உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 13, 2012

திட்டக்குடி கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பராமரிக்கப்படாத பள்ளி வகுப்பறை





திட்டக்குடி,:



        திட்டக்குடி அருகே உள்ள கழுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 207 மாணவர்கள் 217 மாணவிகள் உட்பட 418 பேர் படிக்கின்றனர். 17 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இயற்பியல் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களுக்கு நீண்ட காலமாக ஆசிரியர்களே இல்லை. இரவு காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளது. 

         இந்தப்பள்ளியின் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது போதிய வகுப்பு அறைகள் இல்லை ஆனால் இருக்கின்ற வகுப்பு அறைகளும் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக உள்ளன. அங்கு முட்களும், காலி மது பாட்டில்கள்தான் கிடக்கின்றன. இந்த பள்ளியில் கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி ஒன்று உள்ளது ஆனால் மின் இணைப்புகள் அறுந்து துண்டு துண்டாக கிடப்பதால் மின்மோட்டாரை இயக்க முடியவில்லை 

         தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மழை நீர் எளிதாக பள்ளிக்குள் புகுந்து பள்ளியை குளமாக மாற்றிவிடுகிறது. மழைக்காலங்களில் மாணவிகள் நீந்திதான் பள்ளிக்குள் செல்லவேண்டும் மாணவிகள் அதிகம் படிக்கும் இந்தபள்ளியில் 24 மணி நேரமும் அன்னியர்கள் உள்ளே வருவதும் செல்வதும் என உள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














Read more »

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் மேற்கூரை வசதி இல்லை: வெயிலில் வதங்கும் ரயில் பயணிகள





      ுலியூர் ரயில்நிலையத்தில், மேற்கூரை இல்லாத நடை மேடையில் கொளுத்தும் வெயிலில் அவதிப்படும் பயணிகள்.

கடலூர்:

         கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் போதுமான அளவுக்கு மேற்கூரை வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள், மழையில் நனைந்து வெயிலில் வதங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

         200 ஆண்டுகள் பழைமையான ராமேசுவரம் - சென்னை பிரதான ரயில் பாதையில், மிகவும் தொன்மை வாய்ந்தது, திருப்பாப்புலியூர் ரயில் நிலையம். விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில்பாதை, மீட்டர் கேஜ் பாதையாக இருந்து, அகலப் பாதையாக மாற்றப்பட்டபின், மிகவும் மோசமாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் ரயில் நிலையம் திருபாப்புலியூர் ரயில் நிலையம் என்பது, கடலூர் மக்களின் குற்றச்சாட்டு.

         புகழ்பெற்ற திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் வந்து செல்லும் பல லட்சம் பக்தர்கள், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றுச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்காக, பொது நல அமைப்புகள் நடத்தி வரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

          இதற்காக உயர் நீதிமன்றத்தில் மக்கள் வழக்கு தொடரும் நிலையும், மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, தில்லியில் தனது பெரும்பான்மை நேரத்தை இக்கோரிக்கைக்காக ரயில்வே அமைச்சகத்துடன் செலவிடும் நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு ரயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்து, அகலப் பாதையாக மாற்றப் படும்போது, ஏற்கெனவே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் அகலப்பாதையாக மாற்றப்பட்ட பின்னரும் நிறுத்தப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. ÷ஆனால் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை, விதிகளை ரயில்வே இலாகா அப்பட்டமாக மீறிச் செயல்படுவதால் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் நிலையும், அதை ரயில்வே இலாகா தொடர்ந்து உதாசினப் படுத்தும் நிலையும் நீடித்து வருகிறது.

மக்களவை உறுப்பினர்

       கே.எஸ்.அழகிரி மேற்கொண்ட கடும் முயற்சி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பாப்புலியூரில் நின்று செல்கின்றன. திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ரயில் நிலைய அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாததால், ரயில் பயணிகள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக ரயில் நிலைத்தில் எந்த எண் ரயில் பெட்டி எங்கு நிற்கும்?, முன்பதிவு செய்யப்படாதவர்களுக்கான பெட்டிகள் எங்கு நிற்கும்? என்ற விவரங்கள், எந்த நடைமேடையிலும் வைக்கப்படாதது, ரயில் பயணிகளை பெரிதும் குழப்பத்துக்கு உள்ளாக்கி வருகிறது.

          இரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள்தான் பெரும்பாலான ரயில்கள் திருப்பாப்புலியூர் ரயில்நிலையம் வந்து செல்கின்றன. மேற்கண்ட வசதி இல்லாததால் இரவு நேர ரயில் பயணிகள், திக்கு தெரியாத காட்டில் விடப்பட்டவர்களாக உள்ளனர். பகல் நேரத்தில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொன்றுக்கும் வரும் பயணிகள் 300-க்கும் மேற்பட்டோர், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் அவதிப்படுகின்றனர். ÷இது குறித்து பொதுநல அமைப்புகள் ஓராண்டுக்கும் மேலாக குரல் எழுப்பியும், கோரிக்கை மனுக்கள் அளித்தும், அண்மையில் கிடைத்தது 

10 அடிக்கு 10 அடி ஷெட்தான்.

     மழை, வெயிலுக்கு 10 பேர் தான் இதில் ஒதுங்க முடியும். அதுவும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு இதனால் எப்பயனும் இல்லை. ரயில்வே நடைமேடையில் எத்தனை பயணிகள் வருகிறார்கள்? முன்பதிவு செய்யாதவர்கள் எத்தனை பேர்? ரயில்களை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? அவர்கள் நடைமேடையில் எந்த இடத்தில் ரயிலுக்காக காத்து நிற்கிறார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இந்த ஷெட்டை அமைத்து இருக்கிறார்கள் என்று, ரயில்வே நிர்வாகம் மீது பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் மழையில் நனைந்து வெயிலில் கருகும் பயணிகளின் பரிதாபநிலை எப்போது மாறும்?










Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பாடத்திட்டங்கள் வானொலியில் ஒலிபரப்பு

சிதம்பரம்:

      அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பாடத்திட்டங்கள் அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்பு செய்யப்படுகிறது என்று துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் (தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

         சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் பல்வேறு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயச் சான்றிதழ், சான்றிதழ் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அகில இந்திய வானொலியின் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மறறும் புதுச்சேரி நிலையங்களின் மூலம் மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை 30 நிமிடங்களுக்கு தொலைதூரக்கல்வி இயக்கக அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது என துணைவேந்தர் எம். ராமநாதன் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.





Read more »

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கணினி மயமாகிறது

கடலூர் :

       கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் நிர்வாக சிக்கலைத் தவிர்க்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக புறநோயாளிகள் விவரம் நேற்று முதல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துங்கியது.

      கடலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 4,000 பேர் புறநோயாளிகளாகவும், 2,000 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மருத்துவமனை தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகிறது. மேலும், நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு அளித்த சிகிச்சை குறிப்புகள் அடங்கிய பதிவேடுகளை பராமரிப்பதிலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளுக்கான டோக்கன்களை பதிவு செய்வதில் நிர்வாக ரீதியாக சிக்கல் நிலவி வந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தை முழுமையாக கம்ப்யூட்டர் மையமாக்க அரசு உத்தரவிட்டு அதற்கான பூர்வாங்கப் பணி நடந்து வருகிறது.

           இதற்காக தகவல் தொழில் நுட்ப பட்டதாரி பிரகாஷ் என்பவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்குவது, அதில் நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வது குறித்து சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் கடந்த வாரம் பயிற்சி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது புறநோயாளிகளுக்கு சீட் வழங்குவதை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. புறநோயாளியின் முகவரி மற்றும் அவரது நோய் பற்றிய விவரங்களை பதிவு செய்ததும், நோயாளிக்கு 10 இலக்க எண் கொண்ட பிரத்யேக டோக்கன் கொடுக்கப்படும். அந்த டோக்கனைக் கொண்டு சம்மந்தப்பட்ட டாக்டரிடம் அணுக வேண்டும். அவர் நோயாளியை பரிசோதித்து அவருக்கு அளிக்கும் சிகிச்சை மற்றும் அவருக்கு அளிக்க வேண்டிய மருந்து, மாத்திரை மற்றும் ஊசி விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விடுவார்.

         அதன்பிறகு நோயாளி தனது டோக்கனை கொண்டு சென்று, மருந்தக பிரிவிற்கு கொண்டு சென்றதும், கம்ப்யூட்டரில் பார்த்து அவருக்குரிய மருந்து மாத்திரைகளை வழங்குவார். நோயாளி இந்த டோக்கனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுமுறை மருத்துவமனைக்கு வரும் போது நேரடியாக டாக்டரிடம் சென்று டோக்கனை காண்பித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேப்போன்று அனைத்து அரசு மருத்துவமனைகளும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு வருவதால், இதே டோக்கனைக் கொண்டு தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனைக்கும் சென்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும், நோயாளி இதுவரை மேற்கொண்ட சிகிச்சை விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், தொடர் சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக இருக்கும்.

         தற்போது புறநோயாளிகள் பிரிவு மட்டும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனைக் கூடங்கள், மருந்தக சேமிப்பு கிடங்குகளும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட உள்ளது.














Read more »

விருத்தாசலம் ராமதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

விருத்தாசலம் :  

     விருத்தாசலம் ராமதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நடந்தது.

        தாளாளர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கி, விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். முதல்வர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர்கள் செந்தில்குமார், ஜரால்டீன் மேரி, பேராசிரியர்கள் பழனிவேல், கனிமொழி, கீதா, முருகன், சத்ருகன், பிரபாவதி, ஈஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் தடகள போட்டிகள், குழுப்போட்டிகள் நடந்தது. 100க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவிகள் பங்கேற் றனர். பேராசிரியர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டு விழாவின் போது பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior