உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 13, 2012

கடலூர் மண்டலத்தில் 14 புதிய வழித்தடங்களில் 26 புதிய பேருந்துகள் இயக்கம்

கடலூர்:


         தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலத்தில் 26 புதிய பஸ்களில் 14 புதிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1000 புதிய பஸ்கள், 379 வழித்தடங்களில் விடப்பட்டது. இதனை சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் இயக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கடலூர் பணிமனையில் 26 புதிய பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.

           புதிய பஸ் இயக்க பூஜைக்கு கடலூர் மண்டல பொது மேலாளர் பூபதி தலைமை தாங்கினார். கடலூர் நகர மன்ற தலைவர் சுப்ரமணியன், அ.தி.மு.க., தொழிற்சங்க மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன், பணிமனை செயலர்கள் சுகுமார், பாலசுப்ரமணியன், பணிமனை தலைவர்கள், கிளை மேலாளர்கள் கணபதி, மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விருத்தாசலம் - காட்டுமன்னார்கோவில்,
சிதம்பரம் - ஆண்டிமடம்,
சிதம்பரம் - வடலூர்,
சிதம்பரம் - வாத்தியார்பள்ளி,
பண்ருட்டி - திருச்சி,
பண்ருட்டி - களமருதூர்,
விருத்தாசலம் - கும்பகோணம்,
முள்ளுக்குறிச்சி - சென்னை

 உட்பட 14 புதிய வழித்தடங்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior