உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 14, 2010

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணி: 115 பேர் தேர்வு

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் 108  ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர்காணலில் 115 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் சார்பில் 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர்காணல் கடந்த 11ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றார். 

                108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான  நடந்த நேர்காணலில் குறித்த விவரங்களை மண்டல மேலாளர் பிரபுதாஸ் மற்றும் மனித வள மேம்பாடு  நிறுவனர் அப்பாதுரை ஆகியோர் எடுத்துக் கூறினர். பின்னர் நடந்த நேர்காணலில் மெடிக்கல் டெக்னீஷியன் பதவிக்கு 52 பேரும், ஆம்புலன்ஸ் டிரைவர் பதவிக்கு 63 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வரும் ஜனவரி 3ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சென்னை அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டு பின் பணி நியமனம் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 115 பேருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) வைத்தியநாதன் வாழ்த்து தெரிவித்தார். 

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியல் சரிபார்க்கும் பணி

கடலூர் : 

               பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பிறந்த தேதி சரிபார்ப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. 

              கடலூர் மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் துவங்க உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 19 ஆயிரம் மாணவ, மாணவிகளும்,  விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் உட்பட 27 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.  இதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் இறுதி பெயர் பட்டியல் சரிபார்க்கும் பணி நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது.  

                மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.  நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இரு கல்வி மாவட்டங்களிலிருந்தும் 170 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.  மாணவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதி சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் அனுப்பப்படும்.

Read more »

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

              பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2010-11 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைகளை வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.
 
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
                  நடப்பு 2010-11 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 643 மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில், பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ.19.02 கோடியும், 30 ஆயிரத்து 79 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ.8.66 கோடியும், 1809 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூபாய் 4.73 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ. 32.41 கோடி கல்வி உதவித்தொகையாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 531 சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு பயனடையவுள்ளார்கள்.  
 
                   இது  கடந்த ஆண்டை விட ரூ.5.91 கோடி  கூடுதலாகும்.ஓன்றாம் வகுப்பு முதல் பத்தாம்  வகுப்பு வரை  பள்ளிப்படிப்பு பயிலுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரையிலும், விடுதியில் தங்கி பயில்பவராக இருப்பின் அதிகபட்சமாக ரூ. 10,000 வரையிலும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், இளங்கலை-முதுகலை பட்டபடிப்பு வரை, ஆசிரியர் பயிற்சிகள் உட்பட) பள்ளி மேற்படிப்பு பயிலுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 12,350/- வரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையாகவும், நான்காண்டு மற்றும் அதற்கு மேல் தொழிற் கல்வி-தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு அதிகபட்சமாக ரூ. 30,000 வரை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 
 
                     கடந்த 2007-08 முதல் 2009-10 ஆம் ஆண்டு வரை பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் ரூ.21.96 கோடியும், பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ.14.50 கோடியும் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ரூ. 13.16 கோடியும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு, இதன் மூலம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 27 சிறுபான்மையின மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளார்கள் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

தமிழகத்தில் 42 லட்சம் சர்க்கரை நோயாளிகள்

             தமிழகத்தில் 42 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது என சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

                 இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோபாலபுரம் டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையின் சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம், தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகளை ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். 

ராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறியது:

                    தமிழகம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், சண்டீகர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் தலா 4,000 பேரிடம் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 42 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 13.5 சதவீதம். கிராமப்புறங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் விகிதம் 6.9 சதவீதம். ஆக, தமிழக மக்கள்தொகையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 9.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

30 லட்சம் பேருக்கு...: 

                       இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 8 சதவீதம் பேருக்கும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 6.4 சதவீதம் பேருக்கும் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு: 

                   தமிழகத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை சராசரியாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

1.2 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய்: 

                   உயர் ரத்த அழுத்த நோய், ரத்த கொழுப்புச் சத்து அளவுகள், உடல் பருமன் ஆகியவை குறித்தும் இந்த ஆய்வின்போது பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

                தமிழகத்தில் 1.2 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 32.6 சதவீதம் பேருக்கும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 23.8 சதவீதம் பேருக்கும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னை உள்ளது. 

உடல் பருமனும், பெண்களும்...: 

                  இந்த ஆய்வின் அடிப்படையில், தமிழகத்தில் 76 லட்சம் பெண்களுக்கும் 50 லட்சம் ஆண்களுக்கும் உடல் பருமன் பிரச்னை உள்ளது. 86 லட்சம் பேருக்கு ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து பிரச்னை உள்ளது.

கிராமப்புறங்களுக்கும்... 

                 முன்பெல்லாம் தமிழக நகர்ப்புறங்களில் வசிப்போரிடையே மட்டும் அதிக அளவில் காணப்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு, இப்போது கிராமப்புற மக்களிடமும் அதிகரித்து வருவதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன'' என்றார் டாக்டர் அஞ்சனா. 

                    இந்த நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு. சுப்புராஜ் தலைமை வகித்தார். வடகிழக்கு மாநிலங்களில் செய்யப்பட உள்ள இரண்டாவது கட்ட சர்க்கரை நோய் குறித்த ஆய்வுத் திட்டத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வடகிழக்குப் பிராந்திய உதவி இயக்குநர் டாக்டர் தன்வீர் கௌர் தொடங்கி வைத்தார். வடகிழக்கு பிராந்திய இயக்குநர் டாக்டர் ஜெ.மகந்தா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read more »

சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலை

 
சிதம்பரம்
 
                 நேற்று நள்ளிரவு சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை பாரதிதாசன் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரது வீட்டுக்குள் ஒரு முதலை புகுந்தது. அதனைக்கண்டு அந்த வீட்டு நாய் குரைத்ததால், படிகள் வழியாக மாடிக்கு முதலை விரைந்தது.
 
               எனினும் நாய் தொடர்ந்து குரைத்ததால், ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்விழித்தனர். மாடிப்படியை நோக்கி நாய் குரைத்ததால், “திருடன் புகுந்திருக்கலாமோ?” என்ற சந்தேகம் ஏற்பட்டது. உருட்டுக்கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சகிதமாக மாடிக்கு சென்ற போது, ஒரு மூலையில் முதலை பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
 
                  இது பற்றி ஊருக்குள் சேதி பரவியதால் பீதியடைந்த கிராமத்தினர் ரமேஷ் வீட்டுக்கு திரண்டு சென்றனர். நீண்டநேரம் போராடி, போக்குகாட்டிய முதலையை பிடித்து கயிற்றில் கட்டிய பிறகுதான் நிம்மதியடைந்தனர். பிடிபட்டமுதலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read more »

பண்ருட்டியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அட்டைகள் வழங்கும் விழா

பண்ருட்டி:

                கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவுக்கு உள்பட்ட மருங்கூரில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் 4 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ் குப்பத்தில் அமைக்கப்பட்டு உள்ள துணைமின்நிலையம் திறப்பு விழா, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 3,593 பேருக்கு தகுதி அட்டைகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் மருங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
 

                விழாவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன், வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், துணை மின்நிலையத்தையும் திறந்து வைத்து, கலைஞர் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு தகுதி அட்டைகளை வழங்கி பேசியதாவது:-

                தமிழகத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டப்படுகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 26,119 வீடுகள்கட்டப்படுகிறது. இதற்காக 195 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது. பண்ருட்டி தொகுதியில் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு பெற உள்ள 15,267 பேரில் 3593 பேருக்கு இந்த விழாவில் தகுதி அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.
  
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியது 
 
                  வருகிற தேர்தலில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் வீடு கட்டி கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னார். அவர் சந்தேகப்படவேண்டாம். 6-வது தடவையாக கலைஞர் தான் ஆட்சிக்கு வருவார்.

வேல்முருகன்
எம்.எல்.ஏ. பேசுகையில், 
 
                   இந்த ஆட்சியில் இத்தொகுதி பெற்றிருக்கிற துணைமின்நிலையம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பற்றியெல்லாம் எடுத்து சொல்லி நன்றி தெரிவித்தார். அவர் ஒவ்வொன்றையும் சொல்லி நன்றி தெரிவித்த போது, எனக்கு என்ன நினைவுக்கு வந்தது என்றால், நீங்கள் ஓட்டுப் போட்டு என்னை தேர்ந்து எடுத்தீர்கள், நான் உங்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறேன், அடுத்து நான் உங்களுடன் இருப்பேனா, இருக்க மாட்டேனா? அல்லது வேறு தொகுதிக்கு போய்விடுவேனா? என்பது தெரியவில்லை என்பது போல் இருந்தது.  அவர் இந்த விழாவுக்கு வந்து, மனதில் ஒளிவு, மறைவு இல்லாமல் நன்றி கூறியது, அந்த கட்சியே நன்றி கூறியது போல் இருக்கிறது.

                   பண்ருட்டி தொகுதியில் உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் துணைமின்நிலையம் கொண்டு வரவேண்டும் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கேட்டார். அதை நான் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி தந்து இருக்கிறேன். மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. இனிமேல் அங்கு 24 மணி நேரமும் மருத்துவ வசதி கிடைக்கும். கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் ஏழை எளிய மக்களும், டாடா, பிர்லா சிகிச்சை எடுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதியை கலைஞர் ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.

                     அதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கொடுத்து இருக்கிறார். எனவே நம் நாட்டில் யாருக்கும் எந்த குறையும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சாதனைகளை கலைஞர் அரசு செய்திருக்கிறது.  இவ்வாறு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசினார்.
  
 முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியது:-

                    அ.தி.மு.க. கூட்டணியில் அவர்கள்(பா.ம.க.) இருந்த போது, ஒரு மாதம் தான் தாக்குபிடித்தார்கள், அதன் பிறகு வெளியே வந்து விட்டார்கள். அந்த ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டத்தையாவது பண்ருட்டி தொகுதிக்கு பெற முடிந்ததா? இல்லை. ஆனால் எங்கள் கூட்டணியில் அவர்கள் இருந்த போது, இழுத்து பிடித்து நின்றார்கள், அதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் ஒரு காரணம். ஆனால் எங்கள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறீர்கள் என்று வேல் முருகன் புகழ்ந்து பேசினார். அதற்கு அவர் இப்போது நன்றி சொல்ல வேண்டாம். இன்னும் 4 மாதங்களில் தேர்தல் வரப் போகிறது. அப்போது அவர் நன்றி காட்ட வேண்டும்.  இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

முன்னதாக வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில், 
 
                  அரசியல் தட்ப வெப்ப நிலைகள் ஒருமாதிரியாக இருக்கிறதால், நான் அமைச்சர் பன்னீர் செல்வம் அழைத்தும் கூட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தேன். என் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு நன்றி சொல்வதற்காக இந்த விழாவுக்கு வந்து இருக்கிறேன். முதல்-அமைச்சர் கருணாநிதியை முன்அனுமதி பெறாமல் சந்திக்கக் கூடிய ஒரே எம்.எல்.ஏ. நான்தான்.

                  கடலூர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வந்த போது, வேல்முருகனுக்காக தமிழ்நாட்டின் முதல் அரசு பொறியியல் கல்லூரியை பண்ருட்டி தொகுதியில் அமைக்கிறேன் என்று அறிவித்தார். இந்த 5 ஆண்டுகளில் ஒரே தொகுதியில் 177 ஊட்டச்சத்து மையங்கள் உருவாக்கப்பட்ட தொகுதி எனது தொகுதி யாகும். இதனால் நான் முழுமனதிருப்தியோடு இருக்கிறேன். முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

                      விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கோபாலகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் என்.ராஜா. பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். 
பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன், மாநில தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், பண்ருட்டி நகர செயலாளர் ராஜேந்திரன், புலவர் ராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அரிராமச்சந்திரன், சுந்தரமூர்த்தி, ஊராட்சிமன்ற தலைவர்கள் சீனுவாசன், தனலட்சுமி சண்முகம், சூடாமணி ராதாகிருஷ்ணன், சிவசண்முகம், கதிர்வேல் கடலூர் நகர பா.ம.க. செயலாளர் ஆனந்த், செய்திமக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா, உதவிமக்கள் தொடர்பு அதிகாரி சாய்பாபா, சுகாதாரபணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா மற்றும் பயனாளிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read more »

Bad roads: activists, members of opposition parties observe fast


Members of the Opposition parties and residents observing hunger strike in Cuddalore on Monday. 
 
CUDDALORE: 

           The opposition parties, residents, social activists and vehicle operators observed fast in front of the Collectorate here on Monday condemning the slow progress in the execution of the underground drainage project and bad condition of roads all over the town.

            Presided by N.Thalavai Sundaram, former AIADMK Minister, district secretaries of the AIADMK M.C.Sampath, Desiya Murpokku Dravida Kazhagam P.Sivakolundu, Marumalarchi Dravida Munnetra Kazhagam N.R.Ramalingam, Communist Party of India (Marxist) T.Arumugham and Communist Party of India M.Sekar participated in the protest. The speakers pointed out that the underground project was running behind schedule for over one year. Though it was scheduled to be brought into use by December 2009 so far, only 50 per cent of the works was completed.

             Moreover, the digging work done for laying the pipeline had damaged the entire network of roads in Cuddalore town. Most of these roads had become unfit for commutation and those who dared to drive on the pot-holed undulating surfaces were exposing themselves to grave risks. The recent spell of rain made the condition worse. The speaker further stated that the subway project at the level crossing on the Lawrence Road was yet to take off, even though the civic body had given its consent to it.

               They alleged that the authorities were paying scant regard to the quality of the roads and the hardships faced by the people. They had jointly organised a series of protests, including fast, to prompt the officials to act but in vain.

Read more »

Neyveli Township gets new facilities



NLC Chairman-cum-Managing Director A.R. Ansari inaugurating facilities at the Neyveli Township library on Monday. Director B. Surender Mohan (right) and C. Senthamil Selvan, Chief General Manager, Township Administration (second right), are in the picture.

CUDDALORE: 

          The Neyveli Lignite Corporation has created new facilities, including a digital library and a parking lot at the Main Bazaar area, to make the Neyveli Township a model town.

          After inaugurating these facilities at various places in the township on Monday NLC Chairman-cum-Managing Director A.R.Ansari told the presspersons that the digital library would be open to the employees, their wards as well as to the residents in the peripheral areas. Separate section had been created for women to have privacy.

           Mr. Ansari further said that the library had adopted the “optimizer storage system” that was quite different from the conventional system. For, it would provide for adjustable racks to accommodate more number of books in a safe manner. He said that new parking lot set up at the Main Bazaar near Gandhi Mandapam could accommodate 100 cars and 400 two-wheelers. This would avert traffic congestion in the commercial hub and would make shopping a pleasant experience.

          The parking lot had a well-laid out drainage system and greenery. A model public convenience near the parking lot, consisting of bathrooms, dressing rooms and toilets, too had been established. The Chairman stated that the animal birth control centre, put up on the veterinary hospital campus, could handle 60 dogs a day. The centre would adopt the “Trap neuter release method,” a fast-track technique to sterilize the dogs adopted for the first time in Cuddalore district. NLC Directors B. Surender Mohan, K. Sekar, R. Kandasamy and J. Mahil Selvan, and Chief General Manager (Township administration) C.Senthamil Selvan were present.

Read more »

Immolation bid in front of the Cuddalore Collectorate

CUDDALORE: 

           Deivasigamani (40) of Gopalapuram in Khammapuram block made an attempt to immolate himself in front of the Collectorate here on Monday.

             When he was about to pour the fuel on himself, the police men who were present at the Collectorate (on account of the hunger strike observed by the opposition parties against the delay in the implementation of the underground drainage project) prevented him from taking the extreme step. It was learnt that there was a long-standing dispute between Mr. Deivasigamani and his uncle over a piece of property. His endeavour to resolve the issue could not succeed and hence, he had decided to attract the attention of the authorities through immolation.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior