உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

கடலூரில் நகராட்சியில் ஆறே மாதத்தில் பழுதடைந்த சிமெண்ட் சாலை


6 மாதத்திலேயே சிதைந்து கிடக்கும் கடலூர் வில்வநகர் பகவதி அம்மன் கோயில் சிமெண்ட் சாலை.
 
கடலூர்:
 
            கடலூரில் நகராட்சியால் போடப்பட்ட சிமெண்ட் சாலை, 6 மாதத்திóல் பழுதடைந்து வீணானது.  

              கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக பெரும்பாலன சாலைகள் தோண்டப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இச் சாலைகள் தரமானதாகப் போடப்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.  பொதுமக்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், பல சாலைகள் பழுதடைந்து வருகின்றன. கடலூர் வில்வநகர் பகவதி அம்மன் கோயில் சாலை பாதாள சாக்டைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு மிகவும் பழுதடைந்து போயிற்று. சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.  

              இதன் விளைவாக பகவதி அம்மன் கோயில் சாலையை சிமெண்ட் சாலையாக அமைத்துக் கொடுக்க, மாவட்ட ஆட்சியர் தனது சிறப்பு நிதியில் இருந்து நிதி ஒதுக்கிக் கொடுத்தார். 500 மீட்டர் நீளம் உள்ள இச்சாலை 6 மாதங்களுக்கு முன் நகராட்சியால் போடப்பட்டது. ஆனால் அச்சாலை அண்மையில் உடைந்து சேதம் அடைந்து விட்டது. சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த வடிகால் வாய்க்கால்களும் சேதம் அடைந்து விட்டன.  

              சிமெண்ட் சாலை அமைக்க நகராட்சி ஒரு கி.மீ. ரூ.60 லட்சம் செலவிடுகிறது. சிமெண்ட் சாலை 20 ஆண்டுகள் நிலைத்து இருக்க வேண்டும் என்று, கடலூர் நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

இதுகுறித்து அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அறிவிக்கரசு கூறுகையில், 

              இச்சாலை அமைக்க இப்பகுதி மக்கள் கடுமையாக போராட்டம் நடத்தினர். எங்களது பரிதாப நிலையைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் தனது சிறப்பு நிதியில் இருந்து இங்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கினார். நகராட்சி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது.  சாலைப் பணிகள் நடக்கும்போதே பணி தரமாக இல்லை என்று சுட்டிக் காட்டினோம். அதுபோலவே 6 மாதத்துக்குள் வீணாகி விட்டது. இங்கு வடிகால்கள் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. சாக்கடை ஓடாமல் அடைபட்டுக் கிடக்கிறது. ஆனால் நகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார்.  




 

Read more »

கொள்ளிடக் கரை சீரமைப்பு: டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்


கொள்ளிடக்கரையை பலப்படுத்த ஏரிகளில் மண் எடுக்காமல், வெள்ளூர் கிராமத்தில் தனியார் வயலில் மீன் பண்ணை அமைக்க குளம் வெட்டிக்கொடுத்து அதிலிருந்து மண் எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்
கடலூர்:

            ரூ. 108 கோடி கொள்ளிடக் கரை சீரமைப்புத் திட்டத்தில், கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாததால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.  எனவே இப்பணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசை வற்புறுத்தி உள்ளனர். 

               தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கிப் பாயும் கொள்ளிடம், பெண்ணையாறு, வெள்ளாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு ஆகியவை கடலூர் மாவட்டம் வழியாக ஓடி வங்கக் கடலில் கலப்பதால், ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இம்மாவட்டம் பெரும் வெள்ளச் சேதங்களைச் சந்திக்கிறது.  

               இது குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக கடலூர் மாவட்ட விவசாயிகள் குரல் கொடுத்ததன் விளைவாக, மேற்கண்ட ஆறுகளின் கரைகளைப் பலப்படுத்த அண்மையில் மத்திய அரசு பெரும் தொகை ஒதுக்கியது.  மாநில அரசின் 25 சதவீதம் நிதியையும் சேர்த்து, ரூ.624 கோடியில் ஆறுகளைப் பலப்படுத்தும் திட்டம், தமிழகப் பொதுப்பணித் துறையால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் ரூ. 108 கோடியில் கொள்ளிடத்தின் வடக்குக் கரை பலப்படுத்தும் பணி பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கப்பட்டது.  

              இத்திட்டப்படி அணைக்கரை முதல் கடற்கரை வரை 62 கி.மீ. தூரம் கொள்ளிடக் கரை பலப்படுத்தும் பணி, 7 பிரிவுகளாக ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில், கரையைப் பலப்படுத்தத் தேவையான மண், வீராணம் ஏரியில் இருந்து 21.25 லட்சம் கன மீட்டர், அரியலூர் பொன்னேரியில் இருந்து 5.87 லட்சம் கன மீட்டர், சிதம்பரம் பொன்னேரியில் இருந்து 7.12 லட்சம் கன மீட்டர், நாரைக்கால் ஏரியில் இருந்து 13.56 லட்சம் கனமீட்டர் எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது.  ஏரிகளில் இவ்வாறு மண் எடுப்பதால் 0.18 டி.எம்.சி. நீர் கொள்ளளவு அதிகரிக்கும் என்றும் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

              இதனால் விவசாயிகள் பலரும், தங்கள் ஏரிகள் தூர்வாரப்பட்டு, நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.  ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி மேற்கண்ட ஏரிகளில் மண் எடுக்கவில்லை என்றும், அக்கம் பக்கத்தில், தனியார் வயல்களில் மண் எடுத்து, திட்டத்தை முடிக்கப் பார்க்கிறார்கள் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.  2012 மார்ச் மாதத்துக்குள் இப்பணி முடிக்கப்பட வேண்டும் என்றாலும், கரை பலப்படுத்தும் பணி 60 சதவீதம் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

            இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து மிகக் குறைந்த அளவே மண் எடுக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.  21.25 லட்சம் கன மீட்டர் மண் வீராணத்தில் இருந்து எடுக்க வேண்டுமானால், 150 நாள்கள் தினமும் 100 லாரிகள், 5 நடை மண் எடுத்தால் மட்டுமே சாத்தியம் என்கிறார் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர்.

 இது குறித்து பாசமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                 "வீராணத்தில் இருந்து 5 லட்சம் கன மீட்டர் மண் மட்டுமே எடுக்கப்பட்டு உள்ளது. அரியலூர் பொன்னேரியில் இருந்து மண் எடுக்க அந்த மாவட்டத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு மண் எடுக்க முடிய வில்லை. அதை ஈடுகட்ட வீராணத்தில் இருந்து கூடுதல் மண் எடுத்து இருக்கலாம். ஆனால் எடுக்க வில்லை. மற்ற ஏரிகளிலும் மண் எடுக்கவில்லை.  பிப்ரவரி மாதம் முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு காலியாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி மண் எடுக்க வில்லை. அக்கம்பக்கத்தில் எங்கோ மண் எடுத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். இனி காவிரி நீர், வீராணத்துக்கு வந்தபின் மண் எடுக்க முடியாது.  இதனால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.  இது குறித்து அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுவை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும்' என்றார். 

 கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கச் செயலர் விநாயகமூர்த்தி கூறுகையில், 

             "ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஏரிகளில் மண் எடுக்கவில்லை. வெள்ளூர் கிராமத்தில் தனியார் நிலத்தில் மீன்குளம் அமைக்க மண் எடுத்து, மண்ணை கொள்ளிடக்கரைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.  ஒப்பந்தத்தில் இல்லாத புங்கனேரியில் மண் எடுத்து உள்ளனர். எனவே இது குறித்து அதிகாரிகள் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒப்பந்தத்தில் உள்ளபடி, ஏரிகளில் எடுக்கப்பட்ட மண் அளவை கணக்கிட்டு, அதற்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டும்' என்றார். 

 இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது , 

            "ஒப்பந்தத்தில் உள்ளபடி ஏரிகளில் மண் எடுக்கப்படுகிறது. 2012 மார்ச்சுக்குள் ஏரிகளில் மண் எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.   



Read more »

கடலூர் சிப்காட் டான்பாக் கெமிக்கல் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இன்ஜினியர் பலி

முதுநகர் :

          கடலூர் சிப்காட்டில் உள்ள டான்பாக் கெமிக்கல் தொழிற்சாலையில் பா#லர் வெடித்து, இன்ஜினியர் இறந்தார். 

                கடலூர் அடுத்த கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). கடலூர் சிப்காட்டில் டான்பாக் கெமிக்கல் கம்பெனியில், இன்ஜினியராக புணிபுரிந்து வந்தார். இக்கம்பெனியில் உள்ள பாய்லர்களை ஆண்டுக்கு ஒரு முறை சரி செய்து, காற்று அழுத்தம் சோதிப்பது வழக்கம். கம்பெனியில் இரண்டாவது யூனிட்டில் உள்ள பாய்லர் நேற்று பழுது பார்க்கப்பட்டு, காற்றழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, காற்றழுத்தம் தாங்காமல் பாய்லர் வெடித்தது. 

             இதில், பார்த்தசாரதி மற்றும் கான்ட்ராக்ட் தொழிலாளியான பச்சையாங்குப்பம் அழகிரி (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன், இருவரும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பார்த்தசாரதி இறந்தார். அழகிரி மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இறந்த இன்ஜினியர் பார்த்தசாரதிக்கு மனைவியும், மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Read more »

சாதி மற்றும் வருமான சான்றிதழ் பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள்

விருத்தாசலம் : 

            பள்ளி, கல்லூரிகள் துவங்க உள்ள நிலையில் ஜாதி, வருமானச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். பிளஸ் 2 தேர்தல் முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ளன.
             இந்நிலையில் மேற்படிப்பிற்காக ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் குவிந்திருந்தனர். இதனால் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எப்போது மில்லாத அளவிற்கு பரபரப்பாக காணப்பட்டது.



Read more »

கடலூர் அரசு சேவை இல்ல பள்ளியில் கல்வி பயில பெண்களிடம் விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் : 

          கடலூர் அரசு சேவை இல்லத்தில் கல்வி பயில பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது.
 
இதுகுறித்து கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி கண்காணிப்பாளர் குமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் 2011 - 12 கல்வியாண்டில் தையல் மற்றும் தட்டச்சு பயிற்சிக்கான சேர்க்கை இந்த அண்டு ஜனவரி முதல் நடக்கிறது. பெண்கள் மட்டுமே சேர முடியும். தையல் மற்றும் தட்டச்சு பயிற்சியில் சேர விரும்புவோருக்கு இலவசமாக உணவு, சீருடை, பாடப் புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், இருப்பிட வசதிகள் செய்து தரப் படும்.
 
           சேவை இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் பெண்கள் 14 வயது பூர்த்தியடைந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். குரூப் "பி' (பொது நர்சிங்) பிரிவில் இயற்பியல், உயிரியியல், வேதியியல், நர்சிங் பாடத் திட்டமும், குரூப் "சி'யில் வணிகவியல், கணிப்பொறியியல், பொருளியல், கணக்குப் பதிவியியல் பாடத் திட்டமும், குரூப் "டி'யில் (வக்கேஷனல் நர்சிங்) உயிரியியல், நர்சிங், நர்சிங் செய்முறை-1, நர்சிங் செய்முறை பாடத் திட்டமும் உள்ளது.
 
             தொழிற்பிரிவு - தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். சேவை இல்லத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பத்தை இலவசமாக அஞ்சல் மூலமாக அல்லது நேரில் கண்காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
 
        மேலும், நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் 72 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். நர்சிங் பிரிவு மாணவி மதுபாலா 1,005 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இவ்வாறு கண்காணிப்பாளர் குமுதா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



Read more »

குடிநீருக்கு 4 மாதங்களாக போராடும் கிராம மக்கள் கடலூர் ஆட்சியரிடம் முறையீடு


குடிநீர் வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் வீணங்கேணி கிராமத்தினர்.
 
கடலூர்:

           ஆழ்குழாய்க் கிணறு பழுதடைந்ததால் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் வீணங்கேணி கிராம மக்கள் கடந்த 4 மாதங்களாக குடிநீருக்காக போராடி வருகின்றனர். 

               வீணங்கேணி கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூரில் குடிநீருக்காக போடப்பட்டிருந்த ஆழ்குழாய்க் கிணறு, என்.எல்.சி. சுரங்கங்களுக்கு வைக்கப்பட்ட வெடிகளால் அதிர்வடைந்து சேதமடைந்து விட்டது.  இதனால் குடிநீர் வசதி இல்லாத வீணங்கேணி மக்கள், கடந்த 4 மாதங்களாக பக்கத்து கிராமங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள்.  இதுகுறித்து கிராம மக்கள் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தபோது, புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்க டெண்டர் விடப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் முடிந்த பிறகுதான் பணி தொடங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.  

           இடைப்பட்ட காலத்தில் என்.எல்.சி. நிறுவனம் மூலம் லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்ததும் லாரிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.  இப்பிரச்னை தொடர்பாக வீணங்கேணி கிராமத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆர்.ராமசாமி, சீனிவாசன் தலைமையில் கிராம மக்கள் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.  

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்

              விரைவில் ஆழ்குழாய் கிணறு தோண்ட உத்தரவிட்டு இருப்பதாகவும், அதுவரை லாரிகளில் குடிநீர் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 


Read more »

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு: பெற்றோர்கள், மாணவர்கள் கவலை

சிதம்பரம்:

                    சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பழைய பாட திட்டமே பின்பற்றப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளதால் பெற்றோர்கள், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.  

               பழைய பாட திட்டத்தின்படி பாட புத்தகங்கள் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் பள்ளி திறக்கப்படுவது ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.  சமச்சீர் கல்வி திட்டம் கடந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டு புதிய பாட திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்ட பாடநூல் குடோன்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  

              தேர்தல் ஆணையத்தின் கடுமையான நெறிமுறைகளால் பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் இருந்தன. தேர்தல் முடிந்ததும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. ஆட்சி மாற்றத்தால் சமச்சீர் பாட திட்ட நூல்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும், தற்போது ஆட்சியாளர்களுக்கு உடன்படாத கருத்துக்களை நீக்க வேண்டியுள்ளதால் சமச்சீர் பாட திட்டம் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  

                 வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பல மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்ட பாட புத்தகங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கோடை விடுமுறையிலேயே பெரும்பாலான பாடங்களை நடத்தி முடித்துள்ளனர். மாணவர்களும் அப் பாடங்களையே படித்துள்ளனர். இந்நிலையில் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.  

                   10-ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை அரசுப் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்துக்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும், ஜூன் முதல் நவம்பர் வரை மொத்த வேலை நாட்கள் சுமார் 120. இவற்றில் தேர்வு நாட்கள் 15. காலாண்டு விடுமுறை 10 நாட்கள் போக மீதி 95 நாட்கள்தான் கற்பித்தல் பணிக்காக கிடைக்கிறது.  தற்போது பள்ளி திறப்பது தள்ளிப் போவதால் கற்பித்தல் பணி நாட்கள் இன்னும் குறையும் வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் சமச்சீர் பாட திட்டத்தில் நீக்கப்பட்ட பகுதிகளை அறிவித்து ஜூன் 1-ம் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.  

             மேல்நிலை 2-ம் ஆண்டு பாடப் புத்தகங்களில் எவ்வித மாற்றமும் தற்போது இல்லை என்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் இப் பாட புத்தகங்கள் சென்றடைந்த போதிலும் பள்ளி திறக்கும் நாள் தள்ளிப்போவதால் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.  எனவே அரசுப் பொதுத்தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதி தொடங்க அரசு உரிய உத்தரவுகளை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.  

                  கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டத்தை பல்வேறு நிபுணர்கள், கல்வியாளர்கள், பாடநூல் ஆசிரியர்கள் குழுவாக செயல்பட்டு தயாரித்திருந்தாலும் அவற்றில் உள்ள சிறுசிறு பிழைகளை தவிர்த்தும், அனைத்து பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளை மட்டும் புத்தகத்தில் இடம் பெறச்செய்திருந்தால் தற்போதைய புதிய அரசால் இத்திட்டம் நிறுத்தம் செய்யப்படாமல் இருந்திருக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  



Read more »

பாரத் பல்கலைக்கழக பி.இ. பாடத் திட்டத்தில் வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம்

               மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில், வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் என்ற புதிய பகுதியை பாரத் பல்கலைக்கழகம் இணைக்க உள்ளது.  பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்தில், இந்த புதிய பாடம் வழங்கப்பட உள்ளது.  

இதுகுறித்து பாரத் அறிவியல் தொழில்நுட்ப மைய முதல்வர் ஆர். காரி தங்கரத்தினம் திங்கள்கிழமை கூறியது:  

              வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை மாணவர்களுக்கு கற்பிக்கவும், பயிற்சி அளிப்பதற்காகவும், ஐபிஎம் நிறுவனத்துடன் பாரத் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  போட்டிகள் நிறைந்த இந்த சூழலில், இதுபோன்ற பாடத் திட்டங்கள் மிகவும் அவசியம். குறிப்பாக -டெஸ்ட்டிங் சாஃப்ட்வேர்- துறையில் மாணவர்களுக்கு, ஐபிஎம் நிறுவனம் பயிற்சி அளிக்க உள்ளது என்றார்.



Read more »

டான்செட் நுழைவுத் தேர்வு 28ம் தேதி ஆரம்பம்

                  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ படிப்பில் சேர வரும் 28ம் தேதி முதல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 99 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 


      தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வின் (டான்செட்) கீழ் கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்சிஏ., எம்பிஏ., எம்.இ., மற்றும் எம்.டெக்., சேர்க்கை நடைபெறுகிறது. இதன் கீழ் சுமார் 200 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகின்றன. டான்செட் மூலம் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் நிரப்பப்படுகின்றன.

                 இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் இறுதிவரை மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் 99 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் கணிதம், ரீசனிங், ஆங்கிலம், டேட்டா இன்டர்ப்ரேட்டசன் போன்ற பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு மதிப்பெண். தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். இதில் 40 மதிப்பெண்கள் எடுத்தாலே சிறந்த கல்லூரிகளில் சேரலாம்.


             இந்தாண்டு எம்பிஏ., க்கான நுழைவுத் தேர்வு வரும் 28 காலை 10 மணிக்கும் எம்சிஏ.,விற்கு மதியம் 2.30 மணிக்கும் நடைபெறுகிறது. மே 29ல் எம்.இ., மற்றும் எம்.டெக்., தேர்வுகள் காலையில் நடைபெறும். ஜூன் 3ம் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில் 


           ‘இந்தாண்டு அதிகளவிலான மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் மேற்படிப்பிற்கான டான்செட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கை போல் டான்செட்டிலும் காலியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இளங்கலை படிக்கும் போதே நன்றாக படித்தால் டான்செட்டில் அதிக மதிப்பெண் பெறமுடியும்’ என்றார்.

 

Read more »

Government must take over schools that defy RTE Act


In protest:Consumer activists stage a demonstration in Cuddalore on Monday. 
 
CUDDALORE: 

          The members of the Consumer Federation-Tamil Nadu and the Equitable Education Movement staged a demonstration in front of the Collectorate here on Monday, urging the authorities to take over the schools that do not comply with the provisions of the Right to Education (RTE) Act.

          The speakers said that the matriculation schools were acting under the impression that they were not bound by the rules and therefore had arbitrarily announced that they would indefinitely postpone the re-opening of the schools if their terms were not met in the fixation of tuition fees and other special fees. The RTE Act had clearly stipulated that no school should collect capitation fees in any form. However, in violation of this provision many schools were collecting fees far in excess of the government approved fee structure on the pretext of issuing uniform materials, textbooks, notebooks, diary and so on.

Receipts should be issued

              They said that all the schools must issue due receipts for the money collected from the students under various heads and criminal action should be taken against those school managements that do not comply with the direction. As per the RTE Act the “neighbourhood school” system should be scrupulously adhered to and the students belonging to the economically weaker sections and hailing from the vicinity should be given admission without fail. The speakers put the onus on the Education Department to ensure that this clause was not side-stepped by any school. Similarly, no entrance test or any kind of screening test should be conducted for the students who were seeking admission up to Class VIII.

          No schools should resort to any form of filtering of students by way of removing them from the rolls on the basis of performance, withholding the promotion to next class or refusing transfer certificates. No student should be subjected to any sort of physical and mental discomfiture and all of them should be allowed and encouraged to complete school education. Those who participated included M.Nizamudeen of the Consumer Federation-Tamil Nadu, Lenin of the Equitable Education Movement and others. Notice to school Meanwhile, the Education Department had sent a notice to a matriculation school here directing it to cancel the entrance test scheduled for Tuesday (May 24), failing which a penalty of Rs 25,000 would be imposed on it.



Read more »

An orchestra with a difference in Cuddalore District


Music-on-wheels:A mobile orchestra comprising visually impaired persons doing the rounds in Cuddalore. 


CUDDALORE: 

          A group of visually impaired persons have joined together to form an orchestra, a manifestation of their love for music and also a source of livelihood.

        The troupe which calls itself “Raga Veenai” is based at Thalaivasal in Athur taluk of Salem district. It has been touring the State to stage mobile performances from a mini-van.
The vehicle, now touring in Cuddalore, is self-sufficient in terms of its requirements such as a portable power back-up system and sound system. There are two vocalists, one keyboard player, one flautist and one tabla player in the team. All of them have obtained diplomas in music. A spokesperson for the troupe told this correspondent that they used to work in batches to participate in musical programmes hosted by temples, marriage parties and organizers of birthday parties. Sometimes, they would be flooded with calls offering them chances and at other times they would have to await the opportunities. Their fees range from Rs 3,000 to Rs 15,000, depending upon the nature of the function.

           The temple festivities would be the highest on the agenda in terms of number of songs to be presented and the size of the gathering to be catered to. Then would follow marriage parties in which they would have to please a limited audience. For birthday celebrations, the audience would be much sparser than the above two and moreover it would not stretch beyond two hours. The constant challenge they face is updating their repertoire of songs as dozens of new movies are being released every week. As far as the musical instruments are concerned, the keyboard is their mainstay while the remaining instruments are used for supportive purposes. The hundial collections during such trips would be hardly sufficient to meet the expenses on food for the members and fuel for the vehicle. However, the mobility helps them in getting the much needed publicity and therefore, they embark upon State-wide tour at periodical intervals.



Read more »

15 lakh textbooks set to remain unused in Cuddalore district

CUDDALORE: 

         Because of the proposal of the State government to have a re-look at the school education system, nearly 15 lakh newly printed textbooks under the Equitable Education System are now lying idle in the godowns in Cuddalore district.

             These might most probably be rendered obsolete if the committee proposed to be set up by the Ministry of Education finds the quality of contents not up to the mark. Education Department sources told The Hindu that a whopping Rs.300 crore had been spent on printing these books for distribution all over the State. It would work out to roughly Rs.10 crore for every district and it was a matter of conjecture whether these books would ever be used at all. The private matriculation schools were vociferous critics of the new system of education because they felt that it would dilute the quality of education.

            They would rather prefer the department to allow them to procure “standard textbooks” compiled within the framework of the syllabus. The parents and students had a differing view that the private schools were thrusting upon them the highly priced textbooks. They were of the opinion that only government-supplied textbooks, as proposed under the new system, would bring down the cost of education. Already, the “Samacheer Kalvi Thittam” (Equitable Education System) was introduced in Class I and Class VI. For the current academic year, it was proposed to bring Class I to Class X under the system.

            However, the new government formed by the All India Anna Dravida Munnetra Kazhagam had decided to keep at bay its implementation and also withheld the distribution of new text books. It meant that even Class I and Class VI should also revert to the old system of education. The sources further said that already the private schools had started placing orders with the publishers to fulfil their textbook requirements as per the 2009-2010 syllabus.


Read more »

Cuddalore Tanfac Industries Foreman killed in a freak mishap

CUDDALORE: 

        A foreman of TANFAC Industries Ltd here was killed, and a contract worker injured, in a freak mishap on Monday. They were replacing an old tank with a new one when an overhead pipeline fell on them. They lost balance and fell into the new tank. They were taken to a private hospital in Puducherry where Parthasarathy succumbed to injuries. Alagiri has been referred to the JIPMER Hospital.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior