உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 23, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் இலவச மருத்துவ முகாம்

கடலூர்:
 
             தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம், பாலூர், வழிசோதனைப் பாளையம், காடாம்புலியூர் ஆகிய இடங்களில்  நேற்று  மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.  

            தூக்கணாம் பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார். மருத்துவ முகாகை பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்து பேசினார். 
 
பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியது:-
 
        ரூ.15 லட்சம் செலவில் நடத்தப்படும் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புயலால் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்ட நிலையில் பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.    மேலும் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு தென்னை, பலா, முந்திரி கன்றுகளை வழங்கவும் உள்ளோம். புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பார்வையிட வேண்டும். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு நிவாரண உதவியை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

              நிகழ்ச்சியில் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில துணை பொது செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் சண்முகம், புதுவை மாநில செயலாளர் அனந்தராமன், சமூக முன்னேற்ற சங்க மாநில பொது செயலாளர் பேராசியரிர் சிவப்பிரகாசம், நகர செயலாளர் போஸ்.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை

           நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மக்கள் தொகை கணக்கெப்பு துறை செய்து வருகிறது. 

              தமிழ்நாட்டில் முதல்கட்டமாக கடலோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இருப்பிட அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 829 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 11.7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சம் பேர் உள்ளனர். இப்போது அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.   இந்த அடையாள அட்டையில் பெயர், பாலினம், தாய்-தந்தை பெயர், பிறந்த தேதி, தாலுகா, மாவட்டம்,

           அடையாள அட்டை எண் ஆகிய விபரங்கள் இடம் பெற்று இருக்கும். உறுப்பினர் பெயரும், தாய், தந்தை பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். மற்ற விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.  ஸ்மார்ட் கார்டு போன்ற இந்த கார்ட்டில் உறுப்பினர் பெயர் தொழில், விரல்ரேகை உள்ளிட்ட முழு குடும்ப விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.   இந்த அடையாள அட்டை வழங்கும் பணியை நாளை (23-ந் தேதி) காஞ்சீபுரம் மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்.

           6 லட்சம் பேருக்கும் அடையாள அட்டைகள் தபாலில் அனுப்பப்படும். 2 மாதத்துக்குள் அனைவருக்கும் கிடைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.    தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் திருச்சி, கடலூர், அரியலூர் உள்பட 4 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான புகைப்படம் எடுத்தல், விரல்ரேகை, விழி படலம் பதிவு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.  இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.12 கோடி. இதில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 1/2 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior