உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 15, 2012

கடலூர் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் ராஜீவ், மூப்பனார் சிலை அமைக்க அடிக்கல்

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. நேரு பவன் என பெயரிடப்பட்டுள்ள இவ்விடத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலை தற்பொழுது அமைக்கப் பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி னார். காங்கிரஸ் மாநில துணை தலைவர் வெங்கடேசன், தொழிலதிபர்கள் ஞானசந்திரன், மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர்கள் அன்பு, சரவணன், அலமு தங்கவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 8.25 அடி உயரத்தில் நிறுவப்பட உள்ள ராஜீவ், மூப்பனார் வெண்கல சிலைகள் வரும் ஆகஸ்ட் மாதம் திறப்பு விழா நடத்தப்படவுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior