உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. செல்வாக்கு - ஒரு அலசல்

கடலூர்:
             கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்று, அக்கட்சியின் முதல் பிரதிநிதியாக சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப் பட்டார்.  
             விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. என்ற மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இதில் அவரை அடுத்து வந்த பா.ம.க. வேட்பாளர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமியை விட 13,777 வாக்குகள் அதிகம் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடத்தைப் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் காசிநாதன் 35,876 வாக்குகளைப் பெற்றார்.  
                இந்தத் தொகுதியில் பா.ம.க.வில் வேறு வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருந்தாலோ, தி.மு.க.வுக்கு ஒதுக்கி இருந்தாலோ விஜயகாந்த் வெற்றி பெற்று இருக்க முடியாது என்று அப்போது கூறப்பட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். எனவே இந்தத் தேர்தலிலும் மும்முனைப்போட்டி உறுதியாகி விட்டது.  

                கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் 61,337 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் எம்.சி. தாமோரன் 13,914 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். இதில் இருந்து பார்க்கும்போது விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. செல்வாக்கு வளர்ந்து இருப்பதாகக் கணக்கில் கொள்ள முடியாது.  
              கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிட்டது. பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்ற 30,133 வாக்குகள் உள்பட கடந்த தேர்தலில் கடலூர் மாவட்டம் முழுவதிலும் தே.மு.தி.க. 1,41,574 வாக்குகள் பெற்றுள்ளன. இது பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 8 சதவீதம் ஆகும்.  கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற தே.மு.தி.க.வுக்கு, இந்தத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 
                 கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. வுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவே விஜயகாந்த் சார்ந்துள்ள அ.தி.மு.க. கூட்டணி கருதுகிறது.  தனித்து கடலூர் மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு பெற்ற வாக்குளைவிட, கூட்டணியில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்குமா அல்லது அது அ.தி.மு.க. கூட்டணிக்குக் கைகொடுக்குமா? தனித்துப் போட்டியிடுவதைவிட, கூட்டணியில் போட்டியிடுவதால் வாக்குகள் குறையுமா கூடுமா என்பதை வர இருக்கும் தேர்தல்தான் தீர்மானிக்கும்.  
                       எனினும் தே.மு.தி.க. ஒரு கூட்டணியில் சேர்ந்து விட்டதால் தனிப்பட்ட முறையில் அந்தக் கட்சி பெறும் வாக்குகளைத் தீர்மானிக்க முடியாது. அது அந்தக் கூட்டணியின் வெற்றி தோல்வியைப் பொறுத்ததாகவே அமையும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில்முந்திரி மகசூல் அமோகம்


கடலூர் அருகே ராமாபுரத்தில் பூவும் பிஞ்சுமாக பூத்துக் குலுங்கும் முந்திரி.
 
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் தற்போது முந்திரி மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கும் நிலை, பார்ப்போர் கண்களுக்கு இதமாகவும், விவசாயிகள் மனதில் மகிழ்ச்சி பொங்கும் விதமாகவும் உள்ளது.  கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. பண்ருட்டி பகுதியில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கரில் முந்திரி பயிரிடப்பட்டு உள்ளது.  ஒரு காலத்தில் முழுவதும் மானாவாரிப் பயிராக இருந்த முந்திரி சாகுபடி இன்று, இறவைப் பயிராகவும், பல்வேறு உயர் விளைச்சல் தரும் ஒட்டு ரகங்களை பயிரிட்டு மகசூலை அதிகரிக்கும் வணிகப் பயிராகவும் மாறியிருக்கிறது.  

                 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்திரி மரங்கள் பூக்கத் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் அறுவடை தொடங்கி, ஜூன் முதல் வாரத்தில் அறுவடை முடிந்து விடும்.  மே மாதத்தில் அறுவடை உச்ச நிலையில் இருக்கும். ஜனவரி மாதத்தில் மழை இருந்தால் முந்திரி மரங்கள் பூப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மழை இல்லாததால், தற்போது எங்கு பார்த்தாலும் முந்திரி மரங்கள் பூவும் பிஞ்சுமாகக் காட்சி அளிப்பது மனதுக்கு ரம்மியமான தோற்றம்.  

                விவசாயிகளைப் பொருத்தவரை இந்த ஆண்டு முந்திரி மகசூல் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு அறுவடை தொடங்கும் நேரத்தில் பெய்த மழையால் முந்திரி மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.  விளைந்த முந்திரிக் கொட்டைகள், மரங்களின் அருகே தேங்கிய நீரில் விழுந்து, முந்திரிக் கொட்டையின் தரத்தை சேதப்படுத்திய நிலை இருந்தது.  முந்திரி பூக்கும் காலத்தில் அதிகமாக பனி பெய்தால், பூங்சாணம் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் பெருமளவு பாதிக்கும். 

           ஆனால் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகம் இல்லாததால், முந்திரி மரங்கள் பாதிப்பில் இருந்து தப்பியதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில் மானாவாரி முந்திரி மகசூல் ஏக்கருக்கு 4 முதல் 5 மூட்டைகள் (80 கிலோ) வரையிலும், இறவை மற்றும் ஒட்டுரக முந்திரியில் மகசூல் அதிகம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.  எனவே இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் டன்னுக்கு மேல் முந்திரிக் கொட்டை கிடைக்கும் என்று, விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.  

இது குறித்து வேளாண் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் கூறுகையில்,

              "கடந்த ஆண்டைக் காட்டிலும், இவ்வாண்டு முந்திரி மரங்கள் வளமாகப் பூத்து இருக்கின்றன. இதுவரை பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் இன்றி நன்றாக உள்ளன. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், கடலூர் மாவட்டத்தில் முந்திரி மகசூல் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முந்திரிக் கொட்டை விலை தற்போது மூட்டை ரூ. 7 ஆயிரமாக உள்ளது.  முந்திரி ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அரசு நிதி உதவி மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் காட்டாண்டிக்குப்பத்தில், முந்திரி ஏற்றுமதி மையம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.  

           இங்கு முந்திரிக் கொட்டைகளை உடைத்து பதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் உள்ளிட்ட வசதிகள்  உள்ளன.  ÷கொட்டையை உடைத்து பதப்படுத்தும் தொழில் கடலூர் மாவட்டக் கிராமங்களில் குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது என்றார்.  

பத்திரக்கோட்டை விவசாயி தேவராசு கூறுகையில் 

               "முந்திரி விவசாயத்தில் போதிய லாபம் இல்லை. தற்போது செலவு அதிகம். ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் செலவு.  ÷மகசூல் வரவு ரூ. 20 ஆயிரம்தான். வேலைக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. வெளி மாநிலத்தினர் வந்து இங்கு முந்திரி பதப்படுத்தும் தொழில் செய்வதால், முந்திரி ஏற்றுமதி மையமும் சரியாக செயல்படவில்லை'  என்றார்.  

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர்-2010 ல்,தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, கீழ்கண்ட இன்டெர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச் 23-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.  

இன்டர்நெட் முகவரிகள்:
 

  ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்:

 சிதம்பரம் கோடு எண்: 04144 -237356 /237357/237357/ 237358/237359. 

               மேலும் மொபைல் போனில் RCQ Enr.no RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.  

வெளியிடப்படும் முடிவுகள்

           பி.ஏ.(அனைத்துப் பிரிவுகள்), பி.எஸ்சி.(அனைத்துப் பிரிவுகள்), பி.காம்(அனைத்துப் பிரிவுகள்), பி.பி.ஏ(அனைத்துப் பிரிவுகள்), பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியூசிக்.,பி.டான்ஸ்.,பி.பி.எல்.,பி.சி.ஏ.,எம்.பி.ஏ.(ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட்),எம்.எஸ்சி(கெமிஸ்டரி),எம்.ஹெச்.எஸ்சி(டையாபட்டாலஜி), பிரிவென்டிவ் கார்டியாலஜி., எம்.ஃபில் (ஆங்கிலம்,வரலாறு), கடல்வாழ் உயிரியல் மற்றும் பிஜி டிப்ளமா,டிப்ளமா,சான்றிதழ் வகுப்புகள்.

Read more »

மாணவர்கள் சமுதாயத்திற்கு உழைக்க முன்வர வேண்டும் : அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

பண்ருட்டி : 

             ""கல்லூரி மாணவர்கள் சமுதாய பங்களிப்புடன் செயல்பட வேண்டும்'' என திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் பேசினார். 

             பண்ருட்டி அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கட்டடத்துறை உதவி பேராசிரியர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அண்ணா பொறியியல் கல்லூரி பதிவாளர் ராஜா முன்னிலை வகித்தார். புலமுதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் சென்னை கிண்டி பொறியியல் ஆய்வுத்துறை விஞ்ஞானி நீலமேகம், அண்ணா பொறியியல் கல்லூரி தனி அலுவலர் வெங்கடேசன், ஜேக் அசோசியேஷன் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

விழாவில் திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் தொழில் நுட்ப படைப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது :

             மாணவர்கள் கடமைக்காக படிக்க வேண்டும் என்பது போல் இல்லாமல் சமுதாயத்திற்காக உழைக்க முன்வர வேண்டும். எல்லா மனிதர்களும் உழைக்கின்றனர். ஆனால் சில மனிதர்கள் மட்டும் பயன் பெறுகின்றனர் என கூறுவதுண்டு. யார் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்களோ அவர்கள் முழு பயன்பெறுவர். கட்டுமானத் துறை, பொறியியல் துறை, தகவல் தொழில் நுட்பம் ஆகியவை வளர்ந்துள்ளது.
             உலகத்தில் பூமி வெப்பமயமாதல், மக்கள் தொகை பெருக்கம், கனிம வளங்கள் குறைந்து வருவது ஆகியவைற்றை தடுக்கா விடில் நோய் வருவதை தடுக்கவே முடியாது. அதற்கு மாற்றுத் திட்டம், ஆய்வுகள் செய்ய வேண்டியது அவசியம். சமுதாயத்தின் விளை பொருளாக இருந்த கல்வி அறிவு தற்போது பொருளாதாரம் ஈட்டுவதாக உள்ளது. இங்கு தேசிய அளவிலான முதலாவது கருத்தரங்கில் 400 ஆய்வு கட்டுரையில் 120 தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

              மாணவர்கள் பொறியியல் பிரிவில் மட்டும் சாதிக்க வேண்டும் என்பதில்லை. சமுதாய தலைவர்களாகவும், தொழில் முனைவர்களாகவும் சமுதாய பங்களிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் பேசினார்.

Read more »

பண்ருட்டியில் உற்பத்தி இல்லாததால் முந்திரி விலை உயர்வு

பண்ருட்டி : 

          கச்சா முந்திரி கையிருப்பு இல்லாமல், புதிய உற்பத்தி துவங்காததால் முந்திரி பயிர்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்திய அளவில் முந்திரி உற்பத்தி குறைந்து வருவதால் இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, ஐவரிகோஸ்ட், பெனில், கானா, தான்சேனியா ஆகிய நாடுகளில் இருந்து கச்சா முந்திரி இறக்குமதி செய்யப்பட்டு பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இறக்குமதி முந்திரி கொட்டை வரத்து குறைந்தது. ஒரு ஆண்டில் 6 லட்சம் மெட்ரிக் டன் அளவில் கச்சா முந்திரி ஏற்றுமதி செய்யும், ஐவேரிகோஸ்ட்டில் அந்நாட்டு ஏற்பட்டுள்ள உள் நாட்டு கலவரம் காரணமாக, இந்தியாவிற்கு வரும் இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்நிலையில் போதிய அளவில் கச்சா முந்திரி கையிருப்பில் இல்லாததால் முந்திரி பயிர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

                  தற்போது கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் தேனி, கன்னியாகுமரியில் முந்திரி அறுவடை சீசன் துவங்கினாலும் தினமும் இரண்டு லாரிகள் அளவில் மட்டும் வருகிறது. ஈர முந்திரி விலை ஒரு கிலோ 80 அளவிலும், 80 கிலோ எடை கொண்ட காய்ந்த கொட்டை 7,200 ஆக நிலைத்துள்ளது. அதனால் 240 ரகம் 420ல் இருந்து 450 ரூபாயாகவும், 320 ரகம் 370ல் இருந்து 420ஆகவும், பட்ஸ் ரகம் 330ல் இருந்து 350ம், பத்தை 370ல் இருந்து 400ம், எல்.டபிள்யூபி ரகம் 320ல் இருந்து 340ம், எஸ்.டபிள்யூபி ரகம் 250ல் இருந்து 280ஆகவும், ஆவரேஜ் பயிர் 350 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பண்ருட்டி பகுதியில் தற்போது முந்திரி உற்பத்தி சீசன் நன்றாக உள்ளதால் இன்னும் 25 நாட்களில் முந்திரி வரத்து துவங்கியதும், விலைகள் வெகுவாக குறையும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்: 375 பேருக்கு பணியானை

பண்ருட்டி : 

       அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் "கேம்பஸ்' இண்டர்வியூ மூலம் 375 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

             பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் "கேம்பஸ் இன்டர்வியூ' முகாம் நடந்தது. முகாமில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் டெல்பி டி.வி.எஸ்., நிறுவனம், சி.ஆர்.பி., டிராக்டர் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட், டால்மியா இந்தியா லிமிடெட் நிறுவனம், நாகார்ஜூனா கெமிக்கல் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். 

                  இதில் சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஆகிய பிரிவுகளில் 375 மாணவ, மாணவிகள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களை கல்லூரி செயலர் ரெஜினாள், முதல்வர் சவரிராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

கடலூர் வழியாக திருவாரூர் செல்கிறார் முதல் அமைச்சர் கருணாநிதி

             
              தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் புதன்கிழமை (23.03.2011) மாலை தொடங்கி வைக்கிறார். இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு    ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

             தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதல் அமைச்சர் கருணாநிதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு அவர் புதுச்சேரி, கடலூர் வழியாக திருவாரூர் செல்கிறார். மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அதில் முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். வியாழக்கிழமை காலை திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.


Read more »

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது

            பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு 21-ந் தேதியுடன் (திங்கட்கிழமை) முடிவடைந்தது. இதர பிரிவு மாணவர்களுக்கு வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

             இந்த நிலையில், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 43 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகளின் விடைத்தாள்கள் ஒவ்வொன்றாக திருத்தப்படும்.  விடைத்தாள்களை மதிப்பீடும் செய்யும் பணி ஏப்ரல் மாதம் 9-ந் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறையினர் தெரிவித்தனர்.

Read more »

என்.எல்.சி. அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிரடி

              நெய்வேலியில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

              கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்ததுடன், மத்திய தேர்தல் பார்வையாளர்களும் வந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்தநிலையில், சி.பி.ஐ. அதிகாரிகளின் வருகை அங்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

               நேற்று காலை 10.30 மணிக்கு 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 22 நபர்களை கொண்ட சி.பி.ஐ. குழுவினர் ரகசிய தகவலின் பேரில் நெய்வேலிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் ஒரு செயல் இயக்குநர் மற்றும் ஒரு பொது மேலாளர் அலுவலகங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள நெய்வேலி நிலக்கிரி நிறுவன காண்டிராக்டர் ஒருவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

                பின்னர் பிற்பகலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை இரவு விடிய, விடிய நீடித்தது. என்.எல்.சி. வரலாற்றில் அதிக நபர்களை கொண்ட சி.பி.ஐ.குழு விசாரணை நடத்தியது இதுவே முதல்முறையாகும். இந்த திடீர் சோதனையால் என்.எல்.சி. உயர்அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. என்.எல்.சி. அதிகாரிகள் மீதான புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

                   சோதனை விடிய விடிய நேற்று நடந்ததாகவும் சோதனை முடிந்த பிறகுதான் இதுபற்றிய விவரங்களை சொல்லமுடியும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more »

The Election Commission has issued certain Guidelines to work out expenditure of star campaigners

CUDDALORE:

          The Election Commission has issued certain guidelines to be followed by the returning officers on how to calculate the expenditure incurred on the mode of transport, public rally and propaganda materials during the visit of star campaigners (top leaders of political parties), according to P.Seetharaman, District Election Officer and Collector.

           In a statement issued here, Mr. Seetharaman said that as per Section 77 of the Representation of Peoples Act 1951, the expenditure incurred by leaders of a political party on account of travel by air or by any other means shall not be deemed to be poll expenditure of a candidate.

              A recognised political party could give a list of 40 persons and a registered but unrecognised party a list of 20 persons to the Chief Electoral Officer and the Election Commission of India within seven days of the notification of the elections, and such political leaders would be known as star campaigners. In the event of a public rally or meeting, if the candidate or his/her election agent shares the dais with the star campaigner, then the entire expenditure on that rally, other than the travel expenses of the star campaigner, should be added to the candidate's expenses.

            If the candidate is not present on the dais but banners and posters with the name of the candidate or the photographs of the candidate are displayed at the venue or the name of the candidate mentioned by the star campaigner, then the entire expenditure on the rally, other than travel expenses of the star campaigner, would be added to the candidate's election expenses. If there is more than one candidate sharing the dais or displaying banners or posters with their names at the venue, then the expenses on such a rally should be equally divided among all such candidates.

          The Returning Officer (RO) concerned should pass on information about other candidates present in the rally to the respective ROs for making necessary entry of expenditure in the Shadow Observation Register of such candidates. In the view of the Election Commission, one of the major items of election expense is by way of hiring helicopters and aircraft. As per the Commission's instructions, if the star campaigner of a political party has been intimated to the CEO/Commission within seven days of poll notification, then the travel expenses of the star campaigner would not be added to the expenditure of the candidate.

           If the candidate or any of his representative or family member or leader of a political party other than the notified star campaigner is sharing the transport facility with the star campaigner, then 50 per cent of the expenditure would be added to the candidate's expenses. If more than one candidate is sharing the facilities then 50 per cent of the travel expenditure should be apportioned among those candidates. If a star campaigner of an allied party attends the rally and takes the name of the candidate or shares the dais with the candidate, then the travel expense of that campaigner of allied party up to the constituency is not exempt and should be added to the candidate's expenses.

Read more »

Remedial teaching should be made an integral part of curriculum - Said Y.N.Sridhar, Mysore University


Y.N.Sridhar, Professor of Education, Mysore University (third from right), releasing a monograph of a national seminar. M. Ramanathan, Vice-Chancellor of Annamalai University in Chidambaram, is in the picture.


CUDDALORE: 

           Remedial teaching should be made an integral part of the curriculum from the primary to the college level. In this endeavour the role of the students, teachers and parents is equally important, said Y.N.Sridhar, Professor of Education, Mysore University.

             He was delivering the special address at the University Grants Commission-sponsored national seminar on “Key concerns and issues in remedial teaching” organised under the aegis of the Department of Education of Annamalai University at Chidambaram on Monday.

          Mr. Sridhar said that a strong foundation ought to be laid for remedial teaching at the primary level itself and if there are lapses on this score the carry-over effect would be felt at the subsequent secondary, high school and higher education levels. He said that no stigma need be attached to remedial teaching as it was in vogue even in the developed countries such as the US and Canada. Remedial teaching was meant for those students whose causes for deficiency in learning was extrinsic such as poverty and insufficient accessibility to resources, and, not intrinsic as in the case of differently-abled children.

           Mr. Sridhar said that some educators preferred to use the term “developmental education” instead of “remedial education.” He underscored the point that since “remedy” was a medical lexicon there should be proper diagnosis before proceeding with this type of teaching. He said that since the aptitude and sociological background would vary from student to student, the concept of remedial teaching could not be universally applied but should be tailor-made to suit the individual needs.

           Vice-Chancellor M.Ramanathan decried the attitude of the teachers to look down upon those students who did not fare well in studies. They used to avoid students getting lower grades or trouble-makers. Dr Ramanathan said that marks should not be the sole criterion for judging the knowledge and capacity level of students, as even the poor performers in the classes might turn out to be big achievers later. Instead of concentrating on didactic teaching they should try out the activity based teaching methodology, Dr Ramanathan said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior