உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 23, 2012

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித் தொகை பெறுவதற்கான  விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., பிளஸ் 2, பட்டப்படிப்பு  படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜூன் 30 அன்று ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.


எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில்பணிபுரிபவராக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் படித்துக்  கொண்டிருக்கக் கூடாது. அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி  பயில்வோர் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் . மனுதாரர்கள்கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக  விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.  ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. விண்ணப்பம் தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழங்கப்படுகிறது. இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior