உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 05, 2012

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆண்டு தோறும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர்) வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். தமிழக அரசு சார்பில் 2011-2012ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு கடலூர் மாவட்டத்திலிருந்து தொடக்கக் கல்வித்துறையில் 13 பேரும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் 15 பேரும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

அவர்களில் தேர்வு பெற்றவர்கள் விவரம்:

சிதம்பரம், ராணி சீதையாட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன், கடலூர் செயின்ட் ஆன்ஸ் பள்ளி முதல்வர் எர்மின் இக்னிஷியஸ், தர்மநல்லூர் ஆதிதிராவிட நலப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி,  வேப்பூர் அரசு மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியை ராஜகுமாரி, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் குறிஞ்சிப்படி அடுத்த பொட்டவெளி, வள்ளலார் உதவி பெறும்  துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், கரைமேடு நடுநிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர் குணசேகரன், கீழக்கொல்லை உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியை  தேவிகா, வீனங்கேணி ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை இருதயமேரி, சிதம்பரம்  ராமகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் அருள்பிரகாசம், குமராட்சி ஒன்றியம் மா.புளியங்குடி பள்ளி ஆசிரியர் கணேசன் ஆகியோர் நல்லாசிரியர்  விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பெற்ற இவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior