உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 27, 2010

சிதம்பரம் நடராஜர் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்ள சத்குரு வேண்டுகோள்


 
சிதம்பரம்:

            சிதம்பரத்தில் கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாசத்சங்கம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு ஜகி வாசுதேவ் பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

தாங்கள் நடராஜர் கோயிலுக்கு சென்ற நோக்கம் என்ன? 

                      பூமியை நாம் உருவாக்கவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடியாத அளவில் படைத்தல் நடந்துள்ளது. படைத்தல் மூலமாக எதுவும் புரிந்து கொள்ள முடியாததால் அதற்கு நாம் கடவுள் என்ற பெயர் கொடுத்தோம். நாம் பல்வேறு வடிவில் கடவுள்களை வணங்குகிறோம். உலகத்தில் 33 லட்சம் கடவுள் உள்ளனர். அவை போதாது என நான் நினைக்கிறேன். நம்நாட்டில் 120 கோடி மக்கள் உள்ளனர். பெற்ற தாயைப் பிடித்தால் தாயை கடவுளாக வைத்துக் கொள்ளுங்கள். எதன்மீது ஈடுபாடு உள்ளதோ அதனை கடவுளாக எடுத்துக் கொள்ளுங்கள். கோயில் என்பது பிராத்தனை செய்யும் இடம் மட்டும் என சொல்லவில்லை. குடும்ப வாழ்க்கையை தொடங்குபவர்கள் குளித்துவிட்டு முதன்முதலில் கோயிலுக்கு சென்று உட்கார்ந்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது கோயிலுக்கு போய் உட்கார முடியவில்லை. வேகமாக சென்று சுற்றிவிட்டு, சுவாமியிடம் விண்ணப்பத்தை கொடுத்து விட்டு வந்துவிடுகிறோம்.

                       கோயிலை அழகாக வைத்திருக்க வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் தினமும் கோயிலுக்கு போக வேண்டும். ஆன்மிக வாழ்க்கையில் உள்ளவர்கள் கோயிலுக்கு போகத் தேவையில்லை. சிதம்பரம் கோயில் என்பது புராதனமாக பார்த்தால் பிரமாதமான விஷயம். அந்த காலத்தில் எந்தவித தொழில்நுட்பமும் இன்றி, கருவிகள் இன்றி வெறும் மனிதர்களின் திறமை மற்றும் தைரியத்தால் உருவாக்கப்பட்டது இக் கோயில். தினமும் கோயிலுக்கு செல்லும் போது இந்த தைரியமும், திறமையும் தூண்டப்படும். நம்மால் இது போன்ற ஒரு கோயிலை உருவாக்க முடியாது. முன்னோர் உருவாக்கி வைத்த கோயிலை பாதுகாக்க முடியவில்லை. பௌர்ணமிக்கு, அமாவாசைக்கு ஒருநாள் ஈஷா யோகா தொண்டர்களும், பொதுமக்களும் சேர்ந்து சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Read more »

என்.எல்.சி. பிரச்னை: மத்திய நிலக்கரித் துறை அமைச்சருடன் ப.சிதம்பரம் பேச்சு: அழகிரி எம்.பி. தகவல்


கடலூர்:

                   என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை தொடர்பாக, மத்திய நிலக்கரித் துறை அமைச்சருடன், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருப்பதாகவும் விரைவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              23-ம் தேதி விருத்தாசலம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நானும், நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவர்களும் சந்தித்து, என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து விளக்கினோம். உள்துறை அமைச்சர் உடனடியாக, கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார். பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு, தொழிலாளர் நலன், பொதுத் துறை நிறுவனங்களைப் பலப்படுத்துவதில் தொழிலாளர்களின் கடமை, மின் உற்பத்தி குறையாமல் இருக்க வேண்டியதன் அவசியம், குறித்தும் ப.சிதம்பரம் எடுத்துரைத்தார். 

                         தில்லி சென்றதும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலுடன் பேசி, பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இது தொடர்பாக 25-10-2010 அன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், புதுதில்லியில் இருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 

                           மத்திய நிலக்கரித் துறை அமைச்சருடன் என்.எல்.சி. தொழிலாளர்களின் பிரச்னை குறித்துப் பேசியதாகவும், சுமுகமானத் தீர்வு காண்பதற்கு, ஏற்பாடுகளைச் செய்து இருப்பதாகவும், இச்செய்தியை என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கமாறும் ப.சிதம்பரம் என்னிடம் தெரிவித்தார். எனவே விரைவில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பில் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

Read more »

3 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு தீவிரம்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்



          
               தமிழகத்தில் சிவகங்கை உள்ளிட்ட 3 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

சென்னை அடையாறில் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைத் தொடங்கி வைத்து அமைச்சர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: 

                   தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் தலா ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிவகங்கையில் இப்போது கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பெரம்பலூர், திருவண்ணாமலையிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் விரைவில் அமைக்கப்படும். இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கு உள்பட்டு, இந்தக் கல்லூரிகளுடன் இணைந்ததாக மருத்துவமனைகளும் அமைக்கப்படும். தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 919 பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு இதுவரை ரூ. 571 கோடி செலவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 700 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

                  தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா அளவிலான மருத்துவமனைகளுக்கு ரூ. 1,200 கோடியில் புதிய கட்டங்கள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு இதுவரை ரூ. 600 கோடியில் நவீன கருவிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுகாதாரத் துறையின் சேவையை மத்திய அரசு பாராட்டி வருகிறது. நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும்  சோளிங்கர் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதே போல தமிழகத்தில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றுகள் வழங்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை: 

                 தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து வருமுன் காக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட வாரியாக மருத்துவ மற்றும் பொது சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட்டங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேவையான மருந்துகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர். இதில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி பவ்தீப் சிங், இயக்குநர் முராரி, மண்டல இயக்குநர் கிரீஷ் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

டலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான, 2011-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்டார்.

ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                 இந்த வாக்காளர் பட்டியலில் 1-1-2011-ஐ தகுதி நாளாகக் கொண்டு, புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை மேற்கொள்ளுதல் தொடர்பாக படிவங்களை 9-11-2010 வரை அளிக்கலாம்.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து பெயர்களை சேர்த்தல், படிவம் 7-ஐ பூர்த்தி செய்து நீக்கம் செய்தல், படிவம் 8 மற்றும் 8ஏ-ஐ பூர்த்தி செய்து, திருத்தம் செய்தல் ஆகிவற்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி களப் பணியாளர்கள் மற்றும் வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை அளிக்க வேண்டும்.

                           வரைவு வாக்காளர் பட்டியலின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 15,97,518.இதில் ஆண்கள் 8,12,280. பெண்கள் 7,85,238 என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

சிதம்பரம் புறவழிச்சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

சிதம்பரம்:

                    விபத்துகளைத் தவிர்க்க சிதம்பரம் புறவழிச்சாலை இரு சந்திப்புகளிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்புப் பேரவை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

                             சிதம்பரம் நகருக்கு மேற்கே அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு இதுவரை 5-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். விபத்துகளைத் தவிர்க்க புறவழிச்சாலையின் இரு சந்திப்புகளிலும் வேகத்தடை மற்றும் ரவுண்டானா அமைக்க வேண்டும். மேலும் புறவழிச்சாலை இருண்டு கிடப்பதால் விபத்துக்கு சாதமாகிவிடுகிறது. எனவே புறவழிச் சாலையில் இருபுறமும் மின்விளக்குகள், ஒளிர்பலகைகள் அமைக்க வேண்டும் என மனுவில் ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் நகராட்சிப் பணிகள் நவம்பர் 30-க்குள் தொடங்கும்

டலூர்:
 
            கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தில், நகராட்சி சம்மந்தப்பட்ட பணிகள், நவம்பர் 30-ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று, சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் குத்தாலம் எம்.எல்.ஏ. க.அன்பழகன் தெரிவித்தார்.
 
                   சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு, கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பல்வேறு திட்டங்களைப் பார்வையிட்டது. மதிப்பீட்டுக் குழுவிடம் கடலூர் அனைத்து பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். கடலூர் சுரங்கப் பாதைத் திட்டத்துக்கு ரயில்வே இலாகா டெண்டர் விட்டு 3 மாதங்கள் ஆகியும், மாநில நெடுஞ்சாலைத் துறை தனது பணிக்கு இதுவரை டெண்டர் விடாமல் காலம் கடத்தி வருகிறது.
 
                 கடலூரில் உள்ள 4 வியாபாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள். அவர்களுக்காகவே நெடுஞ்சாலைத்துறை காலம் கடத்துகிறது. சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விட்டால், கடலூர் மக்கள் அனைவரும் வாழ்த்துவர் என்று குறிப்பிட்டு இருந்தார். 
 
மாலையில் மாவட்ட அதிகாரிகளுடனான மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்குக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின், குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியது:
 
                      சுரங்கப் பாதை பணியை ரயில்வே தொடங்கி விட்டதாக அறிவித்து இருக்கும் நிலையில்,  மேற்கொண்டு பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.நகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் தொடங்கப்படும். நிச்சயமாக கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றார். கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு முதல்வர் கருணாநிதியால் ஒப்படைக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்கு உரியது.
 
                   ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பாலங்களின் பணிகள் தொடங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அன்பழகன் தெரிவித்தார்.காடாம்புலியூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவகாமி என்பவர் முதியோர் உதவித்தொகை கேட்டு, மதிப்பீட்டுக் குழுவிடம் காலையில் மனு கொடுத்து இருந்தார். மாலையில் அவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை அன்பழகன் வழங்கினார். மொத்தம் 21 பேருக்கு முதியோர் உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 3 பேருக்கு தையல் இயந்திரங்கள், 3 பேருக்கு சலவைப்பெட்டி ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.
 
                     மதிப்பீட்டுக் குழு ஆய்வுக் கூட்டத்தில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், ராமசாமி, டாக்டர் சதன் திருமலைக்குமார், ஆர்.செüந்தர பாண்டியன், அங்கயற்கண்ணி ஆகியோரும் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read more »

சிறுபாக்கம் பகுதிகளில் ஊடு பயிரான "ஆமணக்கு' பயிரால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்

சிறுபாக்கம் : 
 
                சிறுபாக்கம் பகுதிகளில் ஊடு பயிரான "ஆமணக்கு' பயிர் அமோக விளைச்சலால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

                  சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மங்களூர், மலையனூர், அடரி, மாங்குளம், எஸ்.நரையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் நீர்பாசன நிலங்களில் மணிலா, பருத்தி, மஞ்சள், காய்கறிகள் மற்றும் நெல் பயிரினை விளைவித்துள்ளனர். இந்த பயிர்களுக்கு இடையே பாத்தி அமைத்தும், வயல் ஓரங்களிலும் ஆமணக்கு பயிர் செய் வது வழக்கம். பயிரிட் டுள்ள பயிர்களை காட்டிலும் ஆமணக்கு பயிர் கூடுதல் பயிராக பயிர் செய்துள்ளனர்.

                      இப்பயிருக்கு தேவையான உரம், நீர், களை கொத்துதல் உள்ளிட்ட எந்த செலவினமும் இல் லாமல் இயற்கையாகவே ஆமணக்கு காய்கள் அதிகளவு காய் பிடித்து விளைச்சலை தருகிறது. முன் எப்போதும் இல்லாத நிலையில் ஆமணக்கு விதையினை அதிகளவு விளைத்துள்ளனர்.

Read more »

சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பிரசாரம்: போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

சிதம்பரம் : 

                சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்திய எல்லை முழுவதும் 25 மாநிலங்களில் விழிப்புணர்வு சைக் கிள் பிரசாரம் மேற் கொண்டு ஊர் திரும்பிய சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாப்போம், ஓசோன் பாதிப்பைத் தவிர்ப்போம், புவியின் தட்பவெப்ப நிலையைச் சீரமைப்போம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் கமாண்டர் மகேந்திரன் தலைமையில் அன்புச்செல்வன், வினோத்ராஜ், ராஜசெல்வம் ஆகியோர் இந்திய எல்லை பகுதியில் சைக்கிளில் பிரசார பயணத்தை கடந்த மே மாதம் 12ம் தேதி துவக்கினர்.

                      சிதம்பரத்தில் துவங்கிய சைக்கிள் பிரசாரம் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ் தான், பஞ்சாப், காஷ்மீர் உட்பட 25 மாநிலங்களில் 166 நாட்கள், 15 ஆயிரம் கி.மீ., பயணத்தை முடித்துக் கொண்டு சிதம்பரம் திரும்பினர்.சிதம்பரம் திரும்பிய போலீஸ் நண்பர்கள் குழுவினரை டி.ஐ.ஜி, மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் ஆகியோர் வரவேற்றனர். சிதம்பரம் போலீஸ் துறை சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது.விழாவில் டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசுகையில், "சாதனை செய்ய வேண்டும் என்ற போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த இந்த நான்கு இளைஞர்களும் பல்வேறு இன்னல்களைத் தாண்டி சாதித்து காட்டியுள்ளனர். அவர்கள் சென்றபோது, காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை, பீகாரில் கலவரம், வங்காளத்தில் நக்சலைட்கள் என பல சோதனைகளை கடந்து எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

                 அதற்காக அவர்களையும், அவர்களுக்கு ஊக்கம் அளித்த அவர்களின் பெற்றோரையும் பாராட்டுகிறேன். மற்ற இளைஞர்கள் இந்த சாதனை இளைஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்' என பேசினார். விழாவில் ஊர்க்காவல் படை, ஆட்டோ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சாதனை இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஏற்பாடுகளை டி.எஸ்.பி., சிவனேசன், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, கார்த்திகேயன், கண்ணபிரான்  செய்திருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.16 கோடியே 96 லட்சம்: டி.ஆர்.ஓ. நடராஜன்

திட்டக்குடி :  

                   மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார்.நல்லூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சையத் ஜாபர் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் கந்தசாமி, ஒன்றிய ஆணையர் ரவிசங்கர்நாத், வட்ட வழங்கல் அலுவலர் வேலு, தாசில்தார் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

முகாமில் 27 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் மற்றும் கலப்பு திருமண உதவித் தொகையாக மூன்று ஜோடிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய், 3 சலவைப் பெட்டி உட்பட 14 பயனாளிகளுக்கு 18 ஆயிரத்து  47 ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கி டி.ஆர்.ஓ., நடராஜன் பேசியது: 

                        தமிழக அரசு ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கப் பட்டு அனைவருக்கும் வீடு வழங் கிட நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. குடிசை வீடுகள் அனைத்தும் "கான்கிரீட்' வீடுகளாக மாற்றிட அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 353 "டிவி'க்கள், 94 ஆயிரத்து 442 காஸ் அடுப்பு இணைப் புகள், 58 ஆயிரத்து 464 பேருக்கு முதியோர் உள்ளிட்ட உதவித் தொகைகள், 6 ஆயிரத்து 942 மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 647 பயனாளிகளுக்கு 16 கோடியே 96 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

                   கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில்தான் முதலில் வீடு கட்டி முடிக்கப்பட்டு துணை முதல்வரால் திறப்பு விழா கண்டுள்ளது. தற்போது 8 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் மந்தைவெளி புறம்போக்கில் குடி யிருப்போருக்கு ஒரு வாரத்திற்குள் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டி.ஆர்.ஓ., நடராஜன் பேசினார்.

Read more »

கடலூரில் இலவச நோட்டுகள் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! காலதாமதத்தால் மாணவர்களுக்கு பயனில்லை

சிதம்பரம் : 

               சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து தற்போதுதான் இலவச நோட்டுகள் வழங்கப்படுகிறது. இதுவரை மூன்றில் ஒரு பகுதி பள்ளிக்கு கூட நோட்டுகள் கிடைக்கவில்லை.

                 மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்விக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கல்வியில் முன் னேற வேண்டும் என முழு வீச்சில் செயல்படுகிறது. இதற்காக மதிய உணவு, மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், பஸ் பாஸ், சைக்கிள்கள் என வரிசையாக பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாக பயன்படாமல் சம்பந் தப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சென்றடையாமல் வீணடிக்கப்படுகிறது.

                    ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் பொது பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச நோட்டுகள் வழங்கி வருகிறது. 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஐந்து ரூல்டு நோட்டு, இரண்டு அன்ரூல்டு நோட்டு, 6ம் வகுப்பு முதல் 8 வரை நான்கு ரூல்டு நோட்டும், ஒரு கணிதம் நோட்டு, ஒரு அன்ரூல்டு நோட்டு, இரண்டு பெரிய நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

                  இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி திறந்தது முதல் ஆதிதிராவிட நலத்துறை மூலம் முன்னுரிமை அடிப்படையில் முதலில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளுக்கும், அதன் பிறகு பொது பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் இலவச நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் ஜூன் மாதம் பள்ளி துவங்கியதும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பொதுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப் படாமல், காலம் தாழ்த்தி காலாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் தற்போதுதான் நோட்டுகள் வழங் கும் பணி துவங்கியுள்ளது.

                     சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு பள்ளிகளுக்குக் கூட இதுவரை நோட்டுகள் சரியாக சென்று சேரவில்லை. பெரும்பாலான பொது பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர்கள் எண்ணிக்கை குறித்து விவரங்கள் கூட தற்போதுதான் கேட்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் முழுமையாக வினியோகிக்க எப்படியும் இன்னும் ஒருமாத காலம் ஆகும். பயன்கள் ஏழை, எளியோருக்கு சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் திட்டங்களை உருவாக்கினாலும் அதனை மக்களிடையே கொண்டு செல்வது அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது. அவர்களின் அலட்சியத்தால் தற்போது வழங்கப்படும் நோட்டுகளால் எந்த பயனும் இல்லை. இனி வரும் காலங்களிலாவது உரிய நேரத்தில் உதவிகள் சென்றடைய அதிகாரிகள் பாடுபட வேண்டும்.

Read more »

சிதம்பரம்- புதுச்சத்திரத்திற்கு கூடுதல் பஸ்: கலெக்டருக்கு மனு

பரங்கிப்பேட்டை : 

            சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரத்திற்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இதுகுறித்து பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                     சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூர், தச்காடு. சேந்திரக்கிள்ளை, வேளங்கிப்பட்டு வழியாக புதுச்சத்திரத்திற்கு இரண்டு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் அதிலும் பள்ளி நேரங்களில் மாணவர்கள் பஸ்சில் ஏறமுடியாத அளவிற்கு கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் நடந்து சென்று பு.முட்லூரில் இருந்து வெளியூர் சென்று வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி நேரங்களில் நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இ வ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வேர்க்கடலையில் நேர்த்தி தொழில் நுட்பம்: வேளாண் துணை இயக்குனர் தகவல்

விருத்தாசலம் : 

                வேர்க்கடலையில் அறுவடைக்குப் பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை கையாண்டால் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                     விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் ஒன்றியங்களில் தற்போது வேர்க்கடலை அறுவடை நடைபெறுகிறது. எண்ணெய் வித்துப் பயிரான வேர்க்கடலையில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் கெடாமல் காத்திடவும், நல்ல விலையில் விற்றிடவும் கீழ்கண்ட நேர்த்தி முறைகளை அறுவடைக்கு பின் கையாள வேண்டும்.

                   கடலை செடிகளை 90 முதல் 110 வது நாளில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்குப் பின் காய்களை தனியாகப் பிரித்து எடுத்து எட்டு மணி நேரம் காய வைக்க வேண்டும். இதை மூன்று முதல் நான்கு நாட்கள் செய்ய வேண்டும். ஈரப்பதம் 7 முதல் 11 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை காய் களை நன்றாக காய வைக்கவில்லை எனில் அப்லாடாக்சின் என்ற பூஞ்சாண வித்துக்களால் தாக்கப்பட்டு தரம் பாதிக்கப்படும். காய்கள் தரம் உள்ளதாக இருக்க அதில் கலந்துள்ள கல், மண், தூசி, கெட்டுப்போன காய் கள், சுருங்கிய முதிராத காய்கள், இதர ரகக் காய்கள் இவைகளை தனித்தனியாக பிரித்துவிட வேண்டும். 

                     சுத்தம் செய்யப்பட்ட வேர்க்கடலைகளை நல்ல கோணிப் பைகளில் போட்டு தரையில் மரச்சட் டங்கள் கிடத்தி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி சேமிக்க வேண் டும். ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உள்ள வணிகமுறை தரம் பிரிப்பு மையங்களுக்கு கொண்டு வந்து விற்று லாபம் பெறலாம்.மேலும் வேர்க்கடலை காய்களை உடைத்து பருப்பை எடுத்து காயவைத்து சுத்தம் செய்து சுத்தமான சாக்கு பைகளில் அடைத்து விற்பனை செய்வதன் மூலம் காய்களாக விற்பதை காட்டிலும் அதிக லாபம் பெறலாம்.

Read more »

Held for road blockade

CUDDALORE: 

                Police arrested 41 employees of private bus services for staging road roko at Woodlands Hotel here on Tuesday.

               Led by Guru Dharmalingam, president of the Cuddalore Private Bus Services Employees Association, they demanded speedy completion of the underground drainage project as many major thoroughfares posed problem of commutation due to open and half-filled trenches. They also demanded re-topping of road from Kammiampettai to Jawans Building, from Karumariamman temple to Head Post Office, and from Thirupadiripuliyur to Koothapakkam.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior