உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 18, 2011

இருளில் நெய்வேலி - மின்சாரம் இல்லாமல் பரிதவிக்கும் மக்கள்

இருளில் நெய்வேலி - மின்சாரம் இல்லாமல் 

பரிதவிக்கும் மக்கள்


பின் குறிப்பு :

"உழுதவன் கணக்குப் பார்த்தல் உழக்கு கூட மிஞ்சாது. என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தால் மின்சாரம் கூட கிடைக்காது "






 

Read more »

தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்



நான் கண்ணீர் விடாமல் இருக்க நீ கண்ணீர் சிந்தினாய்................
நான் கல்விக் கற்க நீ வலியையும் வேதனையும் சுமந்தாய்................
என் தந்தையே உனக்கு என்னால் ஆன ஒரு சிறிய காணிக்கை......

மஜாகார்த்தி

 
உலகெங்கும் உள்ள தந்தையர் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் ( 19.06.2011 - ஞாயிற்றுக்கிழமை)






 

Read more »

இந்தியாவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு - ஒரு அலசல்

India now ruled by..

Amma in South


Didi in East 
Bhenji in North


Aunty in the Capital
 

Madam in Center  



Grand ma on top (the President)
 

 & 

WIFE AT HOME 

 And yet people say.. It’s a Man's World !?

Read more »

தனியார் பள்ளி கல்விக் கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு

             திருத்தப்பட்ட தனியார் பள்ளி கல்விக் கட்டணம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

              இதன்படி சென்னை மாவட்டத்தில் எல்.கே.ஜி.-யில் குழந்தையைச் சேர்க்க அதிபட்சமாக ரூ. 24 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

            சென்னை சீதாபதி நகரில் உள்ள சன்ஷைன் மான்டிசோரி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான கட்டணமாக ரூ. 24 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

           இதற்கு அடுத்தபடியாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ. 20,150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

             அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ்-2 வகுப்புக்கு சென்னையிலேயே அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

             இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 15,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

          சூளைமேட்டில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 17,150 கட்டணமும், பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,100 கட்டணமும் நிர்ணியக்கப்பட்டுள்ளது. 


           இதுபோல் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விவரம் 


            இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




Read more »

கடலூரில் 6 ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாத சாலைப் பணிகள்

கடலூர்:

           அரசுத் துறைகளின் மெத்தனப் போக்கால் கடலூரில் 2 சாலைப் பணிகள் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாமல் இருப்பதே நகரின் போக்குவரத்து நெரிசலுக்குப் பிரதான காரணமாக இருக்கிறது. 

          மாவட்டத் தலைநகரான கடலூரில், பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆக்கிரமிப்புகள், 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக பேசப்பட்டு வருகின்றன. ஆனாலும் இதற்கெல்லாம் மேலாக, மூலகாரணமாக இருப்பது பணி தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப் படாமல் இருக்கும் 2 இணைப்புச் சாலைப் பணிகள்தான்.  ஜவான்ஸ் பவனையும் கம்மியம்பேட்டையும் இணைக்கும் வகையிலும், கெடிலம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் நோக்கிலும் 2005-ம் ஆண்டு, சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு புதிய சாலை ரூ. 80 லட்சத்தில் அமைக்கப்பட்டது. 

             2007-ம் ஆண்டு இச்சாலையின் கரையோரம் கெடிலம் ஆற்றின் கரையைப் பலப்படுத்தும் வகையில் ரூ. 5 கோடியில் கான்கிரீட் கரை அமைக்கப்பட்டது.  ஆனால் 2005-ல் ரூ. 80 லட்சத்தில் உருவாக்கப்பட்ட சாலைக்கு இதுவரை தார்த்தளம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர்களாக இந்த 3 பேரிடம் பொதுமக்கள் முறையிட்டும், தார்த்தளம் அமைக்க முடியாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. இச்சாலை எங்களின் பராமரிப்பில் இல்லை என்று பொதுப்பணித் துறை, நெஞ்சாலைத் துறை, கடலூர் நகராட்சி ஆகியன கைகழுவி விட்டன. 

                பின்னர் எத்துறையின் பராமரிப்பில் உள்ளது என்பதுதான் பொதுநல அமைப்புகள் தொடர்ந்து எழுப்பிவரும் கேள்வி. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, முந்தைய ஆட்சியர் இதுகுறித்துப் பேசுகையில், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு திட்டத்தில் இச்சாலைக்கு தார்த்தளம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.  புதிய மாவட்ட ஆட்சியராவது இச்சாலைக்கு தார்த்தளம் அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  அடுத்து 2004-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட திருப்பாப்புலியூர் ரயில்வே மேம்பாலத்துக்கு மேற்கு இணைப்புச் சாலையாக, வண்டிப்பாளையம் சாலையையும் சரவணன் நகரையும் இணைக்கும் வகையில், 300 மீட்டர் நீளம் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்று ரயில்வே மேம்பால திட்டத்திலேயே உள்ளது. 

              ஆனால் தனிப்பட்ட 4 நபர்களுக்குச் சாதகமாக கடலூர் நகராட்சி நிர்வாகம் நடந்து கொண்டு வருவதால், இந்த இணைப்புச் சாலை திட்டமும், மேம்பாலப் பணி முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.  நில ஆர்ஜிதத்துக்கு வருவாய்த் துறை ஒப்புதல் அளித்து நிலத்தின் விலையையும் நிர்ணயித்துக் கொடுத்து ஓராண்டு ஆகிவிட்டது. நகராட்சிகளின் ஆணையரும் ஒப்புதல் வழங்கி விட்டார். 

                 ஆனால் கடலூர் நகராட்சி நிர்வாகம் சில தனி நபர்களுக்கு ஆதரவாக இத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.  இந்த இரு இணைப்புச் சாலைகளும் நிறைவேற்றப்பட்டு இருந்தால், நகரில் போக்குவரத்து நெரிசல் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை உருவாகி இருக்காது என்கிறார், கடலூர் நகர குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன். 

                இந்த இரு சாலைகளையும் அமைக்க ஏற்கெனவே 3 ஆட்சியர்களிடம் முறையிட்டு விட்டோம். கிடப்பில் போடப்பட்டுள்ள இச்சாலைப் பணிகளை முடித்தாலே போதும், கடலூர் நகரின் போக்குவரத்து நெரிசல் 50 சதவீதம் குறைந்து விடும். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நினைத்தால் 15 நாள்களில் முடிக்க முடியும் என்றார் மருதவாணன்.





Read more »

பாரத ஸ்டேட் வங்கியில் பசுமை திட்டம் அறிமுகம்

சிதம்பரம்:

            பாரத ஸ்டேட் வங்கி சிதம்பரம் கிளை 21-ம் நூற்றாண்டின் சிறப்பம்சமாக வாடிக்கையாளர்களுக்கு காகிதம் இல்லாமல் வங்கியின் செயல்பாடுகளை நடத்திக் கொள்ள ஏதுவாக பசுமை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.  

இதுகுறித்து அவ்வங்கி முதன்மை மேலாளர் லஷ்மி நாராயணன் தெரிவித்தது:  

               இந்த திட்டத்தின் மூலம் வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கவும், பணம் டிபாசிட் செய்யவும், பணம் பரிமாற்றம் செய்யவும் முடிவும். மேலும் பண பரிமாற்றத்துக்கு எந்த விதமான உச்சவரம்பும் இல்லாமல், வவுச்சர்களின் அவசியமும் இல்லாமல் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.  

           ஆன்லைன் பேங்கிங், மொபைல் வங்கி சேவை முதலானவையும் இந்த கிளையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் மூலம் வங்கியில் வாடிக்கையாளர்களின் நெரிசலை தவிர்க்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வங்கி சேவையை வழங்கவும் முடியும் என முதன்மை மேலாளர் லஷ்மிநாராயணன் தெரிவித்தார்.



Read more »

கடலூர் மாவட்டத்தில் வேளாண் கடன் இலக்கு ரூ.1,022 கோடி

கடலூர்:
 
           நடப்பு நிதி ஆண்டில் வேளாண் பணிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 1,022.25 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.  

வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்த தகவல்கள்: 

               கடலூர் மாவட்ட வேளாண் பணிகளுக்கு இவ்வாண்டு ரூ. 1022.25 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மே மாதம் முடிய 170.31 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலக் கடனாக ரூ. 205 கோடியும், மத்திய காலக் கடனாக ரூ. 15 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் சொர்ணவாரி நெல் 10 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய திட்டமிட்டு 7,353 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. குறுவை 8 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

                 சம்பா நெல் 92 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. செம்மை நெல் சாகுபடி 49,800 ஹெக்டேரில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. 30 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது.  மாவட்டத்தில் நெல் விதைகள் 798.21 டன், தானிய வகை விதைகள் 0.5 டன், பயறு வகைகள் 105,78 டன், மணிலா விதை 86.95 டன், கையிருப்பு உள்ளது. உரங்கள் தழைச் சத்து 1732 டன், மணிச்சத்து 638 டன், சாம்பல் சத்து 1216 டன், நுண்ணூட்டக் கலவை 6.65 டன், உயிர் உரங்கள் 28,400 பொட்டலங்கள் கையிருப்பு உள்ளன.  மின் வாரியத்தின் மூலம் விவசாயத்துக்கு புதிதாக 127 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. 

               நுகர்பொருள் வாணிபக் கழகம் முலம் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. 14-6-2011 முடிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சன்ன ரகம் நெல் 79,324 டன்களும், சாதாரண ரகம் நெல் 16,013 டன்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.





Read more »

Plea to fill vacant engineering posts in PWD in Cuddalore District


 
Helping out farmers: Collector V. Amuthavalli at a grievance meeting in Cuddalore on Friday.

CUDDALORE: 

       Farmers have urged Collector V. Amuthavalli to take steps to fill engineering posts lying vacant in Public Works Department. A plea was made at a grievance day meeting held here on Friday.

         At a time when water was set to be released for irrigation through canals stretching for hundreds of kilometers in the district, the vacancies would affect the efficient functioning of the PWD in regulating supply. It was also pointed out that even though the Neyveli Lignite Corporation had allotted a sum of Rs. 25 crore for desilting the Wallajah tank, the works were yet to begin. It was stated that fertilizer shortage and faulty transformers affecting power supply to the farms were also affecting agricultural production.

           In certain places, defective transformers were replaced by farmers at their own expenses and, in such cases the district administration should make arrangement for reimbursement. There was undue delay in processing seeds in the seed treatment plant located at Vriddhachalam, which, in turn, affected the cash flow of seed suppliers (farmers). It was alleged that the seeds obtained from government depots were sub-standard and did not sprout.




Read more »

Heavy traffic congestion has become a common feature at Cuddalore town


Heavy traffic congestion has become a common feature


CUDDALORE:

        The entire stretch of the East Coast road passing through Cuddalore town, starting from Manjakuppam to Anna bridge has become a nightmare for motorists because of the heavy congestion during peak hours.

         As almost all the private and government schools, marriage halls, cinema houses and offices are concentrated in this area, the road traffic has become almost unmanageable. Traffic jams have become a common feature in Cuddalore. The digging of trenches for laying the pipeline and construction of manholes for the underground drainage project has been continuing from January 2007, thereby causing great inconvenience and immense hardships to the commuters.

At snail's pace

            Owing to burgeoning vehicle population and narrowing down of the main thoroughfares due to encroachments, the traffic on the Bharathi Road, the Nethaji Road and the Lawrence Road moves at snail's pace and it takes over 30 minutes to cover the distance of two km. in the mornings and evenings.
Caught in traffic snarls

          For executing the underground drainage project, parts of the Nethaji Road and the Kammiampet road too have been closed for traffic. Therefore, buses and heavy vehicles going to and coming from Puducherry invariably get caught in the traffic snarl. With the re-opening of schools and colleges on June 15, the traffic problem has become aggravated as many of the students depend on motorised vehicles. A crucial stretch of the Nethaji Road has been narrowed due to encroachment and this has been further constricted by the digging of trenches.

             Such undue delay not only gets on the nerves of the motorists but also commuters' schedules into disarray. There does not seem to be any worthwhile planning to ease congestion nor is there any proper traffic management. The residents and the public are of the opinion that certain drastic measures ought to be taken to widen the roads to facilitate free flow of traffic and to ensure rights of passage to the pedestrians. But the question is who will take resolute action in this regard and when.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior