உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 31, 2011

கடலூரில் பழுதடைந்த சாலைகளால் மக்கள் சிரமம்: அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவு மழையில் நனைகிறது


கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையின் பரிதாப நிலை. (வலது படம்) தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல்
கடலூர்:

          கடலூரில் பழுதடைந்துள்ள சாலைகளால், மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு, 4-வது ஆண்டாக வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது கடலூர் நகரம். நகரின் மையப் பகுதியில் செல்லும் 12 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சிதைந்து கிடக்கிறது. 

                இதனால் கடலூர் நகர மக்களும் கடலூர் வழியாக செல்லும் பயணிகளும் படாத பாடுபட்டு வருகின்றனர். முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை தாற்காலிகமாகக் கூட சீரமைக்கப்படாமல் இருப்பதால், இச்சாலையைப் பயன்படுத்தும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பலர் கீழேவிழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. புதுப்பாளையம் பிரதானச்சாலை, வண்டிப்பாளையம் சாலை, பஸ்நிலையச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சிதைந்து கிடக்கும் நிலையில், 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை மட்டுமாவது, 3 நாள்களுக்குள் சீரமைக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர் எம்.சி. சம்பத் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். 

              ஆனால் அதன்படி, சாலை சீரமைப்புப் பணி வேகமாக நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சாலை சீரமைக்கப்படுகிறது. பிரதானச் சாலைகள் பலவும் பழுதடைந்துள்ளதால், அவற்றை பயன்படுத்தும் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து உள்ளது. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வழக்கத்தைவிட 30 நிமிடம் முன்னதாகவே வீடுகளில் இருந்து புறப்பட்டாக வேண்டிய நிலை உள்ளது. 

           மேலும், கடலூர் நகரின் பிரதான அங்காடியான, 400-க்கும் மேற்பட்ட கடைகள் நிறைந்த திருப்பாப்புலியூர் பான்பரி மார்கெட்டுக்குள், பொதுமக்கள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு, சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. ஆக்கிரமிப்பு, அசுத்தத்தின் உச்சத்தில் காணப்படும் இந்த மார்க்கெட்டின் நிலை, மழைக்காலத்தில் மக்களை பெரிதும் பரிதவிக்க வைக்கிறது. அடிப்படை வசதியில் கடலூர் நகர மக்களின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரே இடம் பான்பரி மார்க்கெட் தான். இதை சீர்படுத்த யார் துணிவுடன் முன்வருவார்களோ அவர்கள்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாகவும், ஊதியம் பெறத் தகுதியுள்ள அலுவலர்களாகவும் இருக்க முடியும் என்பதே சிதம்பரம் நகர் மக்களின் கருத்தாக உள்ளது. 












Read more »

கடலூர் மாவட்டத்தில் கனமழை

கடலூர்:'

         கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. 

             மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரி நிரம்பி வழிகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், கடலூர் மாவட்டத்திலும், கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏ ரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. வீராணம் ஏரியில் 44 அடிவரை நீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. கீழ் அணையில் இருந்து வடவாறு வழியாக, வீராணத்துக்கு நீர் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வீராணத்தின் பாசன வாய்க்கால்கள் மூடப்பட்டு உள்ளன. 

              தொடர் மழை பெய்து வருவதால், கடைமடைப் பகுதிகளில் நாற்று நடவுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெல்டா பகுதிகளில் ஏற்கெனவே நடவு செய்யப்பட்ட வயல்களுக்கும் மழைநீரே போதுமானதாக உள்ளது. மாவட்டத்தின் பிரதான ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரியின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை 6.5 அடியாக இருந்தது (மொத்த உயரம் 6.5 அடி). ஏரிக்கு வரும் நீர் முழுவதும் பரவனாறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மற்ற நீர்நிலைகளில் ஞாயிற்றுக்கிழமை நீர் மட்டம் வருமாறு: 

             கோமுகி அணை 44 அடி (அதிகபட்ச உயரம் 46 அடி), மணிமுத்தாறு 21.9 அடி (36 அடி), வாலாஜா ஏரி 4.5 அடி (5.5 அடி) வெலிங்டன் ஏரி 15 அடி (29.78 அடி). 

                மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புருஷோத்தமன் நகர், கூட்டுறவு நகர் மரியசூசை நகர், கோண்டூர் மற்றும் பாதிரிக்குப்பம் பகுதிகளில் சில நகர்கள், கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் கரைகளில் அமைந்துள்ள நகர்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

மாவட்டத்தில் மழை அளவு: 

           கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு, மில்லி மீட்டரில் வருமாறு: பரங்கிப்பேட்டை 75, கடலூர் 53, காட்டுமன்னார்கோயில் 36, ஸ்ரீமுஷ்ணம் 22, அண்ணாமலை நகர் 21.4, கொத்தவாச்சேரி 21, காட்டுமயிலூர் 18, குப்பநத்தம் 17.2, வேப்பூர் 15, லால்பேட்டை 14, விருத்தாசலம் 12.2, பெலாந்துரை 12, சிதம்பரம் 10, கீழ்ச்செறுவாய், சேத்தியாத்தோப்பு, புவனகிரி தலா 6, மேமாத்தூர் 5, பண்ருட்டி 4.8, தொழுதூர் 4.2.




















Read more »

ரயில் திருட்டை தடுக்க 24 மணி நேர இலவச உதவி மையம்

              ரயிலில் பயணிகளிடம் திருட்டு போவதை தடுக்க வேண்டி ரெயில்வே போலீசார் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை தொடங்கி உள்ளனர்.

            சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். தென்மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் சென்னை வரும் பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ரெயில்களில் பயணிகளின் பொருட்கள் திருடு போவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

              இதுகுறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை ரெயில்வே போலீசார் தொடங்கி உள்ளனர். ரெயில் சென்று கொண்டிருக்கும் போது பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனே 99625-00500 என்ற செல்போன் எண்ணை டயல் செய்து ரெயில்வே போலீஸ் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இது இலவச இணைப்பு ஆகும்.

              தற்போது ரெயில்வே போலீசாரின் இந்த இலவச உதவி மைய எண் குறித்த நோட்டீசு ரெயில்களில் ஒட்டப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில்களிலும் இந்த உதவி மைய எண் ஒட்டப்படுகிறது. இந்த உதவி மையம் இன்று முதல் செயல்படுகிறது. குறிப்பாக பயணிகளிடம் திருட்டு போவதை தடுக்க வேண்டி இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.














Read more »

கடலூர் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் 13 இடங்களை அ.தி.மு.க.கைப்பற்றியது

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் 13 துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. தி.மு.க., 2, காங்., ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் வடலூர், பரங்கிப்பேட்டை இரண்டை தவிர மற்ற 14 பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் பரங்கிப்பேட்டை, வடலூர் பேரூராட்சிகளில் தி.மு.க.,வும், புவனகிரியில் காங்., கட்சி கைப்பற்றியது. மற்ற 13 பேரூராட்சிகளிலும் துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க.,வே கைப்பற்றியது. 

அதன் விபரம் வருமாறு:

மேல்பட்டாம்பாக்கம்: 

              பேரூராட்சி 15 வார்டில் அ.தி.மு.க., 4, தி.மு.க., 3, தே.மு.தி.க., 1, பா.ம.க., 1, சுயேச்சை 6 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் செல்வி, தி.மு.க., சுகுமார் போட்டியிட்டனர். தலைவர் உட்பட 16 பேர் ஓட்டளித்தனர். 13 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., செல்வி துணைத் தலைவராக வெற்றி பெற்றார்.

புவனகிரி: 

           பேரூராட்சி தலைவராக அ.தி.மு.க., வள்ளி வெற்றி பெற்றார். நேற்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் உஷாராணியும், காங்., சார்பில் ராம்குமார் மனுத் தாக்கல் செய்தனர். போட்டியிருந்ததால் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. தலைவர் மற்றும் 18 கவுன்சிலர்கள் ஓட்டு போட்டனர். பதிவான 19 ஓட்டுகளில் காங்., ராம்குமார் 10 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி கலைப்பாண்டி வழங்கினார்.
 
பரங்கிப்பேட்டை: 

            பேரூராட்சி தலைவராக தி.மு.க., முகமது யூனுஸ் வெற்றி பெற்றார். 18 வார்டுகளில் தி.மு.க., 8, அ.தி.மு.க., 2, சுயேச்சைகள் 8 பேர் வெற்றிப்பெற்றனர். நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் கணேசன், தி.மு.க., சார்பில் நடராஜன் போட்டியிட்டனர். ஒரு உறுப்பினர் தேர்தலில் பங்கேற்கவில்லை. பதிவான 18 ஓட்டுகளில் தி.மு.க., நடராஜன் 13 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி ஜீஜாபாய் சான்றிதழ் வழங்கினார்.

கிள்ளை: 

             அ.தி.மு.க., சார்பில் காத்தவராயசாமி, பொன்மொழி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். 15 கவுன்சிலர் மற்றும் தலைவர் என மொத்தமுள்ள 16 பேரில் அ.தி.மு.க., உறுப்பினர் விஜயலட்சுமி தேர்தலில் பங்கேற்கவில்லை. பதிவான 15 ஓட்டுகளில் இரண்டு ஓட்டுகள் செல்லாதவை. மீதமுள்ள 13 ஓட்டுகளில் பொன்மொழி 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் முகம்மது மன்சூர் சான்றிதழ் வழங்கினார்.

தொரப்பாடி: 

             அ.தி.மு.க., வைச் சேர்ந்த 14வது வார்டு உறுப்பினர் கனகராஜ் மனுத்தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால் கனகராஜ் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ராணி அறிவித்தார்.

சேத்தியாத்தோப்பு: 

              தேர்தல் அலுவலர் ஆறுமுகத்திடம் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 2வது வார்டு உறுப்பினர் ராமலிங்கம் மனுத்தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத் தாக்கல் செய்யாததால், ராமலிங்கம் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

திட்டக்குடி: 

             பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மணி மனுத் தாக்கல் செய்தார். வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால் மணி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் குப்புசாமி அறிவித்தார்.

பெண்ணாடம்: 

          அ.தி.மு.க., செல்வி மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் ராம்குமார் அறிவித்தார். அவருக்கு சேர்மன் மதியழகன் வாழ்த்து தெரிவித்தார்.

குறிஞ்சிப்பாடி: 

           அ.தி.மு.க., நகர செயலரும், ஆறாவது வார்டு உறுப்பினரான ரஜினிகாந்த் மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ஜோதிமாணிக்கம் அறிவித்தார்.

காட்டுமன்னார்கோவில்: 

            அ.தி.மு.க., சாமிநாதனும், லால்பேட்டை பேரூராட்சியில் மனித நேய மக்கள் கட்சி அகமது அலி போட்டியின்றி துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மங்கலம்பேட்டை: 

        சுயேட்சை உறுப்பினர் ஜியாவுதின் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
ஸ்ரீமுஷ்ணம்:

        அ.தி.மு.க., சின்னப்பன் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
கங்கைகொண்டான்: 

      அ.தி.மு.க., ராஜ்மோகன் போட்டின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
வடலூர்: 

      தி.மு.க.,வைச் சேர்ந்த விஜயகுமாரி போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அண்ணாமலைநகர்:

          அ.தி. மு.க., செந்தில்குமார் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 




















Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சனிக்கிழமை நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

 காட்டுமன்னார்கோயில் - வை.சுவாமிநாதன் (அதிமுக).
அண்ணாமலை நகர் - கே.செந்தில்குமார் (அதிமுக).
சேத்தியாத்தோப்பு - பி.ராமலிங்கம் (அதிமுக).
புவனகிரி -  ந.ராம்குமார் (காங்கிரஸ்).
பரங்கிப்பேட்டை - ஆர்.நடராஜன் (திமுக).
கிள்ளை - பொன்மொழி (அதிமுக)
ஸ்ரீமுஷ்ணம் - பி.சின்னப்பன்.
லால்பேட்டை - அகமதுஅலி (மனிதநேய மக்கள் கட்சி).
மங்கலம்பேட்டை - அ.ஜியாவுதின் (சுயேச்சை).
கெங்கைகொண்டான் - பி.ராஜ்மோகன் (அதிமுக).
குறிஞ்சிப்பாடி - ஆர்.ரஜினிகாந்த் (அதிமுக).
வடலூர் - விஜயகுமாரி (திமுக).
திட்டக்குடி - மணி (அதிமுக).
பெண்ணாடம் - செல்வி சேகர் (அதிமுக). 
தொரப்பாடி - கனகராஜ்.
மேல்பட்டாம்பாக்கம் - செல்விஜோதி.







Read more »

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

கடலூரில் வடகிழக்குப் பருவ மழையால் காணாமல் போன சாலைகள்


கனமழை காரணமாக புதை குழிகளாக மாறிப்போன, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் பாரதி சாலை (தேசிய நெடுஞ்சாலை).
கடலூர்,:

              கடலூரில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது. 

               சட்டப் பேரவை, உள்ளாட்சி என இரு தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. பல அரசியல் கோட்டைகளை உடைத்தெரிந்து கடலூர் மக்கள் இயல்பாக வாக்களித்து விட்டர்கள். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அனுபவித்து வரும் துன்பங்களில் இருந்து, கடலூர் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்ப வில்லை. இது இப்படித்தான் நடக்கும், நாங்கள் இப்படித்தான் செயல்படுவோம் என்ற அதிகார வர்க்கத்தினரின் மனக்கோட்டையைத் தான் மக்களால் இன்னமும் உடைக்க முயவில்லை. 

              வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், கடந்த 25-ம் தேதி முதல் கடலூரில் 3 நாள்கள் கனமழை பெய்தது. இந்த 3 நாள் மழையையே கடலூர் மக்களால் தாங்க முடியவில்லை. இயல்பு வாழ்க்கை பெரிதும் பதிக்கப்பட்டது.இதற்கு காரணம் நகரச் சாலைகள். கடலூர் நகரின் பிரதானச் சாலைகள் அனைத்தும், பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு, முறையாக மூடப்படாததால், மழை பெய்ததும் நிலைமை மிக மோசமாகி விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் சாலைகள் சிதைக்கப்பட்டு, வடகிழக்குப் பருவமழை காலத்தில் சொல்லொண்ணாத் துயரங்களை கடலூர் மக்கள் அனுபவிப்பது இது 4-வது ஆண்டாகும். 

               அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்பட்டு விடும் என்ற அதிகாரிகளின் அறிவிப்பு, காற்றில் கரைந்து போயிற்று. கடலூர் முதுநகர் மணிக்கூண்டு முதல் புதுநகர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சுமார் 12 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்துக்கு முற்றிலும் லாயக்கற்ற நிலைக்கு மாறி இருக்கிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூறியது 

                    தற்காலிக சீரமைப்புக்கூட மழைக்காலம் முடிந்த பிறகுதான் என்று கூறிவிட்டனர். அப்படியென்றால், 2012 ஜனவரி மாதம் வரை கடலூர் நகரின் துயரம் நீடிக்குமோ, அதை தாங்கள் அனுபவித்துத்தான் தீர வேண்டுமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 










Read more »

கடலூர் மத்திய சிறையில் பொன்முடியை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/641b10de-216a-4c76-a561-617dc2989095_S_secvpf.gif
 
கடலூர்:
 
       நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். இவரை முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

இதன் பின் அவர் பேட்டியளித்தார்
 
கேள்வி: 
 
முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

பதில்: இந்த கேள்வியை முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டும்.  

கேள்வி: 
 
         தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வென்று உள்ளது. இதனால் நிர்வாகம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பதில்: சட்டமன்ற தேர்தலில் மக்களின் மனமாற்றத்தின் காரணமாக அ.தி.மு.க. அதிக இடங்களை பெற்று இருக்கலாம். ஆனால் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 50 சதவீதம்பேர் தோற்றவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் தோற்று இருக்கிறார்கள்.

கேள்வி: 
 
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. பிடித்து இருப்பதால் தமிழக அரசு தவறு செய்தால் யார் தட்டி கேட்பார்கள்?

பதில்: ஏற்கனவே இது சம்மந்தமாக நீதிமன்றத்திற்கு சென்று உள்ளோம். ஆனால் இப்போது கேள்வி கேட்க்க கூடிய இடத்தில் பத்திரிகைகள்தான் உள்ளன.  

கேள்வி: 
 
  உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்ததற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: தேர்தல் ஆணையம் மட்டும் உடந்தை இல்லை. ஆட்சியில் உள்ளவர்கள் உடந்தையும் உள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

            அப்போது புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆதி.சங்கர் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், இள.புகழேந்தி, செஞ்சி கண்ணன், உதயசூரியன், குழந்தை தமிழரசன், நந்தகோபால கிருஷ்ணன், முன்னாள் எம்.பி. கணேசன், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ராஜா, தங்கராசு, தொ.மு.ச. ராஜா, தங்க ஆனந்தன், பழனி, ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் உடன் இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் பதவி ஏற்பு

விருத்தாசலம்:

        விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் சனிக்கிழமை பதவியேற்றார். விருத்தாசலம் நகர்மன்றத் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 1998-ம் ஆண்டு முதல் கட்சியில் உள்ளார். இப்போது நகர ஜெயலலிதா பேரவை செயலராக உள்ளார். இவருக்கு பொன்முடி என்ற மனைவியும், அகில்சந்திரன், சந்திரசேகரன் என்ற மகன்களும், சந்திரலேகா என்ற மகளும் உள்ளனர்.













Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக மணிமேகலை பதவி ஏற்பு

கடலூர்:

              கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக மணிமேகலை (அ.தி.மு.க.) சனிக்கிழமை பதவி ஏற்றார். 

              கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த வார்டுகள் 33. இதில் 20 வார்டுகளை அ.தி.மு.க.வும், 4 வார்டுகளை தே.மு.தி.க.வும், 5 வார்டுகளை சுயேச்சைகளும், 2 வார்டுகளை பா.ம.க.வும், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தலை ஒரு வார்டையும் கைப்பற்றின. சுயேச்சைகளில் 4 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். எனவே அ.தி.மு.க.வின் பலம் 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு சுயேச்சையும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.  கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 

                தலைவர் பதவிக்கு 22-வது வார்டு உறுப்பினர் மணிமேகலையும், துணைத் தலைவர் பதவிக்கு 1-வது வார்டு உறுப்பினர் பாலாம்பிகையும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  வேறு யாரும் இரு பதவிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் சனிக்கிழமை பதவி ஏற்றனர்.  கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை அ.தி.மு.க. கடலூர் ஒன்றியச் செயலாளர் இரா.பழநிசாமியின் மனைவி ஆவார். துணைத் தலைவர் பாலாம்பிகை கடலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துகுமாரசாமியின் மனைவி ஆவார்.  

            ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை கடலூரை அடுத்த குமழங்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர். அ.தி.மு.க.வில் 1991-ம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வருகிறார். கணவர் பழநிசாமி 1991-க்கு முன்னர் குமழங்குளம் அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளராவும் 1991 முதல் 98 வரை அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருந்தார். 2002 முதல் கடலூர் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார்.











Read more »

சனி, அக்டோபர் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்கள்: அதிமுக அறிவிப்பு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சித் துணைத் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் விவரம் வருமாறு: 

கடலூர்        :    

தலைவர் பி.மணிமேகலை,          
துணைத் தலைவர் எம்.பாலாம்பிகை.

விருத்தாசலம்    :   

 தலைவர் கி.சுந்தர்ராஜன்,           
 துணைத் தலைவர் சு.செல்வராஜ்.

குறிஞ்சிப்பாடி    :    

தலைவர் ஆர்.சண்முகசுந்தரம்,          
துணைத் தலைவர் மல்லிகா தங்கப்பன்.

பண்ருட்டி    :   

 தலைவர் க.மாலதி,           
 துணைத் தலைவர் ம.சிவசங்கரி.

அண்ணாகிராமம்    :     

தலைவர் கெளரி பாண்டியன்,           
 துணைத் தலைவர் எம்.சி.சம்மந்தம்.

ங்களூர்        :   

 தலைவர் கே.பி.கந்தசாமி,          
துணைத் தலைவர் கு.அன்னக்கிளி.

நல்லூர்        :    

 தலைவர் ஆர்.ராஜலட்சுமி,         

 துணைத் தலைவர் எம்.வேல்முருகன்.

காட்டுமன்னார்கோவில்    :     

தலைவர் எம்.கே.மணிகண்டன்.

குமராட்சி     :    

 தலைவர் கே.ஏ.பாண்டியன்,       
துணைத் தலைவர் பி.கணேசன்.

கீரப்பாளையம்    :    

 தலைவர் வி.ஆர். ஜெயபால்,          
 துணைத் தலைவர் சுதா சிற்றரசு.

கம்மாபுரம்    :  

  தலைவர் எம்.கே.செல்வராஜ்.

புவனகிரி        :    

 தலைவர் ஏ.ஜி.கீதா.

ரங்கிப்பேட்டை    :    

தலைவர் பி.அசோக்,            
 துணைத் தலைவர் எஸ்.வீரபாண்டியன்.

பேரூராட்சி துணைத் தலைவர் வேட்பாளர்கள்:

மேல்பட்டாம்பாக்கம்    :     சகராபீ அப்துல் வாகீப்.
தொரப்பாடி        :     தெ.கனகராஜ்.
குறிஞ்சிப்பாடி        :     ஆர்.ரஜினிகாந்த்.
மங்கலம்பேட்டை        :     நஜிபுண்ணிசா.
ஸ்ரீமுஷ்ணம்        :     பி.சின்னப்பன்.
காட்டுமன்னார்கோவில்    :     வி.மணிகண்டசாமிநாதன்.
திட்டக்குடி        :     ம.மணி.
பெண்ணாடம்        :     எஸ்.செல்வி.
 அண்ணாமலைநகர்    :     கே.செந்தில்குமார்.
சேத்தியாதோப்பு        :     பி.ராமலிங்கம்.
கிள்ளை            :     ஆர்.சி.காத்தவராயசாமி.
கெங்கைகொண்டான்    :     பி.ராஜ்மோகன்.
புவனகிரி            :     எஸ்.உஷாராணி.

நகர்மன்றத் துணைத் தலைவர்கள்:

கடலூர்            :     சேவல் ஜி.ஜே.குமார்.
நெல்லிக்குப்பம்        :     ஹ.அப்துல் ரசீது.
பண்ருட்டி        :     ஆர்.மல்லிகா.
விருத்தாசலம்        :     பி.ஆர்.சந்திரகுமார்.
சிதம்பரம்        :     இரா.செந்தில்குமார்.




Read more »

கடலூர் பிரதானச் சாலைகளை தற்காலிகமாகச் சீரமைக்க அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவு

கடலூர்:

            மூன்று நாள்களில் கடலூர் பிரதானச் சாலைகளை தற்காலிகமாகச் சீரமைக்க வேண்டுமென அமைச்சர் எம்.சி. சம்பத் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். 

               வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால், கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளில், முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான 12 கி.மீ. சாலை, வண்டிப்பாளையம் சாலை, புதுப்பாளையம் பிதானச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை தற்காலிகமாக சீரமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  மிகமோசமாக பாழடைந்துள்ள முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம்  மணிக்கூண்டு வரையிலான சாலையை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க  அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். 

                 குடிநீர் வாரியம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கடலூர் நகராட்சி அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு, இச்சாலையை 3 நாளில் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், குறைந்தது 40 நாள்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், ஆணையர் மா.இளங்கோவன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரகுநாதன், தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் சிவசக்திவேலன், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தாமரைச் செல்வன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.











Read more »

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர் விளையாட்டுப் போட்டி

கடலூர்:

           கடலூர் மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

               தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த இப்போட்டியில்   மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நீச்சல், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட டென்னிஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் சுந்தரேசன், செயலாளர் சேதுராமன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.











Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஹெச்.சி.எல். லேர்னிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் (இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மேனேஜ்மெண்ட் செக்யூரிட்டி) படிப்புகளை இந்த கல்வி ஆண்டு முதல் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதற்கான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 

            துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஹெச்.சி.எல் நிறுவன துணைத்தலைவர் ஆனந்த் ஏகாம்பரம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  தொலைதூரக்கல்வி இயக்க இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் கூறியது: 

                எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் பாடத்தினை ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதில் பெருமைப்படுகிறோம். இந்த முயற்சியானது இரண்டு நிறுவனங்களும் பரஸ்பர முறையில் இணைந்து நல்ல கல்வியை வழங்குவதன்  மூலம் இம்முறையை மேலும் தொடருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இப்பாடங்களை கற்பதன் மூலம் மாணவர்களும், பொதுத்துறை, தனியார்துறை, வங்கி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் தொழிலுக்கான திறனை எளிதில் பெற முடியும் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.

ஹெச்.சி.எல். நிறுவன துணைத்தலைவர் ஆனந்த்ஏகாம்பரம் கூறுகையில், 

                இந்திய தொழில் நிறுவனங்களில் ஏற்படும் போட்டிகளை எதிர்காலத்தில் உடனடியாக சமாளிக்க முக்கியமாக கருத்தப்படுவது திறமையான நிர்வாகம், விரைவான வளர்ச்சி மற்றும் பாதுகாத்து நிர்வகித்தலாகும். இதனை கருத்தில் கொண்டு நம்நாட்டின் புகழ்மிக்க கல்வி நிறுவனமான அண்ணாமலைப் பல்கலையுடன் இணைந்து இந்த மேலாண்மை பட்டப்படிப்பினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் ஆனந்த் ஏகாம்பரம்.











Read more »

வெள்ளி, அக்டோபர் 28, 2011

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பதவிகளின் விபரம்

                  தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

                இந்த உள்ளாட்சி அமைப்பில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவி இடங்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்துஎடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

மாநில தேர்தல் வெளியிட்ட தகவலின்படி 
           
            அ.தி.மு.க. 9806 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

                        10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில் அ.தி.மு.க. 579 வார்டுகளை கைப்பற்றியது. தேர்தல் நடத்த 124 நகராட்சியில் அ.தி.மு.க. 89 நகராட்சி தலைவர் பதவியை பிடித்தது. 1680 நகராட்சி வார்டுகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 285 பேரூராட்சிகளையும், 2849 பேரூராட்சி வார்டுகளையும் அ.தி.மு,க, கைப்பற்றியது.

                மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 569 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3745 பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.   அ.தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக தி.மு.க. 4023 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது. 23 நகரசபைகளும், 121 பேரூராட்சிகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 10 மாநகராட்சி வார்டுகளில் 128 பதவிகளையும், நகரசபை வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1820 பதவி களையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 26 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டில் 942 பதவி களையும் தி.மு.க. கைப்பற்றியது.

                  3-வதாக சுயேட்சைகள் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றினர். மொத்தம் 3309 பதவிகள் சுயேட்சைகளுக்கு கிடைத்தது. இதில் 5 நகர சபையும், 64 பேரூராட்சியும், மாநகராட்சியில் 55 வார்டு களும் அடங்கும். தே.மு.தி.க. 855 பதவிகளை பிடித்து 4-வது இடத்தை கைப்பற்றியது. இதில் 2 நகரசபையும், 3 பேரூராட்சியும், மாநகராட்சியில் 8 வார்டுகளும் இதில் அடங்கும்.

                      காங்கிரஸ் கட்சிக்கு 737 பதவிகள் கிடைத்தது. இதில் 24 பேரூராட்சி அடங்கும்.அந்த கட்சிக்கு ஒரு நகரசபை கூட கிடைக்கவில்லை. பா.ம.க. 395 பதவிகளையும், பாரதிய ஜனதா 2 நகரசபை உள்பட 270 பதவிகளையும், ம.தி.மு.க. ஒரு நகரசபை உள்பட 193 பதவிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 நகரசபை உள்பட 159 பதவிகளையும், இந்திய கம்யூனிஸ்டு 99 பதவிகளையும் பிடித்தன. மற்றவைகள் 47 பதவிகளை பிடித்தன.
 
 
 
 
 
 

Read more »

விருத்தாசலம் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

விருத்தாசலம்:

              விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு விஷமிகள் யாரோ எம்.ஜி.ஆர். சிலையின் இடதுகையை உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இன்று காலை இதனை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

              இதுகுறித்து கம்மாபுரம் கிளை ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ஆறுமுகம் கம்மாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரில், எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், அக்டோபர் 27, 2011

உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்

  http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/b04547bb-42e0-470b-b75e-06e7a6f8c01e_S_secvpf.gif

          நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
 
            இந்த தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து மாநகராட்சிகளை கைப்பற்றியதுடன் பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 39.02 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

               அ.தி.மு.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 39.24 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 38.69 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம் கிராமங்களில் அதி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்திய சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 38.4 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது. அதன்பிறகு 4 மாதத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 39.02 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது. 4 மாத இடைவெளியில் அ.தி.மு.க.வுக்கு 0.62 சதவீத ஓட்டு அதிகரித்து இருக்கிறது. அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.

             உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 26.09 சதவீத ஓட்டுகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு கிராமப் பகுதியில் 25.71 சதவீதமும், நகரப்பகுதியில் 26.67 சதவீத ஓட்டும் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் 22.38 சதவீத ஓட்டுகளே பெற்ற தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் 26.1 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதன்மூலம் தி.மு.க.வுக்கு 3.72 சதவீத ஓட்டுகள் அதிகரித்துள்ளது.

             தே.மு.தி.க. உள்ளாட்சி தேர்தலில் பெற்ற இடங்களின் அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் ஓட்டு சதவீத அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு 10.11 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டபோது 2006 சட்டசபை தேர்தலில் 8.38 சதவீதமும், 2009 பாராளுமன்ற தேர்தலில் 10.08 சதவீத ஓட்டும் பெற்று இருந்தது. தற்போது அதன் ஓட்டு 10.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் மட்டும் தே.மு.தி.க. அ.தி. மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து 10.11 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

               தே.மு.தி.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 11.93 சதவீதமும், நகரப்பகுதியில் 7.4 சதவீத ஓட்டும் கிடைத்துள்ளது. இதன்மூலம் தே.மு.தி.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா 2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 பாராளுமன்ற தேர்தலில் 2.34 சதவீத ஓட்டுக்களையும் பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் 1.35 சதவீத வாக்குகளை மட்டும் அக்கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

             பா.ம.க. 1998 பாராளுமன்ற தேர்தல் முதல் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. அணியில் மாறிமாறி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 3.5 சதவீத ஓட்டுகளை பெற்று காங்கிரசுக்கு அடுத்தப்படியாக 5-வது இடத்தில் உள்ளது. பா.ம.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 4.63 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 1.93 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. நகரங்களில் பா.ம.க.வுக்கு ஆதரவு இல்லை. கடந்த சட்டசபை தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1.7 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

             தனித்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு 0.71 சதவீத வாக்குகளும், தே.மு.தி.க.வுடன் இணைந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 1.02 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. தனித்துப்போட்டியிட்ட காங்கிரஸ் 5.71 சதவீத ஓட்டுகள் பெற்று தே.மு.தி.க.வுக்கு அடுத்தப்படியாக 4-வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டதன் மூலம் அந்த கட்சிகளுக்கு செல்வாக்கு என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியது.

கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்:-

அ.தி.மு.க. 39.02

தி.மு.க. 26.09

தே.மு.தி.க. 10.11

காங்கிரஸ் 5.71

பா.ம.க. 3.55

ம.தி.மு.க. 1.70

பா.ஜனதா 1.35

மார்க்சிஸ்ட் கம்யூ. 1.02

இந்திய கம்யூ. 0.71 மற்ற கட்சிகள் 1.28

சுயேச்சைகள் 9.46
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

புதன், அக்டோபர் 26, 2011

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை: நடவுப் பணிகள் பாதிப்பு


கடலூரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால், குளம்போல் காட்சி அளிக்கும் மஞ்சக்குப்பம் மைதானம். (வலதுபடம்) கொட்டும் கனமழையின் பின்னணியில் தெரிவது மாவட்ட
கடலூர்:

           கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாண்டு கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஆகும். 

                        இம்மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.தேவையான டி.ஏ.பி.உரம், பொட்டாஷ் கையிருப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.டெல்டா பாசனப் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் நாற்று நடவுப் பணிகள் முடிவடைந்து விட்டது. வீராணம் பாசனப் பகுதிகள் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், இனிமேல்தான் நடவுப் பணிகள் தொடங்க வேண்டும்.பெரும்பாலான பகுதிகளில், நாற்றுகள் 30 நாள் பயிராகி நடவுக்குத் தயாராக உள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், கடந்த 2 நாள்களாக டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் வயல்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளது. 

             எனவே நடவுப் பணிகளை விவசாயிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை, கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியதாகவும், வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால், தண்ணீப் பற்றாக்குறை தீர்ந்து விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள் .டெல்டா பாசனப் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில், நெல்பயிர் நட்டு 15 முதல் 25 நாள்கள் பயிராக உள்ளது. இப்பயிருக்கு தற்போது பெய்து வரும் மழை, உகந்ததாக இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். வீராணம் ஏரியின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 44 அடியாக இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதும், வீராணம் ஏரிக்கு வரும் காட்டாற்று வெள்ளத்தை நினைத்து, டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளிடம் அச்சம் ஏற்படுவது வாடிக்கை. எனினும் இவ்வாண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக முன்னரே பாசனத்துக்கு திறக்கப்பட்டதால், டெல்டா பாசனப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நடவுப்பணிகளை முடித்து விட்டது, பெரிதும் அச்சத்தைப் போக்கி இருக்கிறது.

இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

               "டெல்டா கடைமடைப் பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் நடைபெற வேண்டியது இருக்கிறது. மழை 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை சற்று ஓய்ந்து இருந்தால் நடவுப் பணிகள் முடிவையும். தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் டி.ஏ.பி. உரம் விவசாயிகள் கேட்கும் அளவுக்குத் தாராளமாகக் கிடைக்க வில்லை.டி.ஏ.பி. உரம் தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் அச்சம் உள்ளது.வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம் ஏரியின் நீர் மட்டும் திடீரென உயரவும், உடனேயே அதிக அளவில் உபரிநீரைத் திறந்து விடும் நிலையும் ஏற்பட்டால் டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு சொல்லும் தரமன்று.

        எனவே வீராணம் ஏரி நீர் மட்டத்தை 44 அடிக்கு மேல் உயர்த்தாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.வீராணம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றார். 

கடலூரில் 77 மி.மீ                 

              வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கி விட்டதால், கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. செவ்வாய்க்கிழமையும் பலத்த மழை கொட்டியது.

செவ்வாய்க்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு: 

              கடலூர் 77, பரங்கிப்பேட்டை 29, ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர், சேத்தியாத்தோப்பு 25, காட்டுமன்னார்கோவில் 11, தொழுதூர் 18, விருத்தாசலம் 15, பண்ருட்டி 7.5, கொத்தவாச்சேரி 21, கீழ்ச்செறுவாய் 20, அண்ணாமலை நகர் 18, புவனகிரி 21, லால்பேட்டை, மேமாத்தூர் 10, வேப்பூர் 12, குப்பநத்தம் 23, லக்கூர் 14, பெலாந்துரை 22.










Read more »

செவ்வாய், அக்டோபர் 25, 2011

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவர் அடித்து கொலை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/8aba1341-2d5d-4d3d-a260-ec2b7679c256_S_secvpf.gif
சிதம்பரம்:

        சிதம்பரத்தில்  அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி யில் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இதில் அசாமை சேர்ந்த துருபஜோதி தத்தா (வயது 21) பி.இ. மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் பீகாரை சேர்ந்த ராஜேஷ் ரோஷன் (19), அங்கித் குமார் (19) ஆகியோரும் படித்து வந்தனர்.

            அவர்கள் 3 பேரும் நண்பர்கள். துருபஜோதி தத்தா, அங்கித்குமார் ஆகியோர் சிதம்பரத்தில் உள்ள முத்தையா நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். ராஜேஷ் ரோஷன் இன்னொரு வீட்டில் நண்பருடன் தங்கி இருந்தார். இவர்கள் 3 பேருக்கும் போதை பழக்கம் இருந்து வந்தது. பேப்பரில் எழுத்தை அழிக்க உதவும் ஒயிட்னரை போதை மருந்தாக மாற்றி அதை பயன்படுத்தி வந்தனர். நேற்று இரவு துருபஜோதி தத்தா வீட்டுக்கு ராஜேஷ் ரோஷன் வந்தார். 3 பேரும் போதை மருந்தை பயன்படுத்தினார்கள்.

               அப்போது ராஜேஷ் ரோசன் போதை அதிகமாகி தகராறில் ஈடுபட்டார். இதனால் துருபஜோதி தத்தா, அங்கித்குமார் இருவரும் ராஜேஷ்ரோசனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டினார்கள். இன்று அதிகாலை 4 மணிக்கு ரோஜேஷ்ரோசன் மீண்டும் அங்கு வந்தார். வீட்டு கதவை எட்டி உதைத்து தகராறு செய்தார். இதனால் கோபம் அடைந்த துருபஜோதி தத்தா மரக்கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். ஆனால் ராஜேஷ்ரோசன் அந்த மரக்கட்டையை பறித்து துருபஜோதி தத்தாவை சரமாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துருபஜோதி கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திர் ஓடிவந்தனர். அவர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

                ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் ரோஷனை பிடித்து விசாரித்து வருகின்றனர். அங்கித்குமாரிடமும் விசாரணை நடக்கிறது. இன்று காலை வரையில் ராஜேஷ்ரோசன் போதை மருந்து மயக்கம் தெளியாமலேயே உளறியபடி இருந்தார்.

Read more »

கடலூர் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ளாட்சி தேர்தல் தகராறு: 8 பேர் மீது வழக்கு பதிவு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/5e5311f4-e5a9-4ac2-bf0a-2fc20708cd4f_S_secvpf.gif
 
 
கடலூர்
 
           கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆரங்கியும், அருள்நாதனும் போட்டியிட்டனர். இதில் ஆரங்கி வெற்றிப்பெற்றார். தோல்வி அடைந்த அருள்நாதன் கோபம் அடைந்தார். நேற்று மாலை 4 மணிக்கு ஆரங்கியின் மருமகன் பழனிவேல் (32) எம்.புதூரில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

            வெங்கடேஸ்வராநகர் அருகே அவர் வரும் போது அருள்நாதன் காரில் அங்கு வந்தார். டிரைவர் இளம்வழுதி காரை ஓட்டி வந்தார். பழனி வேலுவை அருள்நாதன் வழி மறித்து திட்டினார். உடனே பழனிவேல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக சென்றார். ஆனால் அருள்நாதனும் இளம் வழுதியும் வேகமாக காரை ஓட்டிச்சென்று பழனிவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.  இதில் கீழே விழுந்தத பழனிவேல் அங்கிருந்து தப்பி ஓடினார். அருள்நாதனும், இளம் வழுதியும் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக திருப்பாபுலியூர் போலீசில் அவர் புகார் செய்தார்.

              இதையொட்டி அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   இந்த நிலையில் எம்.புதூரில் ஆரங்கியன் வீட்டில் அவரது மனைவி குப்பு, உறவினர்கள் காந்தி, வெங்கடேசன், இளையபெருமாள், பூங்கொடி ஆகியோர் வீட்டில் இருந்தனர். மாலை 5.30 மணிக்கு அருள்நாதன், லெனின், சவுந்தர்ராஜன் உள்பட சிலர் வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டிலிருந்த டி.வி, மின்விசிறி, டியூப்லைட்டுகளை அடித்து உடைத்தனர்.

                இதை தடுத்த வெங்கடேசனை கத்தியால் குத்தினார்கள். குப்பு, காந்தி, இளையபெருமாள், பூங்கொடி ஆகியோரை இரும்பு குழாயால் தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்தும் திருப்பாபுலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அருள்நாதன், லெனின், சவுந்தர்ராஜன், சக்திவேல், சிவநாதன், ராஜீவ்காந்தி, வின்சென்ட், கண்ணன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

Student from Assam killed in group clash at Annamalai University

Cuddalore:

           An engineering student from Assam has been killed in a group clash between students from Bihar and Assam studying at Annamalai University in Chidambaram in the district, police said. Dharupa Joth Dhatha (23), a third-year student, was killed last night when the students used deadly weapons in their they clash with each other near the university, police said. Two students of the university, including one from Bihar, has been arrested, they said. Adding that the clash took place due to previous enmity, they said police has been posted at the university in the aftermath of the incident. 









Read more »

திங்கள், அக்டோபர் 24, 2011

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வெற்றி

நெல்லிக்குப்பம்:

        நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.

           நெல்லிக்குப்பம் நகராட்சியில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் ஆனந்தனும், சுயேச்சையாக வெங்கடேசன் உட்பட 6 பேர் போட்டியிட்டனர். இதில் வெங்கடேசன் 231 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனந்தன் 230 ஓட்டு பெற்று ஒரே ஒரு ஓட்டு குறைவால் தோல்வியடைந்து வருத்தத்துடன் வெளியேறினார்.















Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 51 ஊராட்சி தலைவர்கள் விபரம்

கடலூர்:

          கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 51 ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஓட்டுகள் வாரியான விவரம்:
 
அழகியநத்தம் ராஜேஸ்வரி 673, 
அன்னவல்லி திலகவதி 1305, 
அசிரிபெரியாங்குப்பம் ஆரங்கி 822, 
செல்லஞ்சேரி அஞ்சாபுலி 660,
சி.என்.பாளையம் ராஜேந்திரன் 2,823, 
கடலூர் முதுநகர் மீனாகுமாரி 2,038,
குண்டுஉப்பலவாடி மாசிலாமணி 1,305, 
காரைக்காடு செல்வகுமாரி 1,659, 
காராமணிக்குப்பம் நடராஜன் 691.
கரைமேடு கல்யாணி 253, 
கரையேறவிட்டகுப்பம் வீரப்பன் 481, 
காரணப்பட்டு தங்கவேல் 270, 
கீழ் அழிஞ்சிப்பட்டு வெங்கடேசன் 328, 
கிளிஞ்சிக்குப்பம் கலியமூர்த்தி 1,383, 
கீழ்குமாரமங்கலம் மைதிலி 863, 
கொடுக்கன்பாளையம் அலமேலு 1,308, 
குணமங்கலம் உமா 349, 
கோண்டூர் பவானி 2,253.
குடிகாடு ஆனந்தன் 845, 
குமலங்குளம் புகழேந்தி 1,313,
மதலப்பட்டு சீதாலட்சுமி 1,510, 
எம்.பி.அகரம் சுசிலா 922, 
மருதாடு கவிதா 395, 
மேல் அழிஞ்சிப்பாட்டு ராமதாஸ் 207, 
நடுவீரப்பட்டு பாலபாஸ்கரன் 1,298, 
நல்லாத்தூர் செல்வி 799, 
நாணமேடு லட்சுமணன் 619,
நத்தப்பட்டு நித்தியானந்தன் 1,135, பச்சையாங்குப்பம் செல்வி 2,332, 
பாதிரிக்குப்பம் கோமதி 4,033.பள்ளிப்பட்டு சிவக்கொழுந்து 540, 
பெரியகங்கணாங்குப்பம் ராஜமாணிக்கம் 627, 
பில்லாலி அரிகிருஷ்ணன் 926, 
புதுக்கடை பாரதி 811,
ராமாபுரம் தரணிதரன் 1,647, 
சேடப்பாளையம் சுந்தரமூர்த்தி 974, 
 செம்மங்குப்பம் ராமச்சந்திரன் 762, 
சிங்கிரிகுடி ராஜேஸ்வரி 541, 
தென்னம்பாக்கம் ரமேஷ் 453, 
தூக்கணாம்பாக்கம் குமாரசாமி 688, 
திருமாணிக்குழி அருள் 911, 
திருப்பணாம்பாக்கம் முருகன் 911.
திருவந்திபுரம் சுதாகரன் 864, 
தோட்டப்பட்டு ராஜலட்சுமி 669, 
உச்சிமேடு விஜயரங்கன் 402, 
உள்ளேரிப்பட்டு பக்கிரி 434, 
 வானமாதேவி செண்பகம் 456, 
வரக்கால்பட்டு தரணி 676, 
வெள்ளக்கரை கிருஷ்ணசாமி 1,194, 
வெள்ளப்பாக்கம் துரைமுருகன் 706, 
விலங்கல்பட்டு ராமதாஸ் 786 
 
ஆகியோர் வெற்றி பெற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior