உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 11, 2012

தானே புயல் நிவாரணம் அளிக்காததை கண்டித்து தங்கர்பச்சான் தலைமையில் சாலை மறியல்


மறியலில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானை அப்புறப்படுத்தும் போலீஸார்.
பண்ருட்டி:

          சாலை மறியலில் ஈடுபட்ட தங்கர்பச்சான் உள்ளிட்ட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
            பேரிடர் ஏற்பட்டுள்ள கடலூரை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், திரைப்பட இயக்குநருமான தங்கர்பச்சான் தலைமையில் கொள்ளுக்காரன்குட்டையில் செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 
 
முன்னதாக தமிழ்நாடு உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், திரைப்பட இயக்குநருமான தங்கர்பச்சான் பேசியது:
 
         புயலால் பல ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. பிச்சை போடுவது போல அரசு ரூ.2,500 வழங்குவதை ஏற்க முடியாது. வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்த போதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததே சேதத்திற்கு முக்கிய காரணம். 
 
             இப்பகுதியில் குடிநீர், மின்சாரம், உணவு இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பொருளாதாரமே அழிந்த நிலையில், விவசாயிகள் பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பார்கள்? புயலால் பாதிக்கப்பட்டு தண்ணீர் கூட கிடைக்காத இப்பகுதியில் உள்ள சாராயக் கடைகளை தயவு செய்து மூடிவிட வேண்டும். அரசை நம்பி பயனில்லை என்பதால் விவசாய சங்கங்களை அழைத்து தமிழக உழவர் சங்கங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகியுள்ளேன். விவசாயம் தொடர்பாக அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்களில் எங்களை அழைத்துதான் பேச வேண்டும்.
 
             கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார். எழு ஏக்கருக்கு ஒரு போர் அமைத்து தரவேண்டும். நிலத்தை சுத்தம் செய்து, விதை, மருந்து, உரம் தரவேண்டும். அரசு உதவியாக ஆடு, மாடு, கோழிகளை கொடுத்தால் வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினர். பின்னர் கும்பகோணம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்ட தங்கர்பச்சான் மற்றும் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட 59 பேரை போலீசார்  கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: அமைச்சர் கே.டி. பச்சமால்

சிதம்பரம்:
 
           கடலூர் மாவட்டத்தில் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் தெரிவித்தார். சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பி. முட்லூர் துணைமின் நிலையத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சமால் மின்சாரப் பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
 
             அங்குள்ள மின்வாரிய அதிகாரிகளிடம், எத்தனை ஊராட்சிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்ற விபரத்தை கேட்டறிந்தார். மேலும் புயல் பாதித்த கிராமங்களில் மின்கம்பங்களை பொருத்தி விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியான கொத்தட்டையில் புதிய மின்கம்பங்கள் நிறுவும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் க.திருமாறன், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி துரைசாமி, கடலூர் மாவட்ட அக்மார்க் தலைவர் கே.எஸ்.ரமேஷ், அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.
 
பின்னர் அமைச்சர் கே.டி. பச்சமால் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: 
 
         தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான தனியார் மரங்களும், வனத்துறைக்கு சொந்தமான மரங்களும் வோரோடு விழுந்துவிட்டன.தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். விரைவில் மரக்கன்று நடும் பணி தொடங்கப்படும். மின்சார சீரமைப்பு பணி, நிவாரணப்பணி ஆகியவை 75 சதவீதம் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 25 சதவீதம் ஒரிரு தினங்களில் முடிவுறும். எதிர்க்கட்சிகள் தூண்டுதலின் பேரில் சாலைமறியல்கள் நடைபெற்று வருகிறது. விடுபட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 
 
             எனவே யாரும் வதந்தியை நம்ப வேண்டாம்.அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு திருநெல்வேலியிலிருந்து மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள் பொருத்தும் பணி, ஓயர்களை சீரமைக்கும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் கே.டி. பச்சமால் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior