உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 22, 2012

முதுநகர் : கடலூர் துறைமுகம் சந்திப்பில் கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள்

கடலூர் முதுநகர் :


கடலூர் துறைமுகம் சந்திப்பில் கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் நின்று செல்கிறது. கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லாததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று (22ம் தேதி) முதல் 6 மாத காலத்திற்கு பரிச் சார்த்தமாக கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்தது. சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் (16175) கடலூர் துறைமுகத்தில் அதிகாலை 3 மணிக்கு நின்று 3.01 மணிக்கு புறப்படும். காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் (16176) இரவு 12.41 மணிக்கு நின்று 12.42 மணிக்கு புறப்படும். வாரம் இரு முறை இயக்கப்படும் திருப்பதி- மதுரை எக்ஸ்பிரஸ் (16779) இரவு 8.52 மணிக்கு நின்று 8.53 மணிக்கு புறப்படும். மதுரையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16780) இரவு 1.26 மணிக்கு நின்று 1.27 மணிக்கு புறப்படும்.
.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior