உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 30, 2010

ஏரியில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதி வேண்டும்


கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அருண்.
 
பண்ருட்டி:

 
               கிருஷ்ண ஜயந்தி நெருங்கிவிட்ட நிலையில் பண்ருட்டி அருகே கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பண்ருட்டி வட்டம் ஏரிப்பாளையம், வையாபுரிபட்டிணம், திருவதிகை, பூங்குணம், புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான குயவர் குடும்பங்கள் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 
                தற்போது மண்பாண்டங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், இவர்கள் சீசனுக்குத் தகுந்தபடி பல்வேறு பொம்மைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ண ஜயந்தி பண்டிகையையொட்டி தற்போது கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பில் இவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
இதுகுறித்து வையாபுரிபட்டிணத்தைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் அருண் கூறியது:
 
                 தற்போது மக்கள் மண்பாண்டங்களை பயன்படுத்துவது இல்லை. திருமணம், கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகை ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மண்பாண்டங்கள் வாங்குகின்றனர்.கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்கு பயன்படுத்துவோர் கூட தற்போது மெழுகு மற்றும் பீங்கான் விளக்குகளுக்கு மாறி வருகின்றர். இதனால் மண்பாண்டங்கள் உற்பத்தி குறைந்து பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. அக் குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் குடும்பத் தொழிலை விடுத்து மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
 
                இந்நிலையில் குடும்பத் தொழிலை செய்துவரும் நாங்கள், விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள், குழந்தைகளை கவரும் வகையில் விலங்குகள், பறவைகள், உண்டியல் போன்ற பொம்மைகள் செய்து வருகிறோம். இவற்றை உள்ளூர் சந்தையிலும், கோயில் திருவிழாக்களிலும் விற்பனை செய்கிறோம்.விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி ஆகிய காலத்தில் சென்னை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் எங்களிடம் பொம்மைகள் வங்கிச் செல்வர். இதில் கிடைக்கும் கணிசமான வருவாய் மூலமே குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
 
                  இந்நிலையில் ஏரியில் இருந்து களிமண் எடுக்க, பணம் செலுத்தி, சுரங்க உதவி இயக்குநரிடம் அனுமதி பெற பின்புதான் மண் எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளந்து விடும் இடத்தில் தான் களிமண் எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் தரமான களிமண் எடுக்க முடியாத சூழல் ஏற்படும். மண் சரியில்லை என்றால் பொம்மைகள், சட்டி பானைகள் செய்ய முடியாது. நலிவடைந்த நிலையில் மாற்றுத் தொழிலுக்கும் செல்ல முடியாத சூழலில், நாங்கள் பணம் கட்டி ஏரியில் களிமண் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு, மண்பாண்டத் தொழிலாளர்களின் நலன் கருதி ஏரியில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

Read more »

சீர்கேட்டின் பிடியில் பண்ருட்டி அரசு மருத்துவமனை



மின் விளக்குகள், இயங்காததால் இருளில் மூழ்கிய பெண்கள் வார்டு.
 
பண்ருட்டி:
 
                 பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் தங்கும் வார்டு உள்ளிட்ட பகுதிகள், அடிப்படை வசதி இல்லாமலும் அசுத்தமாகவும் உள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. 
 
                பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனை வளாகம் பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடப்பதால் பாம்பு, விஷப் பூச்சிகளின் சரணாலயமாக உள்ளது. மேலும் சில இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் உள் நோயாளிகள் கொசுக் கடிக்கும், விஷப்பூச்சிகளுக்கு இடையே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
                    மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளுக்காக கட்டப்பட்ட இரு கழிப்பறைகள் இது நாள் வரையில் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களால் வளாகம் அசுத்தம் செய்யப்படுவதாலும், பன்றிகள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் மருத்துவமனை வளாகத்தில் சுதந்திரமாக சுற்றி வருவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் .மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் வார்டு, பிரசவ வார்டு பகுதியில் உள்ள ஜன்னல்கள் சேதமடைந்தும், கண்ணாடிகள் உடைந்து உள்ளன. மேலும் வார்டு பகுதியில் விளக்குகள் எரியவில்லை, மின் விசிறிகள் இயங்கவில்லை. இதனால் கொசுக்கடியில் பாதிக்கப்படும் நோயாளிகள் தங்களைச் சுற்றிலும் கொசுவர்த்திகளை ஏற்றி வைத்துக்கொள்கின்றனர்.  இந்த கொசுவர்த்தியில் இருந்து வரும் புகையை நோயாளிகள் சுவாசிப்பதால் சுவாச நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பிறந்த சிசுக்களும், குழந்தைகளும் கொசு வத்தி புகையால் பெரிதும் பாதிப்படைகின்றனர். 
 
                பல்வேறு விபத்துகள், உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சைக்காக கடலூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர ஊர்தி ஆயுள் முடிந்தும் ஓடிக்கொண்டுள்ளது.  இவற்றை மாற்றி தரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் பலனில்லை.பராமரிப்புப் பணிகளை டெண்டர் மூலம் எடுக்கும் முக்கியஸ்தர்கள் பெயரளவில் பணிகளை செய்துவிட்டு கணக்கு முடித்து விடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் இருப்பதால் பொதுப்பணித் துறை அதிகாரிகளும், மற்றவர்களும் கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
 
இது குறித்து பொதுப்பணித்துறை (கட்டட பராமரிப்பு) இளநிலை பொறியாளர் எஸ்.கிருஷ்ணசாமி கூறியது: 
 
                    "ஆண்டுக்கு ஒரு முறைதான் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பராமரிப்பு செய்யப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்த அறிக்கையை ஏப்ரல் மாதத்தில் உயர் அதிகாரிகள் கேட்பர். இதை அனுப்பிய பின்னர்தான் நிதி ஒதுக்கப்படும்.நிதி எப்போது ஒதுக்குவார்கள் என்பது தெரியாது. வரும் நிதியில் அத்தியாவசியப் பணிகளை முதலில் முடிப்போம்' என்றார். தமிழக சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான பண்ருட்டியிலேயே இந்த நிலை என்றால் பிற மருத்துவமனைகளை கேட்கவா வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Read more »

கடலூரில் 5 நூல்கள் வெளியீட்டு விழா

கடலூர்:

                 டலூர் வாசிப்போர் இயக்கத் தலைவர் ஆர்.நடராஜன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கடலூர் வாசிப்போர் இயக்கம் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தன.

               வாசிப்போர் இயக்கத் தலைவரும் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வருமான ஆர்.நடராஜன் எழுதிய, ஒரு தோழியின் கதை, நவீன பஞ்ச தந்திரக் கதைகள், நம்பர் பூதம் (மொழி பெயர்ப்பு), பெடரிக் டக்ளஸ் (மொழி பெயர்ப்பு), அறிவியல், வளர்ச்சி... வன்முறை (மொழி பெயர்ப்பு) ஆகிய 5 நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

                  புத்தகங்களை பள்ளி மாணவச் சிறுவர் சிறுமியர் வெளியிட, முதல் பிரதியை மாவட்ட நூலக அதிகாரி த.வெல்லஸ் ரோஸ் பெற்றுக் கொண்டார். இந்தப் புத்தகங்களை முறையே ஆசிரியை கேத்தரின், எல்.ஐ.சி. ஜெயஸ்ரீ, பேராசிரியை சாந்தி, எழுத்தாளர் வளவ துரையன், அறிவியல் விமர்சகர் வைத்தியலிங்கம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்துப் பேசினர்.÷நிகழ்ச்சிக்கு வெல்லஸ் ரோஸ் தலைமை வகித்தார். வாசிப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பால்கி முன்னிலை வகித்து தொகுத்து வழங்கினார்.

Read more »

தொழிற்சாலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் வெட்டப்படும் மரங்கள்: பாமக கண்டனம்

கடலூர்:

            கடலூர் அருகே தொழிற்சாலைக்கென வாங்கப்பட்ட நிலத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                கடலூர் அருகே நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் அனல்மின் நிலையம் அமைக்க 1100 ஏக்கர் நிலம் வாங்கத் திட்டமிட்டு 500 ஏக்கருக்கு மேலான நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த நிலங்களில் முந்திரி, சவுக்கு, பனை, தென்னை, வேம்பு, யூகலிப்டஸ் மரங்கள், வெட்டி வேர் வயல்கள் அதிகம் உள்ளன. தொழிற்சாலைக்காக வாங்கப்பட்ட நிலத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தொழிற்சாலை அமைக்க இன்னமும் அனுமதி கிடைக்க வில்லை.

                         ஆனால் நிலம் வாங்கிய நிறுவனம் இந்த நிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டத் தொடங்கி உள்ளன. சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அரசிடமும் மக்களிடமும் வாக்குறுதி அளித்து இருக்கும் இந்த நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான முந்திரி மரங்கள் உள்ளிட்டவற்றை வெட்டி விற்கத் தொடங்கி உள்ளன. இதனால் அந்த நிலங்கள் பாலைவனமாக்கப்பட்டு வருகிறது. வேளாண் நிலங்களை தொழிற்சாலைகளுக்காகக் கையகப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களில் வேளாண் நிலங்களை தொழிற்சாலைகள் வாங்கிக் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், சுனாமியின்போது பாதுகாப்பு அரணாக விளங்கிய மரங்களை வெட்டி வீழ்த்துவதை அனுமதிக்க முடியாது.  

                      மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், அப்பகுதி மக்களையும் மனித உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். தொழிற்சாலைக்கு அனுமதி கிடைக்காததால், வாங்கப்பட்ட நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று திருமால்வளவன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி திட்டம்: இணை இயக்குநர் தகவல்

கடலூர்:

             கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு இருப்பதாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் தெரிவித்தார். இந்தப் பரப்பளவு இயல்பைவிடக் கூடுதல் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 84 அடியாக இருந்த போதிலும், சாகுபடிப் பணிகள் காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்க, ஜூலை 28-ல் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து ஆகஸ்ட் 1-ம் தேதியும், கீழணையில் இருந்து ஆகஸ்ட் 11-ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டும், ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ள இடங்களிலும் சம்பா நெல் நாற்று விடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். செம்மை நெல் சாகுபடியில் நாற்றின் வயதைக் குறைக்கலாம். 

               இதனால் தாமதமாகத் தண்ணீர் கிடைத்தாலும், செப்டம்பர் இறுதிக்குள் நடவுப் பணிகளை முடித்து விடலாம்.÷சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் தற்போது பெய்துள்ள மழையைப் பயன்படுத்தியும், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாகவும் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் பணிகளை மேற்கொண்டால் செப்டம்பர் இறுதிக்குள் நடவை முடித்து, நவம்பர் மாத மழையில் இருந்து நெல் பயிர்களைக் காப்பாற்றிவிட முடியும். ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு ஏதுவாகும். அதைத் தொடர்ந்து நிச்சயம் நஞ்சைத் தரிசில் பயறு வகைகளைச் சாகுபடி செய்யலாம்.

                வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20-ல் ஆரம்பமாகும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருக்கிறார். கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் 600 ஏக்கரில் நாற்றங்கால் விடப்பட்டு உள்ளது. ÷விவசாயிகள் வீராணம் ஏரி நீர் திறப்பை எதிர்நோக்கி உள்ளனர். ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தில் கிலோவுக்கு |5 மானிய விலையிலும், விதை கிராமத் திட்டத்தில் 50 சதம் மானிய விலையிலும், விதை நெல் வழங்கப்படுகிறது. இதுவரை 122 டன் விதை நெல் வேளாண் துறை மூலமாகவும், 62 டன் தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு உள்ளது.

                  வெள்ளைப் பொன்னி, ஏடிடி 39, ஏடிடி 38, ஆந்திரா பொன்னி, கோ-43, கே.ஆர்.எச்-2 வீரிய ஒட்டு ரக விதை நெல் 282 டன் வேளாண் விரிவாக்க மையங்களிலும் 120 டன் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு உள்ளது. டெல்டா சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் தயார் நிலையில் தனியார் உரக் கடைகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. நுண்ணுயிர் பொட்டலங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் இருப்பு உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பங்களையும் மானிய திட்டங்களையும் கேட்டறிந்து பயன்பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

குறிஞ்சிப்பாடியில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

நெய்வேலி:

            குறிஞ்சிப்பாடி வட்டம் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.தேவராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் நுகர்வோர் கூறிய குறைகள்: 

              தொலைபேசி மூலம் பதிவு செய்யும்போது, முகவர் அலுவலக ஊழியர்கள் மரியாதைக் குறைவாக பேசுகின்றனர், ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டோக்கன் முறைக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர், 21 நாள்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்யவேண்டும் என்று கெடுபிடி செய்கின்றனர், அவ்வாறு பதிவுசெய்தாலும் குறைந்தபட்சம் 50 நாள்களுக்குப் பிறகே சிலிண்டர் சப்ளை செய்கின்றனர் என்று கூறினர்.

இவற்றை கேட்டுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் கூறுகையில், 

               ""சிலிண்டர் பதிவுக்கு 21 நாள் காலஅவகாசம் தேவை என்று எந்த உத்தரவும் கிடையாது. டோக்கன் முறை உங்களது வசதிக்காவே கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் சரியாக நடந்துகொண்டால் தவறு நடக்க வாய்ப்பில்லை. மேலும் முகவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனினும் முகவர்கள் நுகர்வோரிடம் மரியாதையாக நடந்துகொள்வது அவசியம்'' என்று கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டார். வாடிக்கையாளர் அதிருப்தி: இந்நிலையில் கூட்டத்துக்கு வந்திருந்த நுகர்வோர், இக் கூட்டம் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டுள்ளது என்று குறைகூறினர். 

                 ""இவ்வுளவு குறைகளை நாங்கள் கூறிய பின்னரும், முகவருக்காக வக்காலத்து வாங்குகிறார். அரசு விதித்துள்ள நடைமுறைகளை செயல்படுத்தாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் முகவர்களை எச்சரிக்கவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவரிடம் நீங்களே போய் கேளுங்கள், அப்போது தான் விமோசனம் பிறக்கும் என்கிறார். டோர் டெலிவரி செய்யாத முகவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கத் தயங்கும் அலுவலரின் செயல் முகவர்களுக்கு ஆதரவான நிலையையே காட்டுகிறது'' என்று விரக்தியுடன் கூறிவிட்டுச் சென்றனர். 

                       இக் கூட்டம் 150 சதுரஅடி பரப்பளவு அறைக்குள் நடத்தப்பட்டதால் பெரும்பாலான நுகர்வோர் அறைக்கு வெளியிலேயே நிற்கவேண்டியிருந்தது.

Read more »

Fishermen return from sea after 10 days

CUDDALORE: 

              After nearly 10 days of nightmarish experience in the sea after their mechanised boat suffered engine failure, five fishermen returned home on Saturday night.

             They ventured into the sea from Cuddalore Old Town on August 19 and while fishing near Puducherry shore, the engine failed. Attempts to repair the engine were unsuccessful and the boat drifted away, P. Shankaran, driver of the motorised boat, told The Hindu.

                “There was heavy wind and the boat drifted close to the Sri Lankan shore. We had stored food only for three days and all these days, we survived on fish,” he said. Finally on August 26, the crew was able to repair the engine and reached Nagapattinam on Saturday. Again, the engine failed, he said. “Till we reached Nagapattinam, we were not able to contact our people through cell phone. On Saturday, we were able to contact the boat owner,” Mr. Shankaran said. A rescue team from Cuddalore was deployed and the boat was towed back. On reaching Cuddalore, the fishermen were given medical aid.

Read more »

உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

சிதம்பரம் : 

                    சிதம்பரத்தில் வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட்டக்குழு அவரசக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயதேவன் வரவேற்றார்.  கோவலன், அருள் மொழிவர்மன், பன்னீர், சுந்தரேசன், ராஜசுந்தரம் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வு செய்தவர்களின் பெயர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்வது. 

                  2010-2011ம் கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட 158 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மத்திய அரசின் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் அனுமதிக்கப் பட்ட 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் உடன் நியமிக்க அரசை கேட்டுக்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவக்குமார் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் மோசமானது மாற்று வழிச்சாலை தொடர் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் எறுமனூர் மாற்று வழிப்பாதை சாலையில் உள்ள மோசமான பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகனங்கள் கவிழ்வதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர், திருச்சி செல்லும் வாகனங்கள் பாலக்கரை, கடைவீதி, மணலூர் வழியாகச் சென்று வந்தது. தற்போது மணலூரில் உள்ள ரயில்வே கேட்டில் மேம் பால பணி நடந்து வருகிறது.

                      இதனால் இந்த வழியாக வந்த வாகனங்கள் எறுமனூர் பாலம் வழியாக ரயில்வே ஜங்ஷனை கடந்து பஸ் நிலையம் அடையுமாறு மாற்றுப் பாதையில் மாற்றி விடப் பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இச்சாலை அமைந்துள்ள பகுதி களிமண் பகுதி என்பதாலும், அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதாலும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது.  மேலும் வளைவுகள் அதிகமாக இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. 

                       கடந்த சில மாதங்களுக்கு முன் இச்சாலையில்  சென்ற தனியார் பஸ் நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் பஸ் டிரைவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி உட்பட மூன்று லாரிகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

காணாமல் போன கடலூர் மீனவர்கள் 5 பேர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கரையேறினர்

கடலூர் : 

                  கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஐந்து மீனவர்கள் 10 நாட்களுக்குப் பின் நேற்று நாகை துறைமுகத்தில் கரையேறினர். பின் அவர்கள் கடலூருக்கு அழைத்து வரப்பட்டனர். 

                   கடலூரை அடுத்த தம்மனாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்குச் சொந்தமான விசைப் டகில் கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகரை அடுத்த நஞ்சம்பேட்டை சங்கரன் (50), ஏழுமலை (53), பெரியக்குப்பம் கருப்பர் (55), சித்திரைப் பேட்டை சேகர் (55), சாமியார்பேட்டை முத்துசாமி (42) ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். படகின் உரிமையாளர் அஞ்சாபுலி 20ம் தேதி மாலை மொபைல் போன் மூலம் கடலுக்குள் சென்ற மீனவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார்.  

                        அதன்பின் மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால் அச்சமடைந்த மீனவர்கள், காணாமல் போனவர் களை கண்டு பிடித்துத் தரக்கோரி 26ம் தேதி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். உடன் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல்படை மூலம் தேடுவதாக கலெக்டர் தெரிவித்தார். நேற்று முன்தினம் நடந்த கூட்டத் திலும் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் 200 பேர் தேடுவதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார். ஆனால், காணாமல் போன மீனவர்கள் குறித்து 28ம் தேதி காலை வரை எவ்வித தகவலும் தெரியவில்லை.

                        இதனால் 10க்கும் மேற்பட்ட  மீனவர்கள் வெள்ளைக் கொடி கட்டிய  நான்கு விசைப் படகுகளில் மீனவர்களைத் தேடி கடலுக்குள் சென்றனர். இந்நிலையில், காணாமல் போன மீன வர்கள் நேற்றுமுன்தினம் மதியம் நாகப்பட்டினத்தில் படகுடன் கரை ஏறினர். அவர்கள் படகை கடலூரில் இருந்து சென்ற மீனவர்கள் கயிறு கட்டி இழுத்து வந்தனர். நேற்று காலை 5 மீனவர்களும் கடலூர் துறைமுகத் திற்கு வந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.ஆர்.ஓ., நடராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

கரை திரும்பிய மீனவர்களில் விசைப்படகு டிரைவர் சங்கரன் கூறுகையில், 

                    ""கடந்த 19ம் தேதி புறப் பட்ட நாங்கள் புதுச்சேரி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப் போது கியர் ராடு உடைந்து விட்டது. அதனால் குறிப்பிட்ட திசை நோக்கி படகை செலுத்த முடியவில்லை. சரி செய்வதற்குள் காற்றின் வேகத்தால் ஆழ்கடலை நோக்கித் தள்ளப்பட்டு இலங்கை அருகே சென்று விட்டோம். தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பின்னர்  படகில்  மெல்ல மெல்ல  நாகப்பட்டினம் வந்தடைந்தோம். நாங்கள் கரைக்கு வந்த பின்னர்தான்  எங்களைத் தேடி வந்தவர்களை சந்தித் தோம். நாங்கள் சோறு சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது,'' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior