உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 02, 2011

கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் 3 ஆயிரத்து 796 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

               உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.   இதையட்டி கடலூரில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.

           அப்போது, அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 36 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை வழங்கி பேசினார்.

       கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் 3 ஆயிரத்து 796 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். எச்.ஐ.வி. பரவக் கூடிய விதங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.ரத்தப்பரிசோதனை செய்த பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.

             இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.    









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior