உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 07, 2011

கடலூர் சட்ட மன்றத் தொகுதி - எம்.எல்.ஏ.அய்யப்பன் சாதனைகள்



கடலூர் :

              கடலூர் சட்டசபை தொகுதி கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கில் பண்ருட்டி, தெற்கில் குறிஞ்சிப்பாடி தொகுதிகளையும், வடக்கில் புதுச்சேரி மாநிலத்தை எல்லையாகக் கொண்டுள்ளது .

              மாவட்டத்தின் தலைநகரம் என்ற பெருமையை கொண்ட இத்தொகுதியில் விவசாயம், நெசவு, கட்டுமான தொழில் மற்றும் மீனவர்கள் நிறைந்துள்ளனர். கடந்த 2006 தேர்தலில் கடலூர் நகராட்சி மற்றும் கடலூர் ஒன்றிய பகுதிகள் முழுமையாக இருந்தன. தொகுதியில் மொத்தம் 1,96,095 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தேர்தலில் பதிவான 1,40,286 ஓட்டுகளில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அய்யப்பன் 67,003 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்ததாக அ.தி.மு.க., குமார் 60,737 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். வித்தியாசம் 6,266 ஆகும். தே.மு.தி.க., ஜெயக்குமார் 7,866 ஓட்டுகள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்தார்.

             தொகுதி மறு சீரமைப்பில் நகராட்சி பகுதி முழுவதும், ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் 31 ஊராட்சிகள் மட்டுமே தற்போது இடம் பெற்றுள்ளன. எஞ்சிய 20 ஊராட்சிகள் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது தொகுதியில் 88,650 ஆண்கள், 88,716 பெண்கள் என மொத்தம் 1,77,360 வாக்காளர்கள் உள்ளனர். மறுசீரமைப்பில் கடந்த தேர்தலை விட 43 ஆயிரத்து 547 வாக்காளர்கள் குறைந்துள்ளனர். 

கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேட்டி:

               கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தியதன் மூலம் 13 ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கியுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகம், தூக்கணாம்பாக்கம், ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிய கட்டடம், போலீஸ் குடியிருப்பு, மகளிர் ஐ.டி.ஐ., கட்டடம், புதிய வகுப்பறைகள், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், பத்திரப் பதிவு அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. குண்டு உப்பலவாடி - தாழங்குடா உப்பனாற்றில் 5 கோடியிலும், நாணமேடு - சுபாஉப்பலவாடியில் 3 கோடி ரூபாய் செலவிலும், ராசாப்பாளையம் - நல்லாத்தூர் மலட்டாற்றில் ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டியுள்ளேன்.
                  
              கடலூர் நகரில் பீச் ரோடு, ஜவான்ஸ் பவன் ரோடு, குண்டுசாலை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் 17 கோடி ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால்கள் வசதியுடன் சாலை அமைத்துள்ளேன். பல ஆண்டுகளாக ஒற்றையடிப் பாதையாக இருந்த பள்ளிநேலியனூர், சேலியமேடு - குமாரமங்களம், ரெட்டிச்சாவடி - குமாரமங்களம் கிராம சாலைகளை விரிவுப்படுத்தி தரமான சாலை அமைத்துக் கொடுத்துள்ளேன். 

               கடற்கரையில் 3 கோடி செலவில் கருங்கல் கொட்டி கடலரிப்பை தடுத்துள்ளேன். கடலூர் நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி என கடந்த தேர்தல் நேரத்தில் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் கூறினார்.


இவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அ.தி.மு.க., குமார் கூறியது: 

             மாவட்ட தலைநகரமான கடலூர் சட்டசபை தொகுதி, இந்த ஆட்சியில் மிகவும் பின் தங்கிவிட்டது. தேர்தலில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,வான அய்யப்பன் சொன்னபடி எதையும் செய்யவில்லை. பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வந்து நான்கு ஆண்டாகியும் இதுவரை முடிந்தபாடில்லை. சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமானதோடு புழுதிப் புயலால் மக்கள் அவதிப்பட்டுவதுடன் மின் வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

                 ஐந்து ஆண்டில் கடலூர் தொகுதிக்கென சொல்லிக் கொள்ளும் அளவிற்கு திட்டத்தை கொண்டு வரவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என கவர்னர் உரையில் அறிவித்துள்ளனர். இதனை நம்பி மீண்டும் ஏமாற மக்கள் தயாரில்லை. இவ்வாறு குமார் கூறினார்.

மறுசீரமைப்பில் உருவான கடலூர் சட்டசபை தொகுதி

கடலூர் நகராட்சி - 45 வார்டுகள், கடலூர் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் 31 ஊராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

1. அழகிய நத்தம்
2. செல்லஞ்சேரி
3. நல்லாத்தூர்
4. கீழ்அழிஞ்சிப்பட்டு
5. மேல் அழிஞ்சிப்பட்டு
6. கிளிஞ்சிக்குப்பம்
7.கீழ் குமாரமங்கலம்
8. மதலப்பட்டு
9. எம்.பி., அகரம்
10. கரைமேடு
11. காரணப்பட்டு
12. பள்ளிப்பட்டு
13. புதுக்கடை
14. சிங்கிரிகுடி
15. தென்னம்பாக்கம்
16. தூக்கணாம்பாக்கம்
17. திருப்பணாம்பாக்கம்
18. உள்ளேரிப்பட்டு
19. பெரியகங்கணாங்குப்பம்
20. நாணமேடு
21. உச்சிமேடு
22. குண்டு உப்பலவாடி
23. கோண்டூர்
24. நத்தப்பட்டு
25. தோட்டப்பட்டு
26. மருதாடு
27. வரக்கால்பட்டு
28. வெள்ளப்பாக்கம்
29. காராமணிக்குப்பம்
30. பாதிரிக்குப்பம்
31. கடலூர் நான் முனிசிபல்

Read more »

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு: 10 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் விநியோகம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகளை தேர்வு எழுதுபவர்களுக்கு தபாலில் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர் 
 
                தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கான 10 லட்சம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) அஞ்சலகங்கள் மூலம் நேரடியாக விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 
 
                தமிழகம் முழுவதும் வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகளை 10 லட்சம் பேர் எழுத உள்ளனர்.  இந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களது பெயர், இல்ல முகவரி குறிப்பிடப்பட்ட, தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை தேர்வாணையம் அச்சிட்டு வழங்கியுள்ளது. இந்தத் தேர்வுக் கூடச் சீட்டுகள், முகவரி தெரியும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உறைகளில் இட்டு, சான்றிதழ் பதிவு தபாலில் அனுப்புவதற்காக அஞ்சல் துறையுடன், தேர்வாணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
             இதன்படி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அஞ்சலகத்தில்,தேர்வுக் கூடச் சீட்டுகள் கட்டுக் கட்டாகக் குவிந்துள்ளன. இந்தக் கட்டுகளைப் பிரித்து, கடந்த 3-ம் தேதி முதல் (விடுமுறை நாள்கள் உள்பட) தேர்வுக்கூடச் சீட்டுகளை அனுப்பும் பணியில் 50 தபால் ஊழியர்கள் "ஷிஃப்ட்' முறையில் ஈடுபட்டுள்ளனர்.  
 
இதுகுறித்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் ஆர். வெங்கட்ராமன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
 
             தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பணியிடத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கெனவே அஞ்சல் துறை மாநிலம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் விற்பனை செய்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக இப்போது வி.ஏ.ஓ. பணியிடத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பும் 24 மணி நேர சேவையில் தபால் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.  
 
அஞ்சல் துறைக்கு ரூ. 1 கோடி வருவாய்: 
 
                  சென்னையில் கிரீம்ஸ் சாலை அஞ்சலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள 93 தலைமை அஞ்சலகங்கள், 20 ஆயிரம் கிளை அஞ்சலகங்கள் மூலம் நகரம் முதல் குக்கிராமங்கள் வரை அடுத்த 3 நாள்களில் இந்த தபால்கள் விநியோகிக்கப்பட்டுவிடும்.  இதன் உறைகளின் மீது, அவசரம், குறுகிய காலத்துக்குள் சேர்க்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் இந்த தேர்வுக்கூடச் சீட்டுகளை விநியோகிப்பதன் மூலம் அஞ்சல் துறைக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளுக்கான தேர்வுக்கூடச் சீட்டுகளையும் இனி அஞ்சல் துறை விநியோகிக்க உள்ளது என்றார் வெங்கட்ராமன்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை வீழ்த்திய தொழிற்சாலைகள்!

கடலூர் உப்பனாற்றங் கரையில் இயற்கை எழிலையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, அதில் தலைநிமிர்ந்து நிற்கும் சில ரசாயன ஆலைகள்.
கடலூர்:
              கிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம் கால்வாய். 
              பக்கிம்ஹாம் கால்வாயின் இருபுறமும் பச்சைப் பசேலென காட்சி தந்த வேளாண் பயிர்கள், உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் கண்கொள்ளா காட்சி. வானுயர வளர்ந்து நிற்கும் பனை மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக் காடுகள், சவுக்குத் தோப்புகள், மணிலா, வெட்டிவேர் வயல்கள், கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் என்று விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பு இன்று, தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புகை கக்கிக் கொண்டு இருக்கின்றன. 
                 ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சில கட்டடங்கள் தவிர மற்றபடி, பெரும்பகுதி சுடுகாடாய்க் காட்சி அளிக்கின்றன. வேளாண்மையை அழித்தது மட்டுமன்றி, நச்சு வாயுக்களை பெருமளவுக்கு வெளியேற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகின்றன. அன்று வெள்ளைக்காரர்களால் எளிமையான நீர்வழிப் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட பக்கிம்ஹாம் கால்வாய் (உப்பனாறு) இன்று தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு தகுதியான இடமென மத்திய, மாநில அரசுகள் வகைப்படுத்தி, அங்கு பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து வருவது, குதிரை குப்புறத் தள்ளியதுமன்றி குழியும் பறித்த கதையாகி விட்டது. 
               3 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் ரசாயனத் தொழிற்பேட்டை, 3 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, 1,400 ஏக்கரில் அனல் மின் நிலையம், 1,000 ஏக்கரில் தனியார் கப்பல் கட்டும் தளம், இன்னும் பெயர் வைக்கப்படாத ஆலைகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், நல்ல விலை தருவதாகவும், அவர்களின் சந்ததிக்கு வேலை தருவதாகவும், விவசாயிகளிடம் ஆசைகாட்டி பறிக்கப்பட்டுவிட்டன. 
                விளை நிலங்களை இழந்த, பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தத் தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு ரூ. 60 முதல் ரூ. 80 வரை ஒப்பந்தத் தொழிலாளிகளாக கூலிவேலை பார்க்கும் அவல நிலைக்குத்தான் தள்ளப்பட்டனர். ஆனால் விவசாய நிலங்களை பறித்து அவற்றில் தொடங்கப்பட்ட ஆலைகள், தங்கள் உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளில் விற்று, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. 
               இவற்றுக்கெல்லாம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்பட்டு, இன்று விதிகளை இறுக்கியதன் காரணமாக, பல இறால் பண்ணைகள் மூடப்பட்டாலும், அவற்றில் மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத பரிதாப நிலைக்கு அந்த நிலங்கள் தள்ளப்பட்டு, சுடுகாடாகக் காட்சி அளிக்கின்றன. பறிபோனது போக மிச்சம் சொச்சம் இருக்கும் நிலங்களில் இன்றும் பனைமரங்கள், தென்னை மரங்கள், மணிலா, வெட்டிவேர், மலர்ச் செடிகள் பயிரிட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஏழை விவசாயிகள். 
                 தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு, ராசாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில், 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் இன்று, 150 ஏக்கராகச் சுருங்கி விட்டது. ஓராண்டுப் பயிரான வெட்டிவேர் பயிரிடுவதில், ஏக்கருக்கு 4 டன் வெட்டிவேர் கிடைக்கும் என்றும், ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சம் என்றும் நினைவு கூறுகிறார், தியாகவல்லி விவசாயி சாமிக் கச்சிராயர். 
                   ஆயிரக்கணக்கான வெட்டிவேர் வயல்களும், சவுக்குத் தோப்புகளும், மணிலா தோட்டங்களும், முந்திரிக் காடுகளும், காய்கறித் தோட்டங்களும் அழிக்கப்பட்டு, அவைகள் நச்சு வாயுக்களை உமிழும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டதுதான் உலகளாவிய புதிய பொருளாதாரக் கொள்கையா என்று வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.   

Read more »

கடலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 416 கோடி செலவிடப்பட்டுள்ளது

கடலூர்:

              மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை, ரூ. 416 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். அரசு கள விளம்பரத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் டி.புதுப்பாளையம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியது:

              குறிஞ்சிப்பாடி ஒன்றித்தில் 51 ஊராட்சிகளில் 38,811 பேர் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் பதிவு செய்து உள்ளனர். இத்திட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் 2006-07-ல் ரூ. 2.37 கோடியும்,  2007-08-ல் ரூ. 8 கோடியும், 2008-09 ல் ரூ. 4.81 கோடியும், 2009-10-ல் ரூ. 8.64 கோடியும் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ. 7.25 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.வறுமை ஒழிப்புத் திட்டமான இத்திட்டம் ஓர் உன்னதத் திட்டம் ஆகும்.  

             இத்திட்டத்தின் மூலம் ஊராட்சிகள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான, சாலை அமைத்தல், குளம் தூர் வாருதல் போன்ற பணிகளைச் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பெண்களிடையே அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு ரூ. 80 கூலி பெறுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் இதுவரை ரூ. 416 கோடி செலவிடப்பட்டு உள்ளது.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுவதுபோல், மற்ற திட்டங்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். 

                மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். குடிநீரில் ஏதேனும் குறைபாடு இருந்தால், உடனடியாகச் சரி செய்ய போதிய நிதி உள்ளது. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கோ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். கள விளம்பர அலுவலர் டாக்டர் சிவக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் வி.தயாளன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோக்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கலையரசி, பி.ராஜவேல், முழு ஊரகச் சுகாதரத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.தமிழ்மணி நன்றி கூறினார்.

Read more »

63 நாயன்மார்கள் வரலாற்றை நூலாக வெளியிட முடிவு



 சிதம்பரம்:

             அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை, அனைவரும் படிக்கும் வகையில் நூலாக தொகுத்து வெளியிடுவது' என, சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக மாநில மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

            சிதம்பரத்தில் சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில், இரண்டு நாட்கள் மாநில மாநாடு நேற்று நிறைவு பெற்றது. காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் திருவம்பல தேசிக ஞானபிரகாச பராமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். சிதம்பரம் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள், சென்னை நிடுமாமிடி மடம் விரேஷ்வர தேசிகேந்திர சுவாமிகள், துழாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள், தமிழக தெய்வீக பேரவைத் தலைவர் அர்ஜூன் சம்பத், அகில இந்திய ஆன்மிக அறிஞர்கள் கூட்டமைப்பு ராஜன் ஆகியோர் ஆன்மிக உரையாற்றினார்.

             சத்தியநாராயணன், இலங்கை ரத்தினம்பிள்ளை யோகா, தியானம் தலைப்புகளில் பேசினர். சேக்கிழார் பண்பாட்டுக் கழக பொதுச் செயலர் விஜயகுமார், மாநிலத் தலைவர் சண்முக சுந்தரம், உயர் மட்ட குழு உறுப்பினர் அட்சயலிங்கம் மற்றும் மாநாட்டு குழுவைச் சேர்ந்த ரத்தினசபாபதி, செந்தில்குமார், ஜோதி குருவாயூரப்பன், முத்து கணேசன், சுவாமிநாதன், முத்துக்குமாரசாமி உள்ளிட்டவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

              மாநாட்டில் சேக்கிழார் அவதரித்த சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, தமிழக முதல்வரை வலியுறுத்துவது. 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை எளிமைபடுத்தி ஒரே நூலாக்கி உலக வாழ்வியலுக்கு உகந்த வண்ணம் வெளியிடுவது. உலக அமைதி, நன்மைக்காகவும் விழிப்புணர்வை உண்டாக்க, ஆன்மிக பேரவைகளை நடத்துவது உட்பட பல்@வறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

Read more »

கடலூரில் மராத்தான் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கடலூர் : 

            கடலூரில் நேற்று நடந்த மராத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று கடலூரில் மராத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. 

             16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 5 கி.மீ., தூரமும், 16 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு 10 கி.மீ., தூர போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 160 பேர் பங்கேற்றனர். கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

             அண்ணா விளையாட்டரங்கில் துவங்கி கலெக்டர் அலுவலக சாலை, பாரதி சாலை, பீச் ரோடு வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைவரை சென்று, மீண்டும் பீச் ரோடு, ஜட்ஜ் பங்களா ரோடு வழியாக அண்ணா விளையாட்டரங்கை அடைந்தனர். போட்டியில் 16 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஸ்வநாதன், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் துரை, சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரசாந்த், மாணவிகள் பிரிவில் என்.எல்.சி., ஜவகர் பள்ளி மாணவி ஸ்ரீதேவி, கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சந்தியா, அம்சவள்ளி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

                16 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் கடலூர் அடுத்த கோ.சத்திரம் மாயகிருஷ்ணன், விருத்தாசலம் விஜயமாநகரம் ராஜபாண்டியன், வெங்கடேசன், பெண்கள் பிரிவில் திட்டக்குடி வதிஷ்டபுரம் அன்புச் செல்வி, கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி ரேவதி, கடலூர் சொரக்கல்பட்டு பிரேமா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3,000 ரூபாயும், 2ம் பரிசாக 2,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1,000 ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 500 ரூபாய் மற்றும் சான்றிதழை கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., பாண்டியன் வழங்கினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்யாததால் காய்கறி விலை உயர்ந்துள்ளது: கலெக்டர் சீத்தாராமன்

நெல்லிக்குப்பம், பிப். 6-

             கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் உழவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு நபார்டு உதவி பொதுமேலாளர் ராசகோபாலன் தலைமை தாங்கினார்.

         ராமலிங்கம், பாலகிருஷ்ணன், கிருபாகரன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் மன்ற தலைவர் வெங்கடபதி வரவேற்றார். விழாவில் உழவர் மன்றத்தை மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் திறந்து வைத்தார்.

              இதன்பின் 2 விவசாயிகளுக்கு கை தெளிப்பானும், பல்வேறு விவசாயிகளுக்கு சவுக்கை, மூங்கில், குமிழ்தேக்கு, தைலம், மலைவேம்பு ஆகிய கன்றுகளையும் வழங்கினார். 
 
அப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன்பேசியது:-

            நமக்கு நாமே உணவளித்து கொள்வது இந்த தை மாதத்தில்தான். புது பானை, புது அரிசி போட்டு நமக்கு உணவளித்தும், கால் நடைகளுக்கு உணவளிப்பது இதே தை மாதம்தான். அனைத்து தானியங்களும் அறுவடை செய்யும் மாதம் தை மாதம்தான். மேலும் மகரந்த சேர்க்கை உச்சக்கட்ட காலம் இந்த தை மாதத்தில்தான். எனவேதான் தை மாதத்தில் வழி பிறக்கும் என்கிறோம். இந்த மாதத்தில் தொடங்கும் அனைத்துமே சிறப்பானதாகும். உழவர்மன்ற கூட்டங் களை இனிமேல் அதிக மகசூல் நடைபெறும் விவசாயிகளின் வயல்வெளிகளில் நடத்த வேண்டும்.

               ஈரோட்டில் 3 1/2 ஏக்கர் கத்திரி சாகுபடி செய்ததில் 450 டன் கத்திரிக்காய் அறுவடை செய்ததை பெருமையோடு பேசினார்கள். காய்கறி விலைவாசி ஏன் உயர்ந்தது என்று சிந்திக்க வேண்டும். விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்யாததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள் சமச்சீர் சாகுபடி முறையை பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் 3-ல் ஒரு பங்கு வருட பயிரும், 1 பங்கு நெல் போன்ற தானிய வகைகளும், 1 பங்கு தினமும் பணம் பார்க்க கூடிய காய்கறிகளும் பயிர் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சமச்சீர் முறையை கையாண்டால் தான் வீட்டையும், நாட்டையும் முன்னேற்ற முடியும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.

               விழாவில் தமிழ்நாடு காகித நிறுவன உதவி பொது மேலாளர் டாக்டர் செழியன், புதுவை துல்லிய பண்ணை திட்ட தலைவர் பாச்சா, மேல்பட்டாம்பாக்கம் கூட்டுறவு வங்கி செயலாளர் ஜோதிலிங்கம், உழவர்மன்ற தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், ரவீந்திரன், வேணுகோபால், வரதன், வேல்முருகன், விஜயகுமார், ராமலிங்கம், குஞ்சிதபாதம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் மங்களம், துணை தாசில்தார் நாசீர் இக்பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உழவர்மன்ற துணைத்தலைவர் சேகர் நன்றி கூறினார்.
 

Read more »

Propagate government's achievements: Anbazhagan

CUDDALORE:

           Despite inflation, the Tamil Nadu government has created a situation where there is no place for poverty in the State, according to Finance Minister K. Anbazhagan.

        He was speaking in a meeting held at Kurinjipadi on Saturday to highlight the achievements of the government. Acknowledging the fact that prices of commodities had gone up, Mr. Anbazhagan said that by taking judicious steps, the government had ensured that nobody was wallowing in poverty.

          He defined poverty as a condition in which the people would not have adequate food, clothing and shelter. However, these three aspects were taken care of by the government as it was providing rice at Re 1 a kg through fair price shops, free dhotis and saris, and a large number of house site pattas. Mr. Anbazhagan pointed out that the work on conversion of 21 lakh huts into concrete houses had started and three lakh houses were nearing completion.

         He called upon the party cadre to launch a door-to-door campaign to impress upon the voters the good works done by the government. Health Minister M.R.K. Panneerselvam, MLA G.Aiyappan, and municipal chairman T. Thangarasu were presaent.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior