உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்


ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் திருமண மாலையை தண்ணீரில் விடும் புதுமணத் தம்பதி. நாள்: புதன்கிழமை.
சிதம்பரம்:

          ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரித் தாயை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் வல்லம்படுகை அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் புதன்கிழமை குவிந்தனர்.  

               காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் புதன்கிழமை, சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்துடன் வந்து காவிரி அன்னையை வழிபட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.   ஓடும் ஆற்று நீரில் திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வச் செழிப்போடும், புதுமணத் தம்பதிகள் வளத்தோடும் இருப்பர் என்பது ஐதீகம். இதனால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை நீரில் விட்டு மங்கல நாணை பிரித்து, கோர்த்து காவிரி அன்னைக்கு படையல் வைத்து வணங்குவர்.  

                   திரளான மக்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். 






Read more »

நெய்வேலி மாணவியின் மேற்படிப்பிற்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை

 http://dinamani.com/Images/article/2011/8/4/3ehelp.jpg


நெய்வேலி:

           உயர்கல்வி பயில வாய்ப்புக் கிடைத்து, கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவியின் நிலைக் குறித்து தினமணியில் ஜூலை 14-ம் தேதி வெளியிட்ட செய்தியை பார்த்து, தினமணி வாசகர்கள் ரூ.50 ஆயிரம் உதவியாக வழங்கியுள்ளனர்.

               நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ட்ராஃப்ட்ஸ்மேன் பிரிவில் 1,131 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் 2-ம் இடம்பிடித்தவர் மாணவி ஆர்.அனிதா.தற்போது சென்னை ஜேப்பியார் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். மாணவியின் தந்தை பெயிண்ட் அடிக்கும் வேலை செய்துவரும் தொழிலாளி. மாணவியின் நிலை குறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து அவரது உயர்கல்விக்கு உதவ முன்வருபவர்கள், மாணவி பயின்ற என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தொலைபேசி வாயிலாக தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு உதவி செய்யலாம் என செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

           இச் செய்தியைப் படித்த பலர், மறுநாளே பள்ளித் தலைமை ஆசிரியையை தொடர்பு கொண்டு, பணம் எவ்வாறு அனுப்புவது, யார் பெயருக்கு அனுப்புவது என விவரம் கேட்டறிந்தனர். இதில் சில வெளிநாடு இந்தியர்களும் அடங்குவர். இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை விளக்கிய பின்னர், ஒவ்வொருவராக பள்ளியின் முகவரிக்கு காசோலைகளை அனுப்பினர், இவ்வாறு தினமணி செய்தியின் வாயிலாக கிடைத்த பணம் ரூ.50 ஆயிரத்து 500. இத் தொகையை மாணவி ஆர்.அனிதாவிடம், பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ். மணிமொழி புதன்கிழமை வழங்கினார்.

              தினமணி வாசகர்கள் வழங்கிய தொகையை தவிர்த்து,குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன் ரூ.5 ஆயிரமும், பள்ளித் தலைமை ஆசிரியை ரூ.15 ஆயிரமும் கூடுதலாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவியின் உயர்கல்விக்கு உதவிய தினமணி வாசகர்களுக்கும், தினமணி நாளிதழின் நிர்வாகத்துக்கும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இதுபோன்று உமா என்ற மாணவிக்கும் 2009-ம் ஆண்டு தினமணி நாளிதழ் உதவி புரிந்ததையும் தலைமை ஆசிரியை நினைவுகூர்ந்தார். 

நன்றி: 

               தினமணி நாளிதழ் வாயிலாக எனது கல்விக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இது என் வாழநாளில் மறக்க முடியாத ஒரு உதவி எனவும் ஆர்.அனிதா தெரிவித்தார்.


இந்த செய்தியை நாமும் வெளியிட்டோம்ல 

 ஜூலை 15ல்

நெய்வேலி மாணவியின் மேற்படிப்பிற்கு உதவுங்கள்

 

 

 

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரசாயன உரங்களின் விலை உயர்வு


கடலூர்:
 
             ரசாயன உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.  
 
                தமிழகத்தில் விவசாயப் பணிகள் பெரும்பாலும் ஆடிப் பட்டத்தில்தான் தொடங்குகின்றன. தென்மேற்குப் பருவழை பெய்து வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.  ஆடி மாதம் 18-ம் தேதிக்குப் பிறகு கரும்பு விதைக் கரணைகள் பதிப்பது, சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தொடங்க இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏனைய பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் நிலங்களில், சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தொடங்க இருக்கின்றன.  இந்நிலையில் ரசாயன உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.  
 
                   1-4-2010-க்குப் பிறகு மத்திய அரசு புதிய உரக் கொள்கையை அறிவித்தது. அதன் பிறகு யூரியா உரம் தவிர, ஏனைய உரங்களின் விலைகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டன.  உரத்துக்கான மானியம் ரூ.1 லட்சம் கோடி, உரத் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் யூரியை தவிர மற்ற ரசாயன உரங்களின் விலைகள், வாரம்தோறும் உயர்த்தப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். உர மூட்டைகளில் அச்சிட்டு இருக்கும் விலையைவிட கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வேளாண்துறை அறிவிக்கிறது. 
 
              6 மாதங்களுக்கு முன் டி.ஏ.பி. உரம், மூட்டை (50 கிலோ) ரூ. 480 ஆக இருந்தது, தற்போது ரூ. 610 முல் ரூ. 656 வரை விற்பனை செய்யப்படுகிறது.  பொட்டாஷ் உரம் மூட்டை ரூ. 260 ஆக இருந்தது, தற்போது ரூ. 312 ஆக மூட்டைகளில் அச்சிடப்பட்டு இருந்தும், ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொட்டாஷ் உரம் பெருமளவுக்கு தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 6 மாதங்களுக்கு முன் 17-17-17 கலப்பு உரம் மூட்டை ரூ. 450 ஆக இருந்தது, தற்போது ரூ. 550 ஆகவும், 20-20-13 கலப்பு உரம் மூட்டை ரூ. 355 ஆக இருந்தது தற்போது, ரூ.510 ஆகவும், சூப்பர் பாஸ்பேட் உரம் மூட்டை ரூ. 180 ஆக இருந்தது ரூ. 240 ஆகவும் உயர்ந்து விட்டது.  யூரியா தவிர மற்ற உரங்களில் விலைகள் வாரம் தோறும் உயர்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
 
              ஆகஸ்ட் முதல் வாரத்தில் சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற இருக்கும் நிலையில், உரங்களின் விலையேற்றம் விவசாயிகளை பெரிதும் கவலைக் கொள்ளச் செய்து உள்ளது.  ஆகஸ்ட் மாதத்துக்கு மேல், கடலூர் மாவட்ட சம்பா சாகுபடிக்கு மட்டும், குறைந்தபட்சம் டி.ஏ.பி. உரம் 3 லட்சம் மூட்டைகளும், யூரியா 1.5 லட்சம் மூட்டைகளும், பொட்டாஷ் உரம் 50 ஆயிரம் மூட்டைகளும் தேவைப்படும் என்று வேளாண் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
 
இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
 
          "யூரியா தவிர மற்ற ரசாயன உரங்களின் விலைகள், அரசின் கட்டுப்பாடு இல்லாததால், கடுமையாக உயர்ந்து வருகின்றன.வாரம்தோறும் விலைகள் அதிகரிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் உரங்களின் தேவை அதிகரிக்கும் நிலையில், விலைகள் மேலும் தாறுமாறாக உயரும் அபாயம் உள்ளது. பொட்டாஷ் உரம் பற்றாக்குறையாக இருப்பதால், மூட்டைகளில் அச்சிட்ட விலைகளை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.நெல், கரும்பு உள்ளிட்ட விளை பொருள்களுக்கு, ஆதார விலைகளை உயர்த்தாதபோது, உரங்களின் விலைகளை மட்டும் உயர்த்துவதில் நியாயமில்லை' என்றார். 
 
 பெண்ணாடம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், 
 
              "பொட்டாஷ் உரம் 45 நாள்களாகக் கிடைக்கவில்லை. தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்' என்றார். 
 
இது குறித்து வேளாண் அலுவலர் ஒருவர் கூறுகையில், 
 
               "யூரியா உரம் விலை மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற உரங்களின் விலைகள் மூட்டைகளில் அச்சிட்டதைவிடக் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆனால் உரங்களின் விலைகளை உர உற்பத்தி நிறுவனங்கள் வாரம் தோறும் உயர்த்துகின்றன. அதிக விலைக்கு விற்பதாகப் புகார் வந்து, நடவடிக்கை எடுக்கச் செல்வதற்குள், விலை உயர்ந்து விடுகிறது. இதனால் நடவடிக்கை எடுப்பதிலும் பெரிதும் குழப்பம் ஏற்படுகிறது' என்றார்.
 
 
 
 

Read more »

சுய வேலை வாய்ப்பு: வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருள்கள்

கடலூர்: 

               வாழை மரங்களில் குலைகள் வெட்டிய பின், வாழை மட்டைகளை குப்பையாகக் கருதப்பட்டு வந்த காலம் ஒன்று.  

            ஆனால் குப்பையாக்கப்படும் அந்த வாழை மட்டைகளை மூலப் பொருளாகக் கொண்டு, சிறந்த வருவாய் ஈட்டும் சிறு தொழிற்சாலையையே நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறது வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை.  தமிழகத்தில் சுமார் 2.80 லட்சம் ஏக்கரில், வாழை மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகிறது.  அனைத்து ரக வாழையில் இருந்தும் நார் பிரித்து எடுக்க முடியும். வாழையின் தண்டுப் பகுதியை அறுவடை செய்தபின் 48 மணி நேரத்தில் நார் பிரித்து எடுக்கப்பட வேண்டும். வாழை நாரில் இருந்து நீர்ப் பகுதி வெளியேற சூரிய வெளிச்சத்திலோ, நிழலிலோ காய வைக்க வேண்டும்.  

             வாழை நாரில் 62 சதவீதம் செல்லுலோஸ், 29 சதவீதம் லிக்னின், 3 சதவீதம் ஹெமி செல்லுலோஸ், 2 சதவீதம் பெக்டின், 4 சதவீதம் இதர ரசாயனங்கள் உள்ளன. வாழை நார் சணல் போல் பயன்படுத்தப்படுகிறது. சணலை விட பன்மடங்கு உறுதியானது என்றும் கண்டறியப்பட்டு இருக்கிறது. வாழை நாரில் இருந்து துணிகள் தயாரிக்கப் படுகிறது.  

நாரில் தயாரிக்கப்படும் பொருள்கள்:  

              சாக்குப் பைகள், மிதியடிகள், தரை விரிப்புகள், வீட்டு அலங்கார விரிப்புகள், அலங்கார பைகள், டிஸ்ஸ பேப்பர், பில்டர் பேப்பர், அலங்கார பேப்பர் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.  ஒரு மரத்தில் இருந்து 300 கிராம் வாழை நார் கிடைக்கும். வாழை நாரை பிரித்தெடுக்கும் இயந்திரம், வாழை அறுவடைக்கு பின்னர், வாழையின் தேவையில்லாத பகுதிகளான இலைகளின் தண்டுப்பகுதி, இலைக் காம்புப் பகுதி, வாழைத்தாரின் காம்புப் பகுதி, ஆகியவற்றில் இருந்து நாரை பிரித்தெடுக்கும் தன்மைக் கொண்டது. 

               இந்த இயந்திரத்தின் விலை ரூ. 40 ஆயிரம். வாழை நாரை பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் 8 முதல் 10 மணி நேரத்தில் 100 வாழை மரங்களில் இருந்து, 15 முதல் 20 கிலோ நாரைப் பிரித்து எடுக்கலாம். இந்த இயந்திரத்தை பெண்களும் எளிதில் இயக்கலாம்.  கையினால் நாரைப் பிரித்தெடுப்பதைவிட 40 சதவீதம் அதிக நார், இந்த இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காது.  

விலை எவ்வளவு? 

            வாழை மட்டை நார் முதல் தரம், டன் ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரையிலும், 2-ம் தரம் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரையிலும், வாழைத் தார் காம்பு நார், முதல் தரம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரையிலும், வாழை இலைக் காம்பு நார் மற்றும் வாழை நார் கழிவு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.  வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலுக்கு முதலீடு இயந்திரத்துக்கான விலை ரூ. 40 ஆயிரம் மட்டுமே. வேலையாட்கள் 3 பெண்கள் போதும். நாளொன்றுக்கு 15 கிலோ நார் உற்பத்தி எனக் கணக்கிட்டால், அதன் விலை ரூ. 900. ஆள் சம்பளம், மின்சாரம் மற்றும் இயந்திரப் பராமரிப்புச் செலவுகள் நாளொன்றுக்கு ரூ. 345. நிகர வருவாய் நாளொன்றுக்கு ரூ. 655 என்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தெரிவிக்கிறது. 

              வாழை நார்களை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன என்றும் அத்துறையின் தகவல் தெரிவிக்கிறது.  100 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து உழைக்கக்கூடிய ரூபாய் நோட்டுகள் வாழை நாரில் இருந்து தயாரிக்க முடியும் என்று, குஜராத் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து உள்ளது.  வாழை நாரில் இருந்து உயர்தர காகிதம் தயாரிக்க முடியும், சாதாரண காகிதத்தைவிட வாழைநார் காகிதம் தரத்தில் சிறந்ததாகவும் பல மடங்கு நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது என்றும், அப்பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.  

            வாழை நார் காகிதத்தை 100 ஆண்டுகளுக்கு மேல் கசங்காமல், கிழியாமல் பயன்படுத்த முடியும் என்றும், இயற்கை நார்களிலேயே அதிக வாழ்நாள் கொண்டது வாழைநார், வாழைநாரில் தயாரிக்கும் ரூபாய் நோட்டுகளை 3 ஆயிரம் முறை மடிக்க முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.






Read more »

கடலூர் கப்பல் கட்டும் தொழிசாலைக்கு நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து சைக்கிள் பேரணி

சிதம்பரம்:

            பரங்கிப்பேட்டை அருகே தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

              பரங்கிப்பேட்டை அருகே அனல்மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கப்பல் கட்டும் தொழிசாலை, சாயக்கழிவு தொழிற்சாலை என 9 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு பரங்கிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள 75 கிராமப் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.குறைந்த விலைக்கு நிலம் வாங்கப்பட்டு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை கண்டித்தும், தொழிற்சாலைகள் அமைவதால் ஏற்படும் தீமைகளை விளக்கியும் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

             பேரணி பரங்கிப்பேட்டையிலிருந்து புறப்பட்டு சின்னூர், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 23 கிராமங்கள் வழியாக சென்றது. ஒவ்வொரு கிராமத்தில் கே.பாலகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார். பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் கற்பனைச்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் இளம்பாரதி, கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விவசாயிகள் சம்பத், உலகநாதன், தனபால், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read more »

கடலூர், விழுப்புரத்தில் 21 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

              விழுப்புரம் மாவட்டத்தில் 21 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வினித்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

              இதில் செஞ்சி ஆய்வாளர் சிங்காரவேலு சத்தியமங்கலத்துக்கும், உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் இளங்கோவன் மரக்காணத்துக்கும், ரோஷணை அரவிந்தன் கடலூர் மாவட்டம் புவனகிரிக்கும், மரக்காணம் சேகர் வடலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வளவனூர் ஆய்வாளர் சந்திரபாபு சேத்தியாதோப்புக்கும், விக்கிரவாண்டி ஸ்ரீதரன் வேப்பூருக்கும், வானூர் கண்ணதாசன் ஊ. மங்கலத்துக்கும், வளத்தி மணவாளன் பென்னாடத்துகும், விழுப்புரம் நகரம் ஷியாம் சுந்தர், கடலூர் திருப்பாப்புலியூருக்கும், தியாகதுருகம் ரவிக்குமார் ராம நத்தத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

               கடலூர் மாவட்டம் வடலூரிலிருந்த ஆய்வாளர் முரளி வானூருக்கும், பரங்கிப்பேட்டை ராமகிருஷ்ணன் ரோஷணைக்கும், நெய்வேலி ராமநாதன் செஞ்சிக்கும், ராமநத்தம் பிரதீப்குமார் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், திருப்பாப்புலியூரிலிருந்த சுந்தரவடிவேல் நெய்வேலி தெர்மலுக்கும், அண்ணாமலை நகர் சுப்பிரமணியன் பரங்கிப்பேட்டைக்கும், பண்ருட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி திருக்கோவிலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலிருந்த சங்கர் கஞ்சனூருக்கும், ராஜேந்திரன் உளுந்தூர்பேட்டைக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்த சுகுமாறன் வளவனூருக்கும், சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு சந்திரசேகரன் குமராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.




Read more »

கடலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம்: முதல் வரவாக பெண் குழந்தை சேர்ப்பு

கடலூர்:

             கடலூர் மாவட்டத் தொட்டில் குழந்தை திட்டத்தை அரசு ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர் முதல் வரவாக பெண் குழந்தை புதன்கிழமை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு பண்ருட்டி அரசு மருத்துவமனையில், இளம்பெண் ஒருவர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலையில் அப்பெண்ணைக் காணவில்லை. வார்டிலேயே குழந்தையை விட்டு விட்டு அப்பெண் எங்கோ சென்று விட்டார்.

            தொடர்ந்து விசாரித்ததில் அப்பெண் போலி முகவரி கொடுத்து மருத்துவ வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அப் பெண் திருமணம் ஆகும் முன்பே தவறான உறவில் இக் குழந்தை பிறந்ததாகவோ, முறையாக திருமணம் செய்த பெண் வறுமை காரணமாக குழந்தை வேண்டாம் என்று விட்டுவிட்டுச் சென்றதாகவோ இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இக் குழந்தையை சமூகநலத் துறை அதிகாரிகள் பெற்று வந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் புதன்கிழமை சேர்த்தனர். 

            கடலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவே கடந்த ஆண்டுகளில் நடைபெற்று வந்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டத்தை அரசே ஏற்றுநடத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அறிவித்தார். காரணம் இந்த மாவட்டங்களில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

                கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர், முதல் வரவாக, மேற்கண்ட பெண்குழந்தை, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாக மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்தார். இக்குழந்தை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் சட்டப்படி, நீதிமன்ற நடைமுறைகளுக்கு உள்பட்டு, குழந்தை இல்லாதோருக்குத் தத்து கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 





Read more »

நவீன வசதிகளுடன் தமிழக அரசின் இணையத்தளம்

         தமிழக அரசின் வெப்சைட்டுகள் இன்னும் 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதன்பின், நவீன வசதிகளுடன் கூடிய "ஸ்டேட் போர்டல்' திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்,' என்று தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலர் சந்தோஷ்பாபு கூறினார்.

சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கை துவக்கி வைத்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் பேசியது: 

                 அரசு திட்டங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டுசெல்லும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. சென்னை நகரில் அரசு திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் அரசு திட்டங்கள் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது. கிராமப்புறங்களில் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், ரேஷன் கார்டு பெற ஒருநாள் முழுவதும் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால், ஒருநாள் சம்பளமும் இழக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

             அதன்படி, அனைத்து அரசு துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. அனைவருக்கும் அரசின் சேவை சென்று சேரும் வரை மின்ஆளுமை வெற்றி பெற்றதாகக் கூற முடியாது. எனவே, என்னென்ன சேவைகள் மக்களுக்கு நேரடியாக வழங்க முடியும் என்பதை அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு துறையும் ஐந்து சேவைகளை அடையாளம் காணப்பட்டால், மின்ஆளுமை செயல்வடிவம் பெற உதவும். இதற்கு எல்காட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆதரவு தர தயாராக உள்ளன.

               முன்னோடி திட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்ஆளுமை அமலில் உள்ளது. அந்த மாவட்டத்தில் வசிப்பவர்கள் ஜாதி, இருப்பிடம், வணிகவரி, முதல்தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட சான்றுகள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே பெற முடிகிறது. இது தவிர ஏழை பெண்கள் திருமண உதவித் தொகை, மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் பேசினார்.


 தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் செயலர் சந்தோஷ்பாபுபேசியது: 

                "தற்போது தமிழக அரசின் வெப் சைட் செயல்படுகிறது. இந்த வெப் சைட் 30 நாட்களுக்கு பின், புதிய வடிவம் பெற உள்ளது. இந்த புதிய "ஸ்டேட் போர்டல்' திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தினால் அனைத்து சான்றுகள் பெறுவதோடு, விண்ணப்பங்களை பெற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது,' என்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, தகவல் தொழில்நுடப் செயலர் சந்தோஷ்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறையின் இணை செயலர் அஜய்குமார், நாஸ்காம் மண்டல இயக்குனர் புருஷோத்தம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



MORE DETAILS


















Read more »

திட்டக்குடியில் முதியோர் உதவித்தொகை கேட்டு போராடும் மூத்தக் குடிமக்கள்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/9a4c5eb3-6a10-45cb-a08d-780778dc7165_S_secvpf.gif
 

திட்டக்குடி:
 
          திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (92) விவசாயி இவரது மனைவி அஞ்சலை (75) இவர்களுக்கு குழந்தையில்லை. ஒரு கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.
 
            கடந்த 20 ஆண்டுகளாக இவரும், இவரது மனைவியும் இவரது வீட்டின் அருகில் பள்ளிக்கூடம், கோயில் உட்பட பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். சுமார் 500 மரங்கள் வரை இவரால் நடப்பட்டுள்ளன. பராமரிப்பு பணியையும் செய்து வருகிறார்கள். தற்போது கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இருவரும் கடலூர் சென்று மாவட்ட கலெக்டர் அமுதவல்லியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

                அதில் அவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வளர்த்து வரும் மரக்கன்றுகளே எங்களின் பிள்ளைகளாக உள்ளனர். ஆனால் அவற்றை பொது இடத்தில் நட்டு விட்டதால் நாங்கள் பயன்படுத்த இயலாது இந்த சூழ்நிலையில் கருணை அடிப்படையிலாவது முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
 
 
 

Read more »

NLC got 2nd Asia’s Best Employer Awards

 http://www.orissadiary.com/admin1/images/allnewsimage/28289.jpg

         Shri S.K. Acharya, Director (HR) (third from left) receiving the HR Leadership Award’ by World HRD Congress in 2nd Asia’s Best Employer Awards ceremony 2011 at Singapore

           Shri S.K. Acharya, Director (HR) of Neyveli Lignite Corporation Ltd has been awarded the prestigious “HR leadership Award” by ‘World HRD Congress’ and the ‘Employer Branding Institute’ for his outstanding contribution in the field of Human Resource. The Award was conferred on him in the 2nd Asia’s Best Employer Awards Ceremony held at SUNTEC CITY, Singapore on 22ndJuly 2011.

            A passionate professional, Shri Acharya is known for his innovative approach to HR policies and practices that he has been demonstrating over last 3 decades of his career starting with Heavy Engineering Sector (BHEL), Power Sector (NTPC and NTPC - SAIL Power Co.) and now in Mining cum Power Sector as Director (HR) on the Board of NLC Ltd. With his motto ‘people at core’ he goes beyond the traditional mould of HR aligning people practices with business model of the organization.

             A widely traveled and well trained person in India and abroad, Shri Acharya lends his services in academics as a visiting faculty to many premier Business Schools and Management Institutions. As a life member of National Institute of Personnel Management (NIPM), Chairman, NIPM Neyveli Chapter and as member, HR committee of Standing Conference of Public Enterprises (SCOPE), India, he is actively associated with promotional activities for enriching HR profession as a whole.  





Read more »

Deallocated mines won't be taken away, Power Ministry assures NTPC

            The Power Ministry has assured that the de-allocated coal blocks of state-run power producer NTPC will not be handed over to any other firm, a top company official said.

           Responding to media reports on the de-allocated coal blocks of NTPC being transferred to another state-run firm, Neyveli Lignite Corporation, CMD NTPC Arup Roy Choudhury told reporters here, "Our ministry has communicated to us that the mines can not be taken away from us."

         He also said the Coal Ministry may re-look into the issue. The Coal Ministry recently de-allocated three coal blocks awarded to NTPC over the failure of the firm to develop them. The three NTPC coal blocks for which mining rights were repealed were Chhati Bariatu (South), Chatti Bariatu and Kerandari, all situated in Jharkhand.

            The Chatti Bariatu and Kerandari coal blocks in the North Karanpura coalfields in Jharkhand were allocated to NTPC in 2006 for captive use in their own specified projects. The Chatti Bariatu (South) coal block was given to the public sector firm in 2007.  Meanwhile, NTPC will import 16 million tonnes of coal in the current financial year (2011-12) to bridge the shortfall from domestic sources.

              Of the total 16 million tonnes, 12 million tonnes would be imported through State Trading Corporation (STC) and the remaining would be imported by the company itself.  "We would be importing around 12-16 million tonnes of coal during this fiscal... 12 million tonnes by STC and 4 million tonnes ourselves," Choudhury added. The total coal requirement of the company during this fiscal stands at 164 million tonnes. 





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior