உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 15, 2010

கடலூர் பகுதியில் கடல் மட்டம் குறித்து இந்திய நில அளவை மையம் ஆய்வு



கடலூர் : 

                    கடலில் ஏற்படும் மாற்றத்தினால் கரையோரம் குடியிருப்போர் பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடலூர் பகுதியில் கடல் மட்டம் குறித்து இந்திய நில அளவை மையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

                   உலக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பூமியில் ஏற்படும் நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், புகை, மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஒட்டை விழுந்துள்ளது. இதனால் பூமியில் தட்பவெப்ப நிலைகள் மாற்றம் ஏற்பட்டு, வறட்சி, அதிக மழை போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது.

                 மேலும், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை காரணமாக சூரிய ஓளி நேரடியாக பூமிக்கு வருவதால் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் உருகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் உயர்வதால் கடலோர கிராமங்கள் கடல் நீர் புகுந்து அழியும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடலோர பகுதிகளை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு பகுதியிலும் கடல் மட்டம் கணக்கிடப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, திட்டங்கள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                       இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை பாதுகாக்கும் வகையில் இந்திய நில அளவை மையம் கடலின் நீர் மட்டம், கரையின் மட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கடலூரில் பெண்ணையாற்று பாலத்திலிருந்து கடலூர் முதுநகர் வரையில் சாலைகள் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என அதிகாரிகள் கணக்கெடுக்கம் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வான் வழியாக ஹெலிகாப்டர் மூலம் படம் பிடிக்கப்பட்டு கணக்கிடப்படும் என தெரிவித்தனர்.

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.லிட்., தேர்வு: முடிவு வெளியீடு


              மதுரை காமராஜ் பல்கலையில் நவம்பரில் நடந்த இளநிலை பி.லிட்., (பருவமுறை) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை இணையதளத்தில் www.mkuniversity.org அறிந்து கொள்ளலாம். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும்வரை காத்திராமல், இணையதளத்திலேயே விண்ணப்பத்தை பெற்று, டிச. 27க்குள் தேர்வாணையர் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மறுமதிப்பீடு கட்டணத்தை டிமாண்ட் டிராப்டாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

Read more »

கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி

கடலூர் : 

                   கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறை சார்பில் துவங்கவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயன்பெற எம்.எல்.ஏ. , வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.

கடலூரில்  நேற்று  எம். எல். ஏ. , வேல்முருகன் கூறியது:

                  பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயிற்சி பாசறை கடலூரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி பாசறையில் ஐ. ஏ. எஸ். , - ஐ. பி. எஸ். , -  டி. என். பி. எஸ். சி. , குரூப் 1, 2, வி. ஏ. ஓ. , வங்கி, ரயில்வே காவலர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பயின்ற 8 பேர் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும், 48 மாணவர்கள் காவலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்.  

                மீண்டும் அதே வகுப்புகள் கல்லூரி மாணவர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளில் கம்ப்யூட்டரில் வீடியோ ஆடியோ காட்சிகள் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இதற்காக பிரத்யேக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  

                தற்போது டி. என். பி. எஸ். சி. , சுகாதார புள்ளியியல் ஆய்வாளர், வனத்துறை உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான வகுப்புகள், பி. எஸ்சி. , அறிவியல், கணிதம், கணிப்பொறியியல், மண்ணியல், புள்ளியியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவ, மணவியர்கள் கடலூர் பா.ம க. , அலுவலக செயலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க ரூ.17.67 கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் :

             மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க முதல் கட்டமாக 17.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் உயிரிழந்த 18 பேரில் இதுவரை 7 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய்  நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 176 ஆடுகளும், 86 மாடுகளும், 54 கன்றுகள் என 315 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை 49 மாடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதமும், 49 கன்றுகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதமும், 126 ஆடுகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதமும்  நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

              மழை வெள்ளத்தால் 1,162 குடிசைகள் முழுமையாகவும், 14 ஆயிரத்து 595 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.  இதுவரை முழுமையாக சேதமடைந்த 914 குடிசைகளுக்கு 5,000 ரூபாய் வீதம் 45.70 லட்சமும், பகுதியாக சேதமடைந்த 1,264 குடிசைகளுக்கு தலா 2,500 ரூபாய் வீதம் 31.60 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் 14 கி.மீ., சாலை சீரமைப்புக்கு 70 லட்ச ரூபாயும், சிதம்பரம் நகராட்சியில் 8 கி.மீ., தூர சாலை சீரமைக்க 40 லட்ச ரூபாயும், விருத்தாசலம் நகராட்சியில் 5 கி.மீ., சாலை சீரமைக்க 25 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 

                    மேலும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள், உடைப்புகள், ஏரிகள் ஆகியவற்றை தற்காலிகமாக சீரமைக்க 4.32 கோடி ரூபாய் முதல் கட்டமாக பெறப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் சிப்காட்டில் விக்டரி கெமிக்கல் தொழிற்சாலை திடீர் மூடல் கடலூரில் தொழிலாளர்கள் முற்றுகை

கடலூர் : 

               கடலூர் சிப்காட்டில் விக்டரி கெமிக்கல் கம்பெனி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். கடலூர் சிப்காட்டில் உள்ள விக்டரி கெமிக்கல் கம்பெனியில் பெரியம் கார்பனைட், பெரியம் நைட்ரேட், சோடியம் ஞசல்பைடு  ஆகிய மூலப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 19 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் 40 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். 

                இந்நிலையில் முன்னறிவிப்பின்றி விக்டரி கம்பெனி நேற்று முன்தினம் நள்ளிரவு ஷிப்டின் போது வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு பூட்டு போடப்பட்டது. 

கம்பெனி கேட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசில், 

                          "தொழிற்சாலையின் விற்பனை சரிவு காரணமாக உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கியது. இதனை தொடர்ந்து சமாளிக்க முடியாத காரணத்தால் கம்பெனி 14-12-10ம் தேதி முதல் மூடப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய அனைத்து தொகையும் பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

             இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் மற்றும் கம்பெனியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கம்பெனியை முற்றுகையிட்டனர். 

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 

                  "விக்டரி நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி நேற்று முன்தினம் இரவு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை கூலிப்படையினர் கொண்டு மிரட்டி வெளியேற்றி விட்டு கம்பெனிக்கு பூட்டு போட்டுள்ளனர். லாபத்தில் இயங்கி வந்த நிறுவனம் திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ளது என காரணமாக கூறி பூட்டப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. மீண்டும் கம்பெனியைத் திறந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாநகர போக்குவரத்துக்கழக முத்திரையுடன் தனியார் பஸ்சில் டிக்கெட் வினியோகம்





சிதம்பரம் : 

               கடலூர் - சிதம்பரம் தனியார் பஸ்சில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக முத்திரையுடன் டிக்கெட் வழங்கப்படுகிறது. சிதம்பரம் - கடலூர் வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில், மின்னணு டிக்கெட் வழங்கப்படுகிறது. 

              அரசு மற்றும் தனியார் பஸ்களில் வழங்கப்படும் மின்னணு டிக்கெட்டுகள், சாதாரண வெள்ளை நிற காகிதத்தில் அச்சாகி இருக்கும். பயணிகள் செல்லும் ஊர், நேரம், கட்டணம், பஸ் எண் உள்ளிட்ட தகவல்கள் அதில் அச்சிடப்பட்டிருக்கும். இந்நிலையில், சிதம்பரம் - கடலூர் மார்க்கமாக இயங்கும் தனியார் பஸ் ஒன்றில் வழங்கப்பட்ட மின்னணு டிக்கெட்டில், "எம்.டி.எஸ்' சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் என முத்திரை உள்ளது. 

                இதை பார்த்த பயணிகள் புரியாமல் விழித்தனர். கடலூர் மாவட்டத்தில் அதிகம் இயங்கும் விழுப்புரம், கும்பகோணம் கோட்ட அரசு பஸ்களில் கூட, முத்திரை இல்லாமல் டிக்கெட் வழங்கப்படும் நிலையில், தனியார் பஸ்சுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக்கழக முத்திரையுடன் டிக்கெட் வந்தது எப்படி என குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

Read more »

ஜெயங்கொண்டத்தில் புதிய மின்நிலையம்: என்.எல்.சி. தலைவர் அன்சாரி தகவல்

நெய்வேலி:

            ஜெயங்கொண்டத்தில் புதிய மின்நிலையம் அமைக்கப்படும் என்று என்.எல். சி. தலைவர் அன்சாரி கூறினார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி  பேட்டியளித் தார். 
அப்போது என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி கூறியது:-

             என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டியில் முதல் 8 மாதங்களில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்நிலையங்கள் 1152.711 கோடி யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டை காட்டிலும் அதிகம். புதிய திட்டங்களை பொருத்த வரை உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஹாட்டாம்பூர் பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

                 மேலும், ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் 125 மெகாவாட் மின்உற்பத்தி பிரிவு இவ்வாண்டு ஜூன் 5ந் தேதி பரிசோதனை முறையில் இயக்கி வைக்கப்பட்டது. நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்திட்டத்தின் முதல் 250 மெகாவாட் மின்உற்பத்தி பிரிவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார் கிறோம். மேலும், நாகை மாவட்டம் சீர்காழியில் 2000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்க உள்ளோம்.

                  இதனை தொடர்ந்து மேலும் 2000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை மற்றொரு இடத்தில் தொடங்க உள் ளோம். ஜெயங்கொண்டத்தில் சுரங்கம் மற்றும் மின் நிலையம் அமைக்க திட்ட மிட்டு இருந்தோம். அங்கு நிலம் கையகப்படுத்தும் பணி மிகப்பெரியளவில் உள்ளது.  எனவே அப்பகுதியில் பொருளாதார மாற்றம் ஏற்பட வேண்டும் என அங்கும் வசிக்கும் மக்கள் விரும்பும் பட்சத்தில் அவர் களாகவே தங்கள் நிலங்களை என்.எல்.சி.யிடம் வழங்க முன்வந்தால், மின்நிலையம் அமைப்பது குறித்து பரீசிலனை செய்வோம்.

               அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை காலி செய்யுங்கள் என்று கூறுவதற்கு உணர்வு ரீதியாக நாங்கள் தயங்குகிறோம். ஏனெனில் அவர்கள் காலம் காலமாக அவ்விடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்களை வேறு இடங்களுக்கு போக சொல்ல மனமில்லை. இருப்பினும், 2017ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சீர்காழி மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் அமைக்க உள்ள மின்நிலையங்களுக்கு பூர்வாங்க பணிகளை மேற்கொள்வோம்.

                      தற்போது, என்.எல்.சி. நிறுவனம் பழுபு  நிலக்கரிக்கு மாற்றாக நிலக்கரியை எரி பொருளாக கொண்ட புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அனைத்துதுறைகளிலும் வளர்ச்சியடைந்து வரும் இந்த நிறுவனம் தனது விரிவாக்க திட்டங்களின் மூலம் அடுத்த சில சீடுண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவுள்ளது. அப்படி, புதிய திட்டங்களை நிறைவேற்றிய நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தின் பழுபு நிலக்கரி மற்றும் நிலக்கரி உற்பத்தி திறன் தற்போதைய அளவை விட மூன்று மடங்கு அதிரிக்கும் எனஎதிர்பார்க்கபடுகிறது.

                  என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தளராத உழைப்பால் விரைவில் இந்நிறுவனம் மினிரத்னா தகுதியிலிருந்து நவரத்னா தகுதிக்கு உயர்த்தபட இருக்கிறது. நாட்டின் அனைத்து பகுதி களுக்கும் என்.எல்.சி. தனது சேவையை விரிவுப்படுத்தப் பட உள்ளது.  இவ்வாறு என்.எல்.சி. நிறுவன தலைவர் அன்சாரி கூறினார்.

Read more »

Breaches in the Paravanar being plugged on a war-footing, says Collector

Status check: Collector P. Seetharaman inspecting work on plugging the breach in the Paravanar at Thiruvannainallur on Tuesday. 
 
CUDDALORE: 

              In the recent floods, the Paravanar breached at least at 10 places on its course, submerging the standing paddy crop and inundating habitations.

            Collector P. Seetharaman, along with officials and Public Relations Officer Pon. Muthiah, on Tuesday walked three km to reach Thiruvannainallur and Onankuppam, located on the banks of the Parvanar, to inspect the works being undertaken to plug the breaches with sandbags.

             The Collector told the accompanying reporters that the river had also breached at Boothangudi, Kalgunam and Adur Agaram. The Water Resource Division of the Public Works Department had taken up the plugging work on a war-footing and all weak spots would be strengthened in three days. The farmers and residents in the area said that the breaches had become a common occurrence during rainy season. Special officer on floods Gagandeep Singh Bedi, who inspected the affected areas in the district recently, observed that the Paravanar, carrying slush-filled water pumped out from the Neyveli lignite mines, caused heavy siltation on its course.

                Hence, Mr. Bedi had put the onus on the NLC to clean up the entire river, which is otherwise divided as upper, middle and lower Paravanar for administrative convenience. The overflowing river also damaged Chennai-Kumbamonam road at many points. When the attention of NLC Chairman-cum-Managing Director A.R.Ansari was drawn to the situation, he said that the management had already spent Rs. 8 crore on widening the Paravanar from the mines head to the upper part of the river.

                Desiltation of the entire course of the river would involve enormous expenditure and required an extensive study. This time around, the water overflowing from the river had only submerged paddy crops but not caused damage to them. However, he said the condition of the Maruvai stretch of Chennai-Kumbakonam road was really bad.

Read more »

Crop damage assessment begins

CUDDALORE: 

         Official teams have been formed at the village, firka and taluk levels to assess crop damage in the recent floods, according to Collector P. Seetharaman.

            He told reporters here on Tuesday that at the panchayat level, teams would comprise VAOs and Assistant Agricultural Officers; at the firka level, Revenue Inspectors and Agricultural Officers; and at the taluk level, tahsildars and Joint Director of Agriculture. Mr. Seetharaman inspected the damage at Adur Agaram, Kalgunam and Boothangudi, while District Revenue Officer S.Natarajan assessed the damage at Poolamedu and Thirunaraiyur.

Read more »

Mahinda Rajapaksa effigy burnt

CUDDALORE: 

            Unidentified persons burnt the effigy of Sri Lankan President Mahinda Rajapaksa at Seplanatham on Tuesday. They reportedly were condemning his move to ban the recitation of the Tamil version of national anthem in parts of Sri Lanka.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior