உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 20, 2013

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடக்கம்

சிதம்பரம்:

  சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 கலந்தாய்வு விவரம்:

 ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளி, விளையாட்டுத் திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி, மலைவாழ் பிரிவினர்), 24-ம் தேதி பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், 25-ம் தேதி- பி.எஸ்சி. இயற்பியல், பொதுவேதியியல், 26-ம் தேதி -பி.எஸ்சி. தொழிற் வேதியியல், விலங்கியல், தாவரயியல் 27-ம் தேதி- பி.ஏ. தமிழ், ஆங்கிலம், ஜூலை 1-ம் தேதி- பி.காம்., பி.பி.ஏ., ஜூலை 2-ம் தேதி- பி.ஏ. பொருளியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்.

 மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம் தவிர ஏனைய பாடப்பிரிவுகளில் முதல் கட்ட கலந்தாய்வில் பிளஸ் 2 தேர்வின் பகுதி-3-ல் 800க்கு மேலும், தமிழ் பாடப்பிரிவிற்கு பகுதி-3-ல் சிறப்புத் தமிழ் படித்தவர்கள் அல்லது பகுதி-1 தமிழில் 120-க்கும் மேலும், பி.ஏ. ஆங்கில பாடப் பிரிவுக்கு பகுதி-2 ஆங்கிலத்தில் 120-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Read more »

புதன், ஜூன் 19, 2013

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 24ம்தேதி முதல் தொடக்கம்

விருத்தாசலம், : 

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 24ம்தேதி முதல் தொடங்குகிறது.

கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 2013&14ம் கல்வி  ஆண்டிற்கான பட்டப்படிப்பில் சேருவதற்கு  கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி 24ம்தேதி காலை சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுத்திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி ஆகியோருக்கும், மறுநாள் 25ம்தேதி பி.ஏ. ஆங்கிலம் பட்டப்படிப்புக்கும், 26ம்தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், 27ந்தேதி பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கும், ஜூலை 1ம்தேதி பி.ஏ. தமிழ், பி.காம்., 2ம்தேதி பி.ஏ.வரலாறு பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வுக்கு மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் வரவேண்டும். மேலும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 3 நகல்களை எடுத்து வருவதுடன், மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். 2ம்தேதி நடைபெறும் மாணவர் சேர்க்கைக்குப் பின், வேறு பாடப்பிரிவுக்கு மாறுதல் பெற இயலாது. இதில் கல்வி கட்டணமாக பி.ஏ., பி.காம் பட்டப்படிப்புகளுக்கு ரூ. 1,605, பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ரூ.1,625ம்,  பி.எஸ்.சி. கணினி, அறிவியல் பட்டப்படிப்பிற்கு ரூ. 1025 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கல்லூரி முதல்வர் கோவிந் தன் தெரிவித்துள்ளார்.

Read more »

சனி, ஜூன் 01, 2013

Seven girls in Cuddalore district have scored State ranks in SSLC Exam

 A total of seven girls in Cuddalore district have scored State ranks as follows:

 R. Sridurga (498/500) of Venus Matriculation Higher Secondary School at Chidambaram,
 A. Aarthi (497) of S.D. Eden Mat.HSS at Vadalur, 
C.A. Nila (497) of Cluny Mat.HSS at Neyveli, 
S.D. Pavithra (497) of St Mary’s Mat.HSS at Cuddalore, 
S.H. Jesima (496) of Cluny Mat.HSS at Neyveli, 
S. Sangeetha (496) of Krishnasamy Mat.HSS at Cuddalore
 and
 L.S. Vasumithra (496) of Nirmala Mat.HSS at Chidambaram.

They were all honoured by the district administration and Chief Educational Officer C. Joseph Antony Raj. State second rank holder A. Aarthi aspires to become a doctor so as to render efficient health care services.

For Aarthi her parents, C. Asokan serving as an appraiser in the Vikkiravandi branch of Indian Bank and A. Shyamala a home maker, have been a constant source of inspiration.

The toppers in the government schools are as follows:

 M. Maheswari (492) of Bhuvanagiri Government Girls’ Mat.HSS,
 A. Hemavathi (489) of Thirupadiripuliyur Govt.Girls’ Mat.HSS,
 K. Priyadharshini (489) of Thittakudi Govt.Girls’ Mat.HSS and 
 P. Banu (488) of Thookkanambakkam Govt.Girls’ Mat.HSS.

The high-scorers in the government aided schools are as follows:

 S. Shanmugapriya (495) of SRKV Mat.HSS at Chidambaram, 
G. Kaviya (495) of St. Mary’s Mat.HSS at Cuddalore, 
T. Arun (494) of St. Joseph’s Mat.HSS at Manjakuppam, 
R. Abhinaya (494) of Aruna Mat.HSS, and
 V. Arun (493) of Aruna Mat. HSS at Eraiyur.

According to Chief Educational Officer C. Joseph Antony Raj as many as 73 schools in the district have scored cent per cent results. 

The number of students who have scored centum is as follows:

Tamil – Nil, 
English – 1, 
mathematics – 688, 
science – 1,379 and 
social science – 726. 

Cuddalore district has attained 75.21 per cent of results in the recently conducted SSLC examinations. Of the total number of 40,237 candidates appeared for the examinations 30,245 came out successfully. However, 13 others schools have scored less than 40 per cent results. He has noted with concern that Annai Sathya Higher Secondary School at Periyakumatti and Vannankudi government higher secondary schools have drawn a blank as none of their students got through.

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வடலூர் எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்





நெய்வேலி:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று 31/05/2013 வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 497 மதிப்பெண் பெற்றுள்ளார். மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். 

அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு-

தமிழ்-99

ஆங்கிலம்-99

கணிதம்-99

அறிவியல்-100

சமூக அறிவியல்-100

மொத்தம்-497.

மாணவி ஆர்த்தி வடலூர் புதுநகர் பகுதியில் வசிக்கிறார். அப்பா அசோகன் இந்தியன் வங்கியில் நகை ஆய்வாளர். அம்மா சியாமளா. 

மாணவி ஆர்த்தி கூறியது:-
நான் சிறு வயது முதல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்து வந்தேன். தேர்வில் அதிகமதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தலைமை ஆசிரியை சுகிதா மற்றும் ஆசிரியர்கள் அதிக ஊக்கம் அளித்தனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்றேன். டாக்டருக்கு படித்து பொதுமக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். மாணவி ஆர்த்திக்கு பரதநாட்டியம் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உண்டு.

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை








கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

மாணவிகளுக்கு பரிசு

நேற்று ( 31/05/2013 ) வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி துர்கா மாநில அளவில் முதல் இடத்தையும், மாணவிகள் ஆர்த்தி, நிலா, பவித்ரா ஆகியோர் 2–வது இடத்தையும், மாணவிகள் ஜெசிமா, சங்கீதா, வசுமித்ரா ஆகியோர் 3–வது இடத்தையும் பிடித்தனர்.

சாதனை புரிந்த மாணவிகள் அனைவரும் நேற்று காலையில் தங்கள் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுமுறையில் சென்று இருப்பதால் அவருக்கு பதிலாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகனசந்திரன் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். உடன் முதன்மை கல்வி அதிகாரி ஜோசப்அந்தோணிராஜ், சமூகபாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயச்சந்திரன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் அளித்த பேட்டி 

நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுப்போம்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு மாணவி முதல் இடத்தையும், 3 மாணவிகள் 2–வது இடத்தையும், 3– மாணவிகள் 3–வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை முதன்மை செயலாளரின் வழிகாட்டுதல் படி, பள்ளி கல்வி இயக்குநரின் ஆலோசனையின் பேரில் சமச்சீர் கல்வியில் புதிய பாடங்கள் புகுத்தப்பட்டதன் காரணமாக மாநில அளவில் 3 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைக்காட்டிலும் 6 சதவீதம் குறைவாகும். அடுத்த ஆண்டு இதை ஆண்டு நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுப்போம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் ஏதாவது ஒரு மாணவர் இடம் பிடிப்பார். ஆனால் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 7 மாணவிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில் ஒருவர் கூட மாணவர் இல்லை. அதேபோல மாவட்ட அளவில் மாணவர்களை விட மாணவிகள்தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் யாரும் மாநில அளவில் இடம் பிடிக்கவில்லை. 1, 2 மார்க்குகளில் கோட்டை விட்டவர்களும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களையும் மாணவிகள் பிடித்து இருப்பது கடலூர் மாவட்டத்துக்கு பெருமையாக இருக்கிறது.  இதற்கு முன்பு கடந்த 2006–ம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் மாநில அளவில் 3–வது இடத்தை பிடித்தார். அதன் பின்னர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் 7 மாணவிகள் மாநில அளவில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior