உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

தமிழக மின்வாரியம் 3-ஆக பிரிப்பு: இன்றுமுதல் அமலுக்கு வருகிறது

                தமிழக மின்வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டதற்கான அரசாணை, திங்கள்கிழமை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வருகிறது.  மின்சாரச் சட்டம் 2003-ன் படி மின்வாரியச் சீர்திருத்தத்தினை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. 
                
                 அதன்படி 53 ஆண்டு கால தமிழ்நாடு மின்சார வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அக்டோபர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது.  தமிழ்நாடு மின்வாரிய லிமிடெட், துணை உடைமை நிறுவனங்களாக தமிழ்நாடு மின்வாரிய மின் தொடரமைப்புக் கழகம் (டேன்டிரான்ஸ்கோ); தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் (டேன்ஜெட்கோ) என மின்சார வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

                  இவர்களில் டேன்டிரான்ஸ்கோவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம் செய்யப்படுவர். இதர ஊழியர்கள் டேன்ஜெட்கோவிலேயே தொடர்ந்து பணியாற்றுவர் என தெரிகிறது.  அரசாணையைத் தொடர்ந்து, தமிழக மின்வாரியத்தின் சொத்துகள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனி வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும்.  இனி ஊழியர்கள் எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்களோ, அந்த நிறுவனம் சார்பில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

                  ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அரசே வழங்க வேண்டும் என்று மின்வாரியத் தொழிற்சங்கங்கள் அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  

தாற்காலிக மாறுதல் திட்டம்: 

                  இதன்படி பணியாளர்கள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு "தாற்காலிக மாறுதல் திட்டத்தின்' மூலமாக நவம்பர் 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவர்.  கண்டனக் கூட்டம்: இந்த நிலையில், மின்வாரியம் 3-ஆக பிரிக்கப்பட்டதற்கான அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு மின்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன நுழைவு வாயில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.  சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பும் கண்டன கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட உள்ளது.

Read more »

சிதம்பரத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

சிதம்பரம்:

                தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நகரப் போக்குவரத்து காவல்துறை, சுப்ரீம் அரிமா சங்கம் ஆகியன இணைந்து பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை சனிக்கிழமை வழங்கியது. 

                    இந்நிகழ்ச்சியை சிதம்பரம் மேலரத வீதியில் டிஎஸ்பி ச.சிவநேசன் முதல் துண்டுப்பிரசுரத்தை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் எஸ்.கார்த்திகேயன் (சட்டம்-ஒழுங்கு), எம்.கண்ணபிரான் (போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், ஆனந்தஜோதி, சுப்ரீம் அரிமா சங்கத் தலைவர் கே.நடராஜன், மாவட்டத் தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read more »

மாணவர்களுக்கான அபாகஸ் மற்றும் மூளைத் திறன் போட்டி

சிதம்பரம்:
 
                 சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சென்னை விஸ்டா அகாதெமி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் விஸ்டா ஜீனியஸ்-2010  என்கிற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அபாகஸ் கணிதப்போட்டி மற்றும் மூளைத் திறன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
 
                 போட்டியை சிதம்பரம் டிஎஸ்பி ச.சிவனேசன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். 
 
சாம்பியன் பட்டம் பெற்ற 7 மாணவ, மாணவியர்கள் விவரம்: 
 
                  3-ம் வகுப்பு- வி.சக்திவேல் (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 4-ம் வகுப்பு- வி.காயத்திரி (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 5-ம் வகுப்பு- வி.புவனேஸ்வரி (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 6-ம் வகுப்பு- எஸ்.கௌதம்குமார் (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 7-ம் வகுப்பு டி.அக்ûக்ஷ (காமராஜ் பள்ளி, சிதம்பரம்), 8-ம் வகுப்பு- எஸ்.யோகேஸ்வரன் (காமராஜ் சிறப்பு பள்ளி), 9-ம் வகுப்பு - ஆர்.அரவிந்த் (செயின்ட் பிரான்சிஸ் பள்ளி, பாடலூர், பெரம்பலூர் மாவட்டம்).
 
                       மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, விஸ்டா அகாதெமி நிறுவன நிர்வாக இயக்குநர் தினேஷ்விக்டர் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின் எம்.கோட்னீஸ், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். பள்ளித் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் வாழ்த்தினார். விழாவில் காமராஜ் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் எஸ்.மீனாட்சி, ஜி.சக்தி, துணைமுதல்வர் ஜி.ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை அபாகஸ் தலைமை நிர்வாகி மலர்விழி, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் தயாபரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Read more »

இடமின்றி அவதியுறும் கீழ்காவனூர் அங்கன்வாடி குழந்தைகள்

பண்ருட்டி:

                    அங்கன்வாடி மையத்துக்கென தனிக் கட்டடம் இல்லாததால் கீழ்காவனூர் அங்கன்வாடிக் குழந்தைகள் சிறிய ஊராட்சி அலுவலக அறையில் இடநெருக்கடியில் படித்து வருகின்றனர்.

                   பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தைச் சேர்ந்தது கீழ்காவனூர். இக்கிராம மக்கள் குழந்தைகளின் நலன்கருதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் இதுநாள் வரை இந்த அங்கன்வாடி மையத்துக்கு கட்டட வசதி செய்துக் கொடுக்கவில்லை. இதனால் பலபேர் வீட்டு திண்ணையில் நடந்து வந்த அங்கன்வாடி மையம் தற்போது ஊராட்சி அலுவலக அறையில் செயல்பட்டு வருகிறது.

                     மிக சிறிய அறையில் நடக்கும் இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மணல் குவாரிக்கு வரும் லாரிகள் அதிக அளவு அங்கன்வாடி மையம் உள்ள இடத்தை சூழ்ந்து உள்ளதால் பாதுகாப்பு கருதி மையத்தினுள் மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் கூறினர்.

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வியில் புதிய படிப்புகள்



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டுள்ள டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிஸஸ் என்ற படிப்பை அறிமுகம் சேய்தார்


சிதம்பரம்:

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வாயிலாக 2010-11-ம் ஆண்டுக்கான புதிய படிப்புகளான டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிஸிஸ் என்ற படிப்புகளை சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியது: 

                    பப்ளிஷிங் டிஜிட்டல் புத்தகங்களின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியினால் டிஜிட்டல் நூலகங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது.இத்தகைய டிஜிட்டல் புத்தகங்கள் படிப்படியாக நூலகங்களில் அமையப் பெறும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்துப் பேசுகையில்,

                   "சென்னையில் உள்ள டிஜிஸ் கேப் கேலரி மற்றும் பிலாய் நிறுவனமான ஸ்டைல்ஸ் அகாதெமி ஆகியவற்றுடன் இணைந்து கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பி.எஸ்சி. டிஜிட்டல் பப்ளிஷிங் மற்றும் செக்யூரிட்டி அனாலிஸிஸ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்' என துணைவேந்தர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், ஹெச்.எம்.ஹெச். நிறுவன மேலாண்மை இயக்குநர் கசாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்: பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம்:

               காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழணை பாலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படாததாலும், ஒழுங்குப்படுத்தப்படாததாலும் தினமும் பாலத்தில் இருபுறமும் வரும் வாகனங்கள் சிக்கி நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

                   நாகை, தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை கட்டப்பட்டது. தற்போது அப்பாலம் சேதமுற்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்பாலத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பாலத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அனைத்து பஸ்களும் சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக கும்பகோணம் சென்று வருகிறது.

                 இந்த பாலம் சேதமுற்றதால் நாகை மற்றும் அரியலூர், கடலூர் மாவட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புதிய பாலம் அமைக்க தமிழக முதல்வர்  70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது |621 லட்சம் செலவில் பாலத்தை தாற்காலிகமாக சீரமைத்து பஸ்களை ஒரு வழிப்பாதையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாலத்தில் பணி நடைபெற்று வரும் வேளையில் பாலத்தில் இருபுறமும் வாகனங்கள் இயக்கப்படுவதால் சீரமைக்கும் பணி மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

                  பாலத்தில் தினந்தோறும் இருபுறமும் வாகனங்கள் சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் பாலத்தை கடக்க 1 மணி நேரம் ஆகிறது. பாலம் சீரமைக்கும் பணி முடியும் வரை பாலத்தின் இருபுறமும் ஒரே நேரத்தில் வாகனங்கள் இயக்காமல் இருக்க காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் கூறியது 

                       "பாலம் சீரமைக்கும் பணி தொடர்பாக நவம்பர் 7-ம் தேதி முதல் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும்' என தெரிவித்தார்.

Read more »

கப்பலில் சிக்கி வலைகள் சேதம் கடலூரில் மீனவர்கள் முற்றுகை

கடலூர் : 

                  கடலூரில் மீனவர்கள் விரித்திருந்த வலை கப்பலில் சிக்கி சேதமடைந்ததால், முற்றுகை போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வஞ்சரம் மீன் பிடிப்பதற்காக, 50 "எப்.ஆர்.பி' ரக விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். 

                 இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலையை வீசி காத்திருந்தனர். கடலில் வலை விரித்திருப்பதை தெரிவிக்கும் வகையில், விசைப்படகுகளில் சிவப்பு சுழல் விளக்குகளை எரிய விட்டிருந்தனர். இந்நிலையில் மாலை 6.45 மணிக்கு, கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் இயங்கி வரும் கெம்ப்பிளாஸ்ட் கம்பெனிக்கு 6,000 டன் எடை கொண்ட, "வினைல் குளோரோ மோனமார்' (வி.சி.எம்.,) ரசாயன பொருளுடன் ஜப்பான் நாட்டிலிருந்து சிங்கப்பூர் கப்பல் வந்தது.

                       வலை விரித்த பகுதிக்கு கப்பல் வருவதைக் கண்டு திடுக்கிட்ட மீனவர்கள், "டார்ச்' லைட்டால் சிக்னல் கொடுத்தனர். அதற்குள் கப்பல், வலைகளை அறுத்துக் கொண்டு கடலூர் துறைமுகத்திற்குச் சென்றது. தேவனாம்பட்டினம் ராஜேஷ்(30), தமிழ்ச்செல்வன்(31), ராமையா(60), தனசு (30), சக்கரவர்த்தி(35), மதி(30), திருஞானம்(35), சோனங்குப்பம் சாரங்கன்(62), பாஸ்கர்(43) வலைகள் சேதமடைந்தன. 

                          கப்பலில் வலை சிக்கி இழுத்துச் சென்றதில், படகில் இருந்து விழுந்த பாஸ்கர் என்பவர் முகத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ஒன்பது படகுகளில் இருந்து கரைக்குத் திரும்பிய 30 மீனவர்களும், அறுந்த வலைகளுடன் இழப்பீடு கோரி கப்பலை மறிக்க, சித்திரைப்பேட்டையில் உள்ள "ஜெட்டி' பகுதிக்குச் சென்றனர். அங்கு கெம்ப்பிளாஸ்ட் கம்பெனியின் பாதுகாவலர்கள் அவர்களை  தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பரபரப்பு நிலவியது.

                           தகவலறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் கோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, நெடுமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கப்பல் ஏஜன்சி உரிமையாளர் மற்றும் கம்பெனி நிர்வாகத்தினரிடம் பேசி இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து கம்பெனி அதிகாரிகள், கப்பல் ஏஜன்சி ஊழியர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் மீனவர்களுக்கிடையே கடலூர் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சு வார்த்தை நடந்தது. 

                           மாலை 3 மணிக்கு மேலாகியும் சுமூக முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில், சேதமடைந்த வலைகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவில்லையெனில், நாளை (இன்று) காலை 100 விசைப்படகுகளில் சென்று கப்பலை மறிக்கப் போவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Read more »

கடலூரில் மினி பஸ்கள் இயங்காததால் மாணவ, மாணவிகள் அவதி

கடலூர் : 

               ஒரு வாரமாக மினி பஸ் இயங்கதாதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடலூரில் இருந்து டி.புதுப்பாளையத்திற்கு ஐந்து மினி பஸ்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

                    ஆனால் மூன்று மினி பஸ்கள் மட்டுமே இயங்கின. இதனால் டி.புதுப்பாளையம், வண்டிக்குப்பம், மாவடிப்பாளையம், டி.புதூர், எம்.புதூர், புதுநகர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் பயனடைந்தனர்.இந்நிலையில்  இரண்டு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு இரண்டு மாதங் களாக ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டது.

                      இதனால் டி.புதுப்பாளையம், மாவடிப்பாளையம், எம்.புதூர் உட்பட ஏழு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். தற்போது மாணவ, மாணவிகள் இரண்டு கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறி பள்ளிக் குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Read more »

பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டையில் மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசிய கடல் தகவல்கள் சேவை மையம் இணைந்து கடல் தகவல்கள் சேவைகளை மீனவர்களுக்கு அளித்து வருகிறது. 

                   கடலூர் மாவட்டத்தில் சாமியார்பேட்டை, பரங்கிப் பேட்டை, மற்றும் முடசல் ஓடை ஆகிய மீனவ கிராமங்களில் இந்திய தேசிய கடல் தகவல்கள் அளிக்கக் கூடிய மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு தகவல் பலகை மூலம் கிடைக் ககூடிய தகவல் குறித்து நேற்று பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு டாடா சமுதாய கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

                      பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் செழியன் தலைமை தாங்கினார். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் திட்ட அலுவலர் இளங்கோவன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி திட்டம் பற்றி விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் சரவணக்குமார், கோபாலகிருஷ்ணன், வீரராஜ், கிராம தலைவர் பரமசிவம் பங்கேற்றனர்.

Read more »

Monsoon preparedness under way at Cuddalore District

Collector P. Seetharaman addressing officials at the meeting in Cuddalore 
 
CUDDALORE: 

              Even as northeast monsoon is getting vigorous over the coastal district of Cuddalore, the administrative machinery has been geared up for flood management.

               Addressing a disaster management review meeting held here on Saturday, Collector P. Seetharaman directed officials to keep open 21 cyclone shelters in the coastal areas and also stack them with essential supplies and drinking water. The officials were instructed to create awareness among those people living in the low-level areas about the possible flood threats and keep them on alert to move to places of safety at short notice.

               Public Works Department officials were asked to keep sand bags and casuarina logs ready at 16 highly vulnerable places to plug any breach in water sources. As many as 272 road workers of the Highways Department had been deployed to attend to any exigency such as clearing uprooted trees that might block road traffic. Mr. Seetharaman said that fire and rescue personnel were kept ready. The Health Department was prepared to deal with the outbreak of any water-borne disease. Arrangements were also put in place to bale out stagnant rainwater.

                  A flood control room set up at the Collectorate would function round the clock and rain-related information could be obtained over toll free telephone number 1077. The Collector called upon the people to avoid seeking shelter under any single tree or cluster of trees during rain. Superintendent of Police Ashwin Kotnis, District Revenue Officer S. Natarajan, Revenue Divisional Officers K. Murugesan, V. Murugesan and Ramaraj, PWD Executive Engineers Manoharan and Palanikumar, Joint Director (Health) Kamalakannan, Deputy Director (Health) R.Meera, and Highways Regional Engineer Venkatesan were present at the meeting.

Rainfall details
          
                Annamalai Nagar – 56 mm, Parangipettai – 52 mm, Kothavacheri – 35 mm, Vanamadevi – 33.2 mm, Cuddalore – 32.4 mm, Chidambaram – 29 mm, Bhuvanagiri – 24.5 mm, Panruti – 23 mm, Sri Mushnam – 20 mm, Sethiathope – 19.5 mm, Kattumannarkoil – 19 mm, Lalpet – 18 mm and Vriddhachalam – 13.3 mm.

Read more »

Crops drying yard promised

CUDDALORE: 

               Collector P. Seetharaman has promised to set up an agricultural crops drying yard for farmers of Aviyanur in Panruti block. He gave this assurance while attending a mass contact programme there recently. The Collector received 232 petitions on the occasion and gave away financial assistance of Rs. 19.67 lakh to 217 beneficiaries.

Read more »

Crocodile gives sleepless nights to Kadavacheri residents

CUDDALORE:

               A crocodile weighing about one tonne, spotted in Thamarai Kulam near Kadavacheri in Kattumannarkoil block, remains elusive.

              For the past three days, Forest Department officials have been making frantic efforts to capture the reptile, but in vain. Forest Ranger V. Vijayan told The Hindu that the crocodile had made the tank, spread over six acres, its habitat. The reptile had been in the habit of making forays into the nearby areas during nights, preying upon goats and chicken.

               Residents panicked and sought the help of the Forest Department to capture the crocodile, and the search started on Friday. So far, the crocodile has damaged 15 fishing nets spread out to capture it. On Sunday, the officials hired a boat from Paringipettai fishermen and took on board dozens of fishermen to look for the crocodile. Since, it used to hide in the slushy part of the tank, it was difficult to locate it, Mr. Vijayan said. It had been decided to burst crackers near the water source on Monday to scare the reptile to come out of the tank.

              The Forest Department had distributed handbills to the people residing near waterbodies cautioning them not to venture out during nights. They should not allow cattle to stray near water sources nor dispose any carcasses in the water.

Read more »

TAMBRAS for caste-based census

CUDDALORE: 

              The Tamil Nadu Brahmins' Association has expressed its support to caste-based census and directed its members to extend full cooperation to officials in this exercise, according to N. Narayanan, State president of the association.

               He was speaking at “Mupperum Vizha” held at Vriddhachalam on Sunday. Mr. Narayanan felicitated K. Thirumalai, president of the Manjakuppam branch of the association, for social services done by him over a period of time. The association also felicitated V. Arunachalam, president of the Vriddhachalam branch, and centenarian Balarama Sastri.

Read more »

Sensitisation programme for Cuddalore district fishermen

CUDDALORE: 

           Fishermen of Cuddalore district are being sensitised to the kind of cooperation to be extended to Coast Guard personnel for ensuring coastal security and tracking strangers who might stray into their habitations.

                These aspects were discussed with fishermen by resource persons of M.S. Swaminathan Research Foundation at a meeting held at the Parangipettai Village Knowledge Centre near here recently. Project officer of the centre R. Ilangovan told The Hindu that the resource persons shared with fishermen the details provided by the Indian National Centre for Ocean Information Service, on height of the waves, weather report, places where fish shoals were occurring and other marine related aspects.

                  Traditional fishing practices and the use of modern technology too were discussed. Fishermen from places such as Parangipettai, Killai, Mudasal Odai, M.G.R. Nagar, Muzhukkuthurai, Periyakuppam, Annappanpettai, Samiyarpettai, C. Pudhupettai, Sinnur, Madhakoil and Thirumullaivasal.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior