உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 15, 2012

வழக்கு விவரங்கள் கணினிி மயம்: கடலூர் மாவட்ட போலீசாருக்கு கூடுதல் டி.ஜி.பி. பயிற்சி

கடலூர் : 

    போலீஸ் ஸ்டேஷன் பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்குதல் குறித்து கடலூர் மாவட்ட போலீசாருக்கு மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி., நேற்று பயிற்சியளித்தார்.

      தமிழக காவல் துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கிய அம்சமாக குற்றச் செயலில் ஈடுபடுவோர் குறித்த தகவல்கள், குற்ற வழக்குகள், குற்றத்தின் தன்மை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி., ஆசீஷ் பேங்கரா ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அதன்படி நேற்று, கடலூரில் எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பயிற்சி நடந்தது. எஸ்.பி., பகலவன், கூடுதல் எஸ்.பி.,ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், அனைத்து ஸ்டேஷன்களின் எழுத்தர்கள் பங்கேற்றனர். வழக்குக் கோப்புகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்வது குறித்து கூடுதல் டி.ஜி.பி., ஆசீஷ் பேங்கரா பயிற்சி அளித்தார்.









Read more »

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயலால் பாதித்தவர்களுக்கு சமூக மறுவாழ்வு பயிற்சி

கடலூர் :

       "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய முதன்மை பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.

        "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

      இதற்காக முதல் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 ஆசிரியர்களுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் நடந்தது. முகாமிற்கு அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். மனநல டாக்டர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியது ு:


          "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு மறுவாழ்விற்காக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கடலூர் மாவட்ட மக்கள் ஒன்பது வகையான பேரழிவுகளை சந்தித்துள்ளனர். ஒவ்வொரு பேரழிவும் ஒரு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தொடர் பேரழிவுகளால் மாவட்ட மக்கள் பொருளாதாரம், சமுதாயம், மனம் மற்றும் உடல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே உள்ள மன அழுத்தத்தைப் போக்கி மீண்டும் அவர்களை புத்துணர்வு ஏற்படுத்தவே இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொருவரிடமும் உள்ள மன அழுத்தத்தை வெளிக் கொண்டு வர, பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ள ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசினார். நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

      அதனைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்ற 70 ஆசிரியர்களுக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மருத்துவக் கழக பேராசிரியர் சேகர் பயிற்சியளித்தார். இந்த முகாம் இன்றும் தொடர்கிறது. முகாமில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு உளவியல் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் மன அழுத்தத்தைப் போக்க உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Read more »

தொழுதூர் ஸ்ரீஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்க

திட்டக்குடி :

     தொழுதூர் ஸ்ரீஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

       நாவலர் கல்விக் குழுமங்களின் தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், கல்லூரி முதல்வர் நீலமேகம் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் திருமாவளவன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி, ஆலோசகர் ஜீவா எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே பேசினர். கருத்தரங்கில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழ்செல்வன் நன்றி கூறினார்.









Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

காட்டுமன்னார்கோவில் :

      காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணு துறை, தொலைத் தொடர்ப்பு துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

       கல்லூரி வளாகத்தில் நடந்த நிழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் தனஞ்செயன் முன்னுரை வழங்கினார். கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரியில் இருந்து வழங்கப்பட்ட ஆய்வு தொகுப்புகள், கண்டுபிடிப்புகள் என 150 தலைப்புகளை கண்டறிந்தது, 50 தலைப்புகளைத் தேர்வு செய்து மாணவர்கள் உரையாற்றினர். துணை பேராசிரியர் ஜீவானந்தம், ஏ.வி.சி.,பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர் ரவிக்குமார் நடுவர்களாக பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முதல் பரிசாக 2,500 ரூபாயும், 2ம் பரிசாக 1,500ம், 3ம் பரிசாக 750 ரூபாயும் வழங்கப்பட்டது.

         கல்லூரி மாணவர்களின் வினாடி-வினா, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், மாணவர்களின் கண்டு பிடிப்புகளான ரோபோக்கள், காற்றாலைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றி செய்முறை விளக்கம் நடந்தது. 4 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கம் 16ம் தேதி நிறைவடைகிறது. கல்லூரி முதல்வர் ஆனந்தவேல் நன்றி கூறினார்.












Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior