உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 01, 2011

வடலூர் அருகே குறுகலான பாலத்தில் தொடரும் விபத்து


பக்கவாட்டுச் சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த கண்ணுத்தோப்பு பாலத்தில் விபத்துக்குள்ளாகி நிற்கும் லாரி.
 
நெய்வேலி:

            விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள கண்ணுத்தோப்பு குறுகலான பாலத்தில் குறுகிய கால இடைவெளியில் விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.  இப்பாலத்தில் நிகழும் விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.  

             விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலைத் திட்டத்தின்கீழ் அகலப்படுத்தும் பணி 5 ஆண்டுகளாக நடைபெற்ற போதிலும், தஞ்சை - ஜெயங்கொண்டம் கூட்டுரோடு வரையே இச்சாலை இருவழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.  ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு முதல் விக்கிரவாண்டி வரை இச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனிடயே உள்ள பாலங்களும் இதுவரை அகலப்படுத்தப்படாமலும், சாலை தரம் உயர்த்தப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சாலை மார்க்கத்தில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.  

          இந்த சாலை மார்க்கத்தில் வடலூர் அருகேவுள்ள கண்ணுத்தோப்பு மற்றும் மருவாய் ஆகிய இரு இடங்களிலும் மிகவும் குறுகலான பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்களில் அடிக்கடி விபத்து நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.  பாலத்தில் பக்கவாட்டுச் சுவர்களில் வாகனங்கள் மோதி உடைபடுவதும்,அவ்வாறு உடைபடும் பக்கவாட்டுச் சுவர்கள் மாதக்கணக்கில் சரி செய்யப்படாமல் அப்படியே இருக்கும் போது, சில வாகனங்கள் பாலத்தின் விளிம்பு தெரியாமல் தலைகுப்புற கவிழ்வதும் இந்த பாலங்களில் அடிக்கடி நிகழும் சம்பவங்களாகும்.  

             யாரேனும் வி.ஐ.பி.க்கள் இந்த வழியாக செல்லும்போது மட்டும் சாலையின் பக்கவாட்டுச் சுவர்கள் அசுர வேகத்தில் கட்டப்படும். அவ்வாறு அண்மையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்துக்கு வந்திருந்த போது, உடைபட்டிருந்த கண்ணுத்தோப்பு பாலத்தின் பக்கவாட்டச் சுவர் அவசர கதியில் கட்டப்பட்டது.  தற்போது அந்த பாலத்தில் சனிக்கிழமை ஒரு லாரி மோதி, பக்கவாட்டுச் சுவர் உடைந்து லாரி அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டி  ருக்கிறது.  

              இந்தக் காட்சி அவ்வழியே புதிதாக செல்பவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அப்பகுதி மக்களோ இந்த பாலத்தில் ஒரு சாதனையே நிகழ்ந்துள்ளது. அதாவது இதுவரை சுமார் 100 விபத்துகள் நிகழ்ந்திருக்கலாம் என கூறி ஆதங்கப்படுகின்றனர்.  தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இப்பாலத்தின் முக்கியத்துவம் அறிந்தும், விலை மதிப்பில்லா உயிர்களுடன் விளையாடுவதை தவிர்த்து போர்க்கால அடிப்படையில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை மட்டுமல்ல அவ்வழியே பயணிக்கும் பயணிகளின் கோரிக்கையும்கூட. 

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.10.33 கோடி மதிப்பீட்டில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

             காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் மற்றும் ஆயங்குடி கிராமங்களில் ரூ. 62 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு விழா முட்டம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று ஆரம்ப சுகாதார நிலைய கட்டங்களை திறந்து வைத்தார். 

அப்போது  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது:

           திமுக ஆட்சியில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டுவதற்கு 65 பணிகளுக்காக ரூ.33.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.6.22 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.÷மேலும் ரூ.40 லட்சம் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.26.40 லட்சம் செலவில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், ரூ.17.4 லட்சம் செலவில் 3 நோய் தடுப்பு சிகிச்சை பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

              கடலூர், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைகளில் ரூ.1.50 கோடி செலவிலும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.2.90 கோடி செலவிலும் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு கட்டுவதற்கு துணை முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.÷விழாவில் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் கே.மனோகரன், செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை

         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு நாளை தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது.
பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:
மார்ச் 2 ந் தேதி  தமிழ் முதல் நாள்

3 ந் தேதி  தமிழ் இரண்டாம் தாள்

7 ந் தேதி  ஆங்கிலம் முதல் தாள்

8 ந் தேதி  ஆங்கிலம் இரண்டாம் தாள்

11 ந் தேதி  இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

14 ந் தேதி  வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து

17 ந் தேதி  கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

18 ந் தேதி  வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

21 ந் தேதி  உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்

23 ந் தேதி  தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்

25 ந் தேதி  அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்

Read more »

+2 தேர்வு நாளை தொடங்குகிறது

            தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 ந் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 தேர்வு நாளை தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது.

            பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள்.

        சென்னை மாநகரில் 445 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 49 ஆயிரத்து 8 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள். புதுச்சேரியில் 31 தேர்வு மையங்களில் 95 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 5 ஆயிரத்து 212 பேர் மாணவிகள். 6 ஆயிரத்து 305 பேர் மாணவர்கள். மொத்தத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுக்காக 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

            பள்ளிக்கூட மாணவர்களை தவிர தனித்தேர்வர்களாக 57 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 15 மணிக்கு முடிகிறது. இதில் கேள்விகளை வாசிக்க வழக்கம்போல 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. டிஸ்லெக்சியா, பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள், வாய் பேசாதவர்கள் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர்கள் சொல்வதை தேர்வில் எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

              தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் 5 லட்சத்து 15 ஆயிரத்து 281 பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் நகர புறவழிச்சாலை பணி துவங்கியது : ஆய்வு பணிக்கு ரூ.40 லட்சம் டெண்டர்

கடலூர் : 

             கடலூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புறவழிச்சாலை அமைப்பதற்கான ஆய்வு பணிக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரான கடலூர் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சாலை வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

             தஞ்சை, நாகை மாவட்டங்களை தமிழகத்தில் தலைநகரான சென்னையை இணைக்கும் பிரதான சாலை கடலூர் வழியாகவே செல்வதாலும், சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதாலும் கடலூர் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடலூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்தது

             . கடலூர் நகரமே கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளதால் கடலோரம் ஆறுகள் இணையும் பகுதியாக உள்ளது. இதனால் ஏராளமான உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பதால் நகரின் மேற்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க நெடுஞ்சாலை துறைக்கு அரசு அனுமதி வழங்கியது. அதனையொட்டி சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி மார்க்கத்திலிருந்து பண்ருட்டி, புதுச்சேரி மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் கடலூர் நகரினுள் வராமல் நேரடியாக செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

              அதன்படி கடலூர் - புதுச்சேரி சாலையில் பெண்ணையாறு பாலத்தை ஒட்டியுள்ள ஆல்பேட்டை செக்போஸ்டில் துவங்கி ஆற்றங்கரை ஓரமாக உள்ள கஸ்டம்ஸ் சாலை வழியாக வெளிச்செம்மண்டலம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கண்ணாரப்பேட்டை மற்றும் காரைக்காடு வழியாக சிதம்பரம் சாலையை இணைக்கும் வகையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

               இத்திட்டத்தில் கடலூர் - பண்ருட்டி, கடலூர் - திருவந்திபுரம், கடலூர் - வெள்ளக்கரை, கண்ணாரப்பேட்டை - ராமாபுரம், கடலூர் - விருத்தாசலம் நெடுஞ்சாலைகளிலும், கடலூர் - பண்ருட்டி, கடலூர் - விருத்தாசலம், கடலூர் - சிதம்பரம் ரயில்வே பாதைகளிலும், திருவந்திபுரம் கெடிலம் ஆற்றிலும் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது. புறவழிச்சாலை திட்டத்திற்கான பணி ஆய்வு, வடிவமைப்பு தள ஆய்வு, நேர்பாடு, ஆழ்துறை போர் மூலம் மண் பரிசோதனை செய்து விரிவான அளவீடு, இட அமைப்பு வரைபடம், மேம்பாலம், ரயில்வே பாலம், தோற்ற வரைபடத்துடன் சிறுபாலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீட்டுடன் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு பணியை 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள கடலூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டம்) சார்பில் நேற்று டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆய்வு பணியை 2 மாதத்தில் செய்து முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக டெண்டர் எடுத்த நிறுவனம் சமர்ப்பிக்கும் திட்ட அறிக்கையின் பேரில், புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்திய பின் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

It's time agricultural universities are networked: ICAR official


Impetus:ICAR Assistant Director General


CUDDALORE: 

          Assistant Director General of Indian Council for Agricultural Research (ICAR-New Delhi) C. Devakumar has underscored the importance of networking of the agricultural universities in the country for intensifying the research works and for capacity building. He was delivering the keynote address at the National Science Day celebrations held at Annamalai University, Chidambaram, on Monday.

       Already, the ICAR had been organising annual conferences of the Deans, Controllers of Examinations and the Vice-Chancellors of 57 State-run agricultural universities to discuss all aspects of farm education. He said that the main objective of any study was to arrive at the truth and carry on development works without disturbing ecology. Scientific temper meant having an open mind that was free from illusions, doubts and prejudices. It also encompassed social and behavioural aspects, Mr. Devakumar said.Scientific knowledge should ward off all insecurities and provide prosperity to all.These were not novel concepts but were well codified in Tamil literature such as the Tirukkural and the Seevaga Chinthamani.

          Just as Ashutosh Mukherjee, a renowned academic, had spotted the talent in Sir C.V. Raman and brought him to the fore, Annamalai University, in tune with the vision of its founders, had created the enabling environment for many scholars to emerge and flourish, Mr. Devakumar added. Vice-Chancellor M. Ramanathan said that science was fundamental for the all-round growth, including economy and education. However, it was a cause for concern that aspirants for basic sciences were on the decline whereas the craze for professional courses was on the rise.

          The Vice-Chancellor said that year after year the turnout at the National Science Day celebrations was getting enhanced and the events were getting sprightly. The content of the science exhibition being held in this connection would be improved next year, he added. On the occasion Mr. Devakumar and Dr. Ramanathan gave away prizes to the winners of various competitions. M. Rathinasabapathi, Registrar, Kannappan, Dean, Faculty of Science, and T. Balasubramanian, Dean, Faculty of Marine Biology, participated.

Read more »

Two Plus Two exam centres added in Cuddalore district

CUDDALORE: 

       Joint Director (Education) S. Kannappan, designated Monitoring Officer for the Plus Two examinations for Cuddalore and Perambalur districts, has said that two more examination centres have been added this year in Cuddalore district.

        Mr. Kannappan told The Hindu that already 61 examination centres were there in Cuddalore district and now the government schools at B.Mutlur near Chidambaram and Dharmanallur near Tholudur too had been designated as two other examination centres. A total of 30,083 candidates, including 14,405 boys and 15,678 girls, would appear for the examinations. In fact, the number of girl students outnumbered the boys in Plus Two.

        Mr. Kannappan said that the question papers were kept in seven custodial centres with full police protection. About 1,200 invigilators would be posted in the examination centres, and 10 flying squads would be doing the rounds. Neither the candidates nor the invigilator were allowed to carry the cell phones into the hall.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior