உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 06, 2011

இணையதளம் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள்

           மாணவர்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள 90 உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணையதளம் மூலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  

               சென்னை அறிவியல் நகரம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.  நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு சேர்க்கிறது. உலகின் எந்தப் பகுதியில் உள்ள தகவல்களையும் மக்கள் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் அறியக்கூடிய வகையில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.  இந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நூலகங்களிலும் அமல்படுத்தும் முயற்சியை தமிழக பொது நூலகத்துறை மேற்கொண்டு வருகிறது.  

               அதாவது, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள மைய நூலகங்களை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இணைய தளம் மூலம் இணைக்கும் பணியை பொது நூலகத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஒரு பகுதியில் இருந்து கொண்டே, மாநிலத்தின் 32 மைய நூலகங்களிலும் என்னென்ன நூல்கள் மற்றும் அரிய தகவல்கள் உள்ளன என்பதை மக்கள் அறிய முடியும்.  

                  இதுபோல், உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணைய தளம் மூலம் இணைக்கும் பணியையும் சென்னை அறிவியல் நகரம் மேற்கொண்டுள்ளது.  அதாவது, சென்னையில் உள்ள ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கணித அறிவியல் நிறுவனம், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் என 90 உயர் கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வரும் நூலகங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.  

இதுகுறித்து அறிவியல் நகர துணைத் தலைவர் வி.கே. சுப்புராஜ் கூறியது:  

              சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை ஒருங்கிணைக்கும் பணி விரைவில் நிறைவடைய உள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  புத்தகங்களை மாணவர்கள் தேடி அலையவேண்டிய அவசியம் இனி இருக்காது. குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் என்னென்ன நூல்கள் உள்ளன என்பதை இணையதளம் மூலமே மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்றார்.





Read more »

கடலூரில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது

கடலூரில் இருந்து கடத்தப்பட்டு புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
கடலூர்:
         தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 145 டன் ரேஷன் அரிசியை தமிழகப் போலீசார்  வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.  கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்து, ரேஷன் அரிசி பெருமளவுக்குக் கடத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை புதுவையைச் சேர்ந்த கள்ளத்தனமாக அரிசி வியாபாரம் செய்யும் நபர்கள் வாங்கி, அங்குள்ள அரிசி ஆலைகளில் நன்றாக பாலிஷ் செய்து, கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் விற்பனை செய்து விடுகின்றனர். 

            இந்த அரிசி சந்தையில் கிலோ ரூ. 15-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.   அண்மையில் கடலூரில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலம் பாகூரில் பதுக்கி வைத்து  இருந்த 48 டன் ரேஷன் அரிசியை கடலூர் மாவட்ட உணவு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார்    கைப்பற்றினர். இக்கடத்தலில் தொடர்பு உள்ள பாகூர் அப்பு என்ற இதயத்துல்லா உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸôர் கைது செய்தனர்.  

           தொடர்ந்து போலீஸôர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்நிலையில் புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை சேமிப்புக் கிடங்கை வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட உணவு குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரகுமார், ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்புப் படை ஆய்வாளர் அம்பேத்கர் உள்ளிட்ட போலீஸôர் சோதனையிட்டனர்.  

          சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 145 டன் ரேஷன் அரிசியை போலீசார் ரேஷன் கைப்பற்றினர்.  இந்த ரேஷன் அரிசி, விற்பனைக்குக் கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் நந்தகோபனை (56) போலீசார் கைது செய்தனர். மேலும் பலரைப் போலீஸôர் தேடிவருகிறார்கள்.



Read more »

விருத்தாசலம் கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் சேவை தொடக்கம்

கடலூர்:

            விருத்தாசலம் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நகைக் கடன் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்து கடலூர் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             விருத்தாசலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், முதல்முறையாக நகைக் கடன் வழங்கும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இச்சேவையை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர். வெங்கடேசன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இச்சங்கத்தின் மூலம் தினசரி நகைக் கடன் வழங்கப்படும். ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை நகைக் கடன் வழங்கப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

            பின்னர் விருத்தாசலம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ரூ. 95 ஆயிரத்தில் உருவாக்கப்பட்ட, நவீன கெüண்ட்டரை இணைப் பதிவாளர் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிகளில், கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ந.மிருணாளினி, விருத்தாசலம் சரக துணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.





Read more »

ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்

             கோவையில் பாஸ் போர்ட் சேவை கேந்திரா மையத்தின் துவக்கவிழா  நடந்தது, அதில் கலந்துகொண்டு  (பி.எஸ்.கே) மூலமாக விண்ணப்பித்த ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் பெறமுடியும் என்று கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் தெரிவித்தார்.
           சாதாரண முறையில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம செய்பவர்களுக்கு, காவல்துறையின் விசாரணை சான்றிதல் கிடைத்த இரண்டு அல்லது மூன்று நாளில் பாஸ்போர்ட் அனுப்பபட்டு  விடும், அதிகபட்சம் ஒரு மாதத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். அதே நேரத்தில், ஆன்லைனில் தங்களது விண்ணப்ப பதிவு, விரல்ரேகை பதிவு, டிஜிட்டல் புகைப்படம் ஆகியவற்றை அனுப்புவத்தின் மூலம் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்.

             “தக்கல்” முறையில் விண்ணப்பம் செய்வபவர்களுக்கு, மூன்று நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும், இந்த புதிய முறைக்கு எந்தவித கட்டண உயர்வும் கிடையாது. சாதாரண முறையில் பெற கட்டணம் 1000, ரூபாய் ஆகும், தக்கல் முறையில் பெற கட்டணம் 2500, ரூபாய் ஆகும்.

               உடனடியாக பாஸ்போர்ட் வாங்கித்தருகிறேன், கூடுதலாக பணம் கொடுங்கள்  என்று வரும் இடைத்தரகர்களை யாரும் நம்பி ஏமாறவேண்டாம், உங்களது சந்தேகங்களை 18002581800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 
www.passportindia.gov.in  என்ற இணைய தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.







Read more »

Panrutti Seshachalam Asked writ petition High Court for Private Schools Fee Structure

          The State government has been granted two weeks' time by the Madras High Court to appoint chairman and member-secretary to the Private Schools Fee Determination Committee.

            When a public interest writ petition from M Seshachalam of Panrutti in Cuddalore district came up on Friday, Advocate-General A Navaneethakrishnan told the First Bench comprising Chief Justice MY Eqbal and Justice TS Sivagnanam that the file was under process. He prayed for a week's time to enable him to inform the court on the appointment.Granting two weeks' time, the bench hoped and trusted that the government would issue the GO appointing the chairman and membersecretary to the committee. The bench adjourned the matter till August 19, for reporting compliance.

              According to senior advocate P Wilson, originally Justice K Govindarajan was appointed as the chairman of the committee. When he resigned from the post in October, 2010, Justice K Raviraja Pandian was appointed to the post. He also tendered his resignation in June this year after fixing the fee structure. Since then, the posts of chairman, membersecretary and special officer were lying vacant, much to the chagrin of the students and their parents. In the absence of the persons to man the committee, the private schools, which have disagreed and went on appeal against the recommendations of Justice Raviraja Pandian committee, were collecting exorbitant fees. There was no authority in the committee to receive complaints from parents against the schools, which collected huge sums.



Read more »

4.5 tonne of rice meant for PDS found hoarded in Pondy

          Puducherry, Aug 5 (PTI) About 4.5 tonne of rice meant for distribution through the Public Distribution System in Tamil Nadu was found hoarded at a private rice mill in a village here today, police said. 

           A team of officers attached to the Civil Supplies Department of Tamil Nadu government found the hoarded rice, which was allegedly smuggled from the neighbouring district of Cuddalore in Tamil Nadu, police said. The owner of the rice mill, loacted in Kudiyirupupalayam, was also arrested for alleged smuggling and hoarding of the rice from Cuddalore, about 23 km from Puducherry. Empty gunny bags carrying the emblem of Tamil Nadu State and about 130 bags of adulterated rice were also seized, they said. The seized rice bags were transported back to Cuddalore, they added.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior