உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

பி.எப்., வட்டி விகிதம் இனி 9.5 சதவீதம் : இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பு



              தொழிலாளர்  சேமநல  நிதியின்(பி.எப்.,) வட்டி விகிதம் 9.5 சதவீதமாக  இதுவரை இல்லாத அளவு  உயர்த்தப்பட்டுள்ளது.  நடப்பாண்டிற்கு இது  அமலாகும்.  அதிக அளவில்  வட்டி விகிதம் உயர்த்தப்பட  வேண்டும் என்ற   தொழிலாளர் கோரிக்கைக்கு தற்போது  விடிவு ஏற்பட்டிருக்கிறது.  இதனால், நாடு முழுவதும்  4.71 கோடி பேர்  பயன் அடைவர்.

                   தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்   நிதி அவர்களின் ஓய்வுக்காலத்திற்கு பெரிய பாதுகாப்பாகும்.  வீடு வாங்க, திருமணம் போன்றவற்றிற்கும் இது  பெரிய உதவியாக இருக்கும். இந்த நிதியில் சேர்ந்த தனியார், பொதுத்துறை ஆகியவற்றில்  அமைப்பு சார்ந்த  தொழிலாளர்களுக்கு  தற்போது 8.5 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவு வட்டியானது 2005 - 2006ம் ஆண்டு முதல் தரப்படுகிறது. இத்தடவை  இது மேலும் 1 சதவீதம்  அதிகரித்திருப்பது பெரிய  வரப்பிரசாதமாகும். இது  2010 - 2011ம் ஆண்டுக்கு தரப்படும்.  நாடு முழுவதும் நான்கு கோடியே 71 லட்சம்  அமைப்புசார்ந்த  தொழிலாளர்கள் மூலம் வசூலிக்கப்படும் பி.எப்., தொகை, சில லட்சம் கோடிகளை தாண்டி விட்டது.  

                     ஆனால், இந்த பி.எப்., தொகைக்கு அளிக்கப்படும் 8.5 சதவீத வட்டியை உயர்த்தும் படி தொழிற்சங்கங்கள் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வருகின்றன.   அதே சமயம்  பி.எப்., மூலம் தரப்படும் வட்டியை நிர்ணயிக்கும்  மத்திய அறங்காவலர் குழு,  அதிக அளவு  தந்தால் அதற்கான இழப்பீட்டை அரசு சந்திக்க வேண்டி வரும் என்று கூறியது. மேலும்,  இந்தத் தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தை மூலதன முதலீட்டில்  போடுவது உசிதமா என்ற வாதமும் நடக்கிறது.  ஆனால், தொழிலாளர்களின் பணத்துக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது, என்பதால், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இதில் தயக்கம் காட்டியது. 

                      நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்த நிலையில்,  சேமிப்பிற்கு கிடைக்கும் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது என்ற கருத்து நிதியமைச்சகத்தின்   பரிசீலனையிலும் இருக்கிறது. எனினும் எந்த முடிவாக இருந்தாலும் அது பி.எப்., அறக்கட்டளை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இம்மாத துவக்கத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பி.எப்., அறக்கட்டளை கூட்டம் கூடியது. 

                  ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மீண்டும் இந்த கூட்டம் கூடியது. இந்த நிதிக்கு தற்போது அளிக்கப்படும் 8.5 சதவீத வட்டியை 9.5 சதவீதமாக உயர்த்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  பி.எப்., அறக்கட்டளை எடுத்த இந்த முடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் நான்கு கோடியே 71 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்த நிதியாண்டிலேயே இந்த வட்டி உயர்வை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சகத்துக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரை செய்துள்ளார்.

                        தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு  நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிப்பது என்பது வெறும்  நடைமுறை சம்பிரதாயமே. 1 சதவீத வட்டி உயர்வின் காரணமாக 1,600 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும்  என்று தற்போது  மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால்  வட்டித் தொகை சஸ்பென்சாக ஏற்கனவே உள்ள 1,731 கோடி ரூபாயில் இந்த பற்றாக்குறை ஈடுசெய்யப்பட்டு விடும். தவிரவும் பி.எப்., அறக்கட்டளையில் கையிருப்பாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி இருப்பதாகவும்,  அது  அடுத்த மார்ச் மாதத்திற்குள்  1.82  லட்சம் கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது.  ஆகவே உபரிநிதி வருவாய் மூலம் இந்த  அதிக வட்டி தருவதில் சிரமம் இருக்காது. 

                         அதே சமயம்  ஆண்டு தோறும் நிதியாண்டு முடிவில் ஒவ்வொரு சந்தாதாரருக்கும் அவர் பெயரில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு  தொகை இருக்கிறது என்ற கணக்கை உடனடியாக தரும் கணக்கு நடைமுறை இந்த  பொதுநல சேமிப்பில் இன்னும் அமலாகவில்லை என்றும்  கூறப்பட்டது.  அதே சமயம், அதிககவர்ச்சியான சேமிப்பாக  இனி பொதுநல சேமநிதி இருக்கும் என்பதால், மற்ற  சேமிப்பை மையமாக உடைய எல்லா நிதி அமைப்புகளுக்கும் தாராளமாக பணம்  வராது என்றும் கருதப்படுகிறது.

Read more »

வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்


                  
                     ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. 
 
              இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமை வகித்தார். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பதிவில் மாறுபாடு ஏதேனும் இருப்பின் அதனை உரிய சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பகத்தை நேரில் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம்.புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 
 
இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in 
 
ஆன்லைனில் பதிவு செய்யும் முறை1 
 
ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
 
                இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும்.  பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.
 
2.கூடுதல் பதிவு செய்வது எப்படி ?
 
               ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.
 
3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?
 
                      ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
 
4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா?
 
                 என்பதை எப்படி அறிவது?தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்.
 
5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?
 
                     ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
 
6.ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை( priority certificate) பதிய இயலுமா?
 
              முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.
 
7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?
 
                     இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.
 
8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை? 
 
                           நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

Read more »

கடலூர் துறைமுகத்தில் உயர்மட்ட பாலம்: எம்.எல்.ஏ., அய்யப்பன் கோரிக்கை

கடலூர்: 

                 கடலூர் துறைமுகத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். 

கடலூரில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியது: 

                 கடலூர் துறைமுகம் ஏணிக்காரன் தோட்டம் சுனாமி நகரில் இருந்து முதுநகரை இணைக்க உப்பனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். கடலூர் துறைமுகம் மீன் இறங்கு தளத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்து உதவிட வேண்டும். 

               கடலூர் துறைமுகப்பகுதி முகத்து வாரம் குறைவான ஆழமும், குறைந்த அக லமும் உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி படகுகள் விபத்துக்குள்ளாகி ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று மனித உயிரி ழப்பு ஏற்படுகிறது. எனவே முகத்துவா ரத்தை ஆழப்படுத்த வேண்டும். கடலூர் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட மிகவும் சேதம் அடைந்துள்ள ஜவான்ஸ் பவன் சாலையை புதிய தார்சாலையாக மாற்றித்தரவேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

Read more »

நெல்லிக்குப்பம் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் 22ம் தேதி திறப்பு

நெல்லிக்குப்பம்: 

                நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டட  திறப்பு விழா  22ம் தேதி நடைபெறும் என எஸ்.பி., தெரிவித்தார். நெல்லிக்குப்பத்தில் 28 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதமாகியும் திறக்கப்படாமல் இருந்தது.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லிக்குப்பம் வந்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை பார்வையிட்டார். 

பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறுகையில்,

        "வரும் 22ம் தேதி டி.ஐ.ஜி., மாசானமுத்து புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்' என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பாண் டியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உடன்  இருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 223 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் 223 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் நேற்று பணி நியமன ஆணை வழங்கினார். தமிழகத்தில் அரசு பள் ளிகளில் காலியாக உள்ள 6,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. அதன் படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 

                    நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படாமல் இருந்து. இந்நிலையில் நேற்று கடலூரில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா ஆங்கிலம் 64,  கணிதம் 46, அறிவியல் 112, என மொத்தம் 223 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

Read more »

ரசு பொறியியல் கல்லூரி கட்டுமான பணி : அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

பண்ருட்டி : 

                பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி கட்டுமானப் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
 
               பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஊராட்சி சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 20 ஏக்கர் பரப்பளவில் திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரி கட்டடம் கட்ட 17 கோடியே 8 லட்சத்து 61 ஆயிரத்து 979 ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மாதம் துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கான கட்டுமானப் பணி துவக்க விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார்.

பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 

           "பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இப்பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்படும். இங்கு சிவில், மெக்கானிக் பிரிவுகள் தமிழ் வழியில் கற்பதற்காக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 385 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 108 வசதி மூலம் 6 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிசிஸ்ட் 600 பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும். வரும் கல்வியாண்டில் பண்ருட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கொண்டு வரப்படும்' என கூறினார்.

                      நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, டி.ஆர்.ஓ., நடராஜன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தேவதாஸ் மனோகரன், டீன் குமாரசாமி, நகராட்சி சேர்மன் பச்சையப்பன், பொதுப்பணித் துறை தொழில் நுட்பம் (கல்வித்துறை) தஞ்சாவூர் செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற் பொறியாளர் பாபு, துயர்துடைப்பு தாசில்தார் மங்களம், உதவி பொறியாளர் கனகராஜ், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மேலிருப்பு தனபதி, இளைஞரணி தணிகைசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

குப்பை மேடானது சில்வர் பீச்



கடலூர் : 

                விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ததைத் தொடர்ந்து கடலூர் சில்வர் பீச் குப்பை மேடாக காட்சி அளித்தது.
 
                விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 472 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 380 சிலைகளை மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட் டது. அவற்றில் 218 சிலைகளும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 78 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் சில்வர் பீச்சில் கரைக்கப் பட்டது. கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் பெரும்பாலான சிலைகள் 50 முதல் 100 மீட்டர் தூரத்திலேயே கரைக்கப்பட்டது. 

                      இதனால் கடலில் போடப்பட்ட சிலைகள் உடைந்து அலையில் கரைக்கு அடித்து வரப்பட்டது. அதேப்போன்று சிலைகள் வைக்க பயன்படுத்திய பலகைகள், கழிகள் மரத்துண்டுகள் மற்றும் சிலைகளில் போடப்பட்டிருந்த மாலைகள், வேட்டிகள் அனைத்தும் அலையில் மீண்டும் கரைக்கு அடித்து வரப்பட்டன. இதில் மரச்சட்டங்கள், பலகைகள், கழிகளை பலர் அடுப்பெறிக்க எடுத்துச் சென்றனர். சிலைகள் மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப் பட்டன. மாலைகள், எலுமிச்சை பழம், பிளாஸ்டிக் பைகள் கரை முழுவதும் சிதறிக் கிடந்ததால் கடற்கரை அசுத்தமாக காணப்பட்டது.

Read more »

பாலம் என்றாலே முதல்வர் கருணாநிதி தான் : அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமி

பரங்கிப்பேட்டை : 

                 தமிழகத்தில் புதிதாக பாலம் கட்டுவது தான் முதல்வர் கருணாநிதியின் சாதனையாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் 24 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு நேற்று அதற்கான திறப்பு விழா நடந்தது. 

                   நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் சந்தானம், சேர்மன் முத்துபெருமாள், பேரூராட்சி தலைவர்கள் ரவிச்சந்திரன், முகமது யூனுஸ் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சீத்தாராமன் வரவேற்றார்.

புதிய பாலத்தை திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

                   இங்கு பாலம் கட்டப்பட்டதன் மூலம் பரங்கிப்பேட்டை, கிள்ளை, பொன்னந்திட்டு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர். தமிழகத்தில் புதிய பாலங்கள் கட்டுவது தான் முதல் வர் கருணாநிதியின் சாதனையாக உள்ளது.இந்த விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., வைக் காணவில்லை. ஆனால் அழைப்பிதழில் பெயர் போடவில்லை என சட்டசபையில் பேசுகிறார்கள். பரங்கிப்பேட் டையில் இருந்து கிள்ளைக்கு செல்ல புவனகிரி வழியாக  22 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது 3 கி.மீ., தூரத்தில் கிள்ளைக்கு சென்று விடலாம்.கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடற்கரை கிராமங்கள் வழியாகவே இந்த பாலம் வழியாக பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு 30 நிமிடத்தில் சென்று விடலாம். கடந்த சுனாமியின் போது இந்த பாலம் இருந்திருந்தால் அதிகளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது.

                  கடலூர் மாவட்டத்தில் 743 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம், சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சாலை வசதிகள் உள்ளதால் தான் அதிகளவில் தொழிற்சாலைகள் இங்கு வருகிறது. இதனால் பொருளாதாரம் மேம்படுவதுடன் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு செல்ல அரசு விரைவு பஸ் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

Read more »

வீராணம் ஏரி நிரம்புகிறது: பாசனத்துக்கு நீர் நிறுத்தம்

சிதம்பரம்:

                    பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் கருவாட்டுஓடை வழியாக வடவாற்றில் கலந்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக குறைந்தளவே தண்ணீர் அனுப்பப்பட்டதால் ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

                இந்த மழைநீர் கருவாட்டுஓடை வழியாக வடவாற்றில் கலந்து வீராணம் ஏரிக்கு  செவ்வாய்க்கிழமையிலிருந்து கூடுதலாக நீர் வருகிறது. வடவாறு வழியாக விநாடிக்கு 1300 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒரிரு தினங்களில் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால் புதன்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 44.60 அடியை எட்டியுள்ளது. மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 73 கனஅடி நீர் ஏரியிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

பாசனத்திற்கு நீர் நிறுத்தம்: 

                           சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்படுவது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழைநீரே போதும். ஏரி நீரும் சேர்ந்து வந்தால் நாற்று மூழ்கிவிடும் என விவசாயிகள் தெரிவித்தின் பேரில் ஏரியிலிருந்து பாசனத்க்காக திறந்துவிடப்பட்ட நீர் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

சென்னையில் பிறந்து, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


                        சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு முதல்வர் கருணாநிதி விரைவில் தங்க மோதிரம் வழங்க உள்ளதாக மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
 
                 சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கு உணவு அளிக்கும் சிறப்பு திட்டத்தினை தொடங்கிவைத்து மா.சுப்ரமணியன் மேலும் பேசியதாவது: தனியார் மருத்துவமனையைக் காட்டிலும் மாநகராட்சி மருத்துவமனை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.  இன்று சிறப்பு திட்டமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 4 வேளை உணவு அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
 
                  சாதாரண முறையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 3 நாட்களுக்கும், ஆபரேஷன் முறையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 5 நாட்களுக்கும் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலவச பரிசுப்பை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15.9.2008 முதல் தொடங்கப்பட்டு, 35 ஆயிரம் குழந்தைகளுக்கு ரூ. 52 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பரிசுப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து தமிழ்ப்பெயர் சூட்டப் பெற்ற 750 குழந்தைகளுக்கு 3.6.2009 முதல் தங்கமோதிரம் ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வழங்கப்பட்டுள்ளது.  
 
                              தமிழக முதல்வர் கருணாநிதி விரைவில் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவார் என மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Read more »

சிதம்பரம் நகரில் மக்களை அச்சுறுத்திய 15 அடி நீள முதலை


சிதம்பரம் நகரை கடந்து செல்லும் பாலமான் ஆற்றில் புதன்கிழமை பிடிப்பட்ட 15 அடி நீள முதலை.
 
சிதம்பரம்:

            சிதம்பரம் நகரில் மக்களை அச்சுறுத்திய 15 அடி நீள ஆண் முதலை புதன்கிழமை பிடிபட்டது. சிதம்பரம் நகரை கடந்து செல்லும் பாலமான் வாய்க்காலில் குளிக்கச் சென்றவர்களை முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் விஜயன் மேற்பார்வையில் நந்திமங்கலத்தைச் சேர்ந்த ராஜு தலைமையில் முதலை பிடிக்கும் குழுவினர் புதன்கிழமை 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அந்த முதலையை பிடித்தனர். முதலை 15 அடி நீளமும், 800 கிலோ எடையும் இருந்தது. பிடிபட்ட முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க குளத்தில் வனத்துறையினர் கொண்டு விட்டனர்.

Read more »

துல்லியப் பண்ணையில் வாழை விவசாயம்! ஹெக்டேருக்கு ரூ.3.50 லட்சம் வரை லாபம்


 
கடலூர்: 
 
                   தமிழ்நாட்டில் 83 ஆயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாழை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. 
 
                கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. உலக அளவில் 72.5 மில்லியன் டன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இந்தியாவின் பங்கு 21.77 சதவீதம். தமிழ்நாட்டில் பூவன், மொந்தன், ஏலக்கி, செவ்வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, நேந்திரம் போன்ற வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு வாழை மரத்துக்கு 20 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயிகள் தற்போது வாரம் ஒரு முறை அல்லது 5 நாள்களுக்கு ஒருமுறை வாழைக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்.
 
                  இதனால் தண்ணீர் செலவு மிகஅதிகம். தேவையை விட 5 மடங்கு தண்ணீர் செலவழிக்கப்படுவதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.துல்லிய பண்ணை விவசாயத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் செலவை ஐந்தில் ஒரு பகுதியாகக் குறைக்க முடியும், அதனால் உற்பத்தியை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என்பதும் வேளாண்துறையின், புதிய தொழில்நுட்ப ஆலோசனைகள்.வேளாண் தொழிலுக்கு ஆள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுவரும் இந்தக் காலத்தில், சொட்டுநீர் பாசனம் முறையை கடைப்பிடிப்பதால் வேலையாள்களின் தேவை பெருமளவுக்குக் குறைந்துவிடும். தேவைக்கு ஏற்ப சிக்கனமாக  உரமிட முடியும். தனியாக சேமிப்புத் தொட்டி ஒன்றை அமைத்து, உரத்தை அதன்மூலம் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் வழியாகவே பயிருக்கு அளித்துவிட முடியும்.தமிழ்நாட்டில் வாழை விவசாயத்தில் துல்லியப் பண்ணை விவசாய தொழில்நுட்பம் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
                    இதுவரை தமிழகத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் துல்லியப் பண்ணை விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. துல்லியப் பண்ணை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானியமும் அதிக அளவில் வழங்கப்படுகிறது.மானியம் இதுகுறித்து கடலூர் தோட்டக் கலைத்துறை வேளாண் துணை இயக்குநர் கனகசபை கூறுகையில், ""துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொண்டால், வாழைப் பயிருக்கு ஹெக்டேருக்கு மத்திய அரசு மானியம் ரூ.37,440-ம், மாநில அரசு மானியம் ரூ.11,200 மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பாரம்பரிய விவசாயத்தில் வாழைப் பயிரில் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் நிகர லாபம் கிடைக்கிறது. ஆனால் துல்லியப் பண்ணை விவசாயம் மூலம் ரூ.3.58 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.  ஜெர்மனி போன்ற மேலை நாடுகளில் வாழை விவசாயம் புதிய தொழில் நுட்பங்களுடன் அதிக லாபம் ஈட்டும் சிறந்த தொழிலாக மாற்றப்பட்டு இருக்கிறது.
 
                  மேலை நாடுகளில் வாழைத்தார்கள் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு, நேராக சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று விடுகின்றன. அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பழுக்க வைக்கப்பட்டு, சூப்பர் மார்கெட்டுகளுக்கு பாதுகாக்கப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நுகர்வோருக்கு எப்போதும் புதிய வாழைப் பழங்கள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழைப் பழங்கள், தேவைக்கு ஏற்ப மட்டுமே பழுக்க வைக்கப்பட்டு, சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் வாழை விவசாயிகளுக்கு ஒரே சீரான விலை கிடைக்கிறது. அத்தகைய புதிய தொழில் நுட்பங்களுக்கு தமிழக விவசாயிகளும் மாறவேண்டும். அதற்கு முதல் கட்டமாக துல்லிய பண்ணை விவசாயத்தை செயல்படுத்த வேண்டும்'' என்றார்.புதிய தொழில்நுட்பம்வாழை விவசாயத்தில் மகசூலாக வாழைப் பழத்தை மட்டுமே விவசாயிகள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். 
 
                   வாழை மட்டைகளில் இருந்து காகிதம், நார்களை பயன்படுத்தி பைகள் உள்ளிட்ட கலைப்பொருள்கள் தயாரிக்க முடியும். வாழைத் தண்டில் இருந்து எடுக்கப்படும் சாறு, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கல் போன்றவற்றுக்கு  நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வாழைத் தண்டு மற்றும் பூவில் இருந்து ஜாம் தயாரித்து விற்பனை செய்ய முடியும் என்றும் வாழையில் புதிய தொழில்நுட்பங்கள் தெரிவிக்கின்றன. வாழைப் பழங்களை ஜாம், பெüடர் ஆகவும்  தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான தொழில்நுட்பப் பயிற்சி திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் அளிக்கப்படுகிறது.
 
துல்லியப் பண்ணை விவசாயம் குறித்து கடலூர் ராமாபுரம் முன்னோடி வாழை விவசாயி ஞானசேகரன் கூறுகையில், 
 
                  ""சூறாவளிக் காற்று ஏற்படாவிட்டால் கடலூர் மாவட்டத்தில் வாழை விவசாயம் லாபகரமானது. தண்ணீர் தேவையை குறைக்கவும், வேளாண் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் துல்லியப் பண்ணை விவசாயத்தைப் பின்பற்றி, சொட்டு நீர் பாசனம் முறையை ஒரு ஹெக்டேரில் பின்பற்ற முடிவு செய்து இருக்கிறேன். இதன்மூலம் 40 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Read more »

அனைத்து ஊராட்சிகளிலும் மகளிர் எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுமா?


                            தமிழகத்தில் இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் எழுத்தறிவுத் திட்டத்தை, ஒவ்வொரு ஒன்றியத்திலும் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியத்தை ரூ.400-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என இதில் பணியாற்றும் வளர் கல்வித் திட்டப் பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் சேலம், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 50 சதத்துக்கும் குறைவாக உள்ளது. 
 
                  இதை உயர்த்தும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில், பகுதி நேரப் பணியாக படிக்கும் பாரதம் என்ற எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் அறிவொளி, வளர் கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து, மாதம் ரூ.2,000 வரை ஊதியம் வழங்க மத்திய அரசு வரையறை செய்துள்ளது. எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுப்பதே இவர்களின் பணியாகும். இந்த நிலையில், மற்ற 27 மாவட்டங்களில் உள்ள பணியாளர்கள், ஏற்கெனவே உள்ள அறிவொளி வளர் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம் திருச்சி என்ற அமைப்பைத் தொடங்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
 
                       அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் இந்தப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி, உண்ணாவிரதம், கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.தமிழகத்தில் படிக்கும் பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்ட 5 மாவட்டங்களைத் தவிர, மற்ற 25 மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 80 மாவட்ட அலுவலகப் பணியாளர்கள், 337 வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 1,274 முதன்மை வளர் கல்விப் பணியாளர்கள், 1,055 உதவி முதன்மை வளர் கல்விப் பணியாளர்கள், 10,592 ஊராட்சி வளர் கல்விப் பணியாளர்கள், 9,621 ஊராட்சி உதவி வளர் கல்விப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 22,900 பணியாளர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 7,105 பேரும், பிளஸ் 2 வரை படித்தவர்கள் 11,023 பேரும், பட்டப் படிப்பு முடித்தவர்கள் 3,716 பேரும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் 877 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் 263 பேரும் உள்ளனர்.
 
                
              தமிழகத்தில் 1.07.2010-ல் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், மாநில பெண்கள் எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இதில் வளர் கல்விப் பணியாளர்களை 6.9.2010 முதல் 5.3.2011 வரை உள்ள 6 மாத காலம் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வது என்றும் திட்டம் வரையறை செய்யப்பட்டது.இந்தத் திட்டத்தை  25 மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு செயல்படுத்த தமிழக அரசு சுமார் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் வளர் கல்வித் திட்டத்தில் பணியாற்றுவோர் சுமார் 22,900 பேர் உள்ள நிலையில், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை வளர் கல்விப் பணியாளர்கள் என சுமார் 1,200 பேருக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் பணி நியமனம் கிடைத்துள்ளது.இந்தப் பணியாளர்களில் 25 மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.4000, வட்டாரத் திட்ட, முதன்மை வளர் கல்விப் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.400-ம் ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்துக்கு வழங்கப்படவுள்ளது. மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மூலமாக கடந்த வாரத்தில் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். 
 
                           ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் பணியாற்றும் வளர் கல்விப் பணியாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.ஓர் ஒன்றியத்தில் சராசரியாக 4 எழுத்தறிவு மையங்களை மட்டுமே செயல்படுத்தினால், மற்ற பணியாளர்கள் மற்றும் கற்போரின் நிலை கேள்விக்குரியதாகும். இந்த நிலையில், நியமனம் செய்யப்பட்ட வட்டார மற்றும் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ.400 தொகுப்பூதியமாக வரையறை செய்தது நியாயம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.கூலித் தொழிலாளர்களே நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 ஊதியமாகப் பெறும் போது, இந்தத் திட்டத்தில் பகுதி நேரமாகப் பணியாற்ற உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.13.33 வழங்குவதாகக் கூறுவது சரிதானா எனவும் கேட்கப்படுகிறது. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மாதத் தொகுப்பூதியத்தை ரூ.3000-மாக உயர்த்த வேண்டும் என்பது இந்தத் திட்டத்தில் பணியாற்றுவோரின் கோரிக்கை.
 
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட அறிவொளி- வளர் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கத்தின் தலைவர் பொ. செல்வம், செயலாளர் கே. கலைச்செல்வன் ஆகியோர் கூறியது:
 
                                கடந்த 8 ஆம் தேதி சங்கத்தின் சார்பில் சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருந்தோம். இதனால்தான், ஒன்றியத்தில் உள்ள சுமார் 4 பணியாளர்களுக்கு மட்டும் ரூ.400 தொகுப்பூதியத்தில் பணி ஆணை வழங்கியுள்ளனர். எங்களது கோரிக்கையான அனைவருக்கும்          வேலைவாய்ப்பையும், பகுதி நேர தொகுப்பூதியமாக ரூ.3000 நிர்ணயித்து அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் சங்கம் சார்பில் வழக்கு தொடர உள்ளோம் என்றனர் அவர்கள்.

Read more »

தேர்வு முடிந்ததும் இணையதளத்தில் விடை: சட்டப் பல்கலைக்கழகம் புது முடிவு

               தேர்வு முடிந்ததும், கேள்விகளுக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிடும் புதிய திட்டத்தை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது

                  .விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்படும் குளறுபடியை போக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மதிப்பெண் தொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் புகார்களைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் இந்தப் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள 7 சட்டக் கல்லூரிகளில் அடுத்தப் பருவம் முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்  பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் அளித்த பேட்டி:

                   பருவத் தேர்வுகளை சிறப்பாக எழுதியபோதும், ஆசிரியர்கள் மதிப்பெண்ணை குறைத்து வழங்குகின்றனர் என சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் தேர்வில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு இதுதான் பதில் என அறுதியிட்டு கூறிவிட முடியும். ஆனால், சட்டப் படிப்பை பொறுத்தவரை, கேள்விக்கு இதுதான் பதில் என உறுதியாக கூற முடியாது. இதன் காரணமாகவே, விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கேள்வித் தாளை தயாரிக்கும் ஆசிரியரே, அந்தக் கேள்விகளுக்கான விடைகளையும் தனியே தயாரித்து தர வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.இந்த விடைகள் அனைத்தும், தேர்வு முடிந்த ஒருசில நிமிஷங்களில், பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். 

                              இதன் மூலம் தாங்கள் தேர்வு எவ்வாறு எழுதியுள்ளோம், எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதையும் மாணவர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும்.விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும், கேள்விக்கான பதில் இதுதான் என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் குளறுபடிகள் முற்றிலுமாக களையப்படும்.இந்தத் திட்டம் அடுத்த பருவத் தேர்வு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

Read more »

அண்ணா பிறந்த நாள்: கடலூரில் 4 சிறைக் கைதிகள் விடுதலை

கடலூர்:

               அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசு உத்தரவின் பேரில், கடலூர் மத்திய சிறையில் இருந்து புதன்கிழமை விடுதலையான 4 பேரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

                   கடலூர் மத்திய சிறையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேவராயன் (71), நாகை மாவட்டம் வேதாரண்யம் முருகையா (78), அதே ஊர் சுப்பிரமணியன் (75), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கிரிசாமி (88) ஆகியோர் புதன்கிழமை காலை 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.சிறையில் இருந்து வெளியான இவர்கள் சிறைச் சாலைக்கு வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினர். 4 பேரும் கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். 

கடலூர் மத்திய சிறையில் இருந்து கடலூர் மத்திய சிறையில் இருந்து அவர்கள்  கூறுகையில், 

                      விடுதலை செய்யப்பட்டதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.தங்களுடன் தண்டனை பெற்ற தங்கள் மகன்கள் மற்றும் உறவினர்களும் சிறையில் உள்ளனர். அவர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

Read more »

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து 20 முதல் ஸ்டிரைக்

நெய்வேலி:

                   என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், செப்டம்பர் 20-ம் தேதி இரவுப் பணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

                    சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் என்எல்சி நிர்வாகத்திடம் ஆகஸ்ட் 19-ல் வேலைநிறுத்தக் கடிதம் அளிக்கப்பட்டது.இதையடுத்து இம்மாதம் 2-ம் தேதி புதுச்சேரியில் உதவி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதைத்தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் முடிவுசெய்து, அதுபற்றி விவாதிக்க சங்க பேரவைக் கூட்டத்தை செப்டம்பர் 14-ல் நெய்வேலி வட்டம் 24-ல் உள்ள ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் கூட்டியது.

                          இக் கூட்டத்தில், "புதுச்சேரியில் உதவித் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் வியாழக்கிழமை (செப். 16) நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்றும், பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்தால் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது' எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார்.

Read more »

சிதம்பரம் அருகே வாய்க்காலில் டவுன் பஸ் கவிழ்ந்து 28 பேர் படுகாயம்

சிதம்பரம்:

                           சிதம்பரம் அருகே கீழ்நத்தம் கிராமத்தில் புதன்கிழமை அரசு டவுன் பஸ் ஒன்று வாய்க்காலில் கவிழ்ந்து 2 பள்ளி மாணவியர்கள் உள்ளிட்ட 28 பேர் படுகாயமடைந்தனர் சேத்தியாத்தோப்பிலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ் கீழ்நத்தம் கிராமம் அருகே வந்த போது அச்சு முறிந்து தறிகெட்டு ஓடி அருகில் உள்ள கருங்காலி வாய்க்காலில் கவிழ்ந்தது.இவ்விபத்தில் நடத்துநர் குழந்தைவேல் (38), பள்ளி மாணவிகள் பிரேமா (17), ஆர்த்தி (13) ஆகிய இருவர் உள்ளிட்ட 28 பேர் படுகாயமடைந்தனர்.

                      தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் அ.ராமராஜூ, வட்டாட்சியர் எம்.காமராஜ் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்குச் சென்று பஸ்ஸிலிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Read more »

கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 2010-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் புதன்கிழமை வெளியிட்டார்.

                    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் சுருக்கமுறைத் திருத்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 1-7-2010 அன்று வெளியிடப்பட்டது. 1-7-2010 முதல் 26-7-2010 வரை பொதுமக்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுமாறும், பெயர் விடுபட்டு இருந்தால் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தலுக்காக 1,07,151 விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் விசாரணை அடிப்படையில் 91,126 பேருடைய மனுக்கள் தகுதி உள்ளவைகள் எனக் கண்டறியப்பட்டு, பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம்:

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மே 2010-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் செப்டம்பர் 14-ம் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ணையதள முகவரிகள்:

http://annamalaiuniversity.ac.in/results/index.htm,

              ஸ்ரீர்ம்.வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: 04144- 237356, 237357, 237357, 237358, 237359.மொபைல் போனில் டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள பாடங்கள்: 

                    எம்.ஏ.- எக்னாமிக்ஸ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன்,  பொலிட்டிகல் சயன்ஸ், இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், சோசியல் வெல்ஃபேர் அட்மினிஸ்டிரேஷன், ஹியூமன் ரைட்ஸ், விலங்கியல், பயோ இன்பர்மேட்டிக்ஸ், எம்.காம்., எம்.காம் - கோ-ஆபரேட்டிவ் மேனேஜ்மெண்ட், எஜுகேஷன் மேனேஜ்மெண்ட், எம்.ஃபில் - ஆங்கிலம், வரலாறு, காமர்ஸ், அப்ளைடு ஜியாலஜி, விலங்கியல், தமிழ், லிங்கிஸ்டிக்ஸ், சைக்காலஜி மறறும் பிஜி டிப்ளமா இன் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், இங்கிலிஷ் லேங்க்வேஜ் டீச்சிங், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், டிப்ளமோ இன் பிரஷ் வாட்டர் பிஷ் கல்சர் மற்றும் சாயில் எக்காலாஜி, எர்த் வார்ம் கல்சர் கம்போஸிங் சான்றிதழ் வகுப்புகள்.

Read more »

கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்க அமைச்சர்கள் ஆய்வு

கடலூர்:

               கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்குவது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர் கண்ணைக் கவரும் இயற்கைச் சூழலும், தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில் , திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில், விலங்கல்பட்டு முருகன்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களும் அமையப் பெற்றது, திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியாகும். 

                           கெடிலம் ஆறு தேவநாதசுவாமி கோயில் அருகே வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுவது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இக்கேôரிக்கையை வலியுறுத்தி, கடலூர் அனைத்து நகர் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பு மனிதச்சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட திருமணங்களும், அதே நாளில் திருவந்திபுரம் திருமண மண்டபங்களில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தன. இதனால் திருவந்திபுரம் பகுதியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. தேவநாதசுவாமி கோயிலுக்கு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் வந்து போகிறார்கள்.

                         எனவே திருவந்திபுரத்தை சுற்றுலாத்தலமாக்குவது குறித்தும், அங்கு விழாக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்தும், திருவந்திபுரம் சென்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.முதல் கட்டமாக திருவந்திபுரத்திலும், கேôயிலைச் சுற்றியும் ஆக்கிரமித்து கடை வைத்து இருப்பவர்களை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு வணிக வளôகம் ஒன்று கட்டிக் கெôடுக்கலாம் என்றும் அமைச்சர்கள் ஆலேôசனை தெரிவித்தனர்.சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்தும் சுற்றுலாத் தலமாக்குவது குறித்தும், தெôடர் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.இதில் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, நெடுஞ்சாலைத்துறை செயலர் சந்தானம் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நெடுஞ்சாலைப் பணிகள்:

அமைச்சர்கள் ஆய்வு

                           கடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பணிகளை செவ்வாய்க்கிழமை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக் கோவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.கடலூர் மாவட்டத்தில் 2010-11-ம் ஆண்டில் 731.49 கி.மீ. நீளச் சாலைகள்  580 கோடியிலும், 34 பாலங்கள்  244.47 கேôடியிலும் நடைபெற்று வருவதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் சேவை வளாகத்தில் நடந்த இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ரவிக்குமார், நகராட்சித் தலைவர்கள் து.தங்கராசு (கடலூர்), பச்சையப்பன் (பண்ருட்டி) உள்ளிட்டேôர் கலந்து கொண்டனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

                    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொல்கத்தா ஒரியன் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்துடன் பட்டய வாணிப நடைமுறையில் புறதெôழில் மேலாண்மை என்ற படிப்பை வரும் நடப்பு கல்வியாண்டு முதல் வழங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது 

                        பல்கலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஒரியன் கல்வி நிறுவனத் தலைவர் மனிஷ்அகர்வால் ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் தெரிவித்தது: வாணிப நடைமுறையில் புறஅண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழிற்சாலைகள் வளமான மற்றும் முழுமையான வளர்ச்சி கொண்ட தொழிற்சாலைகளும். இதுபோன்று முதன்மை தொழில் நிறுவனங்கள் தங்களது பிரதி அலுவலகங்களை புறதெôழில் பின்னணியில் இந்தியாவில் வழங்கி வருவதால் அதிக செலவுகள் சேமிக்கப்படுகின்றன. தெôழிற்சாலைகளின் இத்தகைய வேலைவாய்ப்பை பெறும் நேôக்கை கருத்தில் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்த கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என எம்.ராமநாதன் தெரிவித்தார். தெôலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், ஒரியன் கல்வி நிறுவன மண்டல மேலாளர் ராஜ்கேôத்தாரி, சென்னை ஹெச்.எம்.ஹெச் கல்வி நிறுவன இயக்குநர் கஜாலி உள்ளிட்டேôர் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior