உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி பிரிவு

கடலூர்:

      பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

      தமிழகத்தின் பல பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவிவருகிறது. இந்நிலையில் பல மாவட்டங்களில் பன்றி காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது: 

       தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி உடன் மூச்சு திணறல் இருந்தால் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். மேற்கண்ட வகையில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் வந்து பரிசோதனை செய்துகொள்ளலாம் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.



Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை உயிருக்கு பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார்


கடலூர் : 

    என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை போலீசில் புகார் செய்துள்ளார்.

     கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி புரிந்து வருபவர் கோமதி, 45. 

இவர் கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகார் மனு:

        கந்தசாமி நாயுடு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மற்றும் கணிதத்துறையும் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. கணிதத் துறையில் பேராசிரியராக இருக்கும் சாந்தியை பேராசிரியைகள் முல்லை, வரலாறு துறையைச் சேர்ந்த திருஞானம் ஆகியோர் சந்தித்து பேசுவது வழக்கம். கடந்த 7ம் தேதி இவர்கள் மூவரும் சத்தம்போட்டு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பாடம் நடத்துவதற்காக சில குறிப்புகள் தயாரிக்க கடினமாக இருக்கிறது. எனவே மெதுவாகப் பேசுங்கள் என கூறினேன். அதற்கு அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்க முயன்றனர். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே என்னை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சி.எஸ்.ஆர்., பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்


கடலூர் : 

  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் தினமும் காலை, மாலை ஏராளமான விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  நடைபாதையையொட்டி ஓய்வு எடுக்கவும், காற்று வாங்கவும், பசுமையாக நிழல் தந்து கொண்டிருந்த வேப்ப மரங்கள், புங்கை மரங்கள், தூங்கு மூஞ்சி மரங்கள் கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலின் தாக்குதலில் முற்றிலுமாக முறிந்து விழுந்து சேதமடைந்தன. ஒரு சில மரங்கள் மட்டுமே தப்பின. பல மரங்களில் இலைகள் உதிர்ந்து வெறும் எலும்புக் கூடாகவே நிற்கின்றன.

      இந்நிலையில், தற்போது கோடை காலம் துவங்கி அனல் காற்று வீசி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் பகல் நேரங்களில் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில், அண்ணா விளையாட்டரங்கில் போதுமான மரங்கள் இல்லாததால் வீரர், வீராங்கனைகள் வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகி சோர்வு அடைகின்றனர். எனவே, அனைத்து தரப்பினரின் நலன் கருதி நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior