உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

நாளை 'புவி தினம்'

General India news in detail
                அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்கி, செயல்படுத்து வதை கண்காணித்து வருகின்றனர். அதே போல், வனத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் பசுமைப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைப்புக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாயும், ஒரு சில பள்ளிகளுக்கு ஆயிரத்து 250 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

               இந்த நிதியை பயன்படுத்தும் விதமாக இரு அமைப்புகளும் நாளை புவி தினம்' கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஒட்டி, பள்ளிகளில் கருத்தரங்கம், கருத்து பட்டறை, மரம் நடுதல், வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், பேச்சுபோட்டி, வினாடி-வினா போட்டி, சூழல் கருத்துகாட்சி போட்டிகள், நடைப்பயணங்கள் நடத்துதல் போன்றவைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

'பிசியோதெரபிஸ்ட்களுக்கு வேலை தரும் அளவுக்கு மருத்துவமனைகள் இல்லை'


                'தனியார் கல்லூரிகளில் படித்து முடித்த பிசியோதெரபிஸ்ட்கள், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் அரசு பணி கொடுக்கும் அளவு மருத்துவமனைகள் இல்லை. மேலும், அந்தளவு எலும்பு முறிவு டாக்டர்களும் (ஆர்தோ) இல்லை. இதேபோல, தனியார் கல்லூரிகளில் படித்த நர்ஸ்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களுக்கு எல்லாம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உள்ளது' என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:

பீட்டர் அல்போன்ஸ் - காங்கிரஸ்

                மத்திய அரசு, சென்னை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதாக அறிவித்தது. அதுபற்றிய ஆய்வு முடிந்து அறிக்கையும் அனுப்பப்பட்டது. இந்தக் கல்லூரியில் மாநில அரசு ஒதுக்கீடாக 40 சதவீதமும், மத்திய அரசு ஒதுக்கீடாக 40 சதவீதமும், இ.எஸ்.ஐ., ஒதுக்கீடாக 20 சதவீதமும் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த 2009ல் இந்திய மருத்துவக் கவுன்சில் இங்கு ஆய்வு செய்துவிட்டு, சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியது. அவற்றை சரி செய்து, மீண்டும் ஆய்வுக்கு அழைத்து கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இன்னும் வரவில்லை. மத்திய அமைச்சர் காந்திசெல்வனிடம் பேசி, இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் பன்னீர்செல்வம்

               சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் நேரடியாகவும், கடிதங்கள் மூலமும் முதல்வர் இதை தெரிவித்துள்ளார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி - அ.தி.மு.க

               திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி துவக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்குமா?

அமைச்சர் பன்னீர்செல்வம்

                உறுப்பினருக்கு விதிமுறைகள் தெரியவில்லை. முதலில் மருத்துவமனை கட்ட வேண்டும். கட்டடங்கள் கட்டி, வசதிகள், கருவிகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்த பின் தான் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கும்.

வேல்முருகன் - பா.ம.க: 

                      கடலூரில் மட்டும் மருத்துவக் கல்லூரி இல்லாமல் உள்ளது. பிசியோதெரபிஸ்ட்கள் 5,000 பேருக்கு மேல் படித்து முடித்து அரசு வேலைக்கு காத்திருக்கின்றனர். வரும் ஆண்டில் இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதேபோல, மருத்துவக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படிக்கும் இவர்கள், டாக்டர் என பெயருக்கு முன் போட்டுக் கொள்ள தடை விதித்துள்ளனர்.

கோவிந்தசாமி - மார்க்சிஸ்ட்

                       திருப்பூர் மாவட்ட மருத்துவமனை மிகவும் மோசமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டப்பட்ட இந்த மருத்துவமனையை தற்போதுள்ள 10 லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டும்.

அமைச்சர் பன்னீர்செல்வம்

                       தனியார் கல்லூரிகளில் படித்து முடித்த பிசியோதெரபிஸ்ட்கள், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். அவர்களை நியமிக்கும் அளவு மருத்துவமனைகள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவர்களை நியமிக்க வேண்டுமானால், ஆர்தோ (எலும்பு முறிவு) டாக்டர்கள் வேண்டும். தாலுகா மருத்துவமனைகளில் நியமிக்கக் கூட போதுமான அளவு எலும்பு முறிவு டாக்டர்கள் இல்லை. தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்த பலரும் அரசு வேலை கேட்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உள்ளது. இவர்கள் அனைவரையும் நியமிக்க வேண்டுமென்றால், ஊர் முழுவதும் மருத்துவமனைகளை கட்ட வேண்டும். திருப்பூர் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஹிதேந்திரனால் விழிப்புணர்வு: 479 பேர் உறுப்பு தானம் பெற்றுள்ளனர்

Latest indian and world political news information 
 
   
             'ஹிதேந்திரன் உறுப்பு தானத்துக்கு பின் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, இதுவரை மூளைச் சாவு ஏற்பட்ட 86 பேரிடம் இருந்து, 479 பேர் உறுப்பு தானம் பெற்று பயனடைந்துள்ளனர்' என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அளித்த பதில்: 

                    அரசு மருத்துவமனைகளில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக பேசினர். கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாயை தாய்வீட்டு சீதனமாக கொடுத்து வருபவர் முதல்வர் கருணாநிதி. இளம் சிறார்கள் இதய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 3,290 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஏற்கனவே உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன், புதிதாக கட்டப்படும் ஐந்து கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. அதேபோல, இந்தியாவிலேயே அதிகமாக 1,519 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை துவக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

                        ஹிதேந்திரன் மூளைச்சாவு ஏற்பட்டு, உடல் உறுப்பு தானம் செய்த பின், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 86 பேர் மூளைச்சாவு ஏற்பட்டு, உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது. 18 பேருக்கு இதயம், 24 பேருக்கு கல்லீரல், 126 பேருக்கு விழித்திரை என, உடல் உறுப்பு தானத்தால் 479 பேர் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே இதய மாற்று அறுவை சிகிச்சை சென்னை அரசு மருத்துவமனையில் தான் நடந்துள்ளது. அதேபோல, ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்தளவு உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் தான், இவை எல்லாம் சாத்தியமாயின. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மொபைலில் பேசினால்... கார் ஓடாது!: கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பு

Tamilnadu special news update




































































































              மொபைலில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க கோவையிலுள்ள தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 'மொபைல் பக்' என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் புதியதாக 'மொபைல் பக்' என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர். இக் கருவியை நான்கு சக்கர வாகனத்தில் பொருத்தினால் வாகனம் சென்று கொண்டிருக்கும் போது மொபைல் போனில் பேச முடியாது.

இது குறித்து புதிய கருவியை கண்டுபிடித்த இறுதியாண்டு இ.சி.இ., படிக்கும் மாணவர்கள் ஹரிபிரசாத், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:  

                     அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் தனியார் வாகனங்களை ஓட்டுவோர், மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்தது. மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இச்சூழலில் இது போன்ற கண்டுபிடிப்பை மேற்கொள்ள யோசனை தோன்றியது. 'மொபைல் பக்' கருவியை கண்டுபிடித்துள்ளோம். காரிலுள்ள டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் பேசுவதை தடுக்க இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                 காரில் பொருத்திவிட்டால், கார் சென்று கொண்டிருக்கும் போது, 'போன் ரிங்' ஆகும். மொபைலிலுள்ள ரேடியோ பிரிக்குவன்சி, காரில் பொருத்தியுள்ள 'மொபைல் பக்' கருவிக்கு செல்லும். வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தி, 'இன்ஜினை ஆப்' செய்து விட்டு பேச 25 முதல் 30 விநாடி வரை அவகாசம் வழங்கப்படும்.  அதற்குள் வாகனத்தை நிறுத்தி 'இன்ஜினை ஆப்' செய்து விட்டு, பேசாவிட்டால், 'மொபைல் பக்' கருவிக்கு செல்லும் டைமரில் உள்ள 'ரிலே' வேலையை துவங்கி, கருவியிலுள்ள மொபைல் போன் ஜாமருக்கு மின்சாரத்தை செலுத்தும். மொபைல் போனிற்கு வரும் டவர் முழுமையாக கட்டாகிவிடும். மொபைலிற்கு வரும் பிரிக்குவன்சி நின்று போகும்.

               தொடர்ச்சியாக மூன்று நிமிடம் போன்பேச முடியாது;பின்னர் பேசலாம்.மொபைல் போனிற்கு '900 மெகாஹெர்ட்ஸ்' திறனில் ரேடியோ அதிர்வலை வரும் போது, ஜாமரிலிருந்து 900 மெகாவாட் திறன்கொண்ட ரேடியோ அதிர்வலை வெளியே செல்லும் இரண்டும் மோதி மொபைல் போனிலுள்ள டவரை செயலிழக்க செய்கிறது. இது போன்ற கருவி தயாரிக்க ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. மொத்தமாக செய்தால் செலவு குறையும். இதை அரசு பஸ் தனியார் பஸ், கார்களில் பயன்படுத்தலாம்; விபத்துக்களை தவிர்க்கலாம்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Annamalai University organises mini-marathon

 

Annamalai University Vice-Chancellor M.Ramanathan flagging off the mini-marathon on the university campus in Chidambaram on Tuesday.

CUDDALORE: 

         Nine hundred and fifty students, including 300 girls, from Annamalai University participated in a mini-marathon organised here to create awareness of the World Classical Tamil Conference scheduled to be held at Coimbatore in June. 12 km marathon They covered a distance of 12 km in the temple town. Vice-Chancellor M.Ramanathan flagged off the marathon on the university premises. He said that students belonging to various departments had participated in the essay and poetry competitions held in connection with the Tamil conference. Elaborate arrangements were made along the route. An ambulance and two university buses trailed the runners to help those who might get fatigued midway. Prizes distributed At a function later, Dr. Ramanathan gave away cash awards and cups to the winners.

Winners are as follows: 

             Boys—S.Senthamil Selvan, R.Silambarasan and Vanidasan; Girls – Kalai Kanimozhi, C.Madhavi and N.Sapnam.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Collector warns against putting up unauthorised statues


CUDDALORE:

        District Collector P.Seetharaman has warned of stringent action against those who attempt to install statues and erect memorials and arches for leaders without prior permission. In a statement here, the Collector said that it had come to the notice of the district administration that certain individuals, organisations or political parties were trying to install unauthorised statues and erect memorials in the panchayat unions, Town Panchayats and Municipalities in the district. If there was a need for shifting the statues or memorials to a safe place the organisations concerned ought to get the permission from the government, the Collector added.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Marriage assistance for refugee

 CUDDALORE: 

              Collector P. Seetharaman on Monday gave away a cheque for Rs. 20,000 to Sri Lankan refugee Sestian, under the Moovalur Ramamirtham Ammaiyar Marriage Assistance Scheme. He said thatduring a visit to Kurinjipadi refugee camp, a request was made to Health Minister M.R.K. Panneerselvam and himself seeking marriage assistance for refugees.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

31 மாவட்டங்களில் யோகா மகப்பேறு பிரிவு

                    தமிழகத்தில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவப்பிரிவு தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
பேரவையில் தனது துறையின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு செவ்வாய்க்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக அவர் கூறியதாவது:

             ""சுகப் பிரசவத்துக்கு யோகா மருத்துவ முறை சிறந்ததாக விளங்குகிறது. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் ரூ.59.19 லட்சம் செலவில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு பிரிவு தொடங்கப்படும்
 
             சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு சித்த மருந்துப் பெட்டகம்: சிக்குன்குன்யா காய்ச்சல் நிவாரணத்துக்கு சித்த மருந்துகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சிக்குன்குன்யா காய்ச்சலுக்கான நான்கு சிறந்த சித்த மருந்துகளைக் கொண்ட மருந்துப் பெட்டகத்தை டாம்ப்கால் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் பெட்டகங்கள் டாம்ப்கால் விற்பனை மையங்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் மருத்துவர் ஆலோசனைப்படி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 
              13 மூலிகைகள் கொண்ட இருமல் மருந்து: பொது மக்களின் தேவைக்கேற்ப இருமல், சளி மற்றும் பொதுவான நோய்களுக்கு டாம்ப்கால் நிறுவனம் மருந்து தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் பொது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து 13 மூலிகைகள் கொண்ட புதிய இருமல் மருந்தை டாம்ப்கால் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மருந்து 100 மில்லி லிட்டர் அளவுள்ள கையடக்க புட்டிகளில் விநியோகிக்கப்படும். அரசு மருத்துவமனைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படும். திருச்சி, சேலம், கோவையில் ஹோமியோபதி பிரிவு: ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள் அற்றதும், மலிவான விலையில் கிடைக்கக் கூடியதும் ஆகும். ஹோமியோபதி மருத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

                தமிழகத்தில் மாவட்ட மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இப்போது 38 ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.28.05 லட்சம் செலவில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.
 
                 இந்திய மருந்து ஆய்வுக்கு தனி மையம்: இப்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் டாம்ப்கால் நிறுவனம், பல வகையான சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகளை சாஸ்திர முறைப்படியும் புதிய கலப்பு முறைப்படியும் தயாரித்து வருகிறது. தற்கால தேவைக்கு ஏற்ப, புதிய கலப்பு மருந்துகளை நல்ல தரத்தில் தயாரிக்கும் நோக்கத்தில் டாம்ப்கால் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு என ஒரு தனி மையம் நடப்பாண்டில் உருவாக்கப்படும். வண்டலூர் உயிரியல் பூங்காவில்... இப்போது டாம்ப்கால் நிறுவன விற்பனைப் பிரிவு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக 65 வகையான மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

            இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு விற்பனைப் பிரிவு தொடங்கப்படும்'' என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

Read more »

ரூ.23 கோடியில் 50 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள்

     தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.23.83 கோடியில் 50 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

பேரவையில் ரூ.3,889 கோடி ஒதுக்கீட்டுக்கான மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவர் பதில் அளித்தபோது இது தொடர்பாக செய்த அறிவிப்புகளின் விவரம்:
  
            தமிழகத்தில் இப்போது மொத்தம் 1,539 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. 2008-09-ம் ஆண்டில் அறிவித்தபடி, 116 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் ரூ.42.59 கோடியில் ஏற்கெனவே தொடங்கப்பட்டன. இவற்றுக்கு சொந்தக் கட்டடங்கள் இப்போது கட்டப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் (2010-11) தேசிய ஊரக நல்வாழ்வு இயக்ககத்தின் நிதியுதவியுடன் மேலும் 50 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் ரூ.23.83 கோடியில் தொடங்கப்படும். 40 ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்துதல்: தமிழகத்தில் இதுவரை கண்டிராத சாதனையாக இரண்டே ஆண்டுகளில் 125 ஆரம்ப சுகாதார மையங்கள், 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. இதற்காக தேசிய ஊரக நலவாழ்வு இயக்ககத்தின் நிதி ரூ.66.22 கோடி செலவிடப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்துக்கும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  
           இப்போதுள்ள 257 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு முழுவீச்சுடன் செயல்பட்டு வருகின்றன. இதனால் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மற்றும் சிறு அறுவைச் சிகிச்சைகளை செய்யும் அளவுக்கு நவீன வசதிகளுடன் ஆரம்ப சுகாதார மையங்கள் விளங்குகின்றன. மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆரம்ப சுகாதார மையங்களில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. 2009-10-ம் ஆண்டில் 2,694 சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே நடப்பு நிதியாண்டில் ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மேலும் 40 ஆரம்ப சுகாதார மையங்கள் ரூ.40.87 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன.
144 ஆரம்ப சுகாதார மையங்களில்... தமிழகத்தில் 779 ஆரம்ப சுகாதார மையங்களில் சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகள் உள்ளன. பொது மக்களிடையே இந்திய முறை மருத்துவத்துக்கு பெருமளவில் வரவேற்பு இருப்பதால், இந்த ஆண்டு ரூ.3.37 கோடியில் 144 ஆரம்ப சுகாதார மையங்களில் இந்திய மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்படும்.
 
              கூடுதல் மருத்துவர் நியமனம்: மக்களுக்கு அளிக்கும் மருத்துவ சேவைப் பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் தொடர்ந்து மருத்துவ வசதி அளிக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்திலும் குறைந்தது இரண்டு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டியது அவசியம். இப்போது 213 ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு மருத்துவர் என்ற வீதத்தில் மட்டுமே பணியில் உள்ளார். தேசிய ஊரக நலவாழ்வு இயக்க நிதியிலிருந்து இந்த 213 ஆரம்ப சுகாதார மையங்களிலும் கூடுதலாக ஒரு மருத்துவர் நியமனம் செய்யப்படுவார். ரூ.25 கோடியில்....ஆரம்ப சுகாதார மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25.50 கோடி செலவிடப்படும். கடந்த நிதியாண்டில் ரூ.20.38 கோடியில் ஆரம்ப சுகாதார மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நடப்பு நிதியாண்டில் ஆரம்ப சுகாதார மையத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு ரூ.18 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், 48 ஆரம்ப சுகாதார மையங்களை ரூ.2.5 கோடியில் தர நிர்ணய மேம்பாடு செய்தல், ரூ.5 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் என மொத்தம் ரூ.25.50 கோடி செலவிடப்படும்'' என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தொலைதூரக் கல்வி மைய விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்

 சிதம்பரம்:

                                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தின் 2010-11 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை புதன்கிழமை (ஏப். 21) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. துணைவேந்தர் எம்.ராமநாதன் முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் முன்னிலை வகிக்கிறார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் மற்றும் புல முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நீர்}மோர் பந்தலை திறந்த மாற்றுத் திறனாளிகள்

 கடலூர்:

              மாற்றுத் திறனாளிகள் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் திறந்தனர் மாற்றுத் திறனாளிகள் பலர் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் கடலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுஅளிக்க வருகிறார்கள். இவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைப்பதுகூட சிரமமாக உள்ளது. மற்றவர்களுக்கும் குடிநீர் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. கோரிக்கை மனு அளிக்க வரும் ஏழை எளிய மக்கள் பலர் விலைகொடுத்து குடிநீர் வாங்கும் நிலையில் இல்லை. எனவே கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் சேர்ந்து, தங்கள் சொந்த செலவில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை நீர் மோர் பந்தல் திறந்தனர். நீர் மோர் பந்தலை கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு திறந்து வைத்தார். இதனை முன்மாதிரியாக் கொண்டு, மேலும் பலர் இத்தகைய நீர் மோர் பந்தலை மக்களுக்காகத் திறக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் கேட்டுக் கொண்டனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் மீது தாக்குதல்

 கடலூர்:

                காவல்நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரையும் தலைமைக் காவலரையும் தாக்கியதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். திட்டக்குடியை அடுத்த சிறுபாக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம் அமைப்பாளர் கருப்பையா (28). அவரது மனைவி கண்ணம்மாளுக்கும் அதே ஊர் சேகரின்  மனைவி ஜெயாவுக்கும் இடையே அவர்களின் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக விரோதம் இருந்து வந்தது. இரு தரப்பினரும் சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு வந்திருந்த அனைவரையும் தரையில் அமருமாறு சப்-இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

                      தனது மனைவி கண்ணம்மாளையும் தரையில் அமருமாறு கூறியதால், கருப்பையாவுக்குக் கோபம் ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணனுக்கும் கருப்பையா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணனும் தலைமைக் காவலர் கலியமூர்த்தியும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.  அதைத் தொடர்ந்து சிறுபாக்கம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கருப்பையா மற்றும் அவரது ஆதரவாளர் சின்னக்கண்ணு (45) ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்த வருகிறது.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்

 கடலூர்:

                  பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவன அனைத்துத் தொழிற்சங்கங்களையும் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

               தொழிற்சங்கங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சருக்கும் இடையே திங்கள்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து   வேலைநிறுத்தம் தொடங்கியதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் தொலைத் தொடர்பு மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலர் சம்பந்தம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியது:

              30 சதவீதம் பி.எஸ்.என்.எல். நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது, ஒரு லட்சம் அலுவலர்களை, ஊழியர்களை விருப்ப ஓய்வில் வெளியேற்றும் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஐ.டி.ஏஸ். அதிகாரிகள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைவது குறித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும், காப்பர் கேபிள்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும், 93 லட்சம் ஜி.எஸ்.எம். இணைப்புக்கான கருவிகளை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐ.டி.ஏ. பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

               அகில இந்திய அளவில் நடைபெறும் இப்போராட்டத்தில்  பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் 3 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 24 ஆயிரம் பேரும், கடலூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 1,300 பேரும் பங்கேற்றனர் என்றார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கடலூர் தொலைத்தொடர்பு பொதுமேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் காரணமாக கடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. தொலைபேசிக் கட்டணம் செலுத்த வந்த பலர் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். அஞ்சல் நிலையங்களில் பலர் தொலைபேசிக் கட்டணம் செலுத்தினர்.  இந்நிலையில் தொலைத் தொடர்பு அமைச்சருக்கும் தொழிற்சங்கப் பிதிநிதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.  எனவே மாலையில் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சிதம்பரம்சிதம்பரத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெற்கு சன்னதி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கே.நாவு தலைமை வகித்தார். வி.சிதம்பரநாதன் முன்னிலை வகித்தார். ஏ.ஜெய்குமார், டி.விஸ்வலிங்கம், ஏ.ராஜசேகரன், ஜி.கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சத்துணவு ஊழியர்கள் மனிதச்சங்கிலி

 கடலூர்:

            தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.  "25 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றிவரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராமநாதன் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் விளக்க உரை நிகழ்த்தினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்பிரமணியன், வங்கி ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மருதவாணன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நூறு நாள் வேலை திட்டத்தில் போலி பெயர்கள் அதிகரிப்பு!: ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் எதிர்ப்பு

கடலூர்:

                       'கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டம் கணக்கெடுப்பு பணியால் (கே.வி.டி) தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் போலி பெயர் பட்டியல் பதிவு அதிகரித்து வருகிறது.

                       மத்திய அரசின் வேலை உறுதித் திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுகிறது. காலை 7 மணியிலிருந்து மாலை 4 வரை பணி செய்ய வேண்டும். இடையில் மதிய உணவுக்காக ஒரு மணி நேரம் விடப்படும். லோக்சபா தேர்தலுக்குப் பின் இந்த வேலை நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு கூலியும் 80லிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டது. காலை 7 மணிக்கு துவங்குகிற பணி காலை 8 மணிக்குள் வருகைப் பதிவேடு எடுக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பெயர் பட்டியல் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் வேலை செய் யும் மொத்த நபர்களை மாவட்ட வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து விடுவர். ஆனால் தற்போது கோடை காலமாக இருப்பதால் பெரும்பாலான ஒன்றியங்களில் காலை 9 மணிக்கு பணி துவங்கி மதியம் 2 மணி வரை நடக்கிறது. அதனால் 10.30 மணிக் குமேல் அலுவலகத்திற்கு வருகை பட்டியல் அளிக் கப்படுகிறது.

                         பெரும்பாலான மக்கள் நலப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை பதிவு கொடுக்காமல் 'சிக் னல்' கிடைக்கவில்லை என கூறி மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விடுகின்றனர். தற்போது 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில்தான் குடிசைகள் அதிகம் இருப்பதால் கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் 'கான்கிரீட்' வீட்டு வசதித் திட்ட கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் கிராமங்களில் நூறு நாள் வேலை திட்டம் நடைபெறும் இடங்களுக்கு அவர்கள் செல்வதில்லை. அதிகாரிகள் அங்கு பணி செய்பவர்களிடமே எவ்வளவு பேர் வேலைக்கு வந்தனர் என வருகை பதிவு பெற்றுக் கொள்கின்றனர். இந்த வருகை பதிவை பொறுப்பற்றவர்கள் கவனித்து வருவதால் தமது இஷ்டம் போல் வேலை செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை கூடுதலாக்கி போலி பட்டியல் தயார் செய்து கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சிறு விடுப்பு...: 

                     ஊராட்சி பணியாளர்களை 'கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத்தில் ஈடுபடுத்துவதை ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்கம் கண்டித்துள்ளது. இத்திட்டத்திற்காக தனியாக அதிகாரிகள், ஊழியர்கள் நியமித்து குடிசைகள் கணக்கெடுப்பு பணிகளை நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒட்டு மொத்த சிறுவிடுப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நூறு நாள் வேலை திட்டத்தில் போலி பெயர் பட்டியல் தயார் செய்து கொடுத்ததால் பல ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து துணைத் தலைவர் மூலம் கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நலப் பணியாளர்கள் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தை கவனித்து வருவதால் மேலும் போலி பெயர் பட்டியல் கொடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.


பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மாவட்ட 'ஹேண்ட் பால்' அணி வீரர்கள் தேர்வு

 கடலூர்: 

                     மாநில அளவிலான 'ஹேண்ட் பால்' போட்டிக்கு கடலூர் மாவட்ட அணிவீரர்கள் நேற்று அண்ணா விளையாட்டரங்கில் தேர்வு செய்யப்பட்டனர். பதினைந்து வயதிற்குட்பட்ட மாணவர்ளுக்கிடையே மாநில அளவிலான 'ஹேன்ட் பால்' போட்டிகள் கோயமுத்தூரில் வரும் 23, 24 தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கு பெறும் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம் முன்னிலையில் மாவட்ட'ஹேண்ட் பால்' கழக தலைவர் சாமிக்கண்ணு, செயலாளர் அசோகன், பயிற்றுனர் கார்த்திகேயன், துறை செயலாளர்கள் பாபு, தினகர், செங்குட்டுவன் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு தலா 16 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் இளநீர் விலை 'கிடு கிடு' : ரூ.8லிருந்து 15 ரூபாயாக உயர்வு


கடலூர்: 

                  கடலூரில் இளநீர் விலை மீண்டும் 15 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோடை காலம் வந்து விட்டாலே இளநீருக்கு கிராக்கி அதிகம். விவசாயிகளிடம் இளநீர் ஒன்று 2.50க்கு கொள்முதல் செய்து கடலூரில் அதிகபட்சமாக 8 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 8 ரூபாயாக விற்பனை செய்த இளநீர் 10 ரூபாயாக உயர்ந்தது. கடலூர் மைதானத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்ததால் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். இவர்கள் மைதானத்தில் உடற்பயிற்சி செய்துவிட்டு கலெக்டர் அலுவலக சாலையில் இளநீர் குடித்து இளைப் பாறினர். இதனால் கலெக்டர் அலுவலக சாலையை ஆக்கிரமித்து வைத்திருக்கும் இளநீர் கடையில் வியாபாரம் சூடுபிடித்தது. அதே வேகத்தில் திடுதிப்பென இளநீர் விலை 15 ரூபாயாக உயர்ந்தது. தற்போது இளநீர் ஒன்று 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மின்வெட்டு மாற்றுதலுக்குட்பட்டது: மேற்பார்வை பொறியாளர் அறிவிப்பு

 கடலூர்: 

                          மின்வெட்டு நேரம் மின் கட்டமைப்புக்கு கிடைக்கும் மின்சார அளவினை பொறுத்து மாற்றுதலுக்கு உட்பட்டது என மின்வாரியம் அறிவித்துள்ளது. 

இது குறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                    மின்பற்றாக்குறை நிலவி வருவதால் கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் விவசாய மின் இணைப்புகளுக்கு கடந்த 28ம் தேதி முதல் பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நகர் புறத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கு சுழற்சி முறையில் 3 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. மேலும் இந்த மின்வெட்டு நேரம் மின் கட்டமைப்புக்கு கிடைக்கும் மின்சார அளவினை பொறுத்து மாற்றுதலுக்கு உட்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஆசிரியர் பயிற்றுனர்களின் பணி விதிகளை வரையறுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


கடலூர்: 

                ஆசிரியர் பயிற்றுனர்களின் பணி விதிகளை வரையறுக்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் 500 ஆசிரியர் பயிற்றுனர் களை பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்விற்கு முன் பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம் மற்றும் வட்டார வளமையங்களில் நடக்கும் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஈடு செய்யும் வகையில் விடுப்பு அல்லது பண பலன் வழங்க வேண்டும். ஆசிரியர் பயிற்றுனர்களின் பணிவிதிகள் வரையறுக்கப்பட வேண்டும் உட் பட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூரில் (எஸ்.எஸ்.ஏ.,) மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கரும்பு உற்பத்தி பெருக்க விவசாயிகள் பயிற்சி முகாம்


சேத்தியாத்தோப்பு: 

                 அகர ஆலம்பாடியில் கரும்பு உற்பத்தி பெருக்க விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.

                  நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். புவனகிரி வேளாண் உதவி இயக்குநர் கனகசபை முன்னிலை வகித்தார். உழவர் மன்ற தலைவர் வேல்முருகன் வரவேற் றார். சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆட்சியர் ஆசியா மரியம் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலர் சந்திரசேகரன், முன்னாள் தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ராஜதுரை, கரும்பு அலுவலர்கள் முருகேசன், வெங்கடேசன், கரும்பு அபிவிருத்தி அலுவலர் ராஜன், புவனகிரி வேளாண்மை அலுவலர் ராஜன் ஆகியோர் கரும்பு உற்பத்தி பெருக்கம், சர்க்கரை கட்டுமான உயர்வுக் கான வழி முறைகள், கரும்பு நடவு முறைகள், சொட்டு நீர் பாசனம் குறித்து பேசினர். உதவி வேளாண் அலுவலர் கவிதா, கரும்பு உதவியாளர்கள் ராமலிங்கம், தமிழ்மணி, உழவர் மன்ற கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், ராமலிங் கம், குஞ்சிதபாதம், ஊராட்சி தலைவர் சங்கர், உட்பட பலர் பங்கேற்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: என்.எல்.சி., தத்து எடுத்துக் கொள்ள முடிவு


கடலூர்: 

                  என்.எல்.சி., பகுதியில் வரும் ஊராட்சிகளில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் அந்த கிராமங்களை தத்து எடுத்துக் கொள்ள என்.எல்.சி., நிர்வாகம் முடிவு செய் துள்ளது.

                       என்.எல்.சி., நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் சுற்றுப்புற மேம்பாடு குறித்த திட்டப் பணிகளின் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு கீழ்க்கண்டவாறு தீர்வு காணப்பட்டது. கோடை காலத்தை முன்னிட்டு குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் பெரியாக்குறிச்சி ஊராட்சியில் அம்புராசெங்குட்டை முதல் பெரியாக்குறிச்சி வரை கூட்டுக்குடிநீர் திட் டத்தின் கீழ் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் என்.எல்.சி., மூலம் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் சேப்ளாநத்தம் காமராஜ் நகர், கீழ்பாதியில் ஆழ்குழாய் கிணறு தலா 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், விருத்தாசலம், மேல்புவனகிரி, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள என். எல்.சி., பகுதியில் வரும் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண தத்து எடுத்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் என்.எல்.சி., அதிகாரிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உட்பட பலர் பங்கேற்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மின் நிறுத்த நேரத்தை மாற்றியமைக்க அண்ணாமலைநகர் பேரூராட்சி கோரிக்கை

 சிதம்பரம்: 

                    சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் சேர்மன் கீதா கலியமூர்த்தி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் குஞ்சுபாண்டியன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், அண்ணாமலைநகர் பேரூராட்சி பகுதியில் வடிகால்களுக்கு சிலாப் அமைப்பது. பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற ஊரமைப்பு வளர்ச்சி நிதியில் 75 சதவீதம், பேரூராட்சி பொது நிதியில் 25 சதவீதம் மண் சாலை மற்றும் பிரதான சாலையில் தொடர்பு படுத்தும் சாலை மேம்படுத்துதல். கலுங்குமேடு பகுதியில் பள்ளி மற்றும் அடுக்குமாடி வீடுகள் கட்ட அனுமதிப்பது. கட்டட உரிமம் தொகையை உயர்த்தாமல் பழைய கட் டணத்தை வசூலிப்பது. காலை 6 மணிமுதல் 9 மணி வரை நிறுத் தப்படும் மின் சாரத்தை 10 மணி முதல் 1 மணி வரை மாற்றி அமைக்க மின் துறைக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

உவர்ப்பாக மாறிய குடிநீர் வடதலைகுளம் மக்கள் அவதி


புவனகிரி: 

                          புவனகிரி அருகே வடதலைக்குளம் கிராமத்தில் குடிநீர் உவர்ப்பாக மாறி விட்டதால் குடிநீருக்கு அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. புவனகிரி அருகே வடதலைக்குளம் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே பொதுமக்கள் வசதிக்காக கடந்த 2006-07ம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. குளக்கரையின் கீழ்புறம் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. காலப்போக்கில் குடிநீர் முற்றிலும் உவர்ப்பாக மாறியதால் மீண்டும் குளக்கரையின் மேல்புறம் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. தற்பொழுது புதியதாக போடப்பட்ட போர் வெல்லிருந்து கிடைக்கும் குடிநீரும் உவர்ப்பாக மாறிவிட்டதால் பொதுமக்கள் நல்ல குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மீண்டும் மாற்று ஏற்பாடு செய்து நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

கடலூர்: 

                  கடலூரில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி டிஜிட்டல் பேனர்களை போலீசார் நேற்று அகற்றினர். அரசியல் கட்சியினர்உள்ளிட்ட முக்கிய பிர முகர்கள் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்களை விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் வைக்க வேண்டும். விழா முடிந்து மூன்று நாட்கள் கழித்து அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், கடலூரில் முக்கிய சாலைகளில் அரசியல் கட்சிகள் முக்கிய பிரமுகர்களின் பேனர்கள் வைக்கப்பட்டு நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் நேற்று கடலூர் பாரதி ரோடு, நெல்லிக்குப்பம் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior