உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க., வுக்கு 2 வது இடம்;





தர்மபுரி: 

              பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இன்பசேகரன் வெற்றி வெற்றார். இன்பசேகரன் பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரனை விட 36,424 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இறுதிச்சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 77 ஆயிரத்து 637 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 41 ஆயிரத்து 243 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 26 ஆயிரத்து 784 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 11 ஆயிரத்து 406 ஓட்டுக்களும் பெற்றனர்.

Read more »

Facts About Animals

  • here are presently over a million animal species upon planet earth. 
  • The reptiles have 6,000 species crawling in their habitats; and more are discovered each year.
  • There are over 70,000 types of spiders spinning their webs in the world.
  • Well, there are 3,000 kinds of lice. Yes, it is the lice we are prone to get due to lack of hair hygiene.
  • This is a mind-boggling fact – for each of the 600 million people there is about 200 million insects crawling, flying...
  • Mammals are the only creatures that have flaps around their ears.
  • The world has approximately one billion cattle, of which about 200 million belong to India.
  • The life of a housefly is only 14 days.
  • A dog was the first animal to up in space.
  • A sheep, a duck and a rooster were the first animals to fly in a hot air balloon. The oldest breed of a dog known to mankind is the ‘Saluki’.
  • An ostrich is the fastest bird and can run up to 70 km/h.
  • Never get a camel angry, for he or she will spit at you.
  • There are crabs that are the size of a pea. There are known as ‘Pea Crabs’.
  • The lifespan of 75 percent of wild birds is 6 months.
  • Denmark has twice as many pigs as there are people.
  • You do not need cotton buds to clean a giraffe ears. It can do so with its own 50cm-tongue.
  • Want to known the appetite of a South American Giant Anteater? Well it eats over 30,000 ants, per day.
  • The sailfish can swim at the speed of 109 km/h, making it the fastest swimmer.
  • The Sea Horse is the slowest fish, drifting at approximately 0.016 km/h.
  • The small car on the road is probably the size of the heart of a blue whale.
  • The length of an elephant is the same as the tongue of a blue whale.
  • The crocodile's tongue is unmovable, as it is attached to the roof of its mouth.

Read more »

Builder Remanded To Judicial Custody


CUDDALORE: 

         A builder here was remanded to judicial custody on Monday on the charges of forging documents in the construction of permanent houses for the tsunami-affected people.

           Deputy Superintendent of Police G. Stalin told presspersons that the forgery had come to light following a complaint lodged by Srinivasan, Assistant Project Director (Tsunami projects) of the District Rural Development Agency. Under the Rajiv Gandhi Rehabilitation Package for the tsunami victims, a contract for construction of 125 permanent houses at Periakuppam near here had been awarded to S.V. Rajan (39) of Kondur, proprietor of the Hi-tech Engineering Constructions, Cuddalore.

         As per the government rules, Rajan should produce two bank guarantees for Rs. 10 lakh–Rs. 5 lakh at the time of application and another Rs 5 lakh at the time of allotment of the contract. Accordingly, he produced two receipts on June 14, 2007, and December 17, 2007. However, on verification the receipts were found to be false. Hence, cases were booked against Rajan. The houses were under construction and the case needed further probe to get into the details, Mr Stalin added.

Read more »

திட்டக்குடி பகுதியில் மான்களை காத்திட நடவடிக்கை தேவை! காடுகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்


திட்டக்குடி : 

                 திட்டக்குடி பகுதிகளில் மான்கள் இறப்பதை தடுத்திட காட்டை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

               கடலூர் மாவட்டம் ராமநத்தம், சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் நாங்கூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இங்கு மான்கள், முயல்கள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றி, மயில், குரங்குகள் என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. காடுகளில் உள்ள குட்டைகளில் உள்ள தண்ணீரை விலங்குகள் குடித்து வந்தன. கோடை காலங்களில் குட் டைகளில் தண்ணீர் வற்றிவிட்டால், விலங்குகள் தண்ணீரை தேடி அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தேடி வரத்துவங்கின.

                  இதனை தடுத்திடவும், காடுகளில் உள்ள விலங்குகளை பாதுகாத்திடும் பொருட்டு கடந்த அ.தி. மு.க., ஆட்சியில் அரசுக்கு சொந்தமான காடுகளில் உள்ள விலங்குகளின் தண் ணீர் தேவைக்காக ஆங் காங்கே சிமென்ட் தொட்டிகள் கட்டப்பட்டன. அதில் கோடை காலங்களில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வந்தனர். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காடுகளில் உள்ள சிமென்ட் தொட்டிகளை வனத்துறையினர் பராமறிக்க மறந்தனர். இதனால் தொட்டிகள் பழுதாகி தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி காட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இவ்வாறு சிறுபாக்கம் பகுதி காட்டில் உள்ள வன விலங்குகள் உணவு மற் றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்கு வரும் போது காட்டையொட்டி செல்லும் சேலம்- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது அவ்வழியே வரும் வாகனங்களில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.

                    இதனையடுத்து வன விலங்குகள் கடக்கும் சாலையென வாகன ஓட்டிகள் கவனித்து செல்ல ஏதுவாக எச்சரிக்கை போர்டுகள் நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்பட் டது. இருப்பினும் வன விலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலையினை தடுக்க முடியவில்லை. அதேபோன்று சமீப காலமாக நாங்கூர் காட்டிலிருந்து மான்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக இரவு நேரங்களில் இடைச்செருவாய், கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரிகளுக்கு கூட்டமாக வந்து செல்கின் றன. மனித நடமாட்டம் இல்லாத நேரங்களில் வந்து செல்வதால், மனிதர்களின் தொந்தரவு ஏற்படுவதில்லை. ஆனால் நாய்களின் பிடியில் சிக்கி இறக் கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நாய்களிடம் சிக்கிய ஒரு வயது புள்ளி மானை இளைஞர்கள் காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

                     வனப்பாதுகாப்பு சட் டம் கடுமையாக உள்ளதால் மான் உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடுவது பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் காடுகளில் உள்ள விலங்குகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வனத் துறை முன்வராததால் இந்நிலை தொடர்கிறது. நாய்களிடமும், வாகனங்களில் சிக்கி வன விலங்குகள் இறப்பதை தடுக்க காடுகளை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். அதற்கு முன்பாக காடுகளில் உள்ள விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ''அழகுக்கு சொந்தமான மான் இனம்'' திட்டக்குடி பகுதி காடுகளில் இருந்ததாக கூற முடியுமே தவிர, காண முடியாது.

Read more »

வேலுடையான்பட்டில் பங்குனி உத்திரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்


நெய்வேலி : 

                நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர் கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் உற்சவம் சிறப்பு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித் தார். நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நெய்வேலி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் சுமந்தும், நீண்ட அலகுகள் குத்தியும், தேர் இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

                     கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தினமலர் மற்றும் பிராமணர் சங்கம் சார் பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப் பட்டது. வழிநெடுகிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கினர். என்.எல்.சி., சேர்மன் அன்சாரி தனது வீட்டிலேயே பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கினார்.

Read more »

சிதம்பரத்தை கைப்பற்றியது வாசன் அணி

சிதம்பரம் : 

                இளைஞர் காங்., தேர்தலில் சிதம்பரம் சட்டசபை தொகுதியை வாசன் அணியும், புவனகிரியை ப.சிதம்பரம் அணியும் கைப்பற்றியது. சிதம்பரம், புவனகிரி சட்டசபை தொகுதிகளுக்கான இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் சிதம்பரத்தில் நடந்தது. அதில் சிதம்பரம் தொகுதியில் வாசன் அணி சார்பில் போட்டியிட்ட ரஜினிகாந்த்தும், புவனகிரி தொகுதியில் ப.சிதம்பரம் அணியை சேர்ந்த மன்சூர் அலி வெற்றி பெற்றுள்ளனர்.

Read more »

அண்ணாமலை பல்கலையில் இன்ஜி., வகுப்புகள் துவங்கியது

சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், காலவரையற்ற விடுமுறை விடப் பட்டிருந்த இன்ஜினியரிங் கல்லூரியில், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த இரண்டாம் ஆண்டு மாண வர் கவுதம்குமார், கடந்த மாதம் 28ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். அதனால் ஏற்பட்ட கலவரத்தில் தண்ணீரில் மூழ்கி சுமித் குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் இறந்தனர். இதனால் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.கடந்த 11ம் தேதி எம்.ஏ., - எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., - எம்.எட்., இசைக் கல்லூரி, விவசாய கல் லூரி, பார்மசி, இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்பட்டன. இன்ஜினியரிங் முதலாண்டு வகுப்புகள் 17ம் தேதி துவக்கப்பட்டது. இன்ஜினியரிங் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின.

Read more »

இருதய நோய் குறித்து டாக்டர்கள் கருத்தரங்கு

சிதம்பரம் : 
 
                   இருதய நோய் குறித்து டாக்டர்கள் கருத்தரங்கு சிதம்பரத்தில் நடந்தது. இந்திய மருத்துவ கழக சிதம்பரம் கிளை, போர்டிஸ் மலர் மருத்துவமனை இணைந்து சிதம்பரத்தில் டாக்டர்களுக்கான இதய நோய் (மாரடைப்பு) குறித்த கருத்தரங்கை நடத்தியது. மருத்துவ கழக கிளை தலைவர் வெற்றி வீரமணி தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். பிரபல டாக்டர்கள் முருகேசன், மிஸ்ரா, சாந்தி, ரமேஷ் உள்ளிட்ட 60 டாக்டர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.சென்னை மலர் மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் மதன்மோகன், இருதய நோய் குறித்து விரிவாக பேசினார். அப்போது, இருதய அடைப்பு நோயை மருந்து மூலம் குணப்படுத்துவதைவிட நவீன தொழில்நுட்பமான பிரைமரி ஆஞ்சியோ பிளாரிடா சிகிச்சை மூலம் நூறு சதவீதம் சரி செய்ய முடியும் என் பதை விளக்கினார். உடல் நல சேவை பிரிவு கிரிபானந்த் நன்றி கூறினார்.

Read more »

அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு பாராட்டு

சிதம்பரம் : 
 
                   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி அறிவித்த தமிழக முதல்வருக்கு பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளது. 
 
தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில், 
 
                  மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை எந்த அரசு ஊழியர் சங்கங்களும் கோரிக்கை வைக் காத நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிட்டதுடன், ஜனவரி 2010 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். சிவஇளங்கோ அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத்தலைவர் கருணாகரன் விடுத்துள்ள அறிக் கையில், மத்திய அரசு அறிவித்தது போல் மாநிலத்தில் 1-1-2010 முதல் 8 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி ரொக்கமாக வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக் கும் என கூறியுள்ளார்.

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டித்தர கோரிக்கை


பரங்கிப்பேட்டை : 

                       பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்த 50 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருப்புகள் கட்டித் தராததால் தமிழக அரசின் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் கட்டித்தர கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரங்கிப்பேட்டை அங் காளம்மன் கோவில் தெரு பகுதி கடந்த சுனாமியின்போது பாதிக்கப்பட் டது. வெள்ளாற்றில் இருந்து 200 மீட்டர் தூரத் திற்குட்பட்ட பகுதிகளில் அரசு மூலமும், 200 மீட்டருக்கு அதிமாக உள்ள பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மூலமும் குடியிருப்புகள் கட்டிக் கொடுக் கப்பட்டது.

                ஆனால் வெள்ளாற்று பகுதியில் சுமார் 350 மீட்டர் தூரம் உள்ள அங்களாம்மன் கோவில் தெரு பகுதி சுனாமியில் பாதித்த போதிலும், இப்பகுதி மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டித்தரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் குடியிருப்புகள் கட்டிதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன் முதல்வருக்கு மனு அனுப்பியதை தொடர்ந்து,  இதுகுறித்து விசாரணை நடத்தி சிதம்பரம் ஆர்.டி.ஓ., விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் இந்தபகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

பரங்கிப்பேட்டையில் மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாம்

பரங்கிப்பேட்டை :

                 பரங்கிப்பேட்டையில் மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாமை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாம் ஷாதி மகாலில் நடந்தது. பு.முட் லூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார். புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மேகலா வரவேற்றார். மருத்துவ முகாமை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார். முகாமில் இருதய நோய், எலும்பு நோய், காது, மூக்கு, தொண்டை சம்மந்தப்பட்ட நோய் மற்றும் கண் நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. முகாமில் தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், கவுன்சிலர் காஜா கமால், ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மீரா உசேன், கமால், இசாக் மரைக்காயர், ஹபிபுர் ரஹ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

ரத்தம் மற்றும் உடல் தான விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் : 
 
                   விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நீதிபதி அருண்மொழிசெல்வி தலைமை தாங்கினார். நீதிபதி கணேசன், சி.எஸ்.எம்., கல்லூரி தலைவர் மகாவீர்சந்த், செயலாளர் அபிராமி முன்னிலை வகித்தார். முதல்வர் ரமேஷ்குமார் வரவேற்றார்.கோர்ட் அருகே துவங்கிய ஊர்வலம் பாலக்கரை வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை சென்றது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பாரதி, துரைசாமி, ராமசந்திரன், ஞானம் அலெக்ஸாண்டிரியா உட் பட பலர் கலந்து கொண் டனர்.

Read more »

ஸ்ரீமுஷ்ணத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம்: வேறு இடத்தில் கட்ட எம்.எல்.ஏ., மனு

ஸ்ரீமுஷ்ணம் : 
 
                ஸ்ரீமுஷ்ணம் பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்தை மறைத்து புதிய கட்டடம் கட்ட கூடாது என எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் மனு கொடுத்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி வளாகத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி மன்ற கட்டடம் மற்றும் 72 லட்சம் ரூபாய் செலவில் புதிய மேல்நிலை தேக்க தொட்டி கட்டும் பணியை கடந்த 6ம் தேதி காட்டுமன்னார்கோவில் வந்த துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 88ம் ஆண்டு கட்டப்பட்டு எம்.ஜி.ராமச் சந்திரன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ள பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்திற்கு முன்பாக புதிய மன்ற அலுவலகம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய மன்ற அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் 20 பேர் நேற்று பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, நகர செயலாளர் கேசவன், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட் டோர் உடனிருந்தார். இதனிடையே அ.தி.மு.க.,வினர் கட்டடப்பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியல் செய்யப் போவதாக தகவல் பரவியதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி வளாகத்தில் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற் கொண்டனர்

Read more »

புவனகிரியில் இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி: புதியதாக கட்டப்படுமா?


புவனகிரி : 

                  புவனகிரியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

                    புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் 25 ஆண் டிற்கு முன் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டது. இதன் மூலம் நகரப் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்த காரைகள் பெயர்ந்தும், தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்வதற்கு மேலே ஏற முடியாத அளவிற்கு படிக் கட்டுகள் உடைந்துள்ளன. இந்நிலையில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அனுப்பப் பட்டது. அதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புவனகிரிக்கு வந்து பரிசோதனை செய்துவிட்டு சென்று பல மாதங்களாகியும் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் முன்பே புதிய நீர்த் தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக் கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

கான்கிரீட் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுக்கும் பணி துவங்கியது

கடலூர் : 

                      மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் கட்டுவதற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. கணக்கெடுப்பின் போது ரேஷன் கார்டு, மின் இணைப்பு, வீட்டு வரி விதிப்பு எண் மற்றும் நில உரிமைக் கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் (பட்டா, உரிமை பத்திரம்) கணக்கெடுப்பு குழுவினரிடம காண் பிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தகவல் கிராமங்களில் சரியாக சென்றடையவில்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கணக் கெடுக்க சென்றவர்களிடம் ஆவணங்களை காண்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

                   கண்ணாரப்பேட்டை பகுதியில் துவங்கிய கணக்கெடுப்பு பணியை பார்வையிட கலெக்டர் சீத்தாராமன் நேரில் சென்றார். அப்போது வீட்டின் உரிமையாளர் கணக்கெடுப்பு பணிக்கு வருவது தெரியாது. அதனால் மின் இணைப்பு, வீட்டு வரி விதிப்பு எண் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தற்சமயம் தன்னிடம் இல்லை என தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் தெரிவிக்கையில்'கான்கிரீட் வீடு கணக்கெடுக்கும் பணிக்காக முதல் கட்டமாக 399 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று மதியம் 12 மணி அளவில் 266 கிராமங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காரைக்காடு பகுதி கண்ணாரப்பேட்டையில் நான் நேரில் சென்று ஆய்வு செய்த போது பத்திரிகை செய்திகள் அவர்களை சென்றடையவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து அனைத்து கிராமங்களிலும் தண்டோரா மூலம் தெரிவிப்பது. நாளை 31ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி அவர்கள் மூலம் விழிப்புணர்வு அடையச் செய்வது. அதுமட்டுமின்றி கிராமத்திற்கு கணக்கெடுக்கும் குழு செல்வதற்கு முதல் நாள் அந்த பகுதியில் டிஜிட்டல் பேனர் வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.

Read more »

உர சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை: வேளாண் உதவி இயக்குனர் எச்சரிக்கை


கடலூர் : 

                  உர சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீது அத்தியாவசிய குடிமை பொருள் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார். 

இது குறித்து கடலூர் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுந்தரராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 

                      மத்திய அரசு 2010-11 நிதி ஆண்டிற்கு உரமானியம் உரத்தில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் வழங்க ஆணை பிறப்பித் துள்ளது. அதன்படி ஒரு கிலோ தழைச் சத்து 23.23 ரூபாய், மணி சத்து 26.28, சாம்பல் சத்து 24.49, கந்தக சத்து 1.78 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. வரும் ஏப் 1ம் தேதி முதல் ஒரு டன் டி.ஏ.பி., உரம் 16,268 ரூபாய், மானோ அம்மோனியம் பாஸ்பேட் 16,219 ரூபாய், டிரிபில் சூப்பர் பாஸ்பேட் 12,087, முயூரேட் ஆப் பொட்டாஷ் 14,692 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அதே போல் காம்ப்ளக்ஸ், அம்மோனியம் சல்பேட் உரங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. உர விலை நிலைபாடுகளில் கடந்தாண்டு கொள் முதல் செய்து இருப்பில் உள்ள உரங்கள் கணக்கெடுத்து, பழைய விலைக்கே விற்பனை செய்யவும், மானிய உரங்கள் தட்டுபாடின்றி, அரசு நிர்ணய விலைக்கு தேவையான காலங்களில் விவசாயிகளுக்கு வழங்கிட உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                     உர சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீது அத்தியாவசிய குடிமை பொருள் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உரம் பற்றி விவரங்களுக்கு கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலக தொலை பேசி எண் 04142-290658 ஐ தொடர்பு கொள்ளவும்.

Read more »

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூர் : 

                 பண்ருட்டியைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி இரண்டாவது முறையாக தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாபு என்கிற புண்டேரிபாபு(40) அப்பகுதியில் சாராயம் விற்று வந்ததால் கடந்த ஜனவரி மாதம் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதத்தில் வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பாபு மீண்டும் சாராயம் விற்று வந்தார்.  இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பரிந்துரையை ஏற்று கலெக்டர் சீத்தாராமன் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பண்ருட்டி போலீசார், பாபுவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Read more »

தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய கான்ட்ராக்டர் கைது

பரங்கிப்பேட்டை :

                  தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் நாகர்ஜூனா ஆயில் கம்பெனி உள்ளது. அங்கு லேபர் கான்ட்ராக்டராக உள்ள தியாகவள்ளியை சேர்ந்த கொளஞ்சியப்பன் நேற்று முன்தினம் கம்பெனிக்கு சென்று முதுநிலை பாதுகாப்பு அதிகாரி ஜானகிராமனிடம், மீண்டும் லேபர் கான்ட்ராக்ட் கேட்டு தகராறு செய்து தாக்கினார். இதுகுறித்து ஜானகிராமன் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து கொளஞ்சியப்பனை (32) கைது செய்தார்.

Read more »

தீயில் கருகி பெண் பலி: ஆர்.டி.ஓ., விசாரணை

நடுவீரப்பட்டு : 

               தீயில் கருகி இளம் பெண் இறந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டுள்ளார். கடலூர் அடுத்த திருமானிக்குழியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற தென்கோவன். இவரது மனைவி பரிமளா என்கிற விஜயலட்சுமி (20). திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. கடந்த 14ம் தேதி பரிமளா தனது வீட்டில் சுவற்றின் மீது இருந்த பூ பொட்டலத்தை எடுக்க முயன்ற போது, சுவற்றில் வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு தவறி பரிமளா மீது விழுந்ததில் உடல் முழுவதும் தீ பரவியது. அதில் படுகாயமடைந்த பரிமளாவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து பரிந்துரை செய்ததன் பேரில் கடலூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ், வரதட்சணை கொடுமையினால் இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

Read more »

சுனாமி வீடு கட்ட போலி ஆவணங்கள் தாக்கல்: மோசடி கான்ட்ராக்டர் சிறையில் அடைப்பு

கடலூர் : 

                     சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற போலி வைப்பு நிதி ஆவணங்களை தாக்கல் செய்து அரசை ஏமாற்றிய மோசடி கான்ட்ராக்டரை போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பெரியக்குப்பம் கிராமத்தில் சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு அரசு சார்பில் ராஜிவ் காந்தி மறு புனரமைப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் கடந்த 2007ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் எடுப்பவர்கள் வைப்பு தொகையாக 5 லட்சம் ரூபாயும், கூடுதல் வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயிற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அறிவுருத்தப்பட்டது. இந்த டெண்டரை எடுத்து, கடலூர் செம்மண்டலம் சிட்கோ தொழிற் பேட்டையில் 'ஐ டெக் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன்' நடத்தி வரும் கோண்டூர் ஜோதி நகர் சந்தானம் மகன் ராஜன் (29) என்பவர் 125 வீடுகள் கட்டி வருகிறார்.

                     இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் டெண்டரில் பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் ராஜன் கொடுத்த வைப்பு தொகைக்கான ஆவணங்கள் போலியானவை என்பதும், போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி திட்ட ஒலுவலர் சீனுவாசன் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, குணசேகரன் ஆகியோர் வழக்குப் பதிந்து, போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றிய ராஜனை நேற்று மாலை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more »

நகைக்காக மூதாட்டிகள் இருவர் கொலை: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கடலூர் : 

                    மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளை அடித்து கொலை செய்து நகைகளை கொள் ளையடித்த வாலிபருக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப் பட்டது.

                    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாளையத்தை சேர்ந்தவர் சாத்தப்பன் மனைவி அம்மணியம்மாள்(65). கடந்த 2008ம் ஆண்டு பிப். 4ம் தேதி அதே ஊரில் உள்ள கோரித்தோப்பு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அம்மணியம்மாளை மர்ம நபர் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 55 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றார். அதேபோல் கடந்த 2008ம் ஆண்டு டிச. 29ம் தேதி திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி மனைவி மங்களம் (70) மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருந்தன.

                        ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார் தனித் தனியே வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். திட்டக்குடி அடுத்த தொளார் வடக்கு காலனியைச் சேர்ந்த வெங்கடாஜலம் மகன் செந்தமிழ்ச்செல்வன்(33) இரண்டு மூதாட்டிகளையும் நகைக்காக கொலை செய்தது தெரிய வந்தது. ஆவினங்குடி மற்றும் ராமநத்தம் போலீசார், செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து அவர் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அசோகன், இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த செந்தமிழ்ச் செல்வனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று மாலை தீர்ப்பு கூறினார். ஆயுள் தண் டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சிவராஜ் ஆஜரானார்.

Read more »

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நல்லூர் ஒன்றிய சேர்மன் ஆறுதல்

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் சந்தித்து ஆறுதல் கூறினார். விருத்தாசலத்தில் கடந்த 27ம் தேதி சிறுபாக்கத்தில் இருந்து வந்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் இறந்தார். காயமடைந்த 31 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 30 பேர் விருத்தாசாலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள். விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா நேற்று சந் தித்து ஆறுதல் கூறி பிரட், பிஸ்கட் வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாவாடைகோவிந்தசாமி, துணை தலைவர் கருப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திவினாயகம், வெங்கடாசலம், சீனுவாசன், மோகன்ராஜ், ஜெய்சங்கர் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior