உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 03, 2011

காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணி துவங்கியது

காட்டுமன்னார்கோவில்:

            காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.வரும் மே மாதம் சட்சபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைக்காக போட்டோ எடுக்கும் பணி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்கு முதல் கட்டமாக வந்துள்ள 3 ஆயிரத்து 819 வாக்காளர் அடையாள அட்டைகள் உரியவர்களுக்கு அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப்படுகிறது.

Read more »

வீராணம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து 45.5 அடியாக நீடிப்பு

சிதம்பரம்:

              கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம்சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகாக்கள் பாசன வசதி பெறுகின்றன. அதோடு சென்னை நகரின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. கடந்த மாதம் பெய்த கனமழையால் வீராணம் ஏரிக்கு வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.

             இதனால் ஏரிக்கு வெள்ளஅபாயம் ஏற்பட்டதால் வருகின்ற தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது மழை வெள்ளம் வடிந்து வருகிறது. ஆனாலும் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 45.5 அடியாக உள்ளது.  ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும். கடந்த 26-ந் தேதி முதல் 45.5 அடியாக இருக்கும் வீராணம் ஏரிக்கு இன்று 300 கனஅடிநீர் வருகிறது.மதகுகள் வழியாக 200 கனஅடி நீரும், சென்னை மாநகர குடிநீருக்கு 74 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

Read more »

தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.658 கோடியில் அறுவை சிகிச்சை அமைச்சர் பன்னீர்செல்வம்

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சியில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 63 கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி அட்டைகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். 

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 15,118 பேருக்கு தகுதி அட்டைகள் வழங்கி பேசியது:-  

             கடலூர் மாவட்டத்தில் 1,66,327 பேருக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டு, வரும் 5 ஆண்டுகளில் காங்கிரீட் வீடுகளாக கட்டி வழங்கப்படும். இந்த ஆண்டு 26,199 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது.  கீரப்பாளையம் ஒன்றியத்தில் மட்டும் 6,419 பேருக்கு ரூ.3.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.   சிதம்பரம் தொகுதியில் 46,614 பேருக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதைபோல் 10,710 பேருக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

              கீரப்பாளையம் ஒன்றியத் தில் 394 பேருக்கு ரூ.79.38 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2,51,797 பேருக்கு ரூ.658.18 கோடியில் பல்வேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 22,134 பேருக்கு இருதய அறுவை சிகிச்சையும், 51,854 பேருக்கு எலும்புமுறிவு சிகிச்சையும், 28,963 பேருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

             மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். கீரப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், சேத்தியாதோப்பு பேரூராட்சி தலைவர் பட்டு கணேசன், வேளாண் விற்பனை குழு தலைவர் பூபாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) வெங்கடாசலம் வரவேற்றார். செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சரவணகுமார் நன்றி கூறினார்.

Read more »

Reserve sites in layouts should be well-marked

CUDDALORE: 

         The Federation of All Residents' Welfare Associations has requested the director of Town and Country Planning to strictly enforce the rules regarding allotment of sites for public purposes in new layouts.

          Federation general secretary M. Maruthavanan, in a representation to the director, said that most of the realtors violated the norms regarding “reserve sites.” For instance, of 200 new layouts that had come up within the Cuddalore municipal limits, only 10 had set aside sites for public purposes.

            In peripheral areas such as Nathapattu, Thottapattu, Kondur, Uppalavadi, Periya Kanganankuppam, Pathirikuppam, Karaikkadu, Thiruvahindrapuram and Arisi Periyankuppam, such stipulations were ignored. Once housing colonies come up, absence of reserve sites would cause social stress. Therefore, the director should instruct realtors to set apart 10 per cent of the total area of the layout for public purposes.

             A board should be put up at the sites, carrying details such as area size and survey number. The information about all layouts in the municipalities and panchayats should also be displayed on the noticeboard of the respective local bodies. No official of the local body should be allowed to alter the status of the reserve site. Provisions of the breach of public trust should be invoked against violators. Mr. Maruthavanan also appealed to the director to take over the reserve sites that were not duly handed over by the promoters.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior