சிதம்பரம்,நவ.11: ரூ.6 கோடியில் சேத்தியாத்தோப்பு பாழ்வாய்க்காலில் புதிய ரெகுலேட்டர் அமைக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 382.13 மி.மீ. மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 34.6 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகளவாக ஞாயிற்றுக்கிழமை 108.54 மி.மீ. மழை பெய்துள்ளது. சிதம்பரம்,...