உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

அடிப்படை வசதிகள் செய்து தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு : சிறுபாக்கத்தில் அரசு இலவசங்கள் கிடைக்கவில்லை

சிறுபாக்கம் :

            சிறுபாக்கம் ஊராட்சியில் கட்டமைப்பு அடிப் படை வசதிகள் தொடர்ந்து புறக்கணிக் கப்பட்டு வருவதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

                     மங்களூர் ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியான சிறுபாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், தொலைபேசி நிலையம், இளமின் பொறியாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, இரு தொடக்கப்பள்ளிகள்,  நர்சரி பள்ளிகள், ஸ்டேட் வங்கி, கூட்டுறவு வங்கி, ஆர்.ஐ., அலுவலகம், கிளை நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

              குறுவட்டத்தை சேர்ந்த நாற்பது கிராம மக்கள், மாணவர்கள் தினசரி சிறுபாக்கத்திற்கு வந்து செல்கின்றனர். அண்மைக் காலமாக சிறுபாக்கம் ஊராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெறவில்லை. திட்டக்குடியிலிருந்து மங்களூர் மற்றும் ஒரங்கூர் வரை வந்து செல்லும் இரண்டு டவுன் பஸ்கள், கள்ளக்குறிச்சி- மாங்குளம், நரையூர் வந்து செல்லும் டவுன் பஸ்கள், விருத்தாசலம்- ரெட்டாக் குறிச்சி, பொயனப்பாடி வரை செல்லும் டவுன் பஸ்கள் என ஆறு பஸ்கள் இயங்கி வருகின்றன.

                 இவை அனைத்தும் அருகில் அமைந்துள்ள சிறுபாக்கம் வரை வந்து செல்வதில்லை. சிறுபாக்கம் பகுதியில் தொடர் மின்தட்டுப் பாடு, இயற்கை இடர்பாடுகளில் தொடர் மின்வெட்டு ஆகியவற்றை போக்கிட துணைமின் நிலையம் அமைப்பதற்கு போதிய இடத்தினை பார்வையிட்ட மின்துறை உயர் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையின்றி கிடப்பில் போட்டுள்ளனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தும் தகுதியில் இருந்தும் டாக்டர்கள் வாரத்தில் சில நாட்களாக மட்டும் வரும் காரணத்தால் கிராமப்புற ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவதில்லை.

                   சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப் பட்டு 15 ஆண்டுகளாகியும் மூன்று கிலோ மீட்டர் அருகிலுள்ள மங்களூர், ஒரங் கூர் கிராமங்கள் 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அரசு பள்ளிகளில் சுகாதார குடிநீர், கழிப்பிட வசதி இன்றி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். விவசாயிகள், கூலி தொழிலாளிகள் அதிகமாக காணப்படும் இப்பகுதியில் நீண்ட காலமாக கால்நடை மருத்துவமனை திறக்கப்படவில்லை.

              அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள், சோலீஸ்வரர் கோவில்கள் சீரமைப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன. சிறுபாக்கம் குறுவட்டத்தில் விவசாயிகள் பெருமளவு கறவை மாடுகளின் மூலம் பால்நிலையத்தில் பால் வழங்கி வருகின்றனர். நீண்ட காலமாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளான இலவச கலர் "டிவி', காஸ், 2 ஏக்கர் நிலம் உள்ளிட்ட அரசு உதவிகள் கிடைத்தபாடில்லை.

                     நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஒவ்வொரு ஊராட்சியிலும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் மிகப்பெரிய ஊராட்சியான சிறுபாக்கத்தில் நடைபெறவில்லை. இதுபோன்ற அடிப்படை திட் டங்கள், நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்கப் பெறாத காரணத்தால் கிராம மக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர்.  மாவட்ட நிர்வாகம் நியாயமான அடிப் படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற வேண் டுமென இப்பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

Read more »

இரு பிரிவினரிடையே மோதல் : அமைதிக்குழு கூட்டத்தில் தீர்வு

திட்டக்குடி :

                திட்டக்குடி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அமைதிக்குழு கூட்டத் தில் தீர்வு காணப்பட்டது.திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தில் காணும் பொங்கல் விழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியின் போது, இரு பிரிவினரிடையே  மோதல் ஏற்பட் டது. தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று இருதரப்பினரையும் சாமாதானம் செய்து வைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பிரச்னை ஏற்பட்டதால் இரு தரப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

             இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தில் பதட்டம் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் தாலுகா அலுவலகத்தில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது.  தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், துணை தாசில்தார் பாலு, ஆர்.ஐ., ராமச்சந்திரன், வி.ஏ.ஓ., பன்னீர் செல்வம், வி.சி., நிர்வாகிகள் குணத்தொகையன், தமிழன்பன் உட்பட இரு பிரிவிலுள்ள முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதில் நடந்த சம்பவங்களை மறந்து மீண் டும் ஒற்றுமையுடன்  இருப்பதாக இரு பிரிவினரும் உறுதியளித்தனர்.

Read more »

ஆற்றுத் திருவிழாவில் சாமிகளுக்கு தீர்த்தவாரி: பல்லாயிரக்கணக்கா மக்கள் பங்கேற்பு

கடலூர் :

                     கடலூர் மற்றும் கண்டரக்கோட்டை பெண்ணை ஆற்றுத் திருவிழாவில் சாமிகளுக்கு நடந்த தீர்த்தவாரியை பல் லாயிரக்கணக்கான பக்தர் கள் தரிசனம் செய்தனர். பொங்கல் முடிந்த ஐந்தாம் நாள் ஆற்று திருவிழா நேற்று கடலூர் மற் றும் கண்டரக் கோட்டை பெண்ணையாறு மற்றும் பண்ருட்டி கெடிலம் ஆற் றில் கோலாகலமாக நடந் தது. அதனையொட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமிகள் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆற் றில் தீர்த்தவாரி நடத்தி தீபாராதனை நடத்தப்பட்டது.

                             கடலூர் பெண்ணையாற்றில் நடந்த தீர்த்தவாரியில் புருகீஸ்பேட்டை சுப்ரமணியர், சாலைக் கரை முத்துமாரியம்மன், உச்சிமேடு ஏழைமுத்துமாரியம்மன், குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன், தாழங்குடா மாரியம்மன், வரக்கால்பட்டு ஓடை மாரியம்மன், சின்ன கங்கணாங்குப்பம் மாரியம் மன், வில்வநகர் சுப்பரமணிய சாமி, கண்டக்காடு முத்துமாரியம்மன், நாணமேடு மாரியம்மன், பெரியக்காட்டுப்பாளையம் எல்லையம்மன், முத்துமாரியம்மன், புதுப்பாளையம் துர்கையம்மன், புதுச்சேரி மாநிலம் பெரிய கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன், சின்ன ஆராய்ச்சிக்குப்பம் முத்துமாரியம்மன், பிள்ளையார்குப்பம் சுப்ரமணியர் சாமி, கிருமாம்பாக்கம் சோலைவாழி சாமி, நாகப்பனூர் முத்துமாரியம்மன், பெரிய ஆராய்ச் சிக்குப்பம் முத்துமாரியம் மன், கும்தாமேடு மாரியம்மன், கரிக்கன் நகர் முத்துமாரியம்மன் உட் பட 30க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து சாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த் தவாரியில் பங்கேற் றன.

பண்ருட்டி : 

                கண்டரக் கோட்டை  பெண்ணையாற்று திருவிழாவிற்கு பெரியகள்ளிப் பட்டு மாரியம்மன், ஏரிப் பாளையம் அரசியம்மன், கட்டமுத்துப்பாளையம் சுப்ரமணிய சுவாமி, மாரியம்மன், விநாயகர், எல்.என்.புரம் முத்துமாரியம்மன், தட்டாம்பாளையம் மாரியம்மன், ஆனாங் கூர் மாரியம்மன், சிறுவந் தாடு மாரியம்மன்  உள் ளிட்ட பல்வேறு கிராமங் களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன. பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நடந்த விழாவிற்கு பண்ருட்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.

                   பல்வேறு கோவில்களில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சாமிகளுக்கு ஒரே நேரத்தில் நடந்த தீர்த்தவாரிகளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழா கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ராட்டினம் உள் ளிட்ட பொழுது போக்கு அம்சங் களும் இடம் பெற் றிருந்தன. சிறுவள்ளிக் கிழங்கு விற் பனை அமோகமாக நடந் தது.

                ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு கடலூரில் டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலும், கண்டரக்கோட்டையில் டி.எஸ். பி., சிராஜிதின் தலைமையிலும், பண்ருட்டி கெடிலம் ஆற்றில் இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் 200க்கும் மேற் பட்ட போ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு, கண்டரக் கோட்டை பெண்ணையாறு, பண்ருட்டி பெண் ணையாறுகளுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன. மக்கள் அவதி: நெல்லிக் குப்பம் நகராட்சி முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றுத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.   ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. ஆற்றில் குடிநீர் வசதி இருக்குமென நம்பி வந்த மக்கள் ஏமாற்றம் அடைந் தனர். நகராட்சி நிர்வாகம் ஆற்றுக்கு வரும் வாகனங் கள் மற்றும் கடைகளில் கட்டணம் வசூல் செய்ய குத்தகை விட்டு பணம் பெறுகின்றனர். ஆற்றில் குடிநீர் வசதி செய்து தராததால் மக்கள் சிரமப் பட்டனர்.

Read more »

ஜோதிபாசு மறைவு: பல இடங்களில் இரங்கல் கூட்டம்

கடலூர் :

                மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு இறந்ததையொட்டி கடலூர், சிதம்பரம், பண்ருட்டியில் இரங்கல் ஊர்வலம் நடந்தது.மா.கம்யூ., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு நேற்று முன்தினம் இறந்தார்.  கடலூர் மா.கம்யூ., அலுவலகத்தில் அவரது உருவபடத்திற்கு அனைத்து கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.  மா.கம்யூ., மாநில குழு தனசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலாளர் சுப்புராயன்,  தி.மு.க.,  எம்.எல்.ஏ., அய்யப்பன், காங்., மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெயபால், முருகன், நகர தலைவர் ரகுபதி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் சேர்மன் தங்கராசு, கவுன்சிலர் கோவலன், காங்., மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சம்பத், நகர செயலாளர் குமார், மாவட்டத் துணை செயலாளர் முருகுமணி, பானுமதி, பா.ம.க., மாநில துணைத் தலைவர் சண்முகம், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம், வட்ட செயலாளர் சம்மந்தம், ம.தி. மு.க., இலக்கிய அணி செயலாளர் மன்றவாணன், கவுன்சிலர் ராஜா, பா.ஜ., வெங்கடேசன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்:

                      காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே முடிவடைந்தது. ஊர்வலத்தில் மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் நடராஜன், இந்திய கம்யூ., நகர செயலாளர் சேகர், அ.தி.மு.க., நகர செயலாளர் தோப்பு சுந்தர், முன்னாள் சேர்மன் குமார், இளைஞரணி ஜவகர், கவுன்சிலர்கள் சிவராமதீட்சிதர், மணிவேல், ஜெயவேல் மற்றும்  யாதவ சேனா தலைவர் இளங்கோ யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பண்ருட்டி: 

                   அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட மவுன ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு நடந்த இரங்கல் கூட்டத்திற்கு மா.கம்யூ., வட்ட செயலாளர் சேதுராஜன் தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் பச்சையப்பன், இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக் கொழுந்து, ம.தி.மு.க., நகர செயலாளர் காமராஜ், முன்னாள் கவுன்சிலர் சோழன், துரை, உதயகுமார், தட்சணாமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் :  

              கட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் நேருஜி ரோடு வழியாக  ரயிலடியை சென் றடைந்தது. அங்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி கூட்டம் நடந்தது. ஊர்வலத்திற்கு மாநில குழு உறுப்பினர் ராம மூர்த்தி தலைமை தாங் கினார். மாவட்ட செய லாளர் ஆனந்தன் ஊர்வ லத்தை துவக்கி வைத்தார்.

Read more »

மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி

விருத்தாசலம் :

             விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப்  படை மற்றும் பள்ளி சுற்று சூழல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கான சுற்று சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் வனத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமுதம் போட்டிகளை துவக்கி வைத்தார். பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் மற்றும் பசுமையின் அவசியம் குறித்த அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 200 க்கும் மேற் பட்ட மாணவர்கள் பங் கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Read more »

வெண்கலம் வென்ற போலீசாருக்கு அஷ்வின் கோட்னீஸ் பாராட்டு

கடலூர் :

                சென்னையில் நடந்த காவல்துறையின் தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற போலீசாரை எஸ்.பி., பாராட்டினார். சென்னையில் கடந்த 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை காவல்துறையினருக்கான தடகளப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கில் நடந் தது. இந்த போட்டியில் போலீஸ் துறையின் 6 மண்டலங்களைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற் றனர்.  கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட வடக்குமண்டலம் சார்பில் 63 பேர் பங்கேற்றனர். இதில் கடலூரைச் சேர்ந்தவர்கள் 800 மீட்டர் ஓட்டம், 400க்கு 400 போட்டியில் வெண்கலமும், டெக்ரத்லான், உயரம் தாண்டுதல் போட்டிகளில் 3 வது இடத்தையும் பெற்றனர். கடலூர் மாவட்ட போலீசார் மொத்தம் ஏழு பதக் கங்களை பெற்றனர். பதக்கம் பெற்ற போலீசார் கடலூர் எஸ்.பி., அஸ்வின் கோட்னீசை சந்தித்து பாராட்டு பெற்றனர். 

Read more »

மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: எம்.சி.சம்பத்

கடலூர் :

                  கருணாநிதி அவர் குடும்பத்தினர் வாழ பொய்யான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார் என எம்.சி.சம்பத் பேசினார். கடலூர் நகர அ.தி.மு.க., சார்பில் முன் னாள் முதல்வர் எம்.ஜி. ஆர்., 93வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது. நகர செயலாளர் குமார் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ரங்கா முன்னிலை வகித்தார்.  மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத், முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுப்ரமணியன், மீனவர் பிரிவு செயலாளர் தங்கமணி, நகர பொரு ளாளர் ரவிச்சந்திரன், முன் னாள் நகர செயலாளர் குமார், கவுன்சிலர் கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் பேசுகையில் "கருணாநிதி இன்னும் ஒரு ஆண்டுதான் ஆட்சியில் இருப்பார். ஆனால் 6 ஆண்டுகளுக்கு திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார். 21 லட்சம் வீடுகள் 6 ஆண்டுகளில் கட்டிக் கொடுக்கப்படும் என கூறுகிறார். அவரது குடும்பத்தினர் வாழ பொய்யான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்' என பேசினார்.

Read more »

நேரு யுவகேந்திரா சார்பில் விளையாட்டு போட்டி

சிறுபாக்கம் :

                     வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் ஊராட்சியில் நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பெரியநெசலூர் நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார்.  உறுப்பினர்கள் செந்தில்குமார், சேகர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகேசன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மனோகரன், பொன்அப்பாவு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். பெரியதம்பி, ரெங்கசாமி, முத்துசாமி, சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Read more »

ஜெ.,வை முதல்வராக்க பாடுபடுங்கள் : கட்சியினருக்கு மாஜி அமைச்சர் உத்தரவு

நெல்லிக்குப்பம் :

                        அடுத்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் ஜெ., முதல்வராக ஒற்றுமையுடன் பாடுபட வேண்டுமென மாவட்ட செயலாளர் சம்பத் பேசினார். நெல்லிக்குப்பம் நகர அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந் தது. ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். நகர செயலாளர் சவுந்தர் முன் னிலை வகித்தார். துணை செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சம்பத், பேச் சாளர் மோகனன் சிறப் புரை ஆற்றினார். காசிநாதன், ரங்கராஜன், சாந்தி, சேகர், பாரி, விஜயலட்சுமி, கோபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சம்பத் பேசியதாவது : கருணாநிதி அரசு 85 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. இப்பணத்தில் தொழிற்சாலைகள் துவங்கவில்லை. 21 லட்சம் வீடுகள் கட்டித்தர போவதாக அறிவித்துள்ளனர்.  இதற்கு தேவையான 12 ஆயிரத்து 600 கோடியை எங்கு கடன் வாங்க போகிறார். இப்போது உள்ள கடனே ஒரு தனி நபருக்கு 15 ஆயிரம் உள்ளது. கடன் வாங்கி இலவசம் வழங் கவே பயன்படுத்துகிறார். தொலைநோக்கு பார்வையோடு தொழிற்சாலைகள் அமைத்து வேலை வழங்கியிருந்தால் அவர்களே வீடு கட்டி கொள்ள முடியும். மத்திய அமைச்சர் அழகிரி மொழி பிரச்னையால் பாராளுமன்றத்துக்கு செல்வதே இல்லை. ஒரு குடும்பம் வளர மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. தொலைநோக்கு பார்வையில் வளர்ச்சி திட்டங்கள் இல்லாத கருணாநிதி அரசு தூக்கியெறியப்பட வேண்டும். தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வரும் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் ஜெ., முதல்வராக ஒற்றுமையாக பாடுபடுவோம் என கூறினார்.

Read more »

சர்வதேச தடகள போட்டி கடலூர் மூத்தோர் பங்கேற்பு

கடலூர் :

               சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் பங் கேற்கவுள்ள வீரர்களை டி.ஆர்.ஓ., வழியனுப்பி வைத்தார். சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகள் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை புனேவில் நடக்கிறது. இந்த போட்டியில் சீனா, ஜப்பான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.  இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்திலிருந்து நடேசன்(80), கண்ணுசாமி(80) மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ள தெய்வநாயகம், புனனேஸ்வரி, பரமசிவம், கந்தசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர் களை டி.ஆர்.ஓ., நடராஜன் பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

Read more »

சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

கடலூர் :

                    கடலூர் அடுத்த பெரிய கங்காணாங்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷீரடி சாய்பாபா கோவில்  கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை கணபதி பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, மகாலட்சுமி ஹோ மம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, புதிய சிலை கள் கண் திறந்தல், பூர்ணா ஹீதி நடந்தது.

                       மாலை 6.35 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார் பணம், ரக்ஷ பந்தனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6.05 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், காலை 8.40 மணிக்கு மகா பூர்ணாஹீதி யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9.15 கோபுர ஸ்தூபி கும்பாபிஷேகம், 10.20 மணிக்கு ஷீரடி சாய்பாபா கும்பாபிஷேகம் நடந்தது.

Read more »

பண்ருட்டியில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

பண்ருட்டி :

                பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நான்குமுனை சந்திப் பில் உள்ள அண்ணாதுரை, திருவதிகை, திருவள்ளுவர் நகர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு முன்னாள் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

                   இதில் நகர செயலாளர் ரவிச்சந்திரன், நகர தலைவர் ராஜதுரை, மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன் பங்கேற்றனர். நகர எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில் கும்பகோணம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., படத்திற்கு நகர தலைவர் ராஜதுரை தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். இதில் முன்னாள் நகர செயலாளர் சண் முகம், துணை செயலாளர் இஸ்மாயில், கவுன்சிலர் சண்முகம் பங்கேற்றனர்.

Read more »

பாடலீஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கம்

கடலூர் :

                       கடலூர் பாடலீஸ்வரர் கோவில் திருப்பணிகள் நேற்று துவங்கியது. கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் திருப்பணிகள் துவங்கியுள்ளது. அதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பந்தல் கால் முகூர்த்த விழா நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி மேனகா, பாடலீஸ்வரர் கோவில் வழிபடுவோர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.  சங்க துணைத் தலைவர்கள் கணேசன், ஆனந்தமுதலியார், சொக்கலிங் கம், செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் கள் கணபதி, வேம்புராஜன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

சூதாட்ட தகராறில் தீ வைத்தவருக்கு வலை

பரங்கிப்பேட்டை :

                      சூதாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றவரை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரத்தை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் காசு வைத்து சூதாடினர். அப்போது குலேந்திரன் என்பவர் சூதாட்டத்தில் பணத்தை தோற்றுவிட்டார். கோதண்டராமன் என்பவர் ஜெயித்துவிட்டதாக தெரிகிறது. சூதாட்டத்தில் தோற்றுவிட்ட பணத்தை குலேந்திரன் கேட்தால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட் டது. ஆத்திரமடைந்த கோதண்டராமன், விளக்கு மண் ணெண்ணையை குலேந்திரன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். படுகாயமடைந்த குலேந்திரன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச் சந்திரன் வழக்கு பதிந்து கோதண்டராமனை தேடிவருகிறார்.

Read more »

மோட்டார் சைக்கிள் டயர் வெடித்தது கணவர் பலி: மனைவி, மகள் காயம்

பரங்கிப்பேட்டை :

                         மோட்டார் சைக்களின் டயர் வெடித்ததில் கணவர் இறந்தார். மனைவி, மகள் படுகாயமடைந்தனர். மேல்புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (46). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மணிமேகலை (35), மகள் பிரியதர்ஷினி (3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியிலிருந்து புவனகிரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளின் பின் டயர் வெடித்தது. அதில் மோட்டார் சைக் கிள் நிலை தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்த மூவரும் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  அங்கு நேற்று வெங்கடேசன் இறந்தார். இதுகுறித்து பரங்கிப் பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

லால்பேட்டை ஊரக மருந்தகம் மூடல் : ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :

                   லால்பேட்டையில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக மருந்தகம் மூடப்பட்டதால் ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த லால் பேட்டை தெற்குதோப்பில் கடந்த 1982ம் ஆண்டு பொது சுகாதாரத்துறை சார்பில் ஊரக மருந்தகம் துவங்கப்பட் டது.  ஒரு டாக்டர் உட்பட 7 பேர் பணியாற்றி வந்தனர். இந்த மருந்தகத்தில் லால்பேட்டை, கொளக்குடி, கொள்ளுமேடு, கொல்லிமலை, மேல்பாதி, கீழ் பாதி, திருநாரையூர், வீரநத்தம், நெய்வாசல் கிராம மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.இங்கு இறுதியாக பணியாற்றிய டாக் டர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

                       அதனை தொடர்ந்து அங்கு பணியாற்றிய மருந்தாளுனர் மற்றும் ஊழியர்களும் இடமாறுதலாகி சென்றதால் கடந்த அக்டோபர் மாதம் ஊரக மருந்தகம் மூடப்பட்டது. அதன்பிறகு இந்த மருந்தகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சுற்று வட்டார மக்கள் உடல் நிலை சரியில்லை என்றால் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மூடப்பட்டுள்ள மருந்தகத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி திறக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

சர்க்கரை ஆலை சல்பர் தொட்டியில் விழுந்த ஒப்பந்த தொழிலாளி சாவு

நெல்லிக்குப்பம் :

                      நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை சல்பர் தொட்டியில் விழுந்த ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். கடலூர் மாவட்டம் வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (35).  நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை ஆலையில் உள்ள சல்பர் தொட்டியை சுத்தம் செய்ய கழிவுநீர் வெளியேறும் குழாயை திறந்து சல்பரை வெளியேற்றினார். தொட்டியில் சிறிதளவு சல்பர் இருந்த போதே புவனேஸ்வரன் சுத்தம் செய்ய இறங்கினார். அப்போது விஷ வாயு வெளியேறியதால் மூச்சு திணறி புவனேஸ்வரன் உள்ளே விழுந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலா ளர்கள்  புவனேஸ்வரனை காப் பாற்ற முயன்றனர். அவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற் பட்டதால் ஒருமணி நேரத் துக்கு பிறகு உடல் முழுவதும் வெந்து போன நிலையில் இறந்து கிடந்த புவனேஸ்வரன் உடலை மீட்டனர். இறந்த புவனேஸ்வரனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  புவனேஸ்வரன் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் ஆலை நிர்வாகம் நிவாரணமாக வழங்க வேண்டும் என சேர்மன் கெய்க்வாட் பாபு, தொழிற் சங்க தலைவர் வேலாயுதம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் ஆலை துணைத் தலைவர் முருகேசனிடம் கோரிக்கை வைத்தனர். புவனேஸ்வரன் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை இல்லாமல், மூன்று லட்சம் ரூபாய், உடல் அடக்க செலவுகளை வழங்க ஆலை நிர்வாகத்தினர் சம்மதித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior