உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

தமிழக பட்ஜெட் (2011 - 2012) முக்கிய அம்சங்கள்


சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்ய தயாராகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உடன், முதல்வர் ஜெயலலிதா.

தமிழக சட்டப்பேரவையில் 2011 -2012 ஆண்டிற்கான  பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.


              அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்டூ படிக்கும் மாணவ, மாணவியருக்கு ரொக்கமாக ஊக்கத் தொகை, எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளர்ச்சி நிதி அதிகரிப்பு, அரசு கேபிள் டி.வி. செயலாக்கம், பஸ் நிலையங்களில் தனியார் ஒத்துழைப்புடன் வணிக வளாகங்கள் கட்டுதல் உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் வெளியாகியுள்ளன.  மாநில அரசுக்கான 2011-12-ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்டத்தை பன்னீர்செல்வம் சமர்ப்பித்தார். ரூ.8,900 கோடிக்கு புதிய திட்டங்களையும், வளர்ச்சிக்கான திட்டங்களையும் அமைச்சர் அறிவித்துள்ளார்.  கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நடப்பு நிதி ஆண்டுக்கான திருத்திய வரவு செலவுத் திட்டத்தை அதிமுக அரசு இப்போது சமர்ப்பித்துள்ளது.  தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துவது, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்கள் இந்த பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன.  புதிதாக வரி விதிப்பு பற்றியோ, வரி விலக்கு அளிப்பது பற்றியோ எந்த அறிவிப்பும் இந்த உரையில் இடம் பெறவில்லை.  நடப்பு நிதியாண்டில் ரூ.173.87 கோடி உபரி வருவாய் வரும் எனவும், நிதிப் பற்றாக்குறை ரூ.16,881 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மூலதனத் திட்டங்களுக்கான நிதி ரூ.15,877.58 கோடியாக ஒதுக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய நடப்பு நிதியாண்டில் பெறப்படும் நிகரக் கடன் ரூ.17,261 கோடியாக இருக்கும். எனவே ஆண்டின் இறுதியில் அரசுக்கு மொத்தக் கடன் ரூ.1,18,610 கோடியாக இருக்கும். 

முக்கிய அறிவிப்புகள்

மாணவ, மாணவியர் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைக்க 10, 11-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1500, 12-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும். 

  அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படும். 6-ம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும், மாணவியருக்கு பாவாடை, தாவணிக்குப் பதிலாக சல்வார் கமீசும் வழங்கப்படும்.

  அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ஏற்கெனவே 4 நகரங்களில் உள்ள தலைமுனையங்கள் மறுபடி செயல்படத் தொடங்குவதுடன், மேலும் 16 மாவட்டங்களில் இந்த நிறுவனம் சார்பில் தலைமுனையங்கள் தொடங்கப்படும். இதுதவிர 11 மாவட்டங்களில் தனியார் தலைமுனையங்களுடன் ஒப்பந்தம் செய்து, ஒளிபரப்பு வசதிக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

  அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் உணவு உற்பத்தி 115 லட்சம் டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
  சென்னையில் புறநகர் காவல்துறை ஆணையரகம், சென்னை மாநகர காவல் ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக உருவாக்கப்படவுள்ளது.
 
  சென்னை நகருக்கு எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னைக்கு அருகே புதிதாக 3 ஏரிகள் உருவாக்குவதுடன், மேலும் சில ஏரிகளை சீரமைத்து நகருக்கு குடிநீர் சப்ளையை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும்.
 
  ஆவின் மூலமாக 155 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு, 10 கி.மீ. சுற்றளவுக்கு கால்நடை மருத்துவ வசதி அளிக்கப்படும்.  பிளாஸ்டிக் கழிவில் சாலை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
  104 அணைகள் ரூ.745 கோடியில் புனரமைக்கப்படும்.  மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் தயாரித்தல், உயிரி தொழில்நுட்பம், மருந்து துறை ஆகியவற்றுக்கென புதிய தொழில் கொள்கை 2011 உருவாக்கப்படும்.
 
  சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மூன்று சதவீத வட்டி தள்ளுபடியில் கடன் வழங்கப்படும்.  மாநிலத்தில் புதிதாக 10 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.  

  நிலங்களை ஒருங்கிணைத்து அனைவரும் பயன்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய நில எடுப்புக் கொள்கை உருவாக்கப்படும். திருக்கோயில் அன்னதானத் திட்டம் மேலும் 106 கோவில்களுக்கு விஸ்தரிக்கப்படுகிறது. 

  திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை ரூ.100 கோடியில் சிறப்பு சிகிச்சை மையமாக ஆக்கப்படும்.  கிராமப்புற இளம்பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.
 
  விற்பனை வரி நிலுவை, பத்திரப் பதிவுக் கட்டண நிலுவையை வசூலிக்க ""சமாதான் திட்டங்கள்'' தொடங்கப்படும். 2012 மார்ச் வரை இத் திட்டம் இருக்கும்.

  வணிகர் நல வாரிய உறுப்பினராக ஆண்டுதோறும் வணிகர்கள் புதுப்பிப்பதற்குப் பதிலாக ரூ.500 செலுத்தி ஆயுள்கால உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். மதிப்புகூட்டு வரியில் விலக்கு அளிக்கப்பட்ட சிறு குறு வணிகர்களையும் வாரியத்தில் சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.

  மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

  முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரமும், இரு பெண் குழந்தைகளாக இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் வைப்புத் தொகை வழங்கப்படும்.

  போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்த, தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை, அரசு - தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்த வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

  நடப்பாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும்.  இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவையும், இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்குவதும் செப்டம்பர் 15-ல் தொடங்கும்.

  உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. 



Pin குறிப்பு  :  

நம்ம ஊரு அமைச்சர்கள் ரெண்டு பேரு இருக்காங்க.. 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்காங்க......

 நம் கோரிக்கைகளான  

நம் மாவட்டத்தில்  

பல்கலைக்கழகம், 
சட்டக் கல்லூரி, 
மென்பொருள் பூங்கா 

அமைய குரல் கொடுப்பார்களா!!!!!!!!!






 

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் மேலாண்மைத் துறையில் பல்வகை படிப்புகள்


சிதம்பரம்:
 
              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படும் பல்வகையான மேலாண்மைத் துறை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறுமாறு மாணவர்களுக்கு துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
 இதுகுறித்து துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
 
              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. தொலைதூரக்கல்வி முறையில் பல்வேறு படிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக திகழும் இப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மேலாண்மைத் துறை சார்ந்த படிப்புகளில் நவீன காலத்திற்கேற்ப, கற்கும் மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய இளநிலை, முதுநிலை மற்றும் பட்டய நிலைகளில் பல்வேறு படிப்புகளை பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியது.  
 
             கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பயின்றவர்கள் மட்டுமல்லாது, இன்றைய சூழ்நிலையில் மருத்துவம் பயின்றவர்களுக்கும் மேலாண்மைத் துறை சார்ந்த படிப்பு மிக அவசியமானதாகும். உலகளவிலான வணிக நிறுவனங்களின் வளர்ச்சி அதன் கிளைகளை இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் துவக்கி விரிவு படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.  இந்நிலையில் உலகின் இரண்டாவது அதிக மக்கள் சக்தி கொண்ட நாடான நம் இந்தியாவின் இளைய தலைமுறையினர் மேலாண்துறை சார்ந்த படிப்புகளை கற்பதன் மூலம், அவர் தம் இளம் வயதிலேயே பொருளாதார வளம் பெற்று நம் நாட்டின் தனிநபர் வருமான விகிதத்தை உயர்த்த முன்வர வேண்டும்.  
 
             நாட்டின் மிக உயர்ந்த மேலாண்மை படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு இணையான பி.பி.ஏ., எம்.பி.ஏ.வில் நிதி, நிர்வாகம், சந்தையியல், மனிதவள நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம், லாஜிஸ்டிக்ஸ் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை இப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் வழங்கி வருகிறது.  மேற்கண்ட படிப்புகளில் சேர்ந்து வாழ்வில் வளம் பெற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அழைக்கிறது. படிப்புகள் பற்றிய முழு விவரங்கள், இந்தியா முழுவதும் உள்ள படிப்பு மையங்கள், தகவல் மையங்கள் முகவரி, தொலைபேசி எண்கள் குறித்து பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  
 
தொலைபேசி எண்கள்:
 
04144-238610, 238043, 238044, 238045, 238046, 238047. 
 
இணையதளம்: 
 
 www.annamalaiuniversity.ac.in 

ddeannamalaiUniversity.ac.in
 
 முகவரி: 
 
இயக்குநர், 
தொலைதூரக்கல்வி இயக்ககம், 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 
அண்ணாமலைநகர்-608002.
கடலூர் மாவட்டம்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூரில் பயன்பாட்டுக்கு வராத ரூ. 1 கோடி செலவிட்ட நவீன எரிவாயு தகன மேடை


செயல்படாமல் கிடக்கும் கடலூர் நகராட்சி எரிவாயு தகன மேடை.
கடலூர்:
 
            கடலூரில் இரு எரிவாயு தகன மேடைகள், ரூ. 1 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன.  

             கடலூர் நகராட்சி எல்லைக்குள் பெண்ணையாற்றங்கரையில் 11 இடங்களிலும், கெடிலம் ஆற்றங்கரையில் 7 இடங்களிலும் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒரு சடலத்தை எரிக்க ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.  எனவே சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருக்கவும், குறைந்த செலவில் சடலங்களை எரிக்கவும், பெண்ணை ஆற்றங்கரையிலும், கெடிலம் ஆற்றங்கரையிலும் மின்சார தகன மேடைகள் அமைக்க, 4 ஆண்டுகளுக்கு முன், கடலூர் நகராட்சி முடிவு எடுத்தது. 

               பின்னர் இதற்கு செலவு அதிகம் ஆகும் என்று கருதிய நகராட்சி நிர்வாகம், எரிவாயு தகன மேடையை அமைக்க முடிவு எடுத்தது.  அதன்படி தலா ரூ. 50 லட்சம் செலவில் ஆல்பேட்டை பெண்ணை ஆற்றங்கரையிலும், செம்மண்டலம் கெடிலம் ஆற்றங்கரையிலும் இரு எரிவாயு தகன மேடைகளை நகராட்சி நிர்வாகம் கட்டியது. ஓராண்டுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நீடித்த இத் திட்டம், 2 ஆண்டுகளுக்கு முன் முடிவுற்றது. ஆனாலும் இதுவரை பயன்பாட்டுக்கு வந்தபாடில்லை.  எரிவாயு தகன மேடைகளின் நிர்வாகத்தை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது. 

              ரோட்டரி, அரிமா போன்ற தொண்டு நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளை மூலமே நிர்வகிக்க வேண்டும் என்று நகராட்சித்துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.  கடலூரில் நீண்ட காலம் எந்த தொண்டு நிறுவனமும், அறக்கட்டளையும் இச்சேவைப் பணியை எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. இறுதியாக வழக்கறிஞர் ரங்கநாதன் தலைமையில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை இச்சேவைப் பணியை ஏற்று நடத்த முன்வந்தது. முதலில் அறக்கட்டளைக்கு குறைந்த பட்ச நிதியை திரட்ட வேண்டும். அதற்காக அந்த அறக்கட்டளை பெயரில் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டது. 

                 அதே நேரத்தில் நகராட்சி ஆணையர் பெயரில் கடலூர் பரோடா வங்கியில் மற்றொரு கணக்கு தொடங்கப் பட்டது. ஆணையர் வங்கிக் கணக்கில்தால் நன்கொடைகள் டெபாஸிட் செய்ய வேண்டும் என்று, நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இந்த வங்கிக் கணக்கில் இருந்துதான், அறக்கட்டளை வங்கிக் கணக்கிற்கு பணம் வழங்க முடியும் என்றும் கூறியது.  இதனால் இரட்டை நிர்வாக முறை அமையும், திட்டத்தை சுமூகமாக செயல்படுத்துவது சிரமம் என்று அறக்கட்டளை கருதியதால், அறக்கட்டளை நிர்வாகம் செயல்படாமல் முடங்கிக் கொண்டது. நகராட்சி நிர்வாகத்துக்கும், அறக்கட்டளைக்கும் இடையே எழுந்த எண்ணச் சிதைவுகளே, இத்திட்டம் கேட்பாரற்றுக் கிடப்பதற்குக் காரணம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

             இந்த நிலையில் இரு எரிவாயு தகன மேடைகளின் இயந்திரங்களும், கடற்கரை உப்பங்கழிகள் ஓரமாக அமைந்து இருப்பதால், கடல் காற்றினால் துருப்பிடித்துச் சேதம் அடையத் தொடங்கி விட்டன. இதனால் கடலூரில் வழக்கம்போல், நல்ல திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாதியற்ற நிலை உருவாகி இருக்கிறது.  கடலூர் மாவட்டத்தில் அறக்கட்டளைகளும், சமூக சேவைச் சங்கங்களும் ஏராளம். ஆனால் அவைகள் ஆற்றும் சமூகப் பணிகள் என்ன என்று அலசி ஆராய்ந்தால், மிகப்பெரிய கேள்விக் குறிதான் மிஞ்சும். எனினும் நகராட்சி விதிக்கும் நிபந்தனைகளை, கட்டுப்பாடுகளைக் கண்டு, இந்த சமூகநல அமைப்புகள் அஞ்சுகின்றனவோ என்ற ஐயமும் எழாமல் இல்லை.  

இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 

             எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டு 12 மாதங்களில் பயன்பாடுக்கு வரவேண்டும். இல்லையேல் பின்னர் இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்று, அவற்றை நிர்மாணித்த நிறுவனம் தெரிவிக்கிறது. எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நகராட்சி புதிய ஆணையர் பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் நிர்வாகத்தில் உள்ள, சமூகநலனில் அக்கரையற்ற சில நபர்களின் குறுக்கீட்டால், இத்திட்டம் செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார். 

 இதுகுறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது

                 திட்டத்துக்காக வங்கிக் கணக்கில் ரூ. 80 ஆயிரம் உள்ளது. தகன மேடைகளில் வெப்பநிலை பரிசோதனை நடக்கிறது. அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு இருக்கிறோம் என்றார்.   






Read more »

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிப்பு

மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டதால் வியாழக்கிழமை வெறிச்சோடிக் கிடக்கும் கடலூர் துறைமுக மீன் இறங்குதளம்.
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கடந்த 3 தினங்களாக முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. 

               72 கி.மீ. நீளம் கொண்ட கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலை நம்பி சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகப்பெரிய விசைப் படகுகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு, மீன்பிடித் தொழில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.  ஜூலை மாதம் முழுவதும் 10 முதல் 30 சதவீத படகுகள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டன. கடந்த 3 நாள்களாக யாரும்  மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர்கள் கூறுகின்றனர். கடந்த சில நாள்களாக வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. 

                  கடல் அரிப்பும் மோசமாக உள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் முற்றிலும் முடங்கிப் போயிற்று.  மீன்பிடித் தொழிலை நம்பி இருக்கும் 50-க்கும் மேற்பட்ட ஐஸ் தயாரிக்கும் நிறுவனங்களும் மூடிக் கிடிக்கின்றன. மீன்களை வாங்கி வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் சமார் 100 உள்ளன. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும், அவற்றில் பணிபுரிவோரும் பெரிதும் கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.  வங்கக் கடலில் நீரோட்டம் தொடர்ந்து மாறியிருப்பதால் மீன்கள் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் வியாழக்கிழமை தெரிவித்தார். 

                 மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அன்றாடச் செலவுக்கே, படகு உரிமையாளர்கள் விருப்பப்பட்டு வழங்கும் சிறிய தொகையைக் கொண்டே ஜீவனம் நடத்துகிறார்கள்.  மிகப்பெரிய விசைப் படகுகளை வைத்து இருப்போர் பலர் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்கிறார்கள். அவர்கள் பெரிதும் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றார்.  


Read more »

கோவையில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்கம்


கோவையில் புதிய பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பேசுகிறார், வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட், விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோ


          சென்னையில் திட்டமிட்டபடி 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோப்தி கூறினார். 

               கோவை, அவிநாசி சாலையில், லோட்டஸ் கண் மருத்துவமனையை அடுத்த ஏஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வளாகத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.  

இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோப்தி பேசியது:  

                    நாட்டில் பாஸ்போர்ட் தொடர்பான சேவை பெற விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்காக டிசிஎஸ் நிறுவன உதவியுடன் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் 77 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் 2012-ல் முழுமையாக சேவா மையங்கள் தொடங்கப்பட்டு விடும்.  இப்போது புதிதாக பாஸ்போர்ட் அலுவலகங்களைத் திறக்க மக்களிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டு வருகிறது. 

              அதன் பின்னர் புதிய பாஸ்போர்ட் அலுவலகங்களைத் திறக்க பரிசீலிக்கப்படும்.  14 மினி மையங்கள்: நாடு முழுவதும் 14 சிறிய பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் வடகிழக்கு மாநிலங்களில் 8 மையங்களும், புதுச்சேரி அருகே ஒரு மையமும் ஏற்படுத்தப்பட உள்ளன.  பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2010-ல் மட்டும் பாஸ்போர்ட் சேவை கோரி 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

         அடுத்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கிறோம்.  தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளால் சென்னையில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைப்பதில் காலதாமதம் ஆவதாக வந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை. இதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை. திட்டமிட்டபடி, சென்னையில் மூன்று பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் தொடங்கப்படும். புதுதில்லியில் 2 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் தொடங்கப்பட்ட பிறகு, சென்னையில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.  

              போலி நபர்கள் பாஸ்போர்ட் பெறாமல் தடுக்கும் வகையில் கைவிரல் ரேகை பதிவு, டிஜிட்டல் புகைப்படம் எடுப்பது போன்ற புதிய முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சேவை வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.  நாட்டின் 13-வது பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம், ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட உள்ளது. மேலும் பாஸ்போர்ட் தொடர்பான தகவல்களை பாதுகாக்க, சிறந்த இணையப் பாதுகாப்பு முறைகள் அமல்படுத்தப்படும் என்றார். 

 கோவை மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் பேசுகையில்,

              "பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பழைய முறையின் கீழ் விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதில் காலதாமதம் நிலவுகிறது. எவ்விதத் தடங்கலும் இன்றி மக்களுக்கு பாஸ்போர்ட் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இந்த சேவை மையம் மூலம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திராமல் பாஸ்போர்ட் பெற முடியும்'' என்றார்.  

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் செந்தில்பாண்டியன் பேசுகையில், 

                 ""இந்த மையத்தின் மூலம் ஏதாவது சிறு பிரச்னை ஏற்பட்டாலும், உடனே தீர்வு காண வேண்டும். இதன்மூலம் பாஸ்போர்ட் பெறுவதில் மக்களுக்கு சிரமம் ஏற்படாது'' என்றார்.  மாநகர காவல் ஆணையாளர் அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டல ஐ.ஜி. வன்னியபெருமாள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். 



 More Details  













Read more »

கடலூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

கடலூர்:

               தமிழக அரசு விவசாயிகள் வாரியான பண்ணைத் திட்டத்தைத் தயாரிக்கும் பொருட்டு, சிறு, குறு விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் பணி, கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

               விவசாயிகளின் வருமானத்தை 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கவும், வேளாண் பயிர்களின் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தவும், விவசாயிகள் தனிநபர் வாரியான பண்ணைத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சிறு, குறு விவசாயிகளின் அடிப்படை புள்ளி விவரங்ளை சேகரிக்கும் பணி, மாவட்டம் முழுவதும் வேளாண் துறைமூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் சேகரிக்கப்படும் புள்ளி விவரங்களைக் கொண்டு, வரும் காலங்களில் வேளாண் துறைமூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்களின் பயன்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

              கிராமவாரியாக சிறு, குறு விவசாயிகளின் அடிப்படை விவரங்களான நில சாகுபடி பரப்பளவு, சர்வே எண், வேளாண் கருவிகள், கால்நடைகள், மண்வளம், பயிர் சாகுபடி விவரம், இதர அடிப்படை புள்ளி விவரங்கள் உதவி வேளாண் அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது.சிறு, குறு விவசாயிகளின் வயல்களில் கண்டிப்பாக மண்மாதிரி எடுத்து, ஆய்வு செய்து, பெறப்படும் முடிவுகள் அடிப்படையில் உர சிபாரிசு செய்யப்பட உள்ளது.எனவே அனைத்து சிறு, குறு விவசாயிகளின் வயல்களில் கண்டிப்பாக மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்வதற்காக, ஆய்வுக் கட்டணமாக மாதிரி ஒன்றுக்கு ரூ. 10 வீதம் சேகரித்து வேளாண் அலுவலர் வசம் ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

            தற்போது சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் வேளாண் இணையதளத்திலும்  பதிவு செய்யப்படுகிறது.விவரங்களைச் சேகரிக்க உதவி வேளாண் அலுவலர்கள் கிராமங்களுக்கு வரும்போது, அவர்களை சிறு குறு விவசாயிகள் அணுகி அடிப்படைப் புள்ளி விவரங்களை பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 MORE DETAILS 

 







Read more »

நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி!

நெய்வேலி:

             நெய்வேலியில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கிண்டல் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்திச் சென்று மடக்கினார் கல்லூரி மாணவி. சிக்கிய ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். 

                 மற்ற இருவரை போலீசார்  செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். நெய்வேலி வட்டம் 16-யை சேர்ந்த தேவராசு மகளை தேவிரத்னா (22). இவர் செவ்வாய்க்கிழமை மாலை, கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேலுடையான்பட்டு கோயில் அருகே, பைக்கில் வந்த 3 இளைஞர்கள் கிண்டல் செய்து தேவிரத்னாவிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தேவிரத்னா அவர்களை திட்டியதாகத் தெரிகிறது. மேலும்,அவர் கூச்சலிட்டுள்ளார்.

            இதனால் 3 பேரும், பைக்கில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தேவிரத்னா, அவ்வழியே வந்த மற்றொருவரிடம், பைக்கை இரவல் வாங்கிக்கொண்டு, அவர்களை பின்தொடர்ந்து சென்று தென்குத்து கிராமத்தில் மடக்கி பிடித்துள்ளார். அப்போது அந்த 3 பேரும் தேவிரத்னாவை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்தவர்கள், தேவிரத்னாவுக்கு உதவிபுரிய, பைக்கில் வந்தவர்களில் இருவர் தப்பியோடினர். ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். சிக்கிய நபர் தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்று தெரிந்ததும் அவரை நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

            தேவிரத்னா கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸôர் வழக்குப் பதிவுசெய்து, மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் எஞ்சிய அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 





Read more »

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்கம்

காட்டுமன்னார்கோவில் : 

           காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது.

               தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை ஏற்று வருங்கால வைப்பு நிதி வழங்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்காக ஆயத்த பணிகள் துவங்கப்பட்டது. இதற்கான ஆய்வு கூட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் நடந்தது. சத்துணவு மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். 

            சத்துணவு அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் சத்துணவு ஊழியர்களை ஒருங்கிணைத்து விண்ணப்பங்கள் பெற்றனர். ஒன்றியத்துக்குட்பட்ட 55 பஞ்சாயத்துகளில் உள்ள 123 பள்ளிகளில் இருந்து சத்துணவு பணியாளர்கள் 330 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பொறுப்பாளர்கள், சமையலர், உதவியாளர் என அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. 





Read more »

TN Governemnt announced Cash incentives to check school dropout rate

             Students of classes X, XI and XII in government and government-aided schools will be entitled to an incentive after completion of schooling, Finance Minister O. Pannerselvam told the Assembly in the Budget speech for 2011-12 here on Thursday. The total outlay for School Education is Rs.13,334 crore.

          While students of classes X and XI will receive Rs.1,500 each per year for completion, students of class XII will receive Rs.2000, he said. The amount would be invested in a fixed deposit scheme and given to students on their completion of schooling. The initiative, with a total outlay of Rs.394.04 crore, is expected to cover a total of 24,94,649 students every year and arrest the dropout rates at high and higher secondary school levels.

          Senior sources in the department said this was, perhaps, the first time in the country that such an incentive has been announced. “If you give the incentive at lower classes, say primary level, there is still no guarantee that the children complete schooling. When you target students in the higher classes, this will motivate them to somehow complete class XII,” a senior official said.
 
Knowledge Park

              An Integrated Knowledge Park will come up on the campus of the Directorate of Public Instruction here that houses all the Directorates under the purview of the department, with state-of-the-art buildings and facilities such as conference halls, training centres, counselling centres and an EDUSAT centre with a studio. The park will help children obtain knowledge beyond the textbooks. According to the senior official, the decision follows an analysis of the aerial view of the 16-acre DPI campus on College Road. A sum of Rs.498.24 crore has been set aside for school infrastructure and Rs.27.07 crore would go towards strengthening School Management Committees constituted under the Sarva Shiksha Abhiyan.

            A total of Rs.150 crore has been allocated for the implementation of the Rashtriya Madhyamik Shiksha Abhiyan, a Central Government initiative that aims to improve quality of education at secondary level. The government will provide two sets of school uniforms to students in the year 2011-12 at a cost of Rs.59 crore and four sets in 2012-13 at a cost of Rs.177 crore. Boys from class VI upward will receive full pants instead of half pants, and girls will receive salwar-kameez instead of half-saris. All students of government and government-aided schools will receive a free pair of footwear each. 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior