உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 28, 2009

ஆட்டோ ஓட்​டு​நர்​கள் ஸ்டி​ரைக்

கட ​லூர்,​ நவ.27: ​

கட​லூ​ரில் ஆட்டோ ஓட்​டு​நர்​கள் வெள்​ளிக்​கி​ழமை வேலை நிறுத்​தம் செய்​த​னர். கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். வேலை நிறுத்​தம் கார​ண​மாக பள்ளி மாண​வர்​கள் பெரி​தும் பாதிக்​கப் பட்​ட​னர். ​÷ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும்,​ திருப்​பாப்பு​லி​யூர் பஸ் நிலை​யத்​தில் ஆட்​டோக்​கள் நிறுத்த அனு​ம​திக்க வேண்​டும்.
உ​டல் ஊன​முற்​ற​வர்​கள்,​ நோயா​ளி​கள் போன்​ற​வர்​களை பஸ்​நி​லை​யத்​துக்​குள் ஆட்​டோக்​க​ளில் கொண்​டு​விட அனு​ம​திக்க வேண்​டும். வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​ல​கத்​தில் ஆட்​டோக்​க​ளுக்கு அதிக அள​வில் பெர்​மிட் கொடுப்​பதை நிறுத்த வேண்​டும் என்ற கோரிக்​கைளை வலி​யு​றுத்தி வெள்​ளிக்​கி​ழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ரிக்​ஷாக்​கள் வேலை​நி​றுத்​தம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது. ​ இ​த​னால் கட​லூ​ரில் 2 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட ஆட்​டோக்​கள் இயங்க வில்லை. வேலை​நி​றுத்​தம் செய்த ஆட்டோ ஓட்​டு​நர்​கள்,​ உழ​வர் சந்தை அரு​கில் இருந்து ஊர்​வ​ல​மா​கப் புறப்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை அடைந்​த​னர். அங்கு ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர். ​ க​ட​லூ​ரில் ஆட்​டோக்​கள் ஓடா​த​தால் பள்​ளி​க​ளுக்​குச் செல்​லும் மாண​வர்​கள் பெரி​தும் அவ​திப்​பட்​ட​னர். வாகன வசதி உள்ள பெற்​றோர் பலர் தங்​கள் குழந்​தை​களை இரு சக்​கர வாக​னங்​க​ளில் அழைத்​துச் சென்​ற​னர். பஸ்​க​ளில் கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​பட்து. சில பஸ்​க​ளில் கூரை மீதும் பய​ணம் செய்​த​னர்.

Read more »

மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிப்பு

கட ​லூர்,​ நவ.27:

கட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிக்​கப்​பட்​டது.வி​டு​த ​லைச் சிறுத்​கைள் கட்சி அலு​வ​ல​கத்​தில் நடந்த இந்த நிகழ்ச்​சி​யில் இலங்​கை​யில் ஈழத்​த​மி​ழர் போராட்​டத்​தில் இறந்​த​வர்​க​ளின் படங்​களை வைத்து மெழு​கு​வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்​தி​னர். ​நி​கழ்ச்​ சிக்கு,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்ட துணைச் செய​லா​ளர் அறி​வு​டை​நம்பி தலைமை வகித்​தார். மாவட்​டத் துணைச் செலா​ளர் திரு​மேனி முன்​னிலை வகித்​தார்.ம​றைந்த வீரர்​க​ளுக்கு நக​ராட்சி துணைத் தலை​வர் தாம​ரைச் செல்​வன்,​ மெழு​கு​வர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்​தி​னார்.

Read more »

மருத்துவ சமூகத்தின் முப்​பெ​ரும் விழா

பண் ​ருட்டி,​ நவ.27: ​

தமிழ்​நாடு மருத்​து​வர் சமூக நல சங்​கத்​தின் கட​லூர் மாவட்​டம் வடக்கு மாநில பொதுக் குழு தீர்​மான விளக்​கக் கூட்​டம்,​ செயற்​குழு கூட்​டம்,​ முத​லாம் ஆண்டு கொடி​யேற்று விழா ஆகிய முப்​பெ​ரும் விழா காடாம்பு​லி​யூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது. மா​நில துணைத் தலை​வர் என்.ராஜ​மா​ணிக்​கம் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில்,​ மா​வட்​டச் செய​லர் கே.முரு​க​தாஸ்,​ பொரு​ளா​ளர் எஸ்.சுந்​த​ர​பாலு ​ வர​வேற்​ற​னர். மாநி​லத் தலை​வர் எம்.நடே​ச​னார், பொது செய​லர் எம்.ஜி.பாக்​ய​நா​த​னார்,​ ஆகி​யோர் ​பேசி​னர்.

Read more »

சாலை விபத்​தில் வியா​பாரி சாவு

கட​லூர்,​ நவ.27: ​

கட​லூர் அருகே வெள்​ளிக்​கி​ழமை நிகழ்ந்த சாலை விபத்​தில் சவுக்கு வியா​பாரி ஆறு​மு​கம் ​(49) இறந்​தார். ​க ​ட​லூரை அடுத்த குடி​காடு கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் ஆறு​மு​கம். சவுககுத் தோப்​பில் மரங்​களை வாங்கி விற்​பனை செய்து வந்​தார். ​வெள் ​ளிக்​கி​ழமை காலை அவர் தனது மகன் தமி​ழ​ர​ச​னு​டன் ​(19) மோட்​டார் சைக்​கி​ளில் கட​லூரை அடுத்த கன்​னி​கோயி​லில் பெட்​ரோல் நிரப்​பச் சென்​றார். பெட்​ரோல் நிரப்​பி​விட்டு கட​லூர் திரும்​பு​கை​யில் மோட்​டார் சைக்​கிள் வேனு​டன் மோதி விபத்​துக்கு உள்​ளா​னது. ​இதில ஆறு​மு​க​மும்,​ தமி​ழ​ர​ச​னும் பலத்​தக் காயம் அடைந்​த​னர். இரு​வ​ரை​யும் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னைக்​குக் கொண்டு வந்​த​னர். ம ​ருத்​து​வர்​கள் சோதித்​துப் பார்த்து ஆறு​மு​கம் இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​த​னர். தமி​ழ​ர​சன் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கி​றார்.

Read more »

லாரி மோதி மாண​வன் சாவு

சிதம் ​ப​ரம்,​ நவ.27:​

சிதம்​ப​ரம் அருகே லாரி மோதிய விபத்​தில் பள்ளி மாண​வர் இறந்​தார். படு​கா​ய​ம​டைந்த மற்​றொரு மாண​வர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கி​றார். சி​தம்​ப​ரத்தை அடுத்த புவ​ன​கிரி அருகே உள்ள கீழ​ம​ணக்​குடி கிரா​மத்​தைச் சேர்ந்த சின்​ன​சா​மி​யின் மகன் சிவ​பா​லன் ​(16), இவ​ரும் புவ​ன​கி​ரி​யைச் சேர்ந்த சந்​தி​ர​நாத் ​(16) ஆகிய இரு​வ​ரும் அரசு ஆண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் படித்து வரு​கின்​ற​னர். வி​யா​ழக்​கி​ழமை மதி​யம் பெரு​மாத்​தூ​ரில் உள்ள ஹோட்​டல் ஒன்​றில் சாப்​பி​டு​வ​தற்​காக சைக்​கி​ளில் சென்​றுக் கொண்​டி​ருந்​த​னர்,​ அப்​போது சிதம்​ப​ரம் நோக்கி வந்த லாரி ஒன்று அவர்​க​ளது சைக்​கிள் மீது மோதி​யது.÷இவ் விபத்​தில் படு​கா​ய​ம​டைந்த மாண​வர் சிவ​பா​லன் மருத்​து​வ​ம​னைக்கு செல்​லும் வழி​யி​லேயே இறந்​தார். சந்​தி​ர​நாத் சிதம்​ப​ரம் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு​கி​றார். இது குறித்து புவ​ன​கிரி போலீ​ஸôர் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர்.

Read more »

கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் கவ​னத்​திற்கு

நெய்வேலி,​ நவ. 27: ​

விருத்​தா​ச​லம் வட்​டா​ரத்​தில் தற்​போது வட​கி​ழக்​குப் பரு​வ​மழை கார​ண​மாக கனத்த மழை பெய்​துள்​ளது.


இந்த கன​ம​ழை​யால் சம்பா நெற்​ப​யிர்​கள் வெவ்​வேறு நிலை​யில் பாதிக்​கப்​பட வாய்ப்​புள்​ளது. ம ​ழை​நீர் வடிந்த பின் பயிர்​கள் பாதிக்​கப்​ப​டும் நிலை​யில் கீழ்​கண்ட பரிந்​து​ரை​களை கடை​பி​டிக்​க​வேண்​டு​மென விருத்​தா​ச​லம் வேளாண் உதவ இயக்​கு​நர் இ.அன்​ப​ழ​கன் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.÷அ​தன்​படி சில பகு​தி​க​ளில் மழை​யால் சம்பா இள​ந​டவு பாதிக்​கப்​பட்டு பயிர்​கள் கரைந்து ஆங்​காங்கே திட்​டுத் திட்​டா​கக் காலி​யாக காணப்​ப​டும். நாற்​று​கள் கைவ​சம் இருப்​பின் அதே ரகத்​தைக் கொண்டு,​ பயி​ரைக் கலைத்து நடவு செய்து பயிர் எண்​ணிக்​கை​யைப் பரா​ம​ரிக்க வேண்​டும். நீர் தேங்​கி​யுள்ள வயல்​க​ளில் உட​ன​டி​யாக நீரை வடிக்க வாய்ப்​பில்​லா​மல் பயிர் பாதி​ய​ளவு நீரில் மூழ்​கி​யி​ருக்​கும் நிலை​யில் துத்​த​நா​கம்,​ தழைச்​சத்து இல்​லா​மல் பயிர் மஞ்​சள் மற்​றும் பழுப்பு நிற​மாக வாய்ப்​புள்​ளது. ஏக்​க​ருக்கு 2 கிலோ யூரியா,​ 1 கி.சிங்க்​சல்​பேட்,​ 200 லிட்​டர் நீரில் கலந்து கைத் தெளிப்​பான் உத​வி​யு​டன் பயிர்​க​ளின் இலை​யின் மீது உட​ன​டி​யாக தெளிக்​க​வேண்​டும் என்​பன உள்​ளிட்ட பல்​வேறு ஆலோ​ச​னை​களை அன்​ப​ழன் தெரி​வித்​துள்​ளார்.

Read more »

6 மாத​மாக ஊதி​யம் இல்லை: பள்ளி துப்​பு​ரவு ஊழி​யர்​க​ள் வருத்தம்

கட​லூர்,​ நவ.27:​

கட​லூர் மாவட்​டத்​தில் அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​யும் துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு ​​ கடந்த 6 மாத​மாக ஊதி​யம் கிடைக்​க​வில்லை. ​ த​மி​ழ​கம் முழு​வ​தும் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் உ.யர்​நிலை,​ மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் துப்​பு​ரவு ஊழி​யர்​கள் பகு​தி​நே​ரம் மற்​றும் முழு​நே​ரப் பணி​யில் நிய​மிக்​கப்​பட்டு பணி​பு​ரி​கி​றார்​கள். நி​ரந்த ஊழி​யர்​க​ளுக்கு தடை​யின்றி ஊதி​யம் வழங்​கப்​பட்டு விடு​கி​றது. ஆனால் தாற்​கா​லிக ஊழி​யர்​க​ளா​கப் பணி​யில் இருப்​ப​வர்​க​ளுக்கு மாத ஊதி​யம் ரூ. 450தான். இநத ஊதி​ய​மும் இவர்​க​ளுக்கு உரிய நேரத்​தில் கிடைப்​பது இல்லை என்று புகார் தெரி​விக்​கி​றார்​கள். ​ க​ட​லூர் மாவட்​டத்​தில் 500-க்கும் மேற்​பட்ட துப்​பு​ரவு ஊழி​யர்​கள் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​கி​றார்​கள். இவர்​க​ளுக்கு கடந்த 6 மாத​மாக ஊதி​யம் வழங்​கப்​பட வில்லை. ​ இது குறித்து கட​லூர் மாவட்​டக் கல்​வித் துறை​யில் விசா​ரித்​த​போது கிடைத்த தக​வல்:​ ​ தாற் ​கா​லிக துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு சில்​ல​றைச் செல​வி​னங்​கள் என்ற தலைப்​பில் நிதி ஒதுக்​கப்​ப​டு​கி​றது. மாநில வரவு செல​வுத் திட்​டத்​தில் இதற்​கான நிதி ஒதுக்​கப்​ப​டு​கி​றது. அந்த நிதி மாவட்​டங்​க​ளுக்கு இன்​ன​மும் வந்து சேர​வில்லை. நிதி வந்​த​தும் மொத்​த​மாக ஊதி​யம் வழங்​கப்​ப​டும். ​ ​ தாற்​கா​லி​க​மா​கப் பணி​பு​ரி​யும் துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு அரசு வழங்​கும் மாத ஊதி​யம் ரூ. 450 கட்​டு​ப​டி​யா​காது. இந்த ஊதி​யத்​துக்கு யாரும் வேலைக்கு வர​மாட்​டார்​கள். எ​னி​னும் பல பள்​ளி​க​ளில் பெற்​றோர் ஆசி​ரி​யர் சங்க நிதி​யில் இருந்து கூடு​த​லாக ஒரு தொகையை மாதா​மா​தம் வழங்கி வரு​கி​றார்​கள். அரசு நிதி ஒதுக்​கீடு வரும்​போது அரசு சம்​ப​ளம் வழங்​கப்​பட்டு விடும். பெற்​றோர் ஆசி​ரி​யர் சங்​கத்​தில் நிதி இல்​லா​விட்​டால் ஊதி​யம் வழங்​கு​வது சிர​மம். ஆனால் ஆண்​டு​தோ​றும் இதே நிலை​தான் இருந்து வரு​கி​றது என்​றும் தெரி​வித்​த​னர்.

Read more »

ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் சவப்​பாடை ஊர்​வ​லம்

கட ​லூர்,​ நவ.27: ​

கட​லூ​ரில் பழு​த​டைந்து கிடக்​கும் சாலை​களை சீர​மைக்க வலி​யு​றுத்தி இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும்,​ ஆர்ப்​பாட்​ட​மும் நடத்​தி​னர். ​

ரூ. 44 கோடி​யில் தொடங்​கப்​பட்ட பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டம் 18 மாதங்​க​ளில் முடிக்​கப்​பட வேண்​டும். ஆனால் 30 மாதங்​க​ளுக்கு மேல் ஆகி​யும் முடி​வ​டைய வில்லை.

60 சதம் பணி​கள்​கூட நிறை​வ​டைய வில்லை. இத் திட்​டத்​துக்​காக தோண்​டப்​பட்ட பள்​ளங்​க​ளால் வாக​னப் போக்​கு​வ​ரத்து பெரி​தும் சிர​ம​மாக இருக்​கி​றது. சாலை​கள் குண்​டும் குழி​யு​மாக மாறி நடந்து செல்​வ​தற்​கும் லாயக்​கற்​ற​தாக மாறி​விட்​டது. இத​னால் விபத்​து​கள் ஏற்​ப​டாத நாளே இல்லை. ​÷எ​னவே பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டத்தை துரி​த​மாக நிறை​வேற்ற நட​வ​டிக்கை எடுக்​காத கட​லூர் நக​ராட்​சி​யைக் கண்​டித்து இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும் நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்ப்​பாட்​ட​மும் அறி​வித்து இருந்​த​னர். ச​வப்​பாடை ஊர்​வ​லத்​துக்கு போலீஸ் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. ​ ​ எனவே கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர்.÷அதே நேர்த்​தில் யாரும் எதிர்​பா​ராத வித​மாக,​ ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தைச் சேர்ந்த இளை​ஞர்​கள் சிலர் எங்​கி​ருந்தோ சவப்​பாடை ஒன்றை தயா​ரித்து எடுத்​துக் கொண்டு தப்​பட்​டை​கள் முழங்க நக​ராட்சி அலு​வ​ல​கத்​துக்கு வந்​து​விட்​ட​னர். அ​வர்​களை போலீ​ஸôர் பலர் தடுத்து நிறுத்த முன்​றும் முடி​ய​வில்லை. சவப்​பா​டை​யில் நக​ராட்சி அலு​வ​ல​கத்​தின் மாதிரி,​ தெர்​மா​கோல் அட்டை மூலம் செய்​யப்​பட்டு வைக்​கப்​பட்டு இருந்​தது. ​ச​வப்​பா​டை​யைக் கொண்​டு​வர போலீஸ் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்து,​ ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​ய​வர்​க​ளுக்​கும் போலீ​ஸô​ருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.÷ந​க​ராட்சி அலு​வ​லக வாயி​லுக்கு வந்​த​தும் சவப்​பா​டையை போலீ​ஸôர் பிய்த்து எறிந்​த​னர்.÷அ ​தைத் தொடர்ந்து ஆர்ப்​பாட்​டம் மீண்​டும் தொடர்ந்​தது. ஆர்ப்​பாட்​டத்​துக்கு இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்க கட​லூர் நக​ரச் செய​லா​ளர் ஆர்.அமர்​நாத் தலைமை தாங்​கி​னார். ந​கர நிர்​வா​கி​கள் ஆர்.மணி​வண்​ணன்,​ கே.பி.பாலு செந்​தில்​கு​மார்,​ ரஜி​னி​ஆ​னந்த்,​ தென்​ன​சன்,​ கார்த்​தி​கே​யன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். மாவட்​டச் செய​லா​ளர் ராஜேஷ் கண்​ணன்,​ தலை​வர் எஸ்.அசோ​கன்,​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

தனி​யார் ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்​வ​தாக புகார்

கட ​லூர்,​ நவ.27: ​

கட​லூர் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்ய முயன்ற அதி​கா​ரி​களை ஊர் பொது​மக்​கள் தடுத்து நிறுத்​தி​னர். ​ ​

க​ட​லூர் அருகே சிப்​காட் பகு​தி​யில் தனி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலை தொடங்​கப்​பட இருக்​கி​றது. இதற்​காக சுமார் 1,000 ஏக்​கர் நிலம் ஏற்​கெ​னவே ஆர்​ஜி​தம் செய்ப்​பட்டு இருக்​கி​றது. மேற்​கொண்​டும் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்டு வரு​கி​றது. ​÷இந்​நி​லை​யில் இயற்கை எழில் மிகுந்த,​ மணல் குன்​று​கள் நிறைந்த திருச்​சோ​பு​ரம் பகு​தி​யில் நிலம் கைய​கப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் வெள்​ளிக்​கி​ழமை ஈடு​பட்​ட​னர்.÷நி ​லத்தை அளந்து பல இடங்​க​ளில் கொடி நட்டு இருந்​த​னர். இதற்கு அப் பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். இத​னால் நில அள​வைத் துறை அலு​வ​லர்​க​ளுக்​கும் பொது​மக்​க​ளுக்​கும் இடையே கடும் வாக்​கு​வா​த​மும் தள்​ளு​முள்​ளும் ஏற்​பட்​டது. ​

மக்​கள் எதிர்ப்பு கார​ண​மாக நில​அ​ள​வைத்​துறை அதி​கா​ரி​கள் அங்​கி​ருந்து திரும்​பிச் சென்று விட்​ட​னர். ​

நி​லம் கொடுத்து மறுப்பு தெரி​வித்​தது குறித்து திருச்​சோ​பு​ரம் பிர​மு​கர் பாலு கூறி​யது:​ ​÷த ​னி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு திருச்​சோ​பு​ரம் கிரா​மத்​தில் நிலம் ஆர்​ஜி​தம் செய்ய நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் முயன்​ற​னர்.÷தி​ருச்​சோ​பு​ர​நா​தர் கோயி​லுக்​குச் சொந்​த​மான 30 ஏக்​கர் நிலத்தை அதி​கா​ரி​கள் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு வழங்​கும் முயற்​சி​யில் இறங்கி உள்​ள​னர்.÷இந்த நிலத்​தில் சுமார் 10 ஏக்​க​ரில் 200-க்கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் வீடு​கட்டி வசிக்​கின்​ற​னர். நாங்​கள் வீடு​களை காலி செய்ய மாட்​டோம் என்று தெரி​வித்து விட்​டோம். ​

வீ​டு​கள் கட்டி இருக்​கும் 10 ஏக்​கர் உள்​ளிட்ட 30 ஏக்​கர் கோயில் நிலத்​தை​யும் தொழிற்​சா​லைக்கு ஆர்​ஜி​தம் செய்து கொடுக்​கும் முயற்​சி​யில் அதி​கா​ரி​கள் ஈடு​பட்டு இருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. கோயில் நிலத்தை தனி​யார் நிறு​வ​னத்​துக்கு அதி​கா​ரி​கள் எப்​படி வழங்க முடி​யும்?​ என்​றார் பாலு.

Read more »

நட​ரா​ஜர் கோயில் வழக்கு விசாரணை 6 வாரத்​துக்கு ஒத்திவைப்பு

சிதம்​ப​ரம்,​ நவ.27:​

சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயிலை அரசு கையக்​கப்​ப​டுத்​தி​யது தொடர்​பாக புது​தில்லி உச்ச நீதி​மன்​றத்​தில் பொது தீட்​சி​தர்​கள் சார்​பில் மேல்​மு​றை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அம் மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் அல்​டா​மஸ்​க​பீர்,​ சிரி​யாஸ்​ஜோ​சப் ஆகிய நீதி​ப​தி​கள் கொண்ட பெஞ்சு முன்​னி​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை விசா​ர​ணைக்கு வந்​தது.÷த​மி​ழக அரசு அற​நி​லை​யத்​துறை சார்​பில் சிறப்பு வழக்​க​றி​ஞர் அசோக்​தே​சாய்,​ மூத்த வழக்​க​றி​ஞர் மரி​ய​சுந்​த​ரம்,​ அரசு வழக்​க​றி​ஞர் நெடு​மா​றன் ஆகி​யோர் ஆஜ​ரா​யி​னர். அரசு தரப்​பில் இந்து அற​நி​லை​யத்​துறை ஆணை​யர் சம்​பத்,​ செய​லர் முத்​து​சாமி ஆகி​யோர் ஆஜ​ரா​யி​னர்.÷பொது தீட்​சி​தர்​கள் சார்​பில் வழக்​க​றி​ஞர் கே.கே.வேணு​கோ​பால்,​ சி.எஸ்.வைத்​தி​ய​நா​த​ஐ​யர்,​ குரு​கி​ருஷ்​ண​கு​மார்,​ சுப்​பி​ர​ம​ணி​ய​சாமி ஆகி​யோர் ஆஜ​ரா​னார்​கள். சி​வ​ன​டி​யார் உ.ஆறு​மு​க​சாமி,​ ஆலய மீட்​புக் குழு வி.எம்.எஸ்.சந்​தி​ர​பாண்​டி​யன் ஆகி​யோர் சார்​பில் வழக்​க​றி​ஞர்​கள் காலின்​கன்​சால்வ்ஸ்,​ பி.ஆர்.கோவி​லன்​பூங்​குன்​றம்,​ சி.ராஜூ ஆகி​யோர் ஆஜ​ரா​னார்​கள். மே​லும் இவ் வழக்​கில் ஆலய பாது​காப்பு குழு​வைச் சேர்ந்த டி.சிவ​ரா​மன்,​ குஞ்​சி​த​பா​தம்,​ கீதா உள்​ளிட்ட 5 பேர் தங்​க​ளை​யும் விசா​ரிக்க வேண்​டும் என மனு தாக்​கல் செய்​த​னர். வ​ழக்கை விசா​ரித்த நீதி​ப​தி​கள் அரசு தரப்​பு,​ சிவ​ன​டி​யார் ஆறு​மு​க​சாமி தரப்​பு மனுவை பொது​தீட்​சி​தர்​கள்,​ சுப்​பி​ர​ம​ணி​ய​சா​மி ஆகியோர் அடுத்த 2 வாரத்​துக்​குள் நீதி​மன்​றத்​தில் அளிக்க வேண்​டும்.÷அது வரை எந்த உத்​தி​ர​வின்றி இவ்​வ​ழக்கு விசா​ரணை 6 வாரத்​திற்கு ஒத்தி வைப்​ப​தாக நீதி​ப​தி​கள் உத்​த​ரவு பிறப்​பித்​த​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior