உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 16, 2010

கடலூர் மாவட்டத்தில் அடுப்பு உண்டு; எண்ணெய் இல்லை


நெய்வேலி:
 
             தொடர்மழை ஓய்ந்தாலும், தொடரும் மேகமூட்டத்தாலும், குளிர்ந்த காற்று வீசுவதாலும், கிராமப்புற மக்கள் அடுப்பு எரிக்க முடியாமல், அவதிப்படுகின்றனர். இதனால் மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
 
              இத்துடன், கள்ளமார்க்கெட்டில் லிட்டர் 30 வரை மண்ணெண்ணெய் விற்பனையாகிறது. வடகிழக்குப் பருவமழை கடந்த 10 தினங்களாகக் கொட்டித் தீர்த்ததில், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பல குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, கான்கிரீட் மற்றும் ஓடுவேய்ந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
 
              கடந்தவாரம் ஒருவழியாக மழை பெய்வது சற்று ஓய்ந்ததையடுத்து கிராமமக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.ஆனாலும் அன்றாடம் சமையல் செய்ய, அடுப்பெரிக்க விறகு இன்றி அவதிப்படுகின்றனர். மழையில் விறகுகள் நனைந்துவிட்டதால் அவற்றை உலரவைக்க வெயிலில் எடுத்து போட்ட போதிலும், மேகமூட்டமாக இருந்ததால் விறகுகள் காயவில்லை. இதனால் சமைக்க முடியாமல் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர்.
 
        ஒரு சில கிராமங்களில் அரசு வழங்கிய இலவச கேஸ் அடுப்பை கிராம மக்கள் பயன்படுத்திய போதிலும், இலவச அடுப்புக்கு சிலிண்டர் வழங்குவதற்கு கேஸ் முகவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.மேலும் பெரும்பாலான மக்கள், இலவச கேஸ் அடுப்பை விற்றுவிட்டனர். இந்நிலையில் அண்மையில் பெய்த மழை, பெரும்பாலான கிராமமக்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது. 
 
              சமைக்க முடியாமல் அவதியுறும் கிராமமக்கள் தற்போது மண்ணெண்ணெய் ஸ்டவ்வை வாங்கிச் செல்கின்றனர்.அவ்வாறு வாங்கினால் அவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் |30-க்கு வாங்கித்தான் சமையல் செய்வதாகவும், எனவே அரசு எங்களுக்கு தற்போது நிவாரணமாக மண்ணெண்ணெய்  வழங்க வேண்டும் என வடலூரை அடுத்த சேராக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெண் தெரிவித்தார்.
 
                     அரசு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்காவிட்டாலும், அவசரத் தேவையான மண்ணெண்ணெய்யை உடனடியாக ரேஷன் கடைகளில் கூடுதலாக வழங்கினால் கிராமமக்களின் தற்போதயை துயர்துடைக்க உதவும் என்பதை அரசு பரிசீலிக்குமா?

Read more »

மணிலாவுடன் ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி


மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள்.
சிதம்பரம்: 
 
            தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
 
            இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர்.
 
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
 
               ர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குறைந்தளவு மழை வளம் மற்றும் நீர்பாசனம் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மணிலாவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இத்தகைய நடைமுறையில் சில வேளாண் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஆலோசனை மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக மணிலா சாகுபடியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டை ஊடு பயிராக கேழ்வரகு சாகுபடியை இணைத்து சாகுபடி செய்தனர்.
 
            இப்புதிய வேளாண் சாகுபடி முறையில் விவசாயிகள் மணிலா பயிரை 9 வரிசையாகவும், கேழ்வரகை 6 வரிசையாகவும் தொடர்ந்து பயிர் செய்தனர். விதையின் அளவு, நிலத்தின் தன்மைக்கேற்ப ஆழத்தில் கேழ்வரகை நடவு செய்ய வேண்டும். புதிய பட்டை ஊடுபயிர் சாகுபடி வாயிலாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. கேழ்வரகு ஒரு இயற்கை அரணாக இருந்து பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மணிலா பயிரை பாதுகாக்கிறது. மேலும் மண்ணில் உள்ள நோய் காரணிகளும் ஊடுபயிர் வளர்ப்பு காரணமாக குறைந்தே காணப்படுகிறது. இவ்வாறு சாகுபடிப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெற்றுள்ளனர்.
 
              இவ்வாறு பட்டை ஊடுபயிர் வாயிலாக அதிகளவு கால்நடைத் தீவனம் மற்றும் ஆண்டு முழுவதும் ஒரு விவசாய குடும்பத்துக்குத் தேவையான உணவு தானியம் மிகக் குறைந்த செலவில் கிடைப்பதைக் காணலாம். இதுதவிர ஊடுபயிரான கேழ்வரகு நிலத்தில் தழைச்சத்தை நிலை நிறுத்தியும் அதிகளவு வேளாண் கழிவுகள் வாயிலாக நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்தவும் உதவுகிறது. 
 
              இவ்வாறு தொடர்ச்சியாக வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும்போது நிலத்தின் வளம், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்பாடு ஏற்படுவதுடன் வறட்சியான காலக்கட்டத்தில் கூட மானாவாரி நிலங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.
 
பிற பயன்கள்: 
 
                இந்த ஊடுபயிர் சாகுபடியில் மணிலா பாதிக்கப்பட்டாலும், கேழ்வரகால் லாபம் கிடைக்கிறது. மணிலா மற்றும் கேழ்வரகு சாகுபடியில், மணிலா அறுவடைக்கு பின்பு பாதுகாக்கப்படும்போது கேழ்வரகு தழைகளைக் கொண்டு பாதுகாக்கப்படுவதால் பாதுகாப்பு செலவீனம் வெகுவாக குறைகிறது, மணிலா வேருடன் அறுவடை செய்யப்படுகிறது.
 
                .நிலத்தில் உள்ள கேழ்வரகு தழைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், உறைவிடமாகவும் இருந்து மண்ணின் வளத்தை பாதுக்காக்கிறது.எனவே தமிழக மணிலா சாகுபடி விவசாயிகள் கர்நாடக மாநில விவசாயிகளைப் பின்பற்றி மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள்.

Read more »

நாற்றங்காலை முறையாக பராமரித்தால் கூடுதல் மகசூல்


விழுப்​பு​ரம் அடுத்​துள்ள பிடா​கம் கிரா​மத்​தில் மேட்​டுப்​பாத்தி முறை​யில் நாற்​றங்​கா​லுக்​காக மிள​காய் விதையை விதைக்​கும் விவ​சா​யி​கள்.
 
சிதம்பரம்: 
 
               தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
 
              இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர்.
 
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
                         
               கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குறைந்தளவு மழை வளம் மற்றும் நீர்பாசனம் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மணிலாவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இத்தகைய நடைமுறையில் சில வேளாண் தன்னார்வ தொண்டு நிறுவங்களின் ஆலோசனை மற்றும் விரிவாக்க முயற்சிகள் காரணமாக மணிலா சாகுபடியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டை ஊடு பயிராக கேழ்வரகு சாகுபடியை இணைத்து சாகுபடி செய்தனர்.
 
                இப்புதிய வேளாண் சாகுபடி முறையில் விவசாயிகள் மணிலா பயிரை 9 வரிசையாகவும், கேழ்வரகை 6 வரிசையாகவும் தொடர்ந்து பயிர் செய்தனர். விதையின் அளவு, நிலத்தின் தன்மைக்கேற்ப ஆழத்தில் கேழ்வரகை நடவு செய்ய வேண்டும். புதிய பட்டை ஊடுபயிர் சாகுபடி வாயிலாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படுகின்றன. கேழ்வரகு ஒரு இயற்கை அரணாக இருந்து பூச்சி மற்றும் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து மணிலா பயிரை பாதுகாக்கிறது. 
 
              மேலும் மண்ணில் உள்ள நோய் காரணிகளும் ஊடுபயிர் வளர்ப்பு காரணமாக குறைந்தே காணப்படுகிறது. இவ்வாறு சாகுபடிப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அதிக லாபத்தை பெற்றுள்ளனர்.இவ்வாறு பட்டை ஊடுபயிர் வாயிலாக அதிகளவு கால்நடைத் தீவனம் மற்றும் ஆண்டு முழுவதும் ஒரு விவசாய குடும்பத்துக்குத் தேவையான உணவு தானியம் மிகக் குறைந்த செலவில் கிடைப்பதைக் காணலாம். 
 
             இதுதவிர ஊடுபயிரான கேழ்வரகு நிலத்தில் தழைச்சத்தை நிலை நிறுத்தியும் அதிகளவு வேளாண் கழிவுகள் வாயிலாக நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்தவும் உதவுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும்போது நிலத்தின் வளம், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்பாடு ஏற்படுவதுடன் வறட்சியான காலக்கட்டத்தில் கூட மானாவாரி நிலங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.
 
பிற பயன்கள்: 
 
              இந்த ஊடுபயிர் சாகுபடியில் மணிலா பாதிக்கப்பட்டாலும், கேழ்வரகால் லாபம் கிடைக்கிறது. மணிலா மற்றும் கேழ்வரகு சாகுபடியில், மணிலா அறுவடைக்கு பின்பு பாதுகாக்கப்படும்போது கேழ்வரகு தழைகளைக் கொண்டு பாதுகாக்கப்படுவதால் பாதுகாப்பு செலவீனம் வெகுவாக குறைகிறது, மணிலா வேருடன் அறுவடை செய்யப்படுகிறது.நிலத்தில் உள்ள கேழ்வரகு தழைகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகவும், உறைவிடமாகவும் இருந்து மண்ணின் வளத்தை பாதுக்காக்கிறது.
 
               எனவே தமிழக மணிலா சாகுபடி விவசாயிகள் கர்நாடக மாநில விவசாயிகளைப் பின்பற்றி மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.மணிலாவுடன் பட்டை ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்துள்ள விவசாயிகள்.

Read more »

பழைய ரேஷன் கார்டு: மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

             தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், வரும் ஆண்டு ஜூன் மாதத்துடன் காலாவதியாவதால், அவற்றை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

             ரேஷன் கார்டுகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன்படி, ஏற்கனவே, 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், கடந்தாண்டு டிசம்பருடன் காலாவதியாகின. இந்நிலையில், மத்திய அரசு, அனைவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கும் பணியை துவக்க உள்ளதாலும், தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து ரத்து செய்யும் பணி நடந்ததாலும், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், உள்தாள்களை ஒட்டி, வரும் 2011, ஜூன் வரை செல்லத்தக்க வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

                    அதற்குள், குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் பதிவு செய்து புதிய ரேஷன் கார்டுகளை அச்சடித்து வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.இந்நிலையில், வரும் ஆண்டில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளதாலும், தற்போது தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருவதாலும், ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களின் குடும்ப விவரங்களை சேகரித்து புதிய கார்டு அச்சடிக்கும் பணியில் கவனம் செலுத்துவது இயலாத காரியம் என, அரசு முடிவு செய்துள்ளது.

              இதனால், வரும் 2011, டிசம்பர் 31ம் தேதி வரை, தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் செல்லத்தக்கவை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை ஒட்டவும், தேவையான பதிவேடுகளை அச்சடிக்கவும் அனுமதி அளித்து, உணவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more »

சேத்தியாத்தோப்பில் மகா ருத்ரயாகம் : ஜப்பான் நாட்டினர் 100 பேர் பங்கேற்பு


சேத்தியாத்தோப்பு  :  

                  உலக நன்மை வேண்டி, சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடியில்  நடந்த மகா ருத்ரயாகம் மற்றும் மகா சண்டி ஹோமத்தில், ஜப்பான் நாட்டினர் பங்கேற்றனர்.

              கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடியில் தாம்பரம் ஸ்ரீஅகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனம் இணைந்து உலக நன்மை வேண்டி ஸ்ரீ ஏகாதச மகா ருத்ரயாகம், ஸ்ரீமகா சண்டி ஹோமம், ஸ்ரீமகா சத்ரு சம்ஹார ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
 
              குமாரகுடி ஏ.பி.துரைசாமி அரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு 6 மணிக்கு கணபதி பூஜையுடன் யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து திருக்கூடலயாத்தூர் கலியமூர்த்தி ஓதுவாரின் தேவாரம் மற்றும் திருவாசக திருமுறை பாடல்கள் ஓதப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு துரை சுப்புரத்தினம், குறிஞ்சி செல்வன் முன்னிலையில் ஸ்ரீ ஏகாதச மகா ருத்ரயாகம் துவங்கியது.

                 தெய்வ விக்ரகங்களுக்கு அபிஷேகம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் 150க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள், ஆச்சார்யார்கள், தீட்சிதர்கள் ஸ்ரீமகா சண்டி ஹோமத்தையும்,  ஸ்ரீமகா சத்ரு சம்ஹார ஹோமத்தையும் நடத்தினர். உலக நன்மை வேண்டி நடந்த ஹோமத்தில் ஜப்பான் நாட்டு பாரம்பரிய முறையிலான சிறப்பு பூஜையை ஜப்பானிய மதகுரு நடத்தினார்.பின், பூர்ணாஹூதி, விசேஷ தீபாராதனை நடந்தது. இதனையடுத்து, யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அபிஷேகம் நடந்தது. ஹோமத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 100 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரூ.1.8 கோடி செலவில் கட்டிய போலீஸ் குடியிருப்பு வீணாகிறது

 கடலூர் : 

           திறப்பு விழா நடந்து நான்கு மாதங்களாகியும் போலீசார் எவரும் குடியேறாததால் 1.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்புகள் பூட்டிய நிலையிலேயே வீணாகி வருகிறது.

               மின் கட்டணம் செலுத்தாதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடக்கிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னையை நிலை நாட்டிடும் பொருட்டு எந்த நேரத்தில் அழைத்தாலும் பணிக்கு வர வேண்டும் என்பதற்காக போலீசார்களுக்கு அவரவர் பணிபுரியும் ஸ்டேஷன்கள் வளாகத்திலேயே அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. 

                ஆனால் தற்போது போலீசாரின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு ஏற்ப அவர்களுக்கான குடியிருப்புகள் அதிகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான போலீசார் கிராமங்களில் உள்ள சொந்த வீடுகளிலோ அல்லது நகர பகுதிகளில் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு அருகில் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். 

               இவ்வாறு கடலூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், துறைமுகம், தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி மற்றும் தூக்கணாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்களில் கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே குடியிருப்பு வசதி உள்ளது. மற்ற போலீஸ் ஸ்டேஷன்களில் பணி புரியும் போலீசார்கள் அரசு குடியிருப்பு வசதியின்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 

              இந்நிலையில் கடந்தாண்டு தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம் மூலம் கடலூர் புதுநகர் மற்றும் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன்கள் வளாகத்தில் 4.67 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டது. அதில் கடலூர் துறைமுகம், கடலூர் புதுநகர், தேவனாம்பட்டினம் ஸ்டேஷன்களில் பணி புரியும் போலீசார்களுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்புகளை கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நடந்த விழாவில் டி.ஐ.ஜி., மாசானமுத்து முன்னிலையில் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். 

               திறப்பு விழாவைத் தொடர்ந்து நகரின் மையப்பகுதியில் உள்ள கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் குடியிருப்பில் குடியேற போலீசாரிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடலூர் துறைமுகத்தில் 1.80 கோடி ரூபாய் செலவில் ஒரு எஸ்.ஐ., மற்றும் 36 போலீசாருக்காக கட்டப்பட்ட குடியிருப்பில் குடியேற எவரும் முன்வரவில்லை. நகரின் கடைகோடியில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாலும், போதிய சாலை வசதி இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

              மேலும், அத்தியாவசிய தேவைக்கு நகருக்கு 2 கி.மீ., தொலைவிற்கு செல்ல வேண்டியுள்ளதாலும், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல சிரமமாக இருப்பதோடு, போக்குவரத்து செலவும் அதிகரிக்கும் என்பதால் இந்த குடியிருப்பில் குடியேற எவரும் விரும்பவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக 1.8 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 37 வீடுகள் கொண்ட இந்த குடியிருப்பில் தற்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். மீதியுள்ள 36 வீடுகள் திறந்து 4 மாதங்களாகியும் எவரும் குடியேறாமல் வீணாகி வருகிறது. 

                4 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனால் தற்போது போலீஸ் குடியிருப்பு இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள மோசமான குடியிருப்பில் உயிரை கையில் பிடித்தபடி போலீசார் வசித்து வரும் நிலையில், இங்கு புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் குடியேற போலீசார் தயக்கம் காட்டி வருவது அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது.

Read more »

கடலூரில் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

கடலூர் : 

             மகளிர் திட்டத்தின் மூலம்  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கடலூர் டவுன் ஹாலில் துவங்கியது.

கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

               இக்கண்காட்சி வரும் 12.1.2011 வரை 29 நாட்கள் காலை முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். மகளிர் குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்களின் விற்பனை செய்யப்படும். கண்காட்சியின் போது மாலை வேளைகளில் பல்வேறு தொழில் முனைவது சம்மந்தமான தொழில் நுட்ப செயல்முறை விளக்கங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

                  22 அரங்குகளில் மகளிர் திட்டம் சார்ந்த தொண்டு நிறுவனங்களும், மகளிர் திட்டம் அல்லாத தொண்டு நிறுவனங்கள் தயார் செய்யப்படும் பொருட்கள் விற்பனையில் இடம் பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் மகளிர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் மழை நிவாரணம்; பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை

நெய்வேலி:
  
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொது செயலாளர் வீர.வன்னியராஜா முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

                அண்மையில் பெய்த கனமழையால் தமிழகம் முழவதும் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளத்தால் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வீடுகள், விவசாய பயிர்கள் சேதம், சாலை போக்குவரத்து மற்றும் கால்நடைகள் பாதிப்பு அடைந்துள்ளன. அரசு,மழையால் பாதிக்கப்பட்ட சேதங்களை கண்டு அறிந்து உடனடியாக போர்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்.  

                 தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மின்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளோடு மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து அந்தந்த மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                  அத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப ரேசன் கார்டுகளுக்கும் தலா ரு.3000 மழை நிவாரண தொகை வழங்க வேண்டும். விவசாயத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15000 நிவாரண தொகையாக அரசு வழங்க வேண்டும். மழையால் பலியான குடும்பங்களுக்கு அரசு வழங்கி உள்ள ரூ.2 லட்சத்தை உயர்த்தி ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Read more »

Call to set up brick-kilns in villages: Health Minister M.R.K. Panneerselvam

CUDDALORE:

           Construction of concrete houses under the Kalaignar Housing Scheme has been going on in a brisk pace all over the State. However, it has put pressure on the availability of bricks. Therefore, villagers should come forward to set up brick-kilns, said Health Minister M.R.K. Panneerselvam.

            He was speaking at a function held at B.Mutlur near here to give away identity cards to beneficiaries under the housing scheme. The Minister said that to encourage brick-making, the government was offering 35 per cent subsidy on the project cost. Setting up more such units would help the authorities tide over the problem of brick shortage, he said. Mr. Pannerselvam also handed over ID cards to 10,429 beneficiaries drawn from 41 villages.

Read more »

Need for sustainable structures stressed: Vice-Chancellor of Anna University Mr. Devadas Manoharan

CUDDALORE:

          “In the wake of several earthquakes and the tsunami, the floodgates have been opened for doing extensive research in the field of structural engineering. Therefore, it is time structural engineers proved their mettle in designing sustainable structures that can withstand natural disasters and suit the local conditions and requirements,” said Devadas Manoharan, Vice-Chancellor of Anna University-Tiruchi.

               He was delivering the valedictory address at the seventh ‘Structural engineering convention—SEC-2010' organised by the Civil and Structural Engineering Department of Annamalai University at Chidambaram.Mr. Manoharan said that a series of earthquakes had inflicted huge losses on human lives and property in the country. In dealing with such a situation, the focus should be on three aspects — before, during and after the disaster. But the authorities seemed to be too concerned with the aftermath. They spent on relief and rehabilitation measures but the first two aspects got either scant or no attention.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior