உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 06, 2012

தானே புயல் நிவாரணப் பணிகள் மந்தம் : பண்ருட்டி தே.மு.தி.க. சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து உண்ணாவிரதம்


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/9d545577-a065-4d99-a302-c78d420fab03_S_secvpf.gif
 
 
பண்ருட்டி:
 
           கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் தானே புயல் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என தெரிவித்து பண்ருட்டி தொகுதி தே.மு.தி.க. சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து நேற்று மாலை 6 மணியளவில் பண்ருட்டி பஸ் நிலையம் எதிரே திடீரென் உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கினார்.

            உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சேகர், வட்ட செயலாளர் துரை, தே.மு.தி.க. அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் தண்டபாணி, நெல்லிக் குப்பம் நகர செயலாளர் கஜேந்திரன், பண்ருட்டி நகர அவைத் தலைவர் குமார், மாவட்ட இளை ஞரணி துணை செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி செயலாளர் வசந்த், தொழிற்சங்க செயலாளர் பன்னீர்செல்வம், கேப்டன் மன்ற செயலாளர் சபீர், மாவட்ட மகளிரணி தலைவி பானுமதி, நகர மகளிர் அணி வசந்தா ஆகியோர் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர்.

               தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் அனந்தராம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று எம்.எல்.ஏ.யுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பண்ருட்டி பகுதி யில் நிவாரணத்தொகை ஒரே மாதிரியாக வழங்கப்படவில்லை என்றும், நிவாரணம் வழங்குவது குறித்து சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறிய அவர் இதுகுறித்து பேச உடனே தாலுகா அலுவலகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறினார்.

             அனைத்துக்கட்சி கூட்டத்தை வருகிற செவ்வாய்க்கிழமை நடத்தலாம் என்று கலெக்டர் கூறியதாக தாசிலதார் தெரிவித்தார். ஆனால் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ அதற்கு சம்மதிக்கவில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.   தொடர்ந்து உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.  அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக நள்ளிரவு 12 மணி அளவில் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சேகர், தே.மு.தி.க மாவட்ட மாணவரணி செயலாளர் வசந்த், மருத்துவர் அணி செயலாளர் அறிவொளி உட்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் ஏற்ப்பட்ட சேத விபரங்கள்

கடலூர்
 
             தானே புயலால் கடலூர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.  15 அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரண பணிகளை கவனித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு முழுமையான இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

            கடலூர் மாவட்டத்தில் புயல் ஏற்படுத்திய சேதம் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. புயல் பாதித்ததுமே தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டித்து விட்டதால் ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக வெளியே தெரியவில்லை. இப்போது தான் முழுமையாக தகவல் தொடர்பு கிடைத்துள்ளன.

மின்சார துறையில் மட்டும் ரூ.1400 கோடி சேதம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார். அரசு துறை சேதம் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 60 சதவீதத் துக்கு மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்துவிட்டன. இவற்றில் பல மரங்கள் நூற்றாண்டு காலமாக இருந்தவை. எந்த புயலாக இருந்தாலும் புளிய மரம் தாங்கிக்கொள்ளும் என்று சொல்வார்கள். ஆனால் ராட்சத புளிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. முந்திரி, பலா, தென்னை மரங்கள் பெரும்பாலும் விழுந்துவிட்டது.

              ஆங்காங்கே ஒருசில மரங்களை மட்டுமே காணமுடிகிறது.   மாவட்டம் முழுவதும் கடலோர தாலுகாக்களை சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் குடிசை வீடுகளை காணவில்லை. அதே போல ஓட்டு வீடுகளும் முற்றிலுமாக சாய்ந்து விட்டன. காங்கிரீட் வீடுகளில் கூட ஜன்னல்கள், கதவுகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.

                கடலூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. இதேபோல மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களும் இயங்க முடியாத அளவுக்கு பாதிப்படைந்துள்ளன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கடலூர் மாவட்டத்தில் 2500 வீடுகள் சேதம் அடைந்திருந்தன. 950 கால்நடைகள் உயிரிழந்தன.

               5 ஆயிரம் சிறுபடகுகள், 300 எந்திர படகுகள் பாதிக்கப்பட்டன. 1200 ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. ஆனால் புயல் பாதிப்பு இதை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 90 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் அழிந்துள்ளன. 2 லட்சம் குடும்பங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

                கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த தென்னை, பலா, முந்திரி மரங்கள் நாசமாகி விட்டதால் விவசாயிகள் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. இதேபோல நெல் பயிர், கரும்பு ஆகியவையும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் சுனாமியை விட தானே புயலுக்கு உயிரிழப்பு குறைவாக இருந்தது.

              எனவே பாதிப்பு பற்றிய விவரங்கள் வெளியிடங்களுக்கு அதிகமாக தெரியவில்லை.   சுனாமி பாதித்த போது மாநிலம் முழுவதுமிருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் உடனடியாக களமிறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.

              எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. அரசு கொடுக்கும் உதவிகள் மட்டும் ஆங்காங்கே கிடைத்து வருகிறது. தொண்டு நிறுவனங்கள் ஓரளவு உதவி செய்தால் தான் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வு பழைய நிலைக்கு திரும்பும் நிலை இருக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் மக்கள் வீடுகளை இழந்து கட்டாந் தரையையே வீடாக பயன்படுத்தி வருகின்றனர்.

                ஓட்டு வீடுகளை சீரமைக்க ஓடுகளோ, அதற்கான மரங்களோ கிடைக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கரும்பு சோகை, தென்னை ஓலை வைத்தே குடிசை வீடுகளை அமைத்திருப்பார்கள். வீடுகளை மீண்டும் கட்ட இவை கூட கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். வீடுகளில் விழுந்த பல வீடுகளில் ராட்சத மரங்கள் விழுந்து கிடக்கின்றன.

                 அவற்றை அகற்றுவதற்கு ஜே.சி.பி. போன்ற எந்திரங்கள் வந்தால் தான் முடியும். அந்த எந்திரங்கள் கிடைக்காததால் மரங்கள் அப்படியே கிடக்கின்றன. புயல் காற்றின் போது மழையும் சேர்ந்து பெய்ததால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. இதனால் உடுத்துவதற்கு துணி இல்லாமலும், சாப்பிடுவதற்கு உணவு பொருட்கள் இல்லாமலும் பலர் அவதிப்படுகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பன்னீர்கள் கரும்பு நாசம்: பொங்கலுக்கு விலை கடுமையாக அதிகரிக்கும்

கடலூர்:

           கரும்பு அதிகம் விளையும் மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் ஒன்று. இங்கு சர்க்கரை உற்பத்தி செய்ய தேவைப்படும் வெள்ளை கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு கடித்து சாப்பிடும் கறுப்பு கரும்பு ஆகிய இரு வகைகளும் பயிரிடப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் ஏக்கர் கறுப்பு கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தன.

              சிதம்பரம் பகுதியில் உள்ள வல்லம்படுகை, வேலக்குடி, காந்தியமேடு, கடவாக்குறிச்சி, பண்ருட்டி பகுதியில் உள்ள கொரணாப்பட்டு, சத்திரம், சிவானந்தபுரம், பட்டினக்கோட்டை, மதன கோபாலபுரம் மற்றும் நெய்வேலி பகுதியிலும் கறுப்பு கரும்புகள் பயிரிட்டிருந்தனர். “தானே” புயலால் இந்த கரும்புகள் அடியோடு நாசமாகிவிட்டது.

             எனவே பொங்கலுக்கு கரும்பு அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது. சாதாரணமாக ஒரு கரும்பு 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த கரும்புகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இவற்றை வெட்டி வெளி மார்க்கெட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்தனர்.

             இதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்திருந்தனர்.ஆனால் இப்போது கரும்பு முற்றிலும் நாசமாகி விட்டதால் இவற்றை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கரும்பு விலை கடுமையாக அதிகரிக்கும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூரில் "தானே" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச பால் விநியோகம்

தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை

            கடலூரில் "தானே" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, எங்களது சங்கம் சார்பில் 2 ஆயிரம் லிட்டர் பால் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். 6-1-2012 அன்று (இன்று) இரவு 10.30 மணியளவில், சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் கடலூர் நோக்கி புறப்படுகிறோம்.


              இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் சவுந்தர்முருகன், அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கடலூரில் 7-1-2012 அன்று (நாளை) தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்துடன் இணைந்து, அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்ய இருக்கிறோம்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior