உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 10, 2013

பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் விபரம்

கடலூர்

நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

கடலூர் மாணவன் சாதனை

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவன் கிரிதரன் 1200–க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:– தமிழ்– 192, ஆங்கிலம் – 192, இயற்பியல்– 197, வேதியியல்– 198, கணிதம்– 200, கணினி அறிவியல்– 200, மொத்த மதிப்பெண்கள்– 1180.

மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிரிதரன் கூறுகையில், 

நான் கடலூர்  கூத்தப்பாக்கம் அண்ணாநகரில் வசித்து வருகிறேன். எனது தந்தை ரகுராமன், தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். தாய் ஜெயஸ்ரீ. எல்.ஐ.சி.யில் வேலை செய்கிறார். நான் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். அதன்படி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து விட்டேன். வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பேன். ஆனால் தேர்வு நேரத்தில் தொலைக்காட்சியை பார்ப்பதை தவிர்த்து விட்டேன். இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன். தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம்.

நான் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு என்னுடைய பெற்றோர், சகோதரர், ஆசிரியர்கள் ஊக்குவித்தனர். அடுத்ததாக என்ஜினீயரிங் படிக்க ஆசை. சிவில் அல்லது மெக்கானிக் என்ஜினீயரிங் படிப்பேன் என்றார். முன்னதாக முதலிடம் பிடித்த மாணவன் கிரிதரனை பள்ளி முதல்வர் ராஜயோககுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாவட்டத்தில் 2–வது இடம்

பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.லாவண்யா 1200–க்கு 1178 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் 2–ம் இடத்தை பிடித்துள்ளார். பாடம் வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம் வருமாறு:– தமிழ்– 193, ஆங்கிலம்–192, கணிதம்–199, வேதியியல்–200, உயிரியல் –200, இயற்பியல்–194. லாவண்யாவின் பெற்றோர் திருவேங்கடம்– சுதா. 

இது பற்றி மாணவி லாவண்யா கூறுகையில், 

நான் மாவட்ட அளவில் முதலிடம் பெறவேண்டும் என்கிற எண்ணத்துடன் படித்து வந்தேன். எனது வெற்றிக்கு பெற்றோர், ஆசிரியர்கள் தான் காரணம். இதற்காக நான் பள்ளிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரவு 11 மணி வரை பாடங்களை படிப்பேன். டி.வி.யில் செய்தி மட்டுமே பார்ப்பேன். சினிமா படங்களை பார்க்க மாட்டேன். நான் டாக்டராகி ஏழை மக்களுக்காக சேவை செய்வேன் என்றார்.

சிதம்பரம் மாணவி

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி அபிநயா 1176 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3–ம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி அபிநயா பாடம் வாரியாக எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:–

தமிழ்–191, ஆங்கிலம் –192, கணிதம் – 197, இயற்பியல்–196, வேதியியல் – 200, உயிரியல்–200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அபிநயாவை பள்ளி தலைமை ஆசிரியை சக்தி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.

ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்

இது பற்றி மாணவி அபிநயா நிருபர்களிடம் கூறுகையில், 

எனது தந்தை தனசேகர். கடலூர் வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். தாய் சுந்தரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நான் 10–ம் வகுப்பு பொது தேர்வில் 489 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன். அன்று முதல் பிளஸ்–2 தேர்வில் மாநில அளவில் இடம்பிடிக்க திட்டமிட்டு படிக்க தொடங்கினேன். ஆனால், என்னால் மாவட்டத்தில் 3–ம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இது எனக்கு வருத்தமாக இருந்தாலும், என்னுடைய ஆசையான மருத்துவப்படிப்பிற்குரிய கட்–ஆப் மார்க் கிடைத்துள்ளதால் சந்தோஷமாக உள்ளேன். கடினமாக படித்ததால் இவ்வளவு மதிப்பெண் பெறமுடிந்தது. நான் பெரும்பாலும் இரவு நேரத்தில் மட்டுமே படிப்பேன். வீட்டில் டி.வி. பார்க்காமல் எனது பெற்றோர் கூறியபடி படித்து அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளேன். நான் மருத்துவ பிரிவில் இருதய டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்

Read more »

கடலூர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று முதலிடம்

கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

பாடவாரியாக மதிப்பெண் விவரம் 

தமிழ் 192, 
ஆங்கிலம் 192, 
இயற்பியல் 197, 
வேதியியல் 199, 
கணிதம் 200, 
கணிப்பொறி அறிவியல் 200. 

இவரது தந்தை ரகுராமன், வங்கிப் பணியாளர். தாய் ஜெயஸ்ரீ, எல்.ஐ.சி. ஊழியர்.
முதலிடம் பிடித்த மாணவரை முதல்வர் ராஜயோககுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். சிவில் என்ஜீனியரிங் படிக்க விரும்புவதாக பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் தெரிவித்தார்.

Read more »

புதன், மே 08, 2013

கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 3,731 போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு

  கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அரசு உத்தரவு

தமிழகத்தில் போலி ரேசன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ரேசன்கார்டுக்கும் உணவுப்பொருள் மானியமாக ஆண்டுக்கு 2 ஆயிரத்து 880 ரூபாயை அரசு வழங்குகிறது.

இதுதவிர விலையில்லா பொருட்கள், மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் என பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. இதனால் போலி ரேசன்கார்டுகளால் அரசின் பணம் வீணடிக்கப்படுவதால், அனைத்து மாவட்டங்களிலும் புழக்கத்தில் உள்ள போலி ரேசன்கார்டுகளை கண்டறிந்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

போலிகார்டுகள் கண்டுபிடிப்பு

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலி ரேசன் கார்டுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன் கார்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சிதம்பரம் தாலுகாவில் அதிகபட்சமாக 902 போலி ரேசன்கார்டுகளை வட்டவழங்கல்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து, அரசுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை தடுத்துள்ளனர். இது தவிர விருத்தாச்சலம் தாலுகாவில் 593 போலி ரேசன்கார்டுகளும், திட்டக்குடி தாலுகாவில் 534 போலி ரேசன்கார்டுகளும், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 493 போலி ரேசன்கார்டுகளும், கடலூர் தாலுகாவில் 332 போலி ரேசன்கார்டுகளும், பண்ருட்டி தாலுகாவில் 306 போலி ரேசன்கார்டுகளும், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் 241 போலி ரேசன்கார்டுகளும், பறக்கும் படை தாசில்தாரால் 329 போலி ரேசன்கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

60 நாட்கள் கால அவகாசம்

இந்த கார்டுகளுக்கான உணவு பொருட்கள் ஒதுக்கீட்டை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதில் உண்மையான கார்டுகள் ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்குள் மேல்முறையீடு செய்யாதவர்களின் கார்டுகளை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேல் முறையீடு செய்பவர்களின் கார்டுகளை மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி அல்லது தகுதியின்மைக்கு தக்கவாறு உரிய உத்தரவுகள் பிறப்பிப்பார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior