உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 02, 2011

மறைந்து போனதும் மறந்து போனதும் புதிய தொடர்




          
            தினசரி வாழ்க்கையில் நம் முன்னோர்களின்  பழக்க வழக்கங்கள், பயன்பாட்டு   முறைகள்   இவற்றில்  எதாவது ஒன்றை மறக்கிறோம் அல்லது பயன்பாட்டில் இருந்து மறைந்து விடுகிறது. உதாரணமாக தமிழர் கலாச்சாரம், நாகரீகம் என்ற பெயரில் உடை, உணவு, பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறுகிறது அல்லது மாற்றபடுகிறது, ஒரு தலை முறையினர் பயன்படுத்தியவை அடுத்த தலை    முறையினரால் ஏற்றுகொள்ள முடியாத  அல்லது வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்றாக  இருக்கிறது.


            இந்தமாற்றத்தினை  தவிர்க்க முடியாது அல்லது  மாற்ற முடியாது. ஒரு காலத்தில் சென்னை வானொலி அலைவரிசையைத்தான் நாம் கேட்டு இருப்போம்.  அனால் காலத்தின் மாற்றம் அல்லது அறிவியல் வளர்ச்சியின்  காரணமாக    இன்று பண்பலை அலைவரிசை மக்களால் பயன்படுத்தபட்டு வருகிறது. அனால் இவற்றின் அடிப்படை மக்களின் தேவையே.

                  இது தொடர்பாக வரும் நாட்களில் மறைந்து போனதும் மறந்து போனதும் புதிய தொடர் எழுத உள்ளேன். உங்களது வாழ்கையில் நீங்கள் பயன்படுத்திய ஒன்று இன்று மாற்றம் பெற்று இருக்கலாம் அல்லது   மறைந்து இருக்கலாம் , அவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம், உங்களது கருத்துக்கள் எதிர்பார்த்து  மறைந்து போனதும் மறந்து போனதும் இளமைக்கால  நினைவுகளோடு.............. 

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு பயிலரங்கம்

விருத்தாசலம்:

          விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், பத்து நாள் பயிலரங்கத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

          விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் தமிழ்த் துறை சார்பில், தொல்காப்பிய இலக்கியவியல் கொள்கைககளும் கோட்பாடுகளும் எனும் தலைப்பில் ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜோதிமுருகன் சிறப்புரை ஆற்றினார்.

                விழாவில், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கருணாநிதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமை ஏற்றார். தமிழ்த் துறைத் தலைவர் முத்தழகன், திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் வணங்காமுடி, பேராசிரியர் அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .பேராசிரியர்கள் ராஜசேகர், ராணி, புவனேஷ்வரி, சிவக்குமார், வேணி, சாலமன், மருதமுத்து, ராஜா, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளங்கலை துறைத் தலைவர் தண்டபாணி நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் கெüஷீக கல்வி அறக்கட்டளை சார்பில் "கனவுகள் நனவாக' எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் கெüஷீக சுப்பிரமணியன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறித்த சிந்தனைகளை எடுத்துக்கூறினார் .நிகழ்ச்சியில், பேராசிரியர் சேதுராமன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மனோன்மணி தலைமை ஏற்றார். பேராசிரியர்கள் சுப்பிரமணியன், முத்தழகன், கதிர்வேல், தமிழரசி, தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

சுற்றுச்சூழல் பாதிக்காத "ஏர்கூலர்' கண்டுபிடிப்பு: மதுரை கே.வி., மாணவிக்கு தேசிய விருது



        சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நவீன, "ஏர்கூலர்' உருவாக்கியதற்காக, மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சத்யப்ரியாவுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.

             மதுரையில், பள்ளியளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், சத்யப்ரியாவின் படைப்பு, பார்ப்போரை கவர்ந்தது. எனவே, மண்டல போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார். அடுத்ததாக, டில்லியில் நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி போட்டியில் இவரது படைப்பு போற்றப்பட்டது. மொத்தம், 18 மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

                இதிலிருந்து ஐந்து சிறந்த மாதிரிகள், ஜெய்ப்பூரில் நடந்த, 37வது ஜவகர்லால் நேரு தேசிய அறிவியல் கண்காட்சியில் (குழந்தைகளுக்கானது) இடம்பெற்றன. அதில், இவரது படைப்பும் இடம்பெற்றது; தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த குழந்தைகள் அறிவியல் காங்கிரசிலும் பங்கேற்றார்.

சத்யப்ரியா கூறியதாவது:

           "ஏசி'யை பயன்படுத்துவதால் குளோரோ புளூரோ கார்பன்களின் அளவு அதிகரிக்கிறது. ஏர்கூலர் மூலம் ஓசோனில் மாற்றம் ஏற்படுகிறது. "ஏசி'க்கு மாற்றாக, அதே நேரம் ஏர்கூலரை புதிய விதமாக மாற்ற முயற்சித்தேன். களிமண் பானை, டியூப்கள், மின்விசிறி, தாமிர டியூப்கள் இவற்றின் மூலம் நவீன ஏர்கூலரை உருவாக்கினேன். 

                 வெட்டிவேர் மற்றும் நமக்குப் பிடித்தமான மூலிகைகளை ஏர்கூலரில் அடைத்தால், வெளியேறும் காற்று நறுமணமாக இருக்கும். 20 முதல் 30 டிகிரி வெப்பநிலையே இருப்பதால், உடலுக்கு இதமாக இருக்கும்.இந்த காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, அலர்ஜி ஏற்படாது. 

              குறைந்தபட்சம், 80 வாட்ஸ் மின்சாரம் போதும். 2,500 முதல் 3,500 ரூபாய்க்குள் செய்து விடலாம். சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் தீங்கில்லாத இந்த ஏர்கூலருக்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.இவ்வாறு சத்யப்ரியா கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கரும்பு பயிரிட விவசாயிகள்

நெல்லிக்குப்பம் : 

           நெல் விலை குறைந்துள்ளதாலும், புதிய தொழில் நுட்பங்கள் காரணமாக ஆட்கள் தேவை குறைந்துள்ளதால் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

              மாவட்டத்தில் நான்கு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளுக்கு சப்ளை செய்ய ஆயிரக்கணக்கான விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வந்தனர். கரும்பு பயிரிட ஆட்கள் அதிகம் தேவை. ஆனால் விவசாய தொழிலுக்கு ஆட்கள் வருவது குறைந்ததால் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை தவிர்த்தனர். பல விவசாயிகள் நெல் பயிரிடத் துவங்கினர். நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்கள் பயன்படுத்தத் துவங்கியதால் ஆட்கள் தேவை குறைந்தது. 

            இன்னும் சில விவசாயிகள் ஆட்கள் பிரச்னை காரணமாக நல்ல மகசூல் கிடைக்கும் நிலங்களில் கூட சவுக்கு பயிரிடத் துவங்கியதால் கடந்த மூன்றாண்டுகளாக மாவட்டத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு வெகுவாக குறைந்தது. இரண்டு ஆண்டுகளாக நெல்லுக்கு நல்ல விலை கிடைத்ததால் கரும்பு நடவு குறைந்தது. இதனால் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யத் துவங்கினர். 

              மேலும், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டால், ஆட்கள் தேவை குறைவதோடு, குறைந்த பரப்பளவில் அதிக கரும்பு பயிரிட முடியும். அதன் மூலம் அதிகம் லாபம் ஈட்ட முடியும் என்பதை சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகள் மத்தியில் பல்வேறு முகாம்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நெல் விலை திடீரென குறைந்துள்ளது. அதேபோன்று ஒன்னரை லட்சம் ரூபாய்க்கு விலைபோன ஒரு ஏக்கர் சவுக்கை மரம் தற்போது 80 ஆயிரம் ரூபாயாக குறைந்தது. 

              இதனால் விவசாயிகள் பலர் தற்போது கரும்பு பயிரிட ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். கரும்பு பயிரிட வங்கியில் சுலபமாக கடன் கிடைப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதன்படி நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4,500 ஏக்கர் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று மற்ற மூன்று சர்க்கரை ஆலை பகுதிகளிலும் கரும்பு பயிரிடுவது அதிகரித்துள்ளது. இதனால் வரும் நான்கு ஆண்டிற்கு சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான கரும்பு கிடைப்பது உறுதியாகியுள்ளது.

ஆலை நிர்வாகம் முறைப்படுத்துமா? : 

              எளிதாக வங்கிக் கடன் கிடைப்பதாலும், புதிய தொழில் நுட்பங்களால் ஆட்கள் தேவை குறைந்துள்ளதாலும், நிலையான வருவாய் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் போட்டி போட்டுக் கொண்டு கரும்பு பயிரிடுகின்றனர். கரும்பை நடவு செய்த 12 மாதத்தில் வெட்டி ஆலைக்கு அனுப்பினால் மட்டுமே லாபம் கிடைக்கும். 

            12 மாதத்திற்கு மேலாகி வெட்டினால், கரும்பின் பிழிதிறன் குறைவதோடு, லாபமும் குறையும். அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளதால், 12 மாதத்தில் ஆலை நிர்வாகம் "கட்டிங் ஆர்டர்' (அறுவடை செய்ய) வழங்குமா என விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். இதனைத் தவிர்த்திட, ஒவ்வொரு மாதத்திற்கும் ஆலைக்குத் தேவையான அளவு பரப்பளவில் மட்டும் கரும்பு நடவு செய்ய அனுமதித்தால் வரும் ஆண்டு அறுவடை உத்தரவு வழங்குவதில் பிரச்னை இருக்காது. 

            ஆனால், ஆலை நிர்வாகம் இந்த விஷயதத்தில் கவனம் செலுத்தாமல், அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்தால் போதும் என செயல்படுவதால் "கட்டிங் ஆர்டர்' கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

Read more »

Sports event inaugurated At Cuddalore Anna Stadium

CUDDALORE: 

       Collector P. Seetharaman inaugurated a State-level field event for school students at Anna Stadium here on Tuesday. The event was organised by the Tamil Nadu Sports Development Authority and the Nagarjuna Oil Corporation Ltd. Mr. Seetharaman said the winners would get cash awards of Rs. 400, Rs. 200 and Rs. 150 and participate in a national-level event to be held at Srikakulam in Andhra Pradesh.

Read more »

Photo session for ID cards begins

CUDDALORE: 

           The exercise of taking photographs of self-help group members for issuing identity cards began in Cuddalore district on Tuesday.

        In a statement here, Collector P. Seetharaman said that the photo session would be held to cover the members of 4,564 SHGs started under the aegis of the ‘Mahalir Thittam' and ‘Vazhnthu Kattuvom Thittam' after April 1, 2009.

While the SHGs in Cuddalore were covered on Tuesday, the schedule for other areas is as follows: 

Anna Gramam – February 2; 
Panruti –February 3;
Khammapuram –February 4;
Prangipettai – February 5; 
Nallur and Vriddhachalam – February 6; 
Kurinjipadi – February 7; 
Keerapalayam – February 8; 
Bhuvanagiri – February 9; 
Kattumannarkoil – February 10; 
Mangalore – February 11 and
Kumaratchi – February 12.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior