உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

மலேசியாவிற்கு வேலை தேடி‌ச் செல்வோருக்கு மத்திய அரசு அறிவுரை

           

                  மலேசியாவிற்கு வேலை தேடி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள ஆள்சேர்ப்பு முகவர்கள் மற்றும் நமது நாட்டில் உள்ள சில ஆள்சேர்ப்பு முகவர்கள் தவறாக வழிகாட்டி உரிய ஆவணங்களின்றி ஏராளமானோரை மலேசியாவிற்கு அழைத்துச் செல்கின்றனர் என அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பல இந்தியர்கள் மலேசியாவிற்கு சென்று உரிய வேலையோ அல்லது வருவாயோ இன்றி அங்குள்ள இந்திய தூதரகத்தில் புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. எனவே, மலேசியாவுக்கு சென்று வேலை செய்ய விரும்புவோர் அதற்கான சட்டவிதிகள் மற்றும் பணிச் சூழ்நிலைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் www.mohr.gov.my என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மலேசியாவிற்கு வேலை செய்ய செல்ல விரும்புவோர் கீழ்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும் :


1.
குடியிருப்பு பர்மிட் அல்லது அடையாள அட்டை மற்றும் வேலை அட்டையை உடனடியாக பெற்றுக் கொள்ளவும்

2.
தங்களது பாஸ்போர்ட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3.
கையில் எப்போதும் பாஸ்போர்டின் நகலை வைத்துக் கொள்ள வேண்டும்.

4.
மலேசியாவில் தங்கி இருக்கும் போது எந்த வெற்று தாளிலும் கையெழுத்து போடக் கூடாது.

5.
பாஸ்போர்ட் மற்றும் பணி ஒப்பந்தம் தொலைந்து போனால், உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் செய்ய வேண்டும்.

6.
மலேசியாவில் பணிச் சூழ்நிலை குறித்து முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

7.
மலேசிய சட்டப்படி தொழிலாளர்கள் போராட்டம் செய்வது சட்டவிரோதம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

Production at NLC Mine-II to touch 15 million tonnes

 
 
Enhanced yield:Union Minister of State for Coal, Statistics and Programme implementation (independent charge) Sriprakash Jaiswal dedicating the project to the nation at Neyveli on Monday.


CUDDALORE: 

           Union Minister of State (Independent charge) for Coal, Statistics and Programme Implementation Sriprakash Jaiswal dedicated the Rs.2,295.93-crore Mine-II expansion project of Neyveli Lignite Corporation to the nation on Monday.

             Speaking on the occasion on the NLC campus the Minister said with the commencement of the project the lignite production in Mine-II would go up from 10.5 million tonnes to 15 million tonnes an year and it would also fuel the requirements of the Thermal Power Station-II Expansion (500 MW). It was estimated that the expanded mining area had lignite reserves of 215 million tonnes with a 30-year project life. In appreciation of the efforts put in by the employees and the contract workmen for the completion of the project, the Minister announced a cash award of Rs.3,000 and Rs.1,500 respectively as one-time payment.

                   Mr. Jaiswal said that former Prime Minister Jawaharlal Nehru had visualised industries as the symbols of development and catalysts for growth and the NLC had made the vision a reality. The country had achieved a growth rate of 7 to 8 per cent to sustain the momentum and to attain the goal of 10 per cent growth, infrastructure development was a must and in this aspect electricity occupied a primary position. For the growth of the industry and to make power available at affordable cost to all the people the Centre had taken up various steps for augmenting power generation. For instance to bridge the supply-demand gap it had evolved the National Electricity Policy to focus on generation, transmission and distribution to meet the requirements of each and every household.

downlaod this page as pdf

Read more »

என்.எல்.சி. 2-ம் சுரங்க விரிவாக்கம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: உன்னத பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வெகுமதி- மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால்



என்எல்சி 2-ம் சுரங்க விரிவாக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்(இடமிருந்து 3-வது).
 
நெய்வேலி:
 
                      நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்கும் மின்சாரத்தை, உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகித்து வரும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள என்எல்சி ஊழியர்களுக்கு வெகுமதியாக ரூ.3 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் என மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால் நெய்வேலியில் திங்கள்கிழமை நடந்த விழாவில் அறிவித்தார். என்எல்சி 2-ம் சுரங்கத்தின் தற்போதைய உற்பத்தித் திறனான ஆண்டுக்கு 105 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி என்பதை 150 லட்சம் டன்னாக உயர்த்தும் நோக்கில் ரூ.2,295 கோடி செலவில் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகள் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்பணிகள் முடிந்து 2-ம் சுரங்க விரிவாக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வரவேற்றார். 
 
                   மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் சுரங்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்துப் பேசியது:தென்னிந்தியா மட்டுமின்றி தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் உன்னதமான பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இருப்பினும் தற்போதைய நவீன தொழில்நுட்ப உதவியுடன் சுற்றுச்சூழல் மாசு முழுவதும் தடுக்கும் வகையில் பசுமை புரட்சியையும் என்எல்சி செய்து வருகிறது. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக என்.எல்.சி. நிறுவனம் திகழ்கிறது.நாட்டின் மின்சாரத் தேவை எந்த அளவுக்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும், அதைப் பூர்த்தி செய்வது என்பது எவ்வளவு கடினமானது என்பதும் உங்களுக்குத் தெரியும். இருப்பினும் நீங்கள் அந்த கடினமான பணியில் ஈடுபட்டு, நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறீர்கள். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள என்எல்சி தொழிலாளர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். என்எல்சி அதிகாரிகளின் சேவை நாட்டை முன்னிலைப்படுத்துகிறது.உங்கள் கைகளில் மின்சாரம் எனும் பெரிய பாரம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த பாரத்தை நாட்டு மக்களின் நலன்கருதி சிரமம்பாராமல் ஏற்க பாடுபடுங்கள். தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளார்கள் என்றார் அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்.இந்தி மொழியில் அமைச்சர் பேசியதை எம்பி ஜே.எம்.ஆரூண்ரஷீத் தமிழாக்கம் செய்தார்.விழாவில் கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி, நிலக்கரித் துறை செயலர் சி.பாலகிருஷ்ணன், நிலக்கரித் துறை நுகர்வோர் குழு உறுப்பினர் சி.டி.மெய்யப்பன், சாகுல், ஜெயப்பிரகாஷ் மற்றும் நிறுவன இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

downlaod this page as pdf

Read more »

15-ம் தேதி முதல் 45 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை

 கடலூர்:

                    வரும் 15-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு விசைப் படகுகள், கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் தடை அமுலில் இருக்கும். சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. கடல்தான் இவர்களின் வாழ்வாதாரம். ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், சிறிய படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.  பெரிய படகுகள் சுருக்கு வலை, இரட்டைமடி வலை, கொல்லிமடி வலை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வலைகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, பெருமளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே கடல் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மீனவர்களுக்கு பரவலாக பல மாதங்கள் மீன் கிடைக்கவும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 15 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க அரசு தடை விதிக்கிறது.  

                 மேலும் ஏப்ரல், மே மாதங்கள்தான் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாள்களில் உற்பத்தியாகும் மீன் குஞ்சுகளையும் பிடித்து விட்டால், மற்ற நாள்களில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிடும் என்று கருதப்படுவதால் மேற்கண்ட நாள்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்குத் தடையில்லை.  கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மீன்பிடித் தடைக் காலத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலத்தில் குடும்பத்துக்கு ரூ.500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிவாரணத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். 

தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது:  

                கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு முழுவதும் மீன்கள் சரியாகக் கிடைக்கவில்லை. கரையோரப் பகுதிகளில்தான் மீன்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. ஆனால் கடற்கரைகளில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலில் பெருமளவுக்கு கழிவுகள் கலக்கின்றன. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மீன்கள் கிடைப்பது அரிதாகி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார் சுப்புராயன்.


downlaod this page as pdf

Read more »

பயணிகளின் தாகம் தணிக்குமா பண்ருட்டி நகராட்சி

 பண்ருட்டி:

              பண்ருட்டி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து பயணிகளின் தாகத்தை தீர்க்க குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என பொது நல அமைப்புகள் பண்ருட்டி நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளன. பண்ருட்டியைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தினர் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளவும், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் வியாபார ரீதியாகவும் பண்ருட்டிக்கு வருகின்றனர். இதனால்  பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களும் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பண்ருட்டி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் நான்கு இடங்களில் பிளாஸ்டிக் தொட்டிகளை அமைத்த நகர நிர்வாகம் அவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டது. இதனால் பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடைகளில் தண்ணீர் பாக்கெட் வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் பஸ் நிலையத்தில் ஒரு தண்ணீர் பாக்கெட் ரூ.1.50 முதல் ரு.2 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பண்ருட்டி பஸ் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட்டுகளில் முகவரி, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் அச்சிடப்படாமல் விற்பனை செய்யப்படுவதாகவும், சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயணிகளின் நலன் கருதி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியை விரைந்து ஏற்படுத்தித் தரவேண்டும் என பொது நல அமைப்புகள் நகர நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளன.


downlaod this page as pdf

Read more »

மக்கள் குறைகேட்பு கூட்டம் 190 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

 கடலூர்:

                 கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார். மக்கள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள மக்கள் சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. குடிநீர் வசதி, சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 296 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் 15 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் ஊன்று கோல்கள், 128 பேருக்கு இலவச பயண அட்டைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தாட்கோ திட்டத்தில் 38 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கடன் உதவிக்கான காசோலைகள், பிற்பட்டோர் நலத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.13,230 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் 4 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், தாட்கோ நிறுவன மாவட்ட மேலாளர் துளசிதாசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலர் சீனிவாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

Read more »

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் குளறுபடி!: அரசின் நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் அவதி


கடலூர்: 

                    வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

                  வறுமையில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடும் பொருட்டு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் வாழ்க்கையின் அடித் தட்டில் உள்ளவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கடந்த 2002ம் ஆண்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள் ளோர் பட்டியலை தயாரித்தது. ஒரு குடும்பத்தின் வாழ் நிலையை கண்டறிய நிலம், வீட்டின் தன்மை, உடுக்கும் உடை, உணவு முறை, கழிவறை, வீட்டில் உள்ள ('டிவி', மின்விசிறி, சமையல் சாதனம், ரேடி யோ, குக்கர்) பொருட்கள், குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தகுதி, குடும்ப உழைப்பு நிலை, வருமானத்தின் தன்மை, குழந்தைகளின் நிலை, கடன் தன்மை, இடம் பெயர்ந்ததற்கான காரணம், அரசு உதவி தேவைப்படும் தன்மை என 13 இனங்களில் ஒவ்வொரு கேள் விக்கும் ஐந்து பிரிவுகளில் தகவலை சேகரித்து படிவத்தை பூர்த்தி செய்து மதிப்பெண் வழங்க மத் திய அரசு அறிவுறுத்தியது.

                     ஒவ்வொரு பிரிவிற்கும் ஜீரோ முதல் நான்கு மதிப்பெண் என மொத்தம் 13 கேள்விகளுக்கும் 52 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 17 மதிப் பெண்ணுக்கு குறைவாக உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு (பி.பி.எல்.,) கீழ் உள்ளவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்படி கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக் கெடுப்பில் மொத்தம் மூன்று லட்சத்து 7ஆயிரத்து 685 குடும்பங்கள் வறுமைக் கோட்டில் உள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 583 குடும் பங்கள் (17 மதிப்பெண் ணுக்கு குறைவாக) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலின் அடிப் படையிலேயே அரசின் நலத்திட்டங்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படுகிறது.

                     குறிப்பாக மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை, ஆதரவற்ற விவசாய தொழிலாளர், கணவனால் கைவிடப்பட்ட அல் லது ஆதரவற்ற பெண்கள், 50 வயதை கடந்த திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் பயனாளிகள் வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடலூர் மாவட்டத்தில் இந்த கணக் கெடுப்பு பணி முறையாக வீடு, வீடாக சென்று நடத்தாமல், ஊழியர்களாகவே தயார் செய்துள்ளனர். இதனால் வசதி படைத்தவர்கள் பலர் வறுமைக் கோட்டிற்கு (17 மதிப் பெண்ணிற்கு ) கீழ் உள்ளவர்களாகவும், உண்மையில் சொந்த வீடின்றி சாலையோரத்தில் வசிப்பவர்கள் வறுமைக் கோட் டிற்கு மேல் உள்ளவர் களாக குறிப்பிடப்பட் டுள்ளனர்.

                        பட்டியலில் உள்ள குளறுபடியால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஓய்வூதியம் மற்றும் இந் திரா நினைவு குடியிருப்பு திட்டங்களில் பயன்பெற முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்த தவறால் ஏழை மக்களுக்காக இரு அரசுகளும் செயல்படுத்தி வரும் திட் டங்கள் பெருமளவு செல் வந்தர்களையே சென்றடையும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலை மறு ஆய்வு செய்து, தகுதி உள்ளவர்களை மட்டுமே அந்த பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

வட மாநில வியாபாரிகளால் பருப்பு விலை 'கிடுகிடு' உயர்வு

 பண்ருட்டி: 

                       வட மாநில வியாபாரிகள் கொள்முதல் அதிகரிப்பால் துவரம் பருப்பு, உளுந்து, கடலை, பாசி பயறு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. துவரம் பருப்பு, பாசி பருப்பு, உளுந்து உற்பத்தி குறைவால் கடந்த ஆண்டு 40 ரூபாயில் இருந்த பருப்பு விலை 'ஜெட்' வேகத்தில் இரு மடங்காகவும், துவரம் பருப்பு 100 ஆகவும் உயர்ந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் குஜராத், கர்நாடகா குல்பர்கா, மகாராஷ்டிரா மாநில துவரம் பருப்பு, பாசி பயறு, உளுந்து வரத்து துவங்கியதால் பருப்பு விலை சற்று குறைய துவங்கியது. அதனால் துவரம் பருப்பு முதல் ரகம் 60 ரூபாயும், பாசி பயறு 75ம், உளுந்து 54 என விலை குறைந்தது. ஆனால் தற்போது வடமாநிலங்களில் தேவை அதிகரிப்பால் துவரம் பருப்பு, பாசி பயறு, உளுந்து விலை தற்போது மீண்டும் 'கிடுகிடு'வென உயர துவங்கியுள்ளது. பண்ருட்டி மார்க்கெட்டில் துவரம் பருப்பு முதல் ரகம் ஒரு கிலோ 72 ரூபாயும், பைத்தம் பருப்பு 85ம், உளுந்து 60ம், குண்டு உளுந்து 72 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. கடலை பயறு 30ல் இருந்து 32ம், மல்லி 40ல் இருந்து 45ம் உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் வாட் வரி பிரச்னைக்காக மார்க்கெட் அடைக்கப் பட்டுள்ளதால் 52 ரூபாயாக இருந்த வற்றல் மிளகாய் 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.


downlaod this page as pdf

Read more »

'ஹவாலா' பணம் விவகாரம் அமலாக்க பிரிவு விசாரணை


கடலூர்: 

             கடலூரில் கைப்பற்றிய 'ஹவாலா' பணம் குறித்து மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

                   கடலூர் பஸ் நிலையத்தில் 2ம் தேதி இரவு 9 மணிக்கு திருப்பாதிரிபுலியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 42 லட்சம் ரூபாய் 'ஹவாலா' பணம் பிடிபட்டது. நாகை மாவட்டம் திட்டச்சேரி அல்பைசல் (32), திண்டுக்கல் மாவட்டம் அஷ்ரப் அலி (54), சென்னை ஜார்ஜ் டவுன் ஈஸ்வர் (42), சென்னை திருவல்லிக்கேணி சகுபர் சாதிக் (44), ஜாகீர் (எ) ஜாகீர் உசேன் (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பணம் ஒப்படைக்கப்பட்டது. 'ஹவாலா' பணம் கைப்பற்றப்பட்டது குறித்து மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று கடலூரில் விசா ரணை மேற்கொண்டனர்.


downlaod this page as pdf

Read more »

உற்பத்தி குறைவால் முந்திரி விலை உயர்வு


பண்ருட்டி: 

                           முந்திரி உற்பத்தி குறைவு காரணமாக, அதன் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. பண்ருட்டி பகுதியில் கடந்த ஆண்டு முந்திரி மரங்களில் பூக்கள் வைத்த நேரத்தில் பருவம் மாறி மழை பெய்ததால் உற்பத்தி 50 சதவீதம் குறைந்தது. இதனால் பலர் முந்திரி மரங்களை வெட்டி புதிய தோட்ட பயிர்களை பயிரிட துவங்கினர். தற்போது கேரளா, ஆந்திராவில் முந்திரி கொட்டை அறுவடை நடக்கிறது. 

                 அங்கும் உற்பத்தி குறைந் துள்ளதால் வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் முந்திரிகளை நம்பி உள்ளனர். இதனால் 80 கிலோ எடை கொண்ட முந்திரி கொட்டை 4,000லிருந்து 4,500 ரூபாயாகவும், இறக்குமதி முந்திரி கொட்டை 3,000லிருந்து 3,500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக முந்திரி அனைத்து ரகங்களும் கிலோ ஒன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

downlaod this page as pdf

Read more »

கடலூரில் தயாரான 'பார்ஜ்' இன்று எண்ணூர் செல்கிறது

 கடலூர்: 

                       கடலூர் துறைமுகத்தில் கடந்த ஒன் றரை ஆண்டாக தயாரிக்கப்பட்ட 'டெர் லோடர் பார்ஜ்' எண்ணூர் துறைமுகத் திற்கு இன்று அனுப்பப்படுகிறது. கடலூர் துறைமுகம் சுனாமி தாக்குதலுக்கு பின், மணல் மேடாகி மீன்பிடி விசைப்படகுகள் தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வந்தனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் சார்பில் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. பின்னர் அரசு சார்பில் துறை முக மேம்பாட்டுப் பணிகள் நடந்தன. கடலூர் துறைமுகத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பின், வெளிநாட்டிலிருந்து உரங் கள் இறக்குமதி செய்யப்பட்டு ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்டது. கடலில் பல நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் நிறுத்தப்படும் கப்பல்களிலிருந்து துறைமுகத்திற்கு சரக்குகளை கரைக்கு எடுத்து வர, 'பார்ஜ்'கள் தயார் செய்யும் பணி துவங் கியது. ஏற்கனவே கடலூரில் தயாரிக்கப்பட்ட 'பார்ஜ்' துபாய்க்கு அனுப்பப்பட்டது. மேலும், கடலூர் துறைமுகம் பகுதியில் குறைந்த டன் எடை கொண்ட சரக்கு கப்பல்களும் தயார் செய்யப்பட்டு, சிங்கப் பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு அனுப் பப்படுகின்றன. 900 டன் எடை தாங்கும் வகையில் 250 டன் கொண்ட 'டெர்லோடர் பார்ஜ்' கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த 'பார்ஜ்' இன்று எண்ணூர் துறைமுகத்திற்கு அனுப் பப்படுகிறது.


downlaod this page as pdf

Read more »

கடலோர பாதுகாப்பிற்காக இரண்டு கப்பல்

 கடலூர்,: 

                கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையின் இரண்டு கப்பல்கள் இன்னும் ஓராண்டில் கடலூர் துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுத்தப்படும் என, கிழக்கு பிராந்திய ஐ.ஜி., ராஜசேகர் தெரிவித்தார்.

                      மும்பையில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்பை பலப் படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரியில் கோஸ்டல் கார்டு, தமிழக கடலோர பாதுகாப்புப் படை போலீசாரை கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை ஐ.ஜி., ராஜசேகர் நேற்று காரைக்கால் துறைமுகத்தை ஆய்வு செய்த பின், கடலூர் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் துறைமுக அதிகாரிகள், 'துறைமுகம் ஆறு மீட்டர் ஆழமும், 60 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. சிறிய அளவிலான மீன்பிடி கப்பல்கள் மட்டுமே வந்து செல்கின்றன' என, தெரிவித்தனர். ஐ.ஜி., ராஜசேகர் கூறியதாவது: கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டிற்குள் கடலூர் துறைமுகத்தில் கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையின் இரண்டு கப்பல்களை நிரந்தரமாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கப்பல் வந்து செல்வதற்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து முதல்வர், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆகியவற்றுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜசேகர் தெரிவித்தார்.


downlaod this page as pdf

Read more »

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் வெளியீடு


கடலூர்: 

                 அரசு உயர் நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                    அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் பாடங்களின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மேல் நிலை முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்ல தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் பட்டியல் கடலூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு பட்டியலில் விடுபட்டவர்கள் எவரேனும் இருப்பின் வரும் 8ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, பணிவரன் முறை செய்த தேதி, ஆகியவை சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


downlaod this page as pdf

Read more »

விழுப்புரம் - நாகூருக்கு ரயில் விட கோரிக்கை

பண்ருட்டி: 

                 விழுப்புரம் - நாகூருக்கு பாசஞ்சர் ரயில் விட நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பண்ருட்டி தாலுகா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்க செயற் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். தெய்வசிகாமணி, ஜோசப், கலியபெருமாள், மதன்சந்த், கமலக்கண்ணன், தேசிங்கு, நூர்ஜகான், செல்வராஜ், திருவேங்கடம், கவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விழுப்புரம் - நாகூர் பாசஞ்சர் ரயில் விட வேண்டும். வாலாஜா வாய்க்காலில் மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.


downlaod this page as pdf

Read more »

சித்திரைப்பட்டத்தில் எள் சாகுபடி: இணை இயக்குனர் வேண்டுகோள்

 கடலூர்: 

                 சித்திரைப்பட்டத்தில் எள் சாகுபடி செய்து பயனடைய விவசாயிகளை இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                      தமிழகத்தில் 1.16 லட் சம் எக்டரிலும், கடலூர் மாவட்டத்தில் 5,000 எக்டர் பரப்பளவிலும் எள் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி தொழில் நுட்பங்கள் சரியாக கடைபிடிக்காததால் எள் பயிரின் சராசரி மகசூல் குறைவாக உள்ளது. எள் சாகுபடியில் சரியான தொழில் நுட்பங் களை தவறாமல் கடைபிடித்து, சாகுபடி செய்தால், எக்டர் ஒன்றுக்கு சராசரியாக 2,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். எனவே பாசன வசதியுள்ள விவசாயிகள் சித்திரைப்பட்டத்தில் எள் பயிர் சாகுபடி செய்ய கேட்டுக் கொள்கிறேன். சித்திரைப்பட்டத்தில் எள் பயிர் சாகுபடி செய்ய டி.எம்.வி.3. 4, கோ 1, வி.ஆர்.ஐ.1 மற்றும் எஸ்விபிஆர். 1 ஆகிய ரகங்கள் ஏற்றவை. சித்திரைப்பட்ட எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சாகுபடி தொழில் நுட்பங்களை தவறாமல் கடைபிடித்து மகசூல் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


downlaod this page as pdf

Read more »

பெண்ணாடம் மேம்பால பணிக்காக மாற்றப்படும் ஒருவழிப்பாதை சாலைகள் சீரமைக்க கோரிக்கை

 திட்டக்குடி: 

                      பெண்ணாடம் மேம்பாலம் பணிக்காக ஒருவழிப்பாதை மாற்றம் செய்வதற்கு முன்னதாக கிராமப் புற சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம், திட்டக்குடி வழியாக ஆயிரத்திற் கும் மேற்பட்ட வாகனங்கள், பஸ்கள், பள்ளி வேன் கள் உட்பட சிமென்ட் மற் றும் சர்க்கரை ஆலைக்கு தேவையான மூலப் பொருட்கள், உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங் கள் செல்கின்றன. பழுதடைந்த நெடுஞ்சாலையை சீரமைத்து அகலப்படுத்த 19.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இறையூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கியுள்ளது. மேம்பால பணிகள் மற்றும் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக நெடுஞ் சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேம்பால பணிக்காக ஒரு மாதத்திற்குள் போக்குவரத்து மாற் றம் செய்து ஒருவழிப்பாதையாக மாற்றி, வாகன நெரிசல் கட்டுப்படுத்தப் பட உள்ளது. இதனால் ஆயிரத்திற் கும் மேற்பட்ட வாகனங் கள் கிராமப்புற சாலை வழியாக தொடர்ந்து செல்லும். இதனால் கரும்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தார் சாலைகள் மேலும் பழுதடைய வாய்ப்புள்ளது. மேம்பால பணிகள் நிறைவடையும் முன்னதாகவே கிராமப்புற சாலைகள் பெயர்ந்து முற்றிலும் போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலைக்கு மாறிவிடும். எனவே தற்போது பழுதான கிராமப்புற சாலைகளை போக்குவரத்து மாற்றம் செய்வற்கு முன்னதாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


downlaod this page as pdf

Read more »

குறைந்த செலவில் உழவு பணிக்கு மினி டிராக்டர்


பரங்கிப்பேட்டை: 

                   பரங்கிப்பேட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் உழவு ஓட்டவும், நடவு செய்யவும் மினி டிராக்டர் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் விவசாயிகள் உழவு ஓட்டவும், நாற்று நடவும் கூலி ஆட்கள் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் உரிய பருவத்தில் பயிர் செய்ய முடியாமல் காலம் கடந்து செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இக்குறையை போக்க விவசாய சேவை மையம் மூலம் பு.முட்லூர், ஆயிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, தொழுதூர், பெண்ணாடம் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தலா 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மினி டிராக்டர், கை டிராக்டர் (பவர் டில்லர்), நடவு இயந்திரம், ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர், தார்பாய் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனி அலுவலர் கோபிநாத், செயலாளர் பார்த்தீபன், உதவி செயலாளர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


downlaod this page as pdf

Read more »

விழிப்புணர்வு ஊர்வலம்

 குறிஞ்சிப்பாடி: 

                 வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் பசுமை படை இயக்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை தாளாளர் தாமஸ் துவக்கி வைத்தார். முக்கிய பகுதிகள் வழியாக சுற்றுச்சூழல் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசக பலகைகளை ஏந்தி மாண வர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மேலும், தலைமை ஆசிரியர் சுகிர்தா தாமஸ் தலைமையில் சாரண, சாரணியர், ஜூனியர் செஞ்சிலுவை மற்றும் தேசிய பசுமைப் படையை சேர்ந்த 90 மாணவர்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் உழவார பணி மேற்கொண்டு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


downlaod this page as pdf

Read more »

விவசாயத்தில் சிறந்த பணி உழவர் மன்றத்திற்கு விருது

 குறிஞ்சிப்பாடி: 

                     கடலூர் மாவட்டத்தில் சிறந்த உழவர் மன்றத்திற் கான விருது அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிர் வகை பயிர்களில் தரமான விதை உற்பத்தி, விவசாயிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கும் விழா நடந்தது. கோவை வேளாண் பல்கலை., இணைவேந்தர் முருகேச பூபதி தலைமை தாங்கினார். தொலைதூர விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஜெயமணி, பேராசிரியர் சாத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் வேளாண் தொழில் நுட்ப பரவலாக் கல், தொழில் நுட்பங் களை கையாள்வதிலும் அதன் பயன்களை மக்களுக்கு எடுத்து செல்வதில் சிறந்து பணியாற்றிய அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத்திற்கு சிறந்த உழவர் மன்றம் என்ற விருது வழங்கப்படது. விருதை உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் பெற்றுக் கொண்டார்.


downlaod this page as pdf

Read more »

கடலூர் மார்க்கெட் கமிட்டியில் வேர்க்கடலைக்கு கூடுதல் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

 கடலூர்: 

                கடலூர் முதுநகர் மார்க்கெட் கமிட்டியில் நேற்று வேர்க்கடலைக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடலூர் முதுநகர் மார்க்கெட் கமிட்டியில் கடலூர், திருவந்திபுரம், நாணமேடு, உச்சிமேடு, தியாகவல்லி, காரைக்காடு, கண்டக்காடு, சில்லாங்குப்பம், சான்றோர் பாளையம், பில்லாலி தொட்டி உட்பட கடலூர் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் விவசாய பொருட்களை கொண்டு வந்து விற் பனை செய்கின்றனர். தற்போது கடலூர் பகுதியில் வேர்க்கடலை சீசன் என்பதால் மார்க் கெட் கமிட்டிக்கு வேர்க் கடலை அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. 12க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை வேர்க் கடலை மூட்டைகளுடன் விற்பனைக்கு வந்தனர். 91 லாட்டுகள் 400 மூட்டை வேர்க்கடலை விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தது. வேர்க்கட லையை வாங்க விருதுநகர், பண்ருட்டி, விழுப்புரம், புவனகிரி, பரங்கிப் பேட்டை, திருக்கோவிலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வியாபார பிரதிநிதிகள் 12 பேர் வேர்க்கடலை மூட்டைகளை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்தனர். இதில் குறைந்தபட்சமாக 3,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 3,229 ரூபாய் வரை விலை போனது. இந்த ஆண்டில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 400 மூட்டைகள் வேர்க் கடலை வரத்து இருந்தது குறிப்பிடத்தக்கதது.


downlaod this page as pdf

Read more »

உப்பனாற்றில் 50 கிலோ எடை திருக்கை மீன்


கிள்ளை: 

                    சிதம்பரம் அருகே உப்பனாற்று படுகையில் 50 கிலோ எடையில் திருக்கை மீன் கிடைத்தது. சிதம்பரத்தில் அடுத்த தாண்டவராயகன் சோழகன் பேட்டையைச் சேர்ந்தவர்கள் மாப்பை, பொய்யா தம்பதியினர். இவர்கள் நேற்று உப்பனாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் 50 கிலோ எடையுள்ள திருக்கை மீன் கிடைத்தது. இருவரும் போராடி கரைக்கு இழுத்தனர். 

இதுபற்றி அவர்கள் கூறுகையில் '

               மருத்துவ குணம் கொண்ட இந்த திருக்கை மீன் குளிர்ச்சியானது. கடலில் ஆழமான பகுதியில் மட்டுமே கிடைக்கும். உப்பனாற்றில் இவ்வளவு பெரிய மீன் கிடைத்தது இப்போது தான். இம்மீனில் 3 வகையான கொடிய முள் இருக் கும். கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயில் இருந்து 70 வரை மார்க்கெட் விலை கிடைக் கும்' என்றனர்.


downlaod this page as pdf

Read more »

வருவாய்த்துறையினரின் பணிகள் கட்டாய திணிப்பு: கலெக்டரிடம் முறையிட சர்வேயர்கள் முடிவு


கடலூர்: 

                  வருவாய்த் துறையினரின் பணிகளை நில அளவைத் துறையில் திணிக்கப்படுவதால் பட்டா மாற்றும் பணி பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் கடன் வழங்குவதில் அரசு கடுமையான கிடுக்கிப்பிடிகளை போட்டுள்ளது. ஏற்கனவே வி.ஏ.ஓ., விடம் சிட்டா கொடுத்து கடன் பெறுவது போன்று அல்லாமல், விவசாயிகள் பெயரில் நிலம் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும் என்ற நிலை உள்ளது. தன் காரணமாக கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுபவர்கள் 50 சதவீதமாக குறைந்து விட்டனர். இதனால் விவசாயிகள் தங்கள் மூதாதையர்களின் சொத்தை போதிய ஆவணம் கொடுத்து, தமது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முயன்று வருகின்றனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்படும் மனுக்கள் பெரும்பாலானவை பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டிய மனுக்களாகவே உள்ளன.

                     தமிழகத்தில் கடந்த 1.12.1982ல் 4,000 பேர் சர்வேயர்களாக பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் பலர் ஓய்வு பெறுதல், இறப்பு போன்றவற்றால் 2,000 பேராக குறைந்து விட்டனர். நாளொன்றுக்கு ஒரு தாலுகாவிற்கு பட்டா மாற்றம் செய்ய 20 மனுக்கள் வருகின்றன. அவற்றை அளவை செய்து பட்டா மாற்றுவது என்பது திடுதிப்பென செய்துவிட முடியாது. நன்கு பயிற்சி பெற்ற சர்வேயர்களால் ஒரு நாளைக்கு 2 மனுக்கள் மட்டுமே பைசல் செய்ய முடியும். மீதியுள்ள மனுக்களை நிலுவையில் வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ஒரு புறமிருக்க, நில அளவையர்கள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் பணி செய்து வருவதால், வருவாய்த் துறையினர் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் சர்வேயர்களிடம் திணிக்கப்படுகிறது. நில அளவை தொடர்பான பணி இல்லாமல் ரேஷன் அட்டை விசாரணை, வாக்காளர் அடையாள அட்டை, இலவச வேட்டி சேலை, சுனாமி வீடுகள், கான்கிரீட் வீடுகள் திட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற பணிகளில் நில அளவைத் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

                       இதனால் பட்டா மாற்றம் செய்யப்படவேண்டிய கோப்புகள் அலுவலகத்தில் உறங்கும் நிலை ஏற்படுகிறது. தினம்தோறும் வருவாய்த் துறையினரின் கெடுபிடியில் தவித்துக் கொண்டிருக்கும் நில அளவையர்கள் கலெக்டரை சந்தித்து முறையிட இருப்பதாக மாநில நிர்வாகி ரத்தினவடிவேலு தெரிவித்தார்.


downlaod this page as pdf

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரண உதவி

 கடலூர்: 

                        சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்ணுக்கு முதல் வர் நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார். சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற திருமணமாகாத பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் தாழங்குடாவைச் சேர்ந்த தாயை இழந்த சுகந்திக்கு இயற்கை சீற்ற நிவாரண நிதியிலிருந்து 69 ஆயிரத்து 123 ரூபாயும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 69 ஆயிரத்து 123 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 246 ரூபாயை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். தற்போது சுகந்தி பதிவு திருமணம் செய்துகொண்டு சான்றிதழ் சமர்ப்பித்ததையடுத்து இந்த உதவித்தொகை அவருக்கு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.


downlaod this page as pdf

Read more »

குடிநீர் கேட்டு காலி குடத்துடன் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


கடலூர்: 

            குடிநீர் வசதி கோரி டி.புதூர் கிராம மக்கள் காலி குடத்துடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

                  கடலூர் அடுத்த டி.புதூர் கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு நான்கு மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் 5 கி.மீ., தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கோடை காலம் துவங்கி விட்டதால் குடிநீரின்றி அவதிப்பட்டு வரும் டி.புதூரை சேர்ந்த 50 பெண்கள் நேற்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். குறை தீர்வு கூட்டத்தில் இருந்த கலெக்டரை சந்தித்து தங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்க கோரி மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்த கலெக்டர் சீத்தாராமன், டி.புதூர் கிராமத்திற்கு உடனடியாக புதிதாக ஆழ் துளை கிணறு அமைக்கவும், அதுவரை லாரி மூலம் தினமும் குடிநீர் வழங்க ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


downlaod this page as pdf

Read more »

கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை: திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம்

 கடலூர்: 

                     கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் இன்று திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

இதுகுறித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன் விடுத்துள்ள அறிக்கை: 

                        கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட் டில் பெருகி வரும் போக் குவரத்து நெரிசலை தவிர்க்க ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தின. தமிழக அரசு அனுமதி அளித்ததும், ரயில்வே சுரங்கப் பாதை பணியை ரயில்வே நிர்வாகம் துவங்கும் என தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அறிவித்தார். இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலை துறை ரயில்வே சுரங்கப்பாதை பணிக்கான திட்டத்திற்கு அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்து ரயில்வே நிர்வாகத்திற்கு கடந்த டிசம்பர் 8ம் தேதி கடிதம் அனுப்பியும் பணியை துவங்காமல் ரயில்வே நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. விழுப்புரம் - மயிலாடுதுறை அகல பாதையில் வரும் 15ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப் படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், விருத்தாசலம் மார்க்கத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அவ்வழியே இயக்கப்படும் சரக்கு ரயில்களை கடலூர் வழியாக இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, கோடை விடுமுறை காலத்திலேயே ரயில்வே சுரங்கப்பாதை பணியை துவக்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளும் இணைந்து இன்று (6ம் தேதி) திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


downlaod this page as pdf

Read more »

பாழாகி வரும் தாய், சேய் நல விடுதி கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை


திட்டக்குடி: 

                    பெண்ணாடம் அருகே பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள தாய், சேய் நல விடுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  பெண்ணாடம் அடுத்த கொத் தட்டை ஊராட்சியில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட தாய்சேய் நல விடுதி இன்னும் திறப்பு விழா காணப்படாமலேயே புதர்கள் மண் டிப்போய் பாழடைந்து வருகிறது. இதனால் கொத்தட்டை, எரப்பாவூர், அருகேரி, கீழ்நெம்மேலி, மேல்நெம் மேலி, மருவத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த உடல் நிலை சரியில்லாதவர்களும், பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்களும் பஸ் வசதி இல்லாத நிலையிலும் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இப்பகுதி பிரசவ காலங்களில் கர்ப்பிணி பெண்கள் படும் பாடு திண்டாட்டம்தான். சுகப்பிரசவமாக இருந்தால் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அறுவை சிகிச்சை என்றால் திட்டக்குடிக்கும் வரவேண்டிய சூழல் உள்ளது. இதுபோன்ற நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது.

                       கர்ப்ப காலங்களில் தாய், சேய் இறப்பு குறைந்துள்ளதாக அரசு அறிவித்து வரும் நிலையில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து வரும் தாய், சேய் நல விடுதி சீரமைக்காத நிலை சுகாதாரத்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது. சுகாதாரத் துறையில் மாவட்ட அமைச்சராக இருந்தும் அவரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். கொத்தட்டை ஊராட்சியை சுற்றியுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடனடி மருத்துவ வசதி கிடைக்காமல் தவித்து வரும் நிலையை போக்க உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டு பாழாகி வரும் தாய், சேய் நல விடுதியை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

 கடலூர்: 

                       கடலூர் மாவட்டத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். மத்திய அரசு வெளிநாட்டினரின் சட்ட மையம் மற்றும் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் ஏற்படுத்திக் கொள்வதற்கு அங்கீகாரம் அளிக்க முன் வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்கள் சார்பில் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். அதன்படி கடலூரில் வக்கீல் சங்க செயலாளர் லோகநாதன் தலைமையிலும், அதேபோல் திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாசலத்திலும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


downlaod this page as pdf

Read more »

மின்கம்பங்களை அகற்றாமல் சாலை அகலப்படுத்தும் பணி


விருத்தாசலம்: 

                      விருத்தாசலத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் இடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் பாலக்கரை மற்றும் கடைவீதி போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள் ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் இடப்பற்றாக்குறை காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க நெடுஞ்சாலை துறையினர் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

                          கடைவீதி சந்திப்பில் தென்கோட்டை வீதியில் சாலை ஓரங்களில் இருக்கும் மின் கம்பங்களை அகற்றி ஓரத்தில் அமைக்காமல் சாலை அகலப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். இதனால் சாலையை அகலப்படுத்தினாலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே அதிகாரிகள் பணி நடைபெறும் இடங்களில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


downlaod this page as pdf

Read more »

சாலை அகலப்படுத்த தோண்டிய பள்ளத்தில் குடிநீர் பிடிக்கும் அவலம்

 கிள்ளை: 

                       சிதம்பரம் அருகே வி.வி.எஸ். நகரில் சாலை அகலப்படுத்த தோண்டிய பள்ளம் சரி செய்யாததால் குடிநீர் பைப்லைன் துண்டிக்கப்பட்டதால் பள்ளத்தில் இறங்கி தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. சிதம்பரம் அருகே அ.மண்டபத்தில் இருந்து கிள்ளை பிச்சாவரம் வரை சாலையை அகலப்படுத்தி, வடிகால் கட்டுவதற்காக சாலை அபிவிருத்தி திட்டத் தின் கீழ் 2 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் பணிகள் துவங்கியது. பணிகளை விரைந்து முடிக்காததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதுடன் சாலையை அகலப்படுத்த தோண்டிய பள்ளத்தில் வி.வி. எஸ். நகரில் இருந்த பைப் லைன் உடைந்தது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியாத நிலையால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பள்ளத் தில் இறங்கி தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட் டுள்ளது. எனவே விரைவில் சாலையை சரி செய்வதுடன் குடிநீர் பிடிக்கும் வகையில் குழாய் அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


downlaod this page as pdf

Read more »

தி.மு.க., பிரமுகரை தாக்கி பணம் கொள்ளை: பண்ருட்டியில் மர்ம நபர்கள் கைவரிசை


பண்ருட்டி: 

                    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க., பிரமுகர் மீது மிளகாய் பொடி தூவி தாக்கி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

                   பண்ருட்டி அடுத்த கீழிருப்பைச் சேர்ந்த தி.மு.க., கிளைக் கழக செயலர் பாலமுருகன் (45). இவரிடம் புதுப்பேட்டை ராஜேந்திரன் பணம் கடன் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பித் தராததால் பாலமுருகன் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு பாலமுருகனுக்கு சாதகமாக இருந்தும் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து மூலம் பேசி ஒரு லட்சத்து 65 ரூபாயை ராஜேந்திரனிடம் இருந்து பாலமுருகன் பெற்றார். பணத்துடன் மாலை 3.30 மணிக்கு கீழிருப்பு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாளிகம் பட்டு - கிழிருப் புக்கிடையே உள்ள பிரமினார் கோவில் அருகில் வந்தபோது முந்திரி தோப் பில் மறைந் திருந்த மர்ம நபர்கள் பாலமுருகன் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்யும் நோக்கத் தோடு தாக்கி கழுத்தை நெரித்தனர். சுயநினைவிழந்த பாலமுருகனிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து தப்பியோடினர். பலத்த காயத்துடன் விழுந்து கிடந்த பாலமுருகனை அவ்வழியாக சென்ற லாரி டிரைவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பாலமுருகன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகனை தாக்கி வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முக்காடு அணிந்து போராட்டம்


பண்ருட்டி: 

                 சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முக்காடு அணிந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.

                   தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அண்ணாகிராம ஒன்றியம் சார்பில் சத்துணவு ஊழியர் அனைவரையும் முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்காடு போட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டம் பண்ருட்டி தாலுக்கா அலுவலகம் முன் நடந்தது. போராட்டத்திற்கு தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாநில துணை லைவர் ராமநாதன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கடலூர்: 

                      கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட் டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தலைவர்கள் யசோதை, வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் மோகனசுந்தரம், கிருஷ்ணவேணி, ராஜ்மோகன், மாவட்ட தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், மல்லிகா ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். விருத்தாசலம்: பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், சின்னசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன் றிய தலைவர் கணபதி, ராமச்சந்திரன், செல்வராஜ், கோவிந் தராஜ், பெரியசாமி, நாட்டு துரை, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior