உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 09, 2011

கடலூர் மாவட்டத்தில் உதயமானது திட்டக்குடி (தனி) தொகுதி



கடலூர்:
             கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்துள்ள திட்டக்குடி (தனி) தொகுதி வடகிழக்கே விருத்தாசலம் தொகுதியையும், வடமேற்கே சேலம், தென்மேற்கே பெரம்பலூர், தெற்கே அரியலூர், வடக்கே விழுப்புரம் மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ளது. 

                 கடந்த 1957ம் ஆண்டு நல்லூர் பெயரில் துவங்கப்பட்ட இத்தொகுதி 1967ம் ஆண்டு மங்களூராக மாறியது. இத் தொதியில் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் பேரூராட்சி பகுதிகளும், மங்களூர், நல்லூர் ஒன்றியங்கள் முழுமையாகவும், விருத்தாசலம் ஒன்றியத்தின் சில ஊராட்சிகள் இடம் பெற்றிருந்தன.

                  தொகுதியில் மொத்தம் 1,93,879 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த போதிலும், கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1,42,349 ஓட்டுகள் பதிவாகின. அதில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி (தற்போது காங்., கட்சியில் உள்ளார்) செல்வப் பெருந்தகை 62,217 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., கணேசன் 55,303 ஓட்டுகள் பெற்றார். ஓட்டு வித்தியாசம் 6,914 ஆகும். தே.மு.தி.க., மகாதேவன் 15,992 ஓட்டுகள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்தார்

                  தொகுதி மறுசீரமைப்பில் சிறிய மாற்றங்களுடன் திட்டக்குடி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. தொகுதியில் பெண்ணாடம், திட்டக்குடி பேரூராட்சிகளும், மங்களூர் ஒன்றியம் முழுவதும், நல்லூர் ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளனர். தற்போது 87,542 ஆண்கள், 86,065 பெண்கள் என மொத்தம் 1,73,607 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இது கடந்த தேர்தலைவிட 44, 275 வாக்காளர்கள் குறைவாகும். 

எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பேட்டி: 

                    தேர்தலில் நான் அளித்த வாக்குறுதிகளை விட அதிகளவில் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையாக உள்ள வெலிங்கடன் ஏரியை பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறினேன். 30 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.

                  போக்குவரத்து சீரானால் மட்டுமே மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்பதை கருத்தில் கொண்டு விருத்தாசலம்-ராமநத்தம் நெடுஞ்சாலை 20 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதே சாலையில் திட்டக்குடி மற்றும் முருகன்குடி வெள்ளாற்றில் 20 கோடி ரூபாய் செலவிலும், இளையூர் ரயில்வே கேட் பகுதியில் 20 கோடி ரூபாய் செலவிலும் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 76 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கு, நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டி தரம் உயர்த்தி உள்ளேன். பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம், கணபதிகுறிச்சி ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. 

               திட்டக்குடி பேரூராட்சியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் மற்றும் தார் சாலைகளும், அங்கன்வாடி கட்டடங்கள் கட்டியுள்ளேன். திட்டக்குடி, பெண்ணாடம், ஆவினங்குடி மற்றும் தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 60 லட்சம் ரூபாய் பர்னிச்சர்கள் வாங்கி கொடுத்துள்ளேன். பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச் சுவரும், திட் டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. தொகுதி மக்கள் பொது பிரச்னை தொடர்பாக உதவி கேட்டு வந்தால் செய்து கொடுக்க தயாராக உள்ளேன். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க., கணேசன் பேட்டி: 

             முதல்வர் கருணாநிதி கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுபோலவே மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.,க்களையும் அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர் என பாராமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வளர்ச்சி பணிகளை செயல்படுத்தி வருகிறார். அதன்படி இத்தொகுதியில் வெலிங்டன் ஏரிக் கரையை சீரமைத்துள்ளார். பல கோடி செலவில் சாலைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்பாலங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய இத்தொகுதியை வளர்ச்சி அடையச் செய்துள்ளார்.

                      சிறுபாக்கம் அருகே விழுப்புரம் மாவட்டம் பாக்கம்பாடிஅணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை தடுப்பணை கட்டி சேமித்தால் 30 கிராமங்கள் பாசன வசதி பெறும். மங்களூரில் போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும். சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா துவக்க வேண்டும். மங்களூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் நூற்பாலை அமைத்தால் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கு எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும் வரும் தி.மு.க., ஆட்சியில் இத்திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கணேசன் கூறினார்.

Read more »

கடலூர் கிராமங்களில் மலர் விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள்

கடலூர் அருகே சுபஉப்பளவாடி கிராமத்தில் பயிரிடப்பட்டு உள்ள கேந்தி மலர்ச் செடிகள். (வலது படம்) மலர்த் தோட்டத்தில் களை எடுக்கும் பெண்கள்.
கடலூர்:,

           கடலூர் உப்பனாற்றங் கரைகளில் உள்ள விவசாயிகள், 2 ஆண்டுகளாக குறுகிய கால மலர் விவசாயத்துக்கு மாறி வருகிறார்கள்.

              கடலூர் உப்பனாற்றங்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர், குறைந்த ஆழத்தில் கிடைக்கிறது. இப்பகுதிகளில் இரு போகம் நெல் பயிரிடப்படுகிறது. சம்பா அறுவடைக்குப் பிறகு, கத்திரி, வெண்டைக்காய், வெங்காயம், கொத்தவரங்காய் போன்ற காய்கறிச் செடிகளைப் பயிரிட்டு வந்தனர். 2 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள், கத்திரி உள்ளிட்ட காய்கறிச் செடிகளுக்குப் பதில், கோழிக்கொண்டை, கேந்தி உள்ளிட்ட குறுகிய கால மலர்ச் செடிகளைப் பயிரிடத் தொடங்கி உள்ளனர்.2009-ம் ஆண்டு 10 ஏக்கரில் மலர்ச் செடிகள் பயிரிட்ட விவசாயிகள், கடந்த ஆண்டு 50 ஏக்கரில் பயிரிட்டனர். 

             இந்த ஆண்டு 100 ஏக்கருக்கு மேல், கோழிக்கொண்டை, கேந்தி உள்ளிட்ட மலர்ச் செடிகள் பயிரிட்டு இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓசூர், சத்தியமங்கலம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெருமளவு கேந்தி மலர்ச் செடிகள் பயிரிடப்படுகின்றன.கடலூரை அடுத்த  நாணமேடு, உச்சிமேடு, சுபஉப்பளவாடி உள்ளிட்ட கிராமங்களில் 75 ஏக்கரில், இந்த ஆண்டு மஞ்சள், ஆரஞ்சு நிறக் கேந்திச் செடிகள் பயிரிடப்பட்டு உள்ளன. கேந்தி பயிரிடுவதில் ஏக்கருக்கு 4 மாதத்தில் ரூ. 50 ஆயிரம் லாபம் பார்க்க முடியும் என்கிறார் சுபஉப்பளவாடி விவசாயி பாக்கியராஜ்.

                 n 2 ஆண்டுகளாக இப்பகுதியில் கேந்தி, கோழிக்கொண்டை போனற மலர்ச் செடிகளை விவசாயிகள் பயிரிடத் தொடங்கி உள்ளனர். சம்பா அறுவடை முடிந்தும், முன்பெல்லாம் வெங்காயம், கத்திரி, வெண்டை, கொத்தவரை போன்ற காய்கறிகளைப் பயிரிட்டு வந்தோம். காய்கறிச் செடிகளில் பூச்சித் தாக்குதல் அதிகம் உள்ளது. மேலும் பாசனச் செலவும் கூலியாள்களின் செலவும் அதிகரித்து விட்டது. வேலைக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. 

              இதனால் மாற்றுப் பயிராக மலர்ச் செடிகளைப் பயிரிடுகிறோம். கேந்தி மலர் பயிரிட விதை விதைத்து, நாற்று உற்பத்தி செய்து, அவற்றைப் பிடுங்கி நடவேண்டும். 10 கிராம் கேந்தி விதை விலை ரூ. 1,500. ஒரு ஏக்கருக்கு ரூ. 6 ஆயிரத்துக்கு விதை வாங்க வேண்டும். கோவை, ஓசூர் பகுதிகளில் இருந்து விதைகளை வாங்குகிறோம். நட்டு ஒரு மாதத்தில் பூக்கத் தொடங்கும்.  3 மாதங்களுக்கு பூக்கள் தொடர்ந்து அறுவடை செய்ய முடியும். தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, பூக்கள் மகசூல் இருக்கும்.  ஏக்கருக்கு 2 டன் பூக்கள் கிடைக்கும். 

           மொத்தத்தில் 4 மாதங்களில் ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் லாபம் கிடைக்கும். கடலூர் அருகில் உள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் கேந்தி மலர்கள் அனைத்தும் கடலூர் மற்றும் புதுச்சேரி மாநில பூ வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பை, வேளாண்துறை ஏற்படுத்திக் கொடுத்தால், கூடுதல் விலை கிடைக்கும். மேலும் பல விவசாயிகள் கேந்தி மலர்ச் செடிகளைப் பயிரிடத் தயாராக இருக்கிறார்கள் என்றார் பாக்கியராஜ்.

துகுறித்து கடலூர் பூ வணிகர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 

              மாலைகள் கட்டுவதற்கு, கேந்திப் பூக்களின் தேவை எப்போதும் இருக்கிறது. சாதாரணமாக கிலோ ரூ. 25 முதல் ரூ.30 வரை விலை கொடுத்து வாங்குகிறோம். பல நேரங்களில் கிலோ ரூ. 80 வரை விலை உயர்ந்துவிடும்.கடலூருக்கு ஆந்திராவில் இருந்து கேந்தி மலர்கள் அதிகம் வருகின்றன. ஓசூரில் இருந்தும் கிடைக்கின்றன. ஆந்திரா கேந்தி மலர்கள் பெரியதாகவும், அழகாகவும் உள்ளன. 3 ஏக்கரில் கேந்தி பயிரிட்டு, 4 மாதத்தில் ரூ. 5 லட்சம் லாபம் அடைந்து இருப்பதாக ஆந்திர விவசாயி ஒருவர் தெரிவித்தார். எனவே கடலூர் விவசாயிகள் கேந்தி பயிரிடத் தொடங்கி இருப்பது நல்ல முயற்சியாகத் தெரிகிறது என்றார்.

Read more »

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புடன் இலவச பி.ஜி. டிப்ளமோ படிப்பு

              சென்னைப் பல்கலைக்கழகத்தில் அனைத்து முதுகலை பட்டப் படிப்புகளுடனும், அந்தந்தப் படிப்புகள் சார்ந்த முதுகலை பட்டயப் படிப்பு (பி.ஜி. டிப்ளமோ) இலவசமாக கற்றுத்தரப்பட உள்ளது.

           மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பை பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதியத் திட்டம் வரும் 2011-12 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 72 முதுகலை பட்டப்படிப்பு துறைகளிலும் இதுபோன்ற பட்டயப் படிப்பு, மாணவர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் வழங்கப்பட உள்ளது. 

               இந்த பட்டயப் படிப்புக்கான பயிற்சிகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டும் அல்லாமல், முன்னணி தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரை பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்தும் அழைத்துவந்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது: 

               கலை, அறிவியல் முதுகலை பட்ட மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் இந்த முயற்சியை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டயப் படிப்பு, மாணவர் படிக்கும் முதுகலை பட்டப் படிப்பைச் சார்ந்ததாகவும், பயிற்சி சார்ந்ததாகவும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

             இந்தத் திட்டத்தின் மூலம் வரும் கல்வியாண்டு முதல் முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள், படித்து முடித்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும்போது பட்டச் சான்றிதழுடன், முதுகலை பட்டயச் சான்றிதழையும் பெற்றுச் செல்வர் என்றார். மேலும் இளங்கலை பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இதுபோன்ற பட்டயப் படிப்பு வழங்குவது தொடர்பாக இணைப்புக் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்றும் துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

Read more »

நெய்வேலியில் தரமில்லாமல் போடப்படும் சிறப்புச் சாலைகள்?

நெய்வேலி:
 
              நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் சாலை போடுவதற்கான எவ்வித வரையறைகளையும் பின்பற்றாமல், தரம் குறைந்த சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

             நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பாலாஜி நகரில் 12-வது தெருவில், மாநில சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.இந்த சாலையை புவனகிரியைச் சேர்ந்த, ஒப்பந்ததாரர் ஒருவர் டென்டர் எடுத்து செய்து வருகிறார். 

               சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை பரிந்துரை செய்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் தரமற்ற சாலைகள் போடுப்படுவதாகவும், சாலை போடுவதற்கு முன் அப்பகுதியில் அடித்தளத்தில் மணல் நிரப்பி, அதன் மீது கருங்கல் ஜல்லிகளுடன் சிமென்ட் கலந்தும், சாலையின் விளிம்புப் பகுதியில் கனமான கான்கிரீட்டாலான சிறிய தடுப்புச் சுவர் எழுப்பி அதன்பின்னர் சாலை அமைக்க வேண்டும் என சாலை அமைப்பதற்கான விதிமுறைகள் உள்ள நிலையில், அந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், இருபுறமும் செங்கற்களை அடுக்கி, மணலுக்குப் பதிலாக களிமண்ணை நிரப்பி அதன்மீது கலவை கொட்டப்பட்டு சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

            மேலும் சாலையின் இருபுறமும் வடிகால் வசதி ஏற்படுத்தாமல் சாலை அமைக்கப்படுவதால், மழைக்காலத்தில் மழைநீர் வீடுகளில் புகும் நிலை ஏற்படும் என மூத்தக் குடிமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.மேலும் சாலையின் மேற்பரப்பில் போடப்படும் கான்கிரீட்டின் மொத்த கனஅளவும், நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக போடப்படுவதாகவும், 

இதுகுறித்து சிறப்புச் சாலைகள் திட்ட ஆய்வாளர் கூறியது 

                 அவர் இதுவரை சாலை அமைப்புப் பணிகளை பார்வையிடவும் வரவில்லை என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

தரமில்லாத சாலைகள் போடுவது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கே.குப்புசாமியை கூறியது  

              "அவர் தனக்கு அண்ணாமலை நகர், கெங்கைகொண்டான், பெண்ணாடம் பேரூராட்சிகளின் பொறுப்பு செயல் அலுவலராக இருப்பதால் பிறகு பதில் சொல்கிறேன்' என்று கூறினார். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக போடப்படும் சாலைகள் தரமானதாகவும், முறையாகவும் அமைந்தால் தானே அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அவர்கள் முகத்தில் விழிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Read more »

கடலூரில் குடிப்பவர்களுக்காக ஒரு பாலம்!

கடலூர்:

              நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே, ஜாதி,  மதங்களுக்கு இடையேயும் அனைத்துக்கும் மேலாக மனித மனங்களுக்கு இடையேயும் இணைப்புப் பாலம் வேண்டும் என்பது, மனித சமுதாயத்தின் தீராத ஆசையாக இருந்து வருகிறது. 

              நாகரீகம் மிக்க சமுதாயத்தில் இத்தகைய இணைப்புப் பாலங்கள் நிறைய தேவை. ஆனால் கடலூரில் மது குடிப்பவர்களுக்காகவே ஒரு பாலம் கட்டப்பட்டு, அது எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டும் மீண்டும் சரி செய்யப்பட்டு விடுகிறது. கடலூர் மாவட்டத்தையும் புதுவை மாநிலத்தையும் பிரிப்பது பெண்ணை ஆறு. கடலூர் - புதுவையை இணைக்கும் வகையில், பெண்ணை ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே சில பாலங்கள் உள்ளன. மேலும் பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

              இந்த பாலங்கள் மற்றவர்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, கடலூர் மாவட்ட மதுப் பிரியர்களுக்கும், மது கடத்துவோருக்கும் பெருமளவில் உதவியாக இருக்கிறது. கடலூர் - ஆராய்ச்சிக்குப்பம் (புதுவை மாநிலம்) இடையே இத்தகையை பாலம் இல்லாத நிலையில் மதுப் பிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, புதுவை மாநில சாராய விற்பனையாளர்களே மணல் பாலம் ஒன்றை நிரந்தரமாக அமைத்துக் கொடுத்து வந்தனர்.மாலை நேரங்களில் இப்பாலத்தின் வழியாக நூற்றுக்கணக்கான கடலூர் மதுப்பிரியர்கள், ஆராய்ச்சிக்குப்பம் சென்று குறைந்த விலையில் மது அருந்திவிட்டு வருவதை படத்தில் காணலாம்.  இந்த இடத்தில் பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய பாலம் ரூ.12 கோடியில் கட்டும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது.

           வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த பாலத்தின் இரு கோடியிலும் கடுமையான நில அரிப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இரு பக்கமும் இணைப்பு இன்றி பாலம் தற்போது தீவாகக் காட்சி அளிக்கிறது. கட்டுமானப் பணிகளுக்காக போடப்பட்டு இருந்த மணல் தடுப்பணையும் சிதைந்து விட்டது. இதனால் ஆராய்ச்சிக்குப்பம் செல்லும் மதுப்பிரியர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இதனால் தாற்காலிக பாலாமாவது அமைய வேண்டும் என்று மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்தனராம். கோரிக்கையை ஏற்று சவுக்குக் கழிகளால் ஆன தாற்காலிகப் பாலம் உடனே தயாராகி விட்டது. 

                 போர்க்கால அடிப்படையில் மழை வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அடிக்கடி கோரிக்கை வைக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் போர்க்கால அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். போர்க்கால் அடிப்படையில் என்ற  சொற்றொடருக்கு, உண்மையான எடுத்துக் காட்டு, மதுப் பிரியர்களுக்காக அமைக்கப்பட்ட கடலூர் - ஆராய்ச்சிக்குப்பம் தாற்காலிக பாலமாகத்தான் இருக்குமோ?

Read more »

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

           மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்குக் காத்து இருக்கும் மாற்றுத்திறனாளிகள், மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

              உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல், பதிவேட்டில்  காத்திருப்போராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 45. மற்றவர்களுக்கு 40. தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருத்தல் கூடாது. கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஆனால் அஞ்சல் வழியாக அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோராக இருக்கலாம்.

             தமிழ்நாட்டில் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வசிப்பவராகவும், ஆண்டு வருவாய் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.வேலைவாய்ப்பு அலுவலக அசல் அட்டை மற்றும் கல்விச் சான்றுகளுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரில் விண்ணப்பப்படிவத்தை இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து, அதே அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

                  விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதி அடிப்டையில் 10 ஆண்டுகளுக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 28-2-2011.கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி.க்கு மாதம் ரூ.300, எச்.எஸ்.சி.க்கு மாதம் ரூ.375. பட்டப் படிப்புக்கு மாதம் ரூ.450 வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

இந்திய அளவில் 2-ம் இடம்: பண்ருட்டி அரசுப் பள்ளி என்.சி.சி. படைப்பிரிவு சாதனை

பண்ருட்டி:

            புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொண்ட பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அலுவலர் ஜெ.பாலசந்தர், மாணவன் எல்.ராஜேஷ் ஆகியோர் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டியில் பங்கேற்று அகில இந்திய அளவில் 2-ம் இடத்தை பெற்று பள்ளிக்கு திரும்பினர்.

              2011 ஜனவரி மாதம் புதுதில்லியில்  நடைபெற்ற என்.சி.சி. குடியரசு தின முகாமில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் என்.சி.சி. மாணவன் கார்பரல் எல்.ராஜேஷும், என்.சி.சி. அலுவலர் ஜெ.பாலசந்தரும் கலந்து கொண்டனர்.ஜெ.பாலசந்தர் தமிழக அணியின் என்.சி.சி. அலுவலராக 3-வது முறையாகவும், பள்ளியின் என்.சி.சி. மாணவன் தொடர்ந்து 2-வது முறையாகவும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

             தமிழகத்தில் உள்ள 90 ஆயிரம் என்.சி.சி. மாணவ, மாணவிகளில் 107 மாணவர்கள் மட்டுமே குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. திங்கள்கிழமை பள்ளி திரும்பிய என்.சி.சி. அலுவலர் ஜெ.பாலசந்தர் மற்றும் மாணவன் எல்.ராஜேஷ் ஆகிய இருவரையும் தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வரவேற்று பாராட்டினர்.

Read more »

கனடா வேளாண் கல்லூரியுடன் அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

            மாணவர்கள் மேற்படிப்பு பயில கனடா நாட்டு வேளாண் கல்லூரியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  

            பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, கனடா நாட்டு வேளாண் கல்லூரி துணைத் தலைவர் பிரெயின் மெக்டோனால்ட், மேலாளர் பிரெயன்குரோஸ் ஆகியோர் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  அப்போது வேளாண் புல முதல்வர் முனைவர் ஜெ.வசந்தகுமார், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம், துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் சி.ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.  

             புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: இந்த ஒப்பந்தப்படி அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புல 3-ம் ஆண்டு அல்லது 4-ம் ஆண்டு மாணவர்கள் கனடா நாட்டுக்குச் சென்று மேற்படிப்பு படிக்கலாம்.  2-ம் ஆண்டு அல்லது 3-ம் ஆண்டு மாணவர்கள் கனடா சென்று மேலும் 2 அல்லது 3 ஆண்டுகள் பயின்று இரண்டு பட்டங்களை பெறலாம். மாணவர்கள் அங்கு சென்று பயிலும் போது படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் அங்கு பகுதி நேர வேலை செய்யவும் வழிவகை செய்யப்படும்.

              இப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் அங்கு சென்று பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.  கனடா நாட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்து பயிலவும், ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் என துணைவேந்தர் எம்.ராநாதன் தெரிவித்தார்.   

Read more »

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையில் 15 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணிபுரியும் 1,200 பேர்

சிதம்பரம் : 

           பணிமூப்பு பட்டியல் அனுப்பி ஓர் ஆண்டாகியும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இருப்பதால், பொதுப்பணித்துறையில் 15 ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் பெறும் தினக்கூலிகளாக தொடரும் அவலம் உள்ளது.

             பொதுப்பணித் துறையில் எட்டாம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். அலுவலக உதவியாளர்கள் முதல் திட்ட மதிப்பு தயார் செய்யும் பணி வரை ஈடுபடுகின்றனர். 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வது என்பது அரசு ஆணை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 1,056 பேர், கடந்த ஆறு மாதம் முன் 750 பேர் என பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். 

              ஆனால், 1995ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்தவர்கள் தினக்கூலியாக, நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் நிலையில், சொல்ல முடியா துயரத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த ஆண்டு சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த 1,200 பேரின் பணி மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

            அதை அதிகாரிகள், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாததால், கடந்த ஒரு ஆண்டாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திலேயே அந்த பட்டியல் கோப்பு தூசு படிந்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டு விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்கள், மன வேதனையில் தவித்து வருகின்றனர். தமிழக முதல்வர், தனது பொறுப்பில் வைத்திருக்கும் பொதுப்பணித்துறை தினக்கூலி பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணையை வழங்கி 1,200 குடும்பங்களுக்கும் விளக்கேற்றி வைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைகேட்பு நாள்: 355 மனுக்கள் பெற்ற கலெக்டர்

கடலூர்:


                 கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்டிதது. கலெக்டர் சீத்தாராமன் பொதுமக்களிடமிருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்க கோருதல், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 355 மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


                இக்கூட்டத்தில் தமிழ்நாடு உலமாக்கல் நலவாரியத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.500 மதிப்புள்ள கண்கண்ணாடியும், ஒரு நபருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4 ஆயிரமும், ஒருவருக்கு திருமண நிதி உதவியாக ரூ.2 ஆகியவற்றை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திருவேங்கடம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கணபதி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), கந்தசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), வனிதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

Read more »

Pat for implementation of Central schemes: K.S. Alagiri

CUDDALORE: 

          Vigilance and Monitoring Committee Chairman K.S. Alagiri has appreciated the progress made in the implementation of the Central schemes in Cuddalore district.

        Addressing officials here, Mr. Alagiri said that benefits had reached 87 per cent of target groups, and in certain cases up to 99 per cent of beneficiaries had received assistance. However, a lot more had to be done in water supply and sanitary aspects. He called upon officials and elected representatives to keep vigil and work in tandem to implement schemes to the satisfaction of people.

         Mr. Alagiri said that a sum of Rs. 117.49 crore was sanctioned for the district for 2010-2011 under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme, of which Rs. 102 crore had been spent so far, completing 87 per cent of works. Under the Indira Awaz Yojana, a sum of Rs. 19 crore had been set aside for construction of houses for the poor and 99 per cent of the works was completed at a cost of Rs 18.76 crore.

         A sum of Rs 8.73 crore was earmarked under the Prime Minister Village Roads, Rivers and Lakes Scheme, and of which Rs 7.09 crore was utilised for the completion of 87 per cent of the works.Under the Total Sanitation Programme, an allocation of Rs. 5.96 crore had been made but till now only Rs 1.73 crore was spen,t completing hardly 29 per cent of the works. For the rural water supply scheme, a sum of Rs. 6.65 crore was set aside and so far 65 per cent of works worth Rs 4.35 crore had been completed. Collector P. Seetharaman, Project Officer (DRDA) K.Veera Raghava Rao, and district panchayat chairperson Santhi Panchamurthy were present.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior