்றில் கலக்க திட்டமிட்டு இருப்பதற்கு, பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

               கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இவற்றில் 32 வார்டுகளுக்கு மட்டும் பாதாளச் சாக்கடைத் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரூ.44 கோடியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு மேலும் ரூ.25 கோடி அண்மையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் 3 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்பற்ற செயல்களாலும், குடிநீர் வாரியத்தின் முறையான கண்காணிப்பு இல்லாததாலும் பாதாள சாக்கடைத் திட்டம் கடலூர் மக்களைப் பெரிதும் வாட்டி வதைத்துக் கொணடு இருக்கிறது. உள்ளாட்சித் துறையின் திட்டம் என்பதால், நகராட்சி சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறது. 

               இதில் பாதிக்கப்படுவோர் கடலூர் நகர மக்கள்தான்.இத்திட்டம் 2011 மார்ச் மாதத்தில் முடியும் என்று அறிவிக்கப்பட்டாலும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்பதும், குறைந்தது ரூ.6 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்துவதுடன் மாதந்தோறும் ஒரு தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டி இருப்பதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.  தற்போது பாதாள சாக்கடைக் கழிவுகளை எங்கே கலப்பது என்ற பிரச்னையும் அத்துடன் சேர்ந்து உருவாகி இருப்பது மக்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை சுமார் 60 ஏக்கரில் அமையும் புல் பண்ணையில் பயன்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. 

               பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டு, உப்பனாற்றிலோ, ஆண்டில் ஒரு சில நாள்களில் மட்டும் தண்ணீர் ஓடும் கெடிலம் ஆற்றிலோ கலந்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் உப்பனாற்றில் கலப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தொடர்ந்து அதற்கான முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் சிப்காட் தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலக்கப்பட்டு வருகின்றன. எனினும் அனைத்து தொழிற்சாலைகளும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வெளிவராதவாறு சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை மாசுக் கட்டுப்பாடு வாரிம் தொழிற்சாலைகளுக்கு அமுல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கடலூர் நகராட்சிப் பகுதி மனிதக் கழிவுகளை உப்பனாற்றிலோ, கடலிலோ, கெடிலம் ஆற்றிலோ கலக்க, மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

            பாதாள சாக்கடைத் திட்டக் கழிவுகளை கெடிலம் ஆற்றிலோ உப்பனாற்றிலோ கலக்கும் திட்டத்துக்கு, கடலூர் பொதுநல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் எம்.நிஜாமுதீன் தலைமை தாங்கினார். பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மு.மருதவாணன், திருமார்பன், வெண்புறா குமார், துரைவேலு, கவிஞர் பால்கி, அருள்செல்வன்,  பண்டரிநாதன், ரவி, மன்றவாணன், ரமேஷ், ராமநாதன், மோகனாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

Read more »

Train runs into problems at Thirupadiripuliyur

CUDDALORE: 

          The Villupuram-Mayiladuthurai passenger train had a narrow escape at the Thirupadiripuliyur railway station here on Wednesday when some of its carriages rubbed against a newly-laid platform while negotiating a sharp curve just ahead of the station

          The incident which occurred at around 6.40 a.m. caused panic among the passengers. The engine driver slowed down the train at this point and yet at least four carriages were affected. There were smudged paint marks on the edges of the platform that indicated that the carriages had scraped the platform. Till Tuesday, the station was receiving passenger and goods trains on the main line which was thrown open to traffic after a court order recently. But before the commencement of train services on the newly converted gauge section, trial runs were to be carried out. However, it was reliably learnt that without conducting any such trial runs, the officials allowed the passenger train to pass through the loop line for the first time on Wednesday.

            Soon after the incident, railway officials put masons on the task to set right the platform. The deep curve drastically affects visibility of engine drivers and local people use it as a passage way for crossing over to the other side, risking their lives. The Thirupadiripuliyur station is yet to get basic amenities and the foot overbridge, the only means of reaching the platforms, is incomplete. Commuters are of the view that the station should be soon made a full-fledged one and the safety of passengers ensured by correcting the shortfalls. . Therefore, they called upon the railway authorities to introduce services only after all the safety parameters are satisfied.

Read more »

Sapling plantation drive begins in Cuddalore

CUDDALORE: 

           Collector P. Seetharaman has launched a drive to plant one lakh saplings across the district within 25 days. He planted a sapling at the Agricultural Science Centre at Vriddhachalam near here recently.

            He said all saplings would be planted before August 15. A simple technique has been evolved to water the plants. A bamboo cutting up to a height of two nodules would be planted alongside each plant. Two holes would be made in the bamboo and water filled in the hollow portion. The water would drip through the holes to moisturise the root. Another simple method of watering is to place a small pot in a pit close to the root.

            Mr. Seetharaman said the bamboo and pot should be periodically filled with water. To familiarise people with such a mechanism, demonstrations would be organised at select places and the information spread all over the district. In this endeavour, the district administration would involve social service organisations, non-governmental organisations, educational institutions, industries and traders. Mr. Seetharaman hoped that move would ameliorate the adverse effects of global warming, environmental pollution and unpredictable seasonal variations.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior