உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 02, 2012

கடலூர் முதுநகரில் ரெயில்களை நிறுத்த கோரி கடையடைப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/7c91f4c2-fcc9-4b62-bfe6-2993a31abb9d_S_secvpf.gif
கடலூர்:
           கடலூர் முதுநகரில் ரெயில்வே நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் ஒருசில ரெயில்கள் மட்டுமே நின்று சென்றன. இங்கு பிற ரெயில்கள் நிற்காமல் சென்றதால் ரெயில் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

           அதையடுத்து கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களையும் நிறுத்த கோரி இன்று (2-ந்தேதி) கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவை உள்பட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் இந்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. அதன்படி இன்று கடலூர் முதுநகரில் உள்ள நிறுவனங்கள், அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

             காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகளில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் கடலூர் முதுநகரில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாததால் அனைத்து வீதிகளும் வெறிச்சோடின.   கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்துக்கு கடலூர் துறைமுக ரெயில் பயணிகள் நலசங்க தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பெட்காட் மாநில துணை ராசாமோகன், ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயகுமார் வரவேற்றார். உண்ணாவிரதத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

தானே புயலுக்கு பின் கடலூர் மாவட்டத்தில் பூத்துக் குலுங்கும் மாமரங்கள்


புயலுக்குப்பின் துளிர்விட்டு பூத்துக் குலுங்கும் மாமரம்.
கடலூர்:
 
        தானே புயல் புரட்டிப் போட்டதால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கடமை தவறாத மாமரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.  கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்களில், 625 ஏக்கரில் மாமரங்கள் இருந்தன.
 
          இதில் 300 ஏக்கர் மாமரங்கள் முழுவதும் புயலில் வேருடன் சாய்ந்து அழிந்த விட்டதாக வேளாண் துறை தெரிவிக்கிறது. ஏனைய 325 ஏக்கரில் உள்ள மாமரங்கள் பெரும்பாலானவை கிளைகள் ஒடிந்தும், இலைகள் முற்றிலும் உதிர்ந்தும், மீண்டும் தேருமா என்ற நிலையில் காணப்பட்டன.  கிளைகள் பலவும் முறிந்து காணப்பட்ட மா மரங்கள் பலவற்றில், அண்மையில் இலைகள் துளிர்விடத் தொடங்கியதைத் தொடர்ந்து, இப்போது பூக்களும் கொத்து கொத்தாக பூக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.  
 
இதுகுறித்து சங்கொலிக்குப்பம் விவசாயி ராமலிங்கம் கூறுகையில், 
 
          10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மாமரங்களில் பல மரங்கள், புயலில் சேதம் அடைந்து விட்டன. ஏராளமான மரங்கள் ஒடிந்தும், சிதைந்தும் பரிதாபமாகக் காணப் பட்டன. அவற்றில் சில மரங்கள் துளிர் விட்டு பூக்கவும் தொடங்கி இருக்கின்றன.  கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கணிசமான அளவுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வரும். பொதுவாக பிற மாவட்டங்களில் இருந்து மாம்பழம் வரத்து குறையும் தருவாயில், கடலூர் மாவட்ட மாம்பழங்கள் சந்தைக்கு வரும்.  எனவே கடலூர் மாவட்ட மாம்பழ விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் புயல் பாதிப்பால், மாம்பழ வருவாய் இனி கிடைக்குமா என்றே தெரியவில்லை என்றார்.
 
 இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 
 
         கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாத இறுதியில் மாமரங்கள் பூக்கத் தொடங்கும், மே மாதம் பழங்கள் விற்பனைக்கு வரும். புயலில் முறிந்து கிடந்த மாமரங்கள் பலவற்றில் துளிர் வந்து இருக்கிறது. பூக்கள் பூக்கவும் தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு உருவான புதுத் துளிரில் இருந்து வெளிவரும், பூக்களில் பிஞ்சு பிடிக்குமா என்பது சந்தேகமே. அடுத்த ஆண்டுதான் இவற்றில் பழங்களை எதிர்பார்க்க முடியும் என்றார்கள்.  முறிந்து கிடந்த மா மரங்கள் ஆனாலும் சீசன் வந்ததும், துளிர்விட்டு பூத்துக் குலுங்கி, தங்களது கடமையை தவறாமல் நிறைவேற்றி விட்டன. பூக்களை காய்களாக, கனிகளாக மாற்றும் அற்புதத்தை இயற்கைதான் நிகழ்த்த வேண்டும்.  படம்: வி.சிவபாலன்
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் :

         கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
 

           தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 4ம் தேதி நடக்கிறது. இதில் டி.வி.எஸ்., அப்பலோ பார்மசி, செக்யூரிட்டி சர்வீஸ், ஓஷன் ஸ்பிரே ஓட்டல், ஸ்டார் ஹெல்த் நிறுவனங்களில் பணி புரிய ஆர்முள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம். 

               எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ., டிகிரி படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.









Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்


 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_397371.jpg


கடலூர் :

          தீ விபத்தின் போது முறையாக செயல்படாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

       கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வர் அறையில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்ட முதல்வர் அறை அருகில் முக்கிய பாடப்பிரிவுகளின் சோதனைக் கூடங்கள் உள்ளன. தீ விபத்து ஏற்பட்ட போது மாணவிகள் வெளியேற முறையாக அறிவிப்பு செய்யவில்லை. மேலும் தீ விபத்தால் முதல்வர் அறை அருகே உள்ள வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படவில்லை.

        நேற்று காலை வகுப்பு வந்த மாணவிகள் வகுப்பறைகள் சுத்தமாக இல்லாததால் அனைத்து மாணவிகளும் வகுப்பறைகளிலிருந்து வெளியேறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன் கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன், மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள் சரமாரியாக புகார் கூறினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்குச் சென்றனர்.

Read more »

நெய்வேலியில் லாரி வாடகையை உயர்த்தித் தர கோரி லாரிகள் வேலை நிறுத்தம்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/839ea152-41a0-4eeb-9834-514b816bcdf3_S_secvpf.gif

நெய்வேலி:
 

         நெய்வேலி என்.எல்.சி.யிலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வெளி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் செல்லும்.

           பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டோல்கேட்டில் அதிக கட்டண வசூல் ஆகியவை காரணமாக லாரி வாடகையை உயர்த்தித் தர வேண்டும் என்று வெளிமாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை நிர்வாகத்திடம் லாரி உரிமையாளர்கள் வற்புறுத்தி வந்தார்கள். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.  இதையடுத்து வாடகையை உயர்த்தி தரக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

         அதன்படி நெய்வேலியில் நேற்று  லாரி ஸ்டிரைக் தொடங்கியது. மந்தாரக்குப்பத்தில் 100 லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. என்.எல்.சி.யிலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்ல இன்று லாரிகள் செல்லவில்லை. இதனால் வெளி மாவட்டங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் பணி பாதிக்கப்பட்டது.  கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior